Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

Tuesday, 20 August 2013

கூடங்குளம் அருகே வெடிகுண்டு வெடித்து Bomb blast near Koodankulam public panic

- 0 comments
Bomb blast near Koodankulam public panic 

கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 10–ந்தேதியில் இருந்து ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வெடித்து சோதனை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வெளியில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கூத்தங்குழி ஊருக்கு வடபுறம் உள்ள கடலோர பகுதியில் 3 குண்டுகள் வெடித்தன.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பது தெரிய வில்லை. அணுமின் நிலையத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு சோதனை நடத்தப்படும் வெடிகுண்டுகள் வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
[Continue reading...]

Monday, 29 July 2013

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சீமான் உண்ணாவிரதம்

- 0 comments
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 
கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடை முறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைகள் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதாரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதனாலேயே அதனை எதிர்த்து இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் அறவழியில் கடந்த 700 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அப்படிப்பட்ட மக்களின் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது என்பது போன்ற மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
[Continue reading...]

Saturday, 29 June 2013

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இன்று செயல்படத் தொடங்குகிறது

- 0 comments

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள
அணுமின் நிலையம் எந்த நேரத்தில்
செயல்படத் தொடங்கும் என அணுசக்தி கழக
ஆலோசகர் சிதம்பரம் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.எஸ்.ஐ.
நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக
முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம்
கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன்
1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட
அணுமின் நிலையத்தின் முதல்நிலையின்
அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன.
இந்த அணுமின் நிலையம் தொடர்பாக
நடத்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும்
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்
முழுதிருப்தி அளிக்கும் வகையில்
அமைந்து உள்ளது. இதனால் கூடங்குளத்தில்
அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம்
எந்த நேரத்திலும் தனது மின்
உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது.
அணுமின் நிலையம்
பாதுகாப்பற்றது என்று பொதுவான
கருத்து உள்ளது. நாம் கடந்த 1974-ம்
ஆண்டு பொக்ரானில்
அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றி
கண்டோம். இந்த சோதனை மூலம்
அணுசக்தியில் இந்திய முழு பாதுகாப்பான
நிலையை கொண்டு உள்ளது என
உறுதி செய்து உள்ளோம்.
ஆனால் சாதாரண மக்களுக்கு அணுமின்
நிலையத்தின்
பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு புரியவைப்பதில்
பிரச்சினை உள்ளது. நமது அணுமின்
நிலையங்கள் பாதுகாப்பானது. எந்த வித
பாதிப்பும் இல்லாத வகையில்
அமைந்து உள்ளன. இதனால் தான்
அதற்கு அணுசக்திகழகம்
அனுமதி கொடுத்து உள்ளது.
உலகம் முழுவதும் 66 அணுசக்தி மின்
நிலையங்களின் பணிகள்
தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் 7 அணுமின்சக்தி நிலையங்கள்
செயல்பாட்டுக்கு வர பணிகள்
நடைபெற்று வருகின்றன.
இந்தியா அணுசக்தியில் முழுமையான
பாதுகாப்பு வசதியை கொண்டு உள்ளது
என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இயற்கை பேரிடர்களால் இந்திய
அணுசக்தி நிலையங்கள் பாதிக்கப்படும்
என்பதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger