Sunday 22 September 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!

- 0 comments

"வந்தார்; ஓரமாய் உட்கார்ந்தார்; சென்றார்…" : இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.

இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.

முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது.

அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.

இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.

Show commentsOpen link

[Continue reading...]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி Champions league cricket chennai super kings win

- 0 comments

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி Champions league cricket chennai super kings win
Tamil NewsYesterday

ராஞ்சி, செப்.23-

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த மற்றொரு 'பி' பிரிவு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ் அணியை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஹென்ரி டேவிட்ஸ், ருடால்ப் ஆகியோர் டைட்டன்ஸ் அணியின் இன்னிங்சை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. ருடால்ப் 21 ரன்னில் வெளியேறினார்.

இதன் பின்னர் டேவிட்சுடன், டிவில்லியர்ஸ் கூட்டணி அமைத்தார். முதல் 10 ஓவர்களில் ரன்வேகம் (72 ரன்) ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் டிவில்லியர்ஸ் வாணவேடிக்கை காட்டத் தொடங்கியதும், டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. 30 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த டிவில்லியர்சை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பவுலர்கள் விழிபிதுங்கி நின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களை ஓட விட்டார்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரரான டிவில்லியர்ஸ் அந்த அணி சாம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறாததால் இந்த முறை தனது சொந்த ஊர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இறுதியில் அவர் 77 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே கேப்டன் டேவிட்ஸ் 52 ரன்களில் (43 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

பின்னர் 186 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் களம் புகுந்தனர். 3-வது பந்திலேயே விஜய் (0) நடையை கட்டினார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். அவரும், மைக் ஹஸ்சியும் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சை சின்னாபின்னமாக்கினார்கள்.

இதனால் 4-வது ஓவரிலேயே சென்னை அணியின் ஸ்கோர் 50 ரன்களை தொட்டது. பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திய இவர்கள், அணியின் வெற்றிப்பாதைக்கு வலிமையான ஒரு அடித்தளம் அமைத்து தந்தனர். ஸ்கோர் 95 ரன்களை எட்டிய போது, ரெய்னா 47 ரன்களில் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

சிறிது நேரத்தில் ஹஸ்சியும் (47 ரன், 26 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார். என்றாலும் பின்னால் வந்த வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் நாயகன் டோனி 7 ரன்னில் (8 பந்து, ஒரு சிக்சர்) ஏமாற்றம் அளித்தார்.

முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டைட்டன்ஸ் பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 வைடுகளை வாரி வழங்கியதும், சென்னை அணி இமாலய ஸ்கோரை 'சேசிங்' செய்ய துணைபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வருகிற 26-ந்தேதி எதிர்கொள்கிறது.

ஸ்கோர் போர்டு டைட்டன்ஸ்
டேவிட்ஸ்(ஸ்டம்பிங்) டோனி
(பி) அஸ்வின் 52
ருடால்ப் (ரன்-அவுட்) 21
டிவில்லியர்ஸ் (சி) பிராவோ
(பி) ஜடேஜா 77
பெஹர்டைன் (சி)
ஹோல்டர் (பி) பிராவோ 21
டேவிட் வைஸ் (சி)
அஸ்வின் (பி) பிராவோ 0
வான் டெர் மெர்வ் (நாட்-அவுட்) 1

மோசெலே (நாட்-அவுட்) 4

எக்ஸ்டிரா 9

மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 185 விக்கெட் வீழ்ச்சி: 1-46, 2-122, 3-154, 4-154, 5-179 பந்து வீச்சு விவரம் மொகித் ஷர்மா 4-0-27-0, ஜாசன் ஹோல்டர் 4-0-25-0, அஸ்வின் 4-0-36-1, அல்பி மோர்கல்    1-0-8-0, ஜடேஜா 3-0-49-1, பிராவோ 4-0-34-2

சென்னை சூப்பர் கிங்ஸ்

மைக் ஹஸ்சி(சி)
டிவில்லியர்ஸ் (பி)
மோர்னே மோர்கல் 47
விஜய் (பி) மெர்வ் 0
ரெய்னா (சி) மோர்னே
மோர்கல் (பி) வைஸ் 47
பத்ரிநாத் (நாட்-அவுட்) 20
பிராவோ (சி) மோசெலே
(பி) ரிச்சர்ட்ஸ் 38
டோனி (சி) டிவில்லியர்ஸ்
(பி) ரிச்சர்ட்ஸ் 7
ஜடேஜா (பி) ரிச்சர்ட்ஸ் 0
அல்பிமோர்கல்(நாட்-அவுட்) 4
எக்ஸ்டிரா 24 மொத்தம் (18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 187 விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-95, 3-114, 4-172, 5-181, 6-183 பந்து வீச்சு விவரம் வான் டெர் மெர்வ் 3-0-25-1, மோர்னே மோர்கல் 4-0-47-1, ரிச்சர்ட்ஸ் 3.5-0-29-3, டி லாங்கே 3-0-34-0, டேவிட் வைஸ் 3-0-29-1, ஹென்ரி டேவிட்ஸ்    2-0-23-0,
...
Show commentsOpen link

[Continue reading...]

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து chennai kilpauk apartment sudden fire

- 0 comments

சென்னை கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து chennai kilpauk apartment sudden fire
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப்.22-

சென்னை கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று மதியம் திடீரென்று தீப்பிடித்தது. அக்குடியிருப்பின் 5-வது மாடியில் பிடித்த தீ 6, 7-வது மாடிக்கும் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ மளமளவென எரிந்து வருவதால் அதிக சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீ பிடித்துக் கொண்டிருக்கும் மாடியில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பது குறித்தும் தகவல் ஏதும் தெரியவில்லை.
...
Show commentsOpen link

[Continue reading...]

மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் படத்தில் நாயகியாக சமந்தா! Samantha act with 3 generation actors

- 0 comments

மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் படத்தில் நாயகியாக சமந்தா!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவ் தற்போது மனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதேபடத்தில் அவரது மகனான நாகார்ஜூனா, பேரனான நாக சைதன்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். தாத்தா, மகன், பேரன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தை தமிழில் யாவரும் நலம், அலை போன்ற படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்குகிறார். மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு தெலுங்கு நடிகைகள் மத்தியில் பலத்த போட்டி நிலவியது. அதிலும், பேரன் நாக சைதன்யாவின் கேரக்டர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அவருடன் நடிக்க அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பலத்த போட்டியில் ஈடுபட்டார்களாம். ஆனால், இவர்களின் எந்த நடிகையை நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை நடந்தபோது, சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று தானே முன்வந்து சொன்னாராம் நாக சைதன்யா. அதோடு, இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமானவர் மட்டுமின்றி, சிறப்பான நடிப்பினால் என்னை பலமுறை கவர்ந்த நடிகை அவர் என்றும் சொன்னாராம். இந்த சேதி கேட்டு உருகிப்போன சமந்தா, கதையை கேட்டதோடு சரி, சம்பளம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

Show commentsOpen link

[Continue reading...]

நீச்சல் உடைக்கு டாட்டா காட்டும் காஜல் kajal swimming dress

- 0 comments

நீச்சல் உடைக்கு டாட்டா காட்டும் காஜல்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

நீச்சல் உடையில் நடிக்க முடியாது என கறாராக கூறுகிறார் காஜல் அகர்வால்.

தெலுங்கின் பிரபல நடிகையான இவர் தமிழில் கார்த்தி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

தற்போது விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடையில் நடிப்பது குறித்து கேட்டால் டென்ஷன் ஆகிறார் காஜல்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இந்திய பெண்ணின் முக அம்சம்தான் அதிகம். அதற்கு ஏற்ற கதாபாத்திரங்களைதான் இதுவரை ஏற்று நடித்து வருகிறேன்.

ஆனாலும் ஒரே பாணியிலான வேடங்களில் நடிப்பதில்லை.

நீச்சல் உடை அணிந்து நடிப்பது எனது உணர்வுகளுக்கு பொருந்தி வராது என்பதால் எனக்கென்று ஒரு எல்லை வகுத்திருக்கிறேன்.

மேலும் எனது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்க முடியாத படியான எந்தவொரு காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் காஜல்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger