Tuesday 10 April 2012

இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ போலீசார் குவிப்பு; தயாராக இருக்க உத்தரவு

- 0 comments


திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்கு சாதகமான முடிவுகளை மாநில நிபுணர் குழுவின் எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவதால் போராட்டக்குழுவினர் அடுத்தக்கட்டநிலை குறித்து விவாதித்துவருகின்றனர். இதற்கிடையில் கூடங்குளத்தில் எதற்கும் தயாராக இருக்கும்படியாக அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்த� �ன் பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்த அணுவிஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், பேராசிரியர்கள் இனியன், அறிவுஒளி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி விஜயராகவன் ஆகிய மாநில நிபுணர் குழுவினர் நேற்று மாலையில் போராட்ட குழுவின் பிரதிநிதிகளுடன் பேசினர். தங்களுக்கு மாநில அரசு தந்துள்ள இரண்டு பணிகளையும் மேற்கொண்டதாகவும் அணுஉலையின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாகவும், போராட்ட� �்தில் ஈடுபட்டுள்ள மக்களின் அச்சஉணர்வினை பிரதிநிதிகளின் கருத்துக்களின் மூலம் தெரிந்துகொண்டதாகவும் கூறினர். இக்குழுவினர் சென்னை கிளம்பினர். மாநில குழுவினர் விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

மாநில குழுவினரின் பேச்சுவார்த்தையில் அணுஉலைக்கு சாதகமாக இருப்பதால் விரைவில் மின்உற்பத்தியை துவக்கலாம் என்றே அறிக்கை தரவாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இத� �ால் போராட்டக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்ட நிலை குறித்து இடிந்தகரையில் பேசிவருகின்றனர். கூடங்குளத்தில் அடிப்படை மற்றும் கண்காணிப்பு பணிகளில் தினமும் 120 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களில் வெறும் 20 பேர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் எனவும் போராட்டக்குழுவினர் கேட்டனர். அதற்கும் அரசு தரப்பில் அனுமதிக்கவில்லை. எனவே போராட்டக்காரர்கள் அணுஉலை பணிய� ��ளர்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க நேரிடலாம் என்ற நிலை உள்ளது.

இதுவரையிலும் சுமார் 100 போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்கு இருந்த கூடங்குளம் அணுஉலை பகுதியில் இன்று காலையில் 800 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி.,வரதராஜூ, எஸ்.பி.,விஜயேந்திர பிதரி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.

மாநில அரசின் நில� � மாறுகிறது: மாநில அரசின் நிபுணர்குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பில் பிரச்னை இல்லை என்றும் இது திருப்திகரமாக உள்ளது என்றும் கூறியிருப்பதால், இது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மாநில அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக களம் இறங்கும் போது தொடர்ந்து போராட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்படும். போலீசின் கெடுபிடிகள் அதிகரிக்கும். இதனா ல் அடுத்து என்ன செய்வது என போராடக்காரர்கள் முடிவு எடுக்க முடியாமல் திகைத்து வருகின்றனர்.

3 நாள் உண்ணாவிரதம் அறிவிப்பு: இதற்கிடையில் அணுஉலையை மூடக்கோரி 3 நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக உதயக்குமமார் இன்று இடி� ��்தகரையில் தெரிவித்துள்ளார். மாநில குழுவிர் தங்கள் தரப்பில் இருந்த நிபுணர் குழுவை சந்திக்கவில்லை என்று குறைப்பட்டார்


http://devadiyal.blogspot.com

[Continue reading...]

இனியாவுக்கு இனிப்பு கொடுத்த ராஜா!

- 0 comments
 
 
மேலும் படங்கள்
என்னது சிவாஜி செத்துட்டாரா?!' என்று ஒரு படத்தில் வசனம் வைத்திருப்பார்கள்.

சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு சமாச்சாரத்தைக் கேள்விப்பட்டு இதே மாதிரி கேட்டு அதிர்ந்தவர் நடிகை இனியா!

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக்கை போடாமல், கொசுவம் வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்றுவிட்டு வந்தார்.

இந்த நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சினை உண்டாகி, அமீரே படத்தில் இல்லை என்றாகிப் போனது.


அமீர் - இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலிருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போது கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார்.

அமீரே இல்லை என்றான பிறகு, இனியா மட்டும் படத்தில் இருப்பாரா என்ன... அவரும் தூக்கப்பட்டுவிட்டார்.

இந்த விஷயம் அவருக்கு இப்போதுதான் தெரியுமாம். தகவல் கேள்விப்பட்டதும் அவர் கேட்டது... 'என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!'

இதுக்குதான் தமிழ் பத்திரிகை படிக்கணும்ங்கறது!
[Continue reading...]

நெருக்கமான நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தார் நயன்தாரா..!

- 0 comments
 

கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் / வதந்திகளில் அதிகம் அடிபட்டவர் இந்தியாவிலேயே நயன்தாரா ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரைப்பற்றிய செய்திகளில் இன்னும் ஒன்றாக இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நயன்தாரா பிறப்பால் கிறிஸ்தவர். இடையில் தன் மனம் கவர்ந்த பிரபு தேவாவுக்காக அய்யர் வைத்து மந்திரம் முழங்க இந்து மதத்துக்கு மாறிவிட்டார். இப்போது பிரபு தேவாவைப் பிரிந்த நயன், மீண்டும் ஈஸ்டர் கொண்டாட ஆரம்பித்துள்ளார்.

நேற்று ஈஸ்டருக்காக ஹைதராபாதில் தனக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் நண்பர்களை மட்டும் வரவழைத்து பெரிய பார்ட்டி ஒன்றைக் கொடுத்தாராம்.

நயன்தாரா கூறுகையில்……

"வழக்கமாக ஈஸ்டர் தினத்தில் அம்மாவின் சமையலை ஒரு பிடிபிடிப்பேன். ஆனால் இந்த முறை ஷூட்டிங்கில் இருந்தேன். ஹோட்டல் சாப்பாடுதான். ஆனால் ஈஸ்டருக்கு ஸ்பெஷலாக இருந்தது

நேற்று மாலை நண்பர்களுடன் சந்தோஷமாக ஈஸ்டர் மகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.

[Continue reading...]

சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய யுவராஜ்சிங்கிற்கு சச்சின் வாழ்த்து

- 0 comments

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார்.


அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார்.

ஓய்வுக்கு பிறகு லண்டனில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். யுவராஜ் சிங்கை அழைத்து செல்ல யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் மற்றும் அவரது உறவினர்கள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றனர்.

யுவராஜ்சிங் தாயகம் திரும்பும் தகவலை அறிந்து கொண்ட அவரது ரசிகர்களும் அங்கே திரண்டு இருந்தனர்.
சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சீக்கிரமாக குணமடைந்து நாடு திரும்பிய சகோதரார் யுவராஜ்சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள். கேன்சர் என்னும் நோயுடன் போராடி வென்ற யுவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என கூறியிருந்தார்.

[Continue reading...]

ஜீப்பில் குழந்தை பெற்ற துயர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில்

- 0 comments
 

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஜீப்பில் குழந்தை பெற்ற துயர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மனைவி நீலம். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலியால் துடித்த அவரை, பாக்பாத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விக்ரம் நேற்று அழைத்து சென்றார்.

ஆனால், அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், மருத்துவமனையில் கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை.

கெஞ்சிப் பார்த்தும் முடியாததால் வேறு வழி இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்தார். மனைவியை ஜீப்பில் ஏற்றிய சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ஜே.பி.சர்மா, மருத்துவமனையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger