Wednesday 7 December 2011

பொன்சேகாவை என்ன��டம் விடுங்கள் நான் பார்த்துக்கொ��்கிறேன்!

- 0 comments


வெள்ளைக் கொடி வழக்கில் மூன்று வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகிறார் என்றால் சிறைச்சாலையில் உள்ள அனைத்து சிறை கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொது சன உறவுகள் மற்றும் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்யகிழமை காலை (06.12.2011) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகா நீதிமன்றத்திலும் வைத்தியசாலையிலும் அரசாங்கத்திற்கெதிராக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாவிடின் அந்தப் பொறுப்பை தன்னிடம் விடுமாறும் தான் அதனை நிறுத்திக் காட்டுவதாகவும் மேர்வின் சில்வா அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

மேலும், சரத் பொன்சேகவை விடுதலை செய்யக் கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி எந்த பிரயோசனம் இல்லை எனவும் வௌ்ளைக்காரரால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய முடியாது. இலங்கை அரசாங்கமே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    ஆப்கானிஸ்தானில் மொகரம் பண்டிகைய���ன் போது தொடர்கு��்டுவெடிப்புக்க��். 35 பேர்வரை பலி

    - 0 comments


    ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையினை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் இதனையொட்டி தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள ஹில்லா நகரில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

    இந்த பேரணி முடிவடையும் நேரத்தில் திடீரென சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் குழந்தைகள் ஆவர். இதே போல் நகரில் மற்றொரு இடத்தில் ரோட்டோரத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.

    மேலும் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். கெர்பாலா நகர் வழிபாட்டு தலத்திற்கு பேரணியாக சென்ற ஷியா பிரிவினரின் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டும்இ வெடிகுண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். நகரில் பல்வேறு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மட்டும் மொத்தம் 35 பேர் பலியாகி உள்ளனர்


    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    இனிய பாரதியின் க���ட்டுகள் புகைப்படங்களும் அம்பலம��! (படங்கள் இணைப்ப���)

    - 0 comments


    கருணா - பிள்ளையான் நடாத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆயுததாரியுமான இனிய பாரதியின் குட்டுகள் அம்பலமாகியுள்ளது. இவர் மகிந்தரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஆவார்.

    இனிய பாரதி மீது சுமார் 58 கொலை வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதேடு சிறுவர்களை அவர் தனது படைப்பிரிவில் சேர்த்து அவர்களைப் பயன்படுத்தி பல கொள்ளைச் சம்பவங்களையும் செய்துள்ளார். கொலை கொள்ளை மற்றும் சிறுவர்களைப் படையில் சேர்த்தது போன்ற குற்றச் செயல்களைப் புரிந்த இனிய பாரதி மீது கற்பழிப்பு ஆட் கடத்தல் வழக்குகளும் உள்ளது. ஆனால் இலங்கை அரசோ சர்வசாதாரணமாக அவருக்கு "தேசபிமானி" டாக்டர் பட்டம் கொடுத்து அவரை கெளரவித்துள்ளது.

    சிறுவர்களை ஆயுததாரியாக இனிய பாரதி பயன்படுத்தியது ஆட்கடத்தலுக்கு பயன்படும் வெள்ளை வாகனம் என அவரது அலுவலகத்துக்கு முன்னர் நின்ற பலரது புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    இலக்கத்தகடு மறைக்கப்பட்ட வெள்ளை வாகனமும் இனிய பாரதியின் அலுவலகத்துக்கு முன்னர் நிற்ப்பதும் புகைப்படமாக வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இனிய பாரதி செய்த குற்றங்களை வெள்ளைடிப்பதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறன்றது. இச் செயலை சர்வதேசம் கண்டிக்கவேண்டும். இது நடக்குமா?







    அதிர்வு


    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    இருப்பாய் தமிழா ���ெருப்பா... இழிவாய் கிடக்க செருப்ப���! (படங்கள் இணைப்பு)

    - 0 comments


    இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால் எப்படி சீரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கிறது "உச்சிதனை முகர்ந்தால்".

    புனிதவதி எந்த தேவதையாலும் ஆசிர்வதிக்கபடவில்லை. அவள் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நேரக் கூடாது. 2009 மார்ச் 1-ம் தேதி புனிதவதி என்கிற அந்த புனித நதியின் வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.

    அதே ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வரை அந்தகுழந்தைக்கு நேரும் சோதனைகளை வார்த்தைகளால் எடுத்து சொல்லிவிட முடியாது. எனினும் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் அந்த குட்டி தேவதையை நேசிக்கிற மனிதர்கள், அவள் வாழ்க்கை பயணம் முழுவதும் அவளை தொடர்ந்து வருகிறார்கள். அந்த மனிதநேயம் தன் இறைவன் இருப்பை உறுதி செய்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அந்த புனித நதியின் பயணம் தான் உச்சிதனை முகர்ந்தால் என்று உணர்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

    புனிதவதியாக சிறுமி நீநிகா, சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

    எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் பாட்டெழுத மாட்டேன் என்று உறுதியோடு இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார்.

    அரசியல் விமர்சகராகவும் சினிமாவின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழருவி மணியன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

    மைனா படத்தின் மூலம் இசையில் தனக்கான முத்திரையை பதித்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    ---------------------------------------------------------

    படம் - உச்சிதனை முகர்ந்தால்
    பாடலாசிரியர் - காசி ஆனந்தன்


    இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
    இழிவாய் கிடக்க செருப்பா... நீ!

    ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
    ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
    துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
    தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
    எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் - (படத்தில் நீக்கப்பட்ட வரி)
    அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்! - (படத்தில் நீக்கப்பட்ட வரி)

    எரிமலை தனியுமா... தண்ணீரில்!
    கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
    முழங்கிடும் சங்கே முழங்காயோ
    விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
    அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
    விடியலைக் காணும் களம் இன்று
    வெட்டவெளியோ வீடானது...
    பட்டினியோ உணவானது...
    போராடு நீ வீரோடு!

    மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
    இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
    கொந்தளித்து அறம் வெடிக்காதோ
    கொடியவர் மூச்சை முடிக்காதோ
    ஆயிரம் அலைகளை தோளாக்கு
    அடிமைக்கு விடுதலை நாடாக்கு (படத்தில் நீக்கப்பட்ட வரி)
    மாந்தர் உயிரோ நிலையற்றது...
    மானம்தானடா நிகரற்றது...
    போராடு நீ வீரோடு!






    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    "பள்ளிக்கூடம் கட���டுகிறோம்" தமிழ் ���ேசிய தொலைக்காட்சியில் கப்ஸா!

    - 0 comments


    சமீபத்தில் தம்மை தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு தொலைக்காட்சி மூவரைப் பேட்டி கண்டுள்ளது. இம் மூவரும் முஸ்லீம்கள் ஆவர். ஆனால் அவர்கள் அத்தொலைக்காட்சியில் பேசிய விடையம் முஸ்லீம்கள் படுகொலையாகும். முஸ்லீம்கள் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இவர்கள் பல கருத்துக்களை முன்வைத்தது வரவேற்க்கத்தக்க விடையமாகும். ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் பின்னர் நடந்த படுகொலைகள் என்று கடந்த கால கசப்பான அனுபவங்களை இவர்களும் இத் தொலைக்காட்சியும் ஏன் கிண்டிக் கிளறவேண்டும் ? நடந்த கசப்பான அனுபவங்களை மட்டும் நாம் பேசிக்கொண்டே இருந்தால் எம்மிடையே எப்படி ஒரு ஒற்றுமை தோன்றும் ?

    பேச எவ்வளவோ ஆரோக்கியமான விடையங்கள் இருக்கும்போது பிரிவினையை மட்டும் தூண்டும் தலைப்புகளை இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் மற்றும் அதனை நிகழ்ச்சியில் எவ்வாறு புகுத்துகிறார்கள் என்பதனை இவர்களிடம் தான் டியூஷன் எடுக்கவேண்டுமோ தெரியாது ! இதனைத் தான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள் போலும். அது எல்லாம் போக வந்த மூவரில் ஒருவர் தாம் இலங்கை அரசிற்காக பிரித்தானியாவில் வேலைசெய்வதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நபருடன் பேசும்போது வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் தாம் யாருடன் பேசுகிறோம் எனத் தெரியாமல் பல விடையங்களை உளறியும் உள்ளார். பாவம் அவர் என்ன அவை எல்லாம் அதிர்வில் வெளியாகிவிடும் என்று தெரிந்தா சொல்லியிருப்பார் ? ஆனால் அவர் சொன்னதை அதற்காக நாம் வெளியிடாமல் இருக்க முடியுமா என்ன ?

    அதாவது இலங்கை அரசாங்கம் கருதுகிறதாம் லண்டனின் புற நகர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சற்று கல்வி அறிவு கூடியவர்கள் என்று (இது முதலாவது பாயின்ட் ஓகே) அதனால் அவர்களது பிள்ளைகள் தமிழ் பாடசாலைகளுக்குச் செல்ல நினைக்கும்போது அத் தமிழ் பாடசாலைகளை இவர்களைக் கொண்டு நடத்த இலங்கை அரசு திட்டம் தீட்டி வருகிறது. தொலைக்காட்சியில் தினோஷ் உடன் தோன்றிய நபர்களில் ஒருவர் தமிழ் பாடசாலைகள் அமைப்பதில் பெரு ஆர்வம் காட்டி வருகிறார். அவர் லண்டனின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே சில பாடசாலைகளை ஆரம்பித்தும் உள்ளார். அட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா ? "இது புதுசு கண்ணா புதிசு" என்பதுபோல இருக்கு சார் இருக்கு !

    ஈழத்தில் உள்ள போராட்டச் சின்னங்கள் அனைத்தையும் மற்றும் விடுதலைப் புலிகளின் கல்லறைகள் தொடக்கம் அனைத்தையும் அழித்துள்ள இலங்கை அரசு அடுத்த தலைமுறைக்கு விடுதலைப் போராட்டம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சுமார் 50 வீதம் வெற்றிகண்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்படியே தெரிந்தாலும் பேராடும் எண்ணம் வராமல் இருக்க இளைஞர்களையும் யுவதிகளையும் ஒரு வெளிநாட்டு ஸ்ரைலில் வைத்திருக்கிறது இலங்கை அரசு. அது மக்கள் அறிந்த விடையம். அதற்காக செக்ஸ் படங்கள் மது பாணங்கள் இன்டர் நெட் கஃபேக்கள் என எதை எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்துவருகிறது இலங்கை அரசு. ஆனால் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இன்னும் அதே உணர்ச்சியோடு உள்ளார்கள். அவர்கள் மாறவில்லை. அவர்கள் மாறப்போவதும் இல்லை. ஆனால் அவர்கள் பிள்ளைகளை மாற்றலாம் அல்லவா ? அது தான் அவர்கள் முஸ்தீப்பு ! பாருங்கள் மக்களே 10 ஆண்டுத் திட்டம் 15 ஆண்டுத் திட்டம் போல சிங்களம் எவ்வாறு திட்டம் போட்டு வேலைசெய்கிறது என்று. ஆனால் நாங்கள் சில்லறைக்கு அடிபடுகிறோம் !

    புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு எமது விடுதலைப் போராட்டத்தை உணர்ந்து அதற்கு தமது பங்களிப்பை நல்கிவருகின்றனர். இதுதான் இலங்கை அரசை மேலும் கிலிகொள்ளவைக்கும் விடையமாகும். புலம்பெயர் பெற்றோர்கள் இன்னும் 10 அல்லது 15 வருடத்தில் இறந்துவிட்டால் அவர்கள் பலம் குறைந்துவிடும் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு புலம் பெயர் நாடுகளில் இளையோர்களின் செயல்பாடுகளைப் பார்த்து ஆடிப்போயுள்ளனர் என்பது உண்மையாகும். இதனால் அடுத்த சந்ததியினரும் போராடத் தயார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் அதனை முளையோடு கிள்ளி எறிய புதுத் திட்டம் ஒன்றை மறைமுகமாகச் செயல்படுத்தவுள்ளது இலங்கை அரசு ! அது தான் இவர்களால் ஆரம்பிக்கப்படும் புது தமிழ் பள்ளிக்கூடங்கள் ! இதனைப் பயன்படுத்தி இலங்கை அரசு அங்கே வரும் தமிழ் சிறுவர்களை வேறு நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்வதோடு அங்கே வரும் பெற்றோரிடமும் பேசி அவர்கள் மனதையும் மாற்றும் எண்ணத்தை நிறைவேற்றப்பர்க்கிறது.

    தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தம்மைக் கூறிகொள்ளும் இத் தொலைக்காட்சி இதனைக் கூடத் தெரியாமல் இவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்களா ? இல்லை இது தெரிந்து தான் நடக்கிறதா என்பது நிகழ்ச்சித் தயாரிப்பளர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் தான் "வெளிச்சம்" ! அட அந் நிகழ்ச்சியின் பெயரும் அதுதான் அல்லவா ? அதிர்வுக்கு எழுதப் பேசத் தெரியாது என்று எல்லாம் இவர்கள் தான் சந்தைப்படுத்துகிறார்கள் ! உண்மையச் சொன்னால் சகிப்பதும் இல்லை விமர்சனங்களை முன்வைத்தால் அதனை கருத்தாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. அப்படி என்றால் நீங்கள் யார் ? நீங்கள் சொல்வதும் மட்டும் தான் உண்மையா ? மக்களே இந்தத் (தொல்)லைக்காட்ச்சியிடம் கேட்க்க மாட்டீர்களா என்ன ?

    அதிர்வு


    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கோட்டபாய மீது தா���்குதல்: இரகசியங��களைக் கசிய விட்ட "ஆமி"

    - 0 comments


    இராணுவ இரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதன் மூலம் தாக்குதல்களை நடத்த உதவியதாக இரத்மலானை இராணுவ இடைத்தங்கல் முகாமைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. 'ஆமி அங்கள்' என அழைக்கப்படும் லெப்டினன்ட் ரஞ்சித் சந்திரசிறி பெரேரா, எல்.ரி.ரி.ஈ. தற்கொலைப் படையைச் சேர்ந்த கந்தவனம் கோகுலநாத் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கனரட்ணம் ஆதித்யன் ஆகியோருக்கு தேசத்திற்கு மகுடன் கண்காட்சியின்போது தாக்குதல் நடத்துவதற்கான பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியதாக சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

    யுத்தகாலத்தில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பலாலிக்கு சென்றபோது அவர்களின் வான்கலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பூனகரியில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டபாய சென்ற வானூர்த்தி பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியவேளை அவ்விடத்தைப் புலிகள் அப்போது துல்லியமாகத் தாகியது யாவரும் அறிந்திருப்பீர்கள். கோட்டபாய பலாலி சென்றதும் அவர் சென்ற விமானம் எப்போது தரையிறங்கும் என்பதுபோன்ற விபரங்களை 'ஆமி அங்கள்' என்று அழைக்கப்படும் இந் நபரே புலிகளுக்குத் தெரிவித்ததாக தற்போது இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

    விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கோட்டபாயவை பல இடங்களில் குறிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். புலிகள் பலாலி விமான நிலையத்தைத் தாக்கும் வேளை விமானத்தில் இருந்து இறங்கிய கோட்டபாய தலை தெறிக்க ஓடிச் சென்று பதுங்கு குழி ஒன்றினுள் மறைந்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது.

    அதிர்வு


    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர்களை தாக்க��னால் எதிர்விளைவ���கள்: சீமான்

    - 0 comments


    கேரளத்தில் தமிழர்களைத் தாக்கினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். 17-ந் தேதி பங்களாமேடுவில் தொடங்கும் நடை பயணம் சின்னமனூரில் முடிகிறது. 18-ந்தேதி சின்னமனூரில் தொடங்கும் நடை பயணம் கூடலூரில் முடிகிறது. இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    தமிழக பெண் தொழிலாளிகளை புடவை இழுத்து கேரளத்தவர் மானபங்கம்

    - 0 comments
     
     
     
     
     
    முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தப்பிவந்த பெண்கள் தங்களை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான முறையில் நடத்தியதாக கூறியுள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் அந்த கொடுமையின் பயங்கரம் கண்ணிலிருந்து விலகவில்லை.
     
    முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து அணையைப்பற்றி கேரள ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்ப்ப் படுகின்றன. கேரளமாநிலத்தவரால் சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
     
    பெண் தொழிலாளர்கள் மானபங்கம்
     
    இந்த நிலையில் தேனி, கம்பம், மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பெண்களை கேரளமாநிலத்தவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு திரும்பியுள்ளனர்.
     
    கேரளா மாநிலத்தவரால் பாதிக்கப்பட்ட 50 வயதுப் பெண் கருப்பாயி கூறுகையில்,
     
    ஏலக்காய் தோட்டத்தில் வேலைக்காக சென்றிருந்தோம் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு எங்கள் வீட்டில் இருந்து போன் வந்தது. ஐயப்ப பக்தர்களை தாக்கப்படுவதால் உடனே வீடு திரும்புங்கள் எங்கள் வீட்டில் இருந்து போனில் கூறினர். நாங்கள் உடனே வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேரளமாநிலத்தவர் சிலர் எங்களை மறித்தனர். எங்களில் சிறுவயதுடைய பெண்களை தனியாக அழைத்து அனைவரின் முன்னிலையிலும் புடவைகளை அவிழ்க்க சொல்லி சிரித்தனர். நாங்கள் பயந்து அழுதுவிட்டோம். எங்களுக்கு வேலைக்கு போகவே அச்சமாக இருக்கிறது என்றார்.
     
    கம்பத்தை சேர்ந்த முத்துப்பேச்சி கூறியதாவது,
     
    எங்கள் முன் வந்து நின்ற மலையாளிகள் சிலர் தமிழர்களை திட்டுவதற்கு கேரளத்தவர்கள் உபயோகப்படுத்தும் கொச்சையான சொல்லான 'பாண்டி' என்ற வார்த்தையால் எங்களை திட்டினர். சொல்ல முடியாத பல பாலியல் சம்பங்களை நிகழ்த்தினர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை நாங்கள் கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தின் மூலம் தேக்கடிக்கு வந்துவிட்டோம் என்றார்.
     
    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ். பழனிச்சாமி, திங்கட்கிழமை இரவு தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு எஸ்டேட் பணிக்கு சென்ற 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.
     
    கும்பகோணத்திலும் தாக்குதல்
     
    இதேபோல கும்பகோணத்திலும் கேரளக்காரர்களின் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
     
    அங்குள்ள ஜாய் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்து நிறஉவன மேலாளர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.



    [Continue reading...]

    ப்ரியாமணி சென்ற கார் விபத்து: காயமின்றி உயிர் தப்பினார்!!

    - 0 comments
     
     
     
    கன்னட பட சூட்டிங்கிற்காக நடிகை ப்ரியாமணி காரில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழில் பருத்திவீரன் படம்மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. அந்தபடத்‌திற்கு தமிழில் சரியான படங்கள் ஏதும் அமையாததால் பிற மொழி படங்களான தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
     
    இப்படத்தின் சூட்டிங்கிற்காக கர்நாடக மாநிலம் முந்தாநதி காட்டுக்கு காரில் சென்றார் ப்ரியாமணி. அவருடன் மேக்கப் கலைஞர்களும் சிலர் சென்றுள்ளனர். சூட்டிங் ஸ்பாட்டை கார் நெருங்கிய போது நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ப்ரியாமணி உள்ளிட்ட அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் ப்ரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேபோல் அவருடன் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
     
    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை அறிந்த படக்குழுவினர், சூட்டிங்கை சற்று தாமதமாக தொடங்கினர்.



    [Continue reading...]

    தினபலன் -07-12-11

    - 0 comments


    மேஷம்:
    உங்களின் ஊக்கம், உற்சாகத்தை குறைக்கும் அல்லது அதிகரிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வீண் பிடிவாதம் இல்லாமல் எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    சில்லரை வணிகத்த��ல் அன்னிய முதலீடு - முடிவு ஒத்திவ��ப்பு

    - 0 comments


    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு - முடிவு ஒத்திவைப்பு`மல்டி பிராண்டு' சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி மீதான முடிவை மத்திய அரசு ஒத்தி வைத்ததையடுத்து, திங்கள்கிழமை அன்று சில்லரை வர்த்தக நிறுவன பங்குகள் விலை சரிவடைந்தது.

    பல நிறுவனங்களின் பொருள்களை ஒரே மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    முகரம் தினத்தை ம���ன்னிட்டு மும்பை, தேசிய பங்கு சந்��ைகளுக்கு விடுமு���ை

    - 0 comments


    முகரம் தினத்தை முன்னிட்டு மும்பை, தேசிய பங்கு சந்தைகளுக்கு விடுமுறைமுகரம் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.

    வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்த�ு. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    டொயோட்டா கிர்லோ��்கர் கார்கள் 3% விலை உயர்கிறது

    - 0 comments


    டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் 3 விலை உயர்கிறதுஅமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமின்றி, ஜப்பான் நாட்டு செலாவணியான யென்னுக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருகிறது. இதனையடுத்து, 2012 ஜனவரி 1-ந் தேதியிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் விலையை 1.5 சதவீதம் மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    அழகு சாதன பொருட்���ள் விலை உயர்கிற��ு

    - 0 comments


    அழகு சாதன பொருட்கள் விலை உயர்கிறதுரூபாய் மதிப்பு மிகவும் சரிந்துள்ளதால் சோப் மற்றும் அழகுசாதன பொருட்களின் விலை உயரும் என்று இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நம் நாட்டில் சோப் மற்றும் அழகு சாதன பொரு ட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்த���கள்..

    - 0 comments


    முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. 1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகு��ியில் அணையைக் கட்டி மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    பெண்களின் திகைக��க வைக்கும் செக்ஸ்’ஆர்வம்

    - 0 comments


    `இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி' என்ற மேலும்படிக்க


    http://famousstills.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    வெளிநாடானாலும் ��ௌத்திரம் பழகு....!!!

    - 0 comments


    நேற்று....

    முட்டையையும் சிக்கனையும் வயிற்றில் அடக்கம் பண்ணுவதால் [[கொஞ்சமாதான்]] சூடு ஏறி முகத்தில் ஒரு பரு வந்து விட்டதால் செல்ஃப் ஷேவ் செய்யமுடியாமல் போய்விட்டது, நான் தங்கியிருக்கும் இடத்தில் சலூன்கள் இருந்தாலும் அங்கே வேலை பார்ப்பவர்கள் பிலிப்பைனி, பாக்கிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்ததால் அங்கே போவது கிடையாது.


    எப்போதும் போகவர அஞ்சி தினார் கொடுத்து டாக்சியில் போயிதான் முடி வெட்ட போயி வருவது வழக்கம், ஷேவ் நானே செய்து கொள்வேன், முகத்தில் பரு வந்து விட்டதால் செல்ஃப் ஷேவ் பண்ண முடியாமல் போய் விடவே, முதலாளி வந்தபோது [[ஹோட்டல் ஃபீல்ட்ல எப்பவும் ஃபிரஷ்சா இருக்கணும் என்பது ரூல்ஸ்]] விஷயத்தை சொன்னதும், இட்ஸ் ஓகே மனோஜ்'ன்னு போயிட்டான்.


    பத்துநாள் ஆகியும் கொய்யால பரு அப்பிடியே இருக்கு மாறலை, எனக்கோ ஒரு மாதிரி இருக்கவே சரி இன்னைக்கு சலூன்ல போயி ஷேவ் பண்ணிருவோம்னு வேலை முடிஞ்சதும் டாக்ஸி பிடிச்சி கிளம்பிட்டேன்.


    குதேபியாவில் எட்டு வருஷமாக நான் போகும் தமிழ்காரர் சலூன், அதன் முதலாளியை எப்போதுமே நண்பர்கள் மாமா என்றுதான் அழைப்போம் அவ்வளவு அன்பாக இருப்பார் எங்களிடம், அங்கே போயி ஷேவ் பண்ணிவிட்டு திரும்பவும் டாக்ஸி பிடிக்க நின்றால், ஒரு டாக்ஸியையும் காணோம்.


    என்னடான்னு விசாரித்தால், முகரம் பண்டிகை என்பதால் [[கலவரம் நடக்கும் அபாயம் இருப்பதால்]] டாக்ஸி ஒன்னையும் காணோம், சரி பக்கத்தில் உள்ள கடைக்காரனிடம் கள்ள டாக்ஸி [[ கள்ளத்தனமாக டாக்ஸி ஓட்டுபவர்கள்]] கிடைக்குமா என கேட்கவும், அவன் ஒரு நம்பருக்கு போன் பண்ணினான்...


    கொஞ்ச நேரத்தில் கார் [[கள்ள டாக்ஸி]] வந்துவிட காரில் ஏறினேன், டிரைவர் மலையாளி சேட்டன், இனி நாங்கள் பேசிக்கொண்டது.....

    சேட்டன் : எங்கே போகணும்..? [[மலையாளத்தில்]]

    நான் : ஜூஃபேர்.

    சேட்டன் : நீ முந்தாநாள் ராமி இன்டர் நேஷனல் ஓட்டலில் என் வண்டியில் இருந்து இறங்கி காசு தராமல் ஓடினவனாச்சே...

    நான் : ஹா ஹா ஹா ஹா நான் குதேபியா வந்தே ஒரு வாரத்திற்கு மேலாச்சு...

    சேட்டன் : டேய்....... [[ஆஹா]] நான் இருவத்தி அஞ்சி வருஷமா டாக்ஸி ஓட்டுறேன், என் ரெண்டு கண்ணால பார்த்தேன் நீயேதான்...

    நான் : சேட்டா நான் வேலை செய்வது அந்த ஹோட்டல் அல்ல, வா நான் காட்டுறேன் இப்போது...

    சேட்டன் : இல்லைடா நீயேதான்...

    நான் : என்னாது டா'வா....?

    சேட்டன் : எனக்கு அம்பது வயசாச்சு என்னா..?

    நான் : அப்போ சரி சேட்டா...

    சேட்டன் : எடா நான் பார்க்காத நாடில்லை, போகாத இடமில்லை, நீ என் முன்னால் பொடிப்பையன் [[அவ்வ்வ்வ்]] தெரிஞ்சிக்கோ...

    நான் : சேட்டன் கள்ளு [[சோமபானம்]] குடிச்சியிருக்கீங்களோ..?

    சேட்டன் : நான் ஒரு முஸ்லீம், சாராயம் வாசனையை கூட மோந்து பார்த்தது கிடையாது...

    நான் : நல்லது சேட்டா...

    சேட்டன் : நான் ஒரிஜினல் மலையாளியோ இந்தியனோ கிடையாது, எங்கள் பூர்வீகம் ஈரான்.......!!!

    நான் : அட அப்பிடியா [[கொஞ்சம் நக்கலுடன்]] சொல்லவே இல்ல...

    சேட்டன் : பிழைப்பதற்காக எங்கள் மூதாதையர்கள் கேரளா வந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள் [[ இது உண்மையா...??!!!]] டேய் உங்கள் இந்தியா'காரனுக ஜ்க்வ்நொகொர்க்ஜெஒஈப்வ்கொபிஒ [[சென்சார்]] 

    நான் : ஹலோ மரியாதையா பேசுங்க இந்தியாவுல இருந்துட்டு இந்தியன் இல்லைன்னு சொல்றீங்களே வெக்கமாக இல்லையா...?

    சேட்டன் : எடா நான் ஒரு முஸ்லீம் நீ....?  ஜோநோர்ப்கேர்ஜ்கேஜ்ஹோ[ரிம்ப்[ஓயோ[இர்க்ஜெஒ[ஈஜ்ஹெஇம்கெஒ[இம்ப்கோபெம் [[சென்சார்]]

    நான் : வண்டியை நிறுத்து [[ஹைபிரஷர் ஏறிடுச்சு எனக்கு, இடம் ஜூஃபேர், பனோரமா ஹோட்டல் முன்பு உள்ள பெரிய சிக்னல்]] 

    சிக்னலில் வண்டி நிற்கவும் வேகமாக இறங்கினேன்..

    சேட்டன் : எடா ஹேய் காசு....?

    நான் : போடா வெண்ணை...

    சேட்டன் : போகேஜெப்க்ஜெப்ப்ஜ்ர்ப்ப்ர்பூப்க்ரோப்ஜ்ர்போஜ்ர்பூஜ்க்ர்ப்ப்ன்ர்ப்கோன்ஜ்ர்போப்ன்ஜ்ர்ப்கோப்ன்ற்போப்ர்போ [சென்சார்]]

    நான் : வ்ஹெபிஒபொபொஇர்ஜொஇர்ஜ்பொஇஎர்ஜ்பொரிஜ்ரொஇப்ஜ்ரொஇஜ்ரொஇப்ஜ்ரொஈப்ஜ்ரொஇஜ்ஹ்ரொஜிஒ  [[சென்சார்]]

    சேட்டன் : என்னையாடா திட்டினே நாயே......

    என திட்டியவாறே, காரை சிக்னலில் நிறுத்தி விட்டு என்னை நோக்கி ஓடி வந்தான், நான் தாமதிக்கவே இல்லை, வயசை பார்க்கும் நிலையில் நானும் இல்லை, விட்டேன் பளார் பளார், டேய் நான் மலையாளி இல்லைடா நாயே, நான் தமிழன்டா பரதேசி'ன்னு  [[பிடிக்க கூட ஒருத்தனும் வரமுடியாது ஏன்னா அது சிக்னல் இருக்கும் இடம்]] விட்ட முதல் அடியிலேயே கதி கலங்கி போனான், ஏன்னா நான் அடிப்பேன்னு அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஏன்னா வண்டியில வரும்போது அவனின் அநாகரீக பேச்சுக்கு பாவம் போல உக்காந்து இருந்தேன் அல்லவா...!!!


    அடிக்க அடிக்க "என்றே அம்மே என்ற அம்மே தல்லல்லே தல்லல்லே" என அலறினான், பின்னால் இருந்த வண்டிகள் ஒலி எழுப்பியதால், அவன் காரை நோக்கி ஓட, ஓட ஓட அடி கொடுக்கும்படி செய்துவிட்டான்.


    ஆக இப்பிடிபட்டவனுகளுக்கு முதல்லயே அடிகுடுக்கணும் போல, அவன் பேசிய மதம் பற்றிய வெறி பேச்சு, என்னால் தாங்கமுடியாததாக இருந்தது, என் இடத்தில் முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்களானால் கூட கண்டிப்பாக காருக்குள்ளேயே அடி கொடுத்திருப்பார்கள் அப்படி அருவருப்பாக பேசினான்...!!

    அவனை விடுவதாக இல்லை நான், இன்னைக்கு டியூட்டி முடிந்ததும் குதேபியா போவேன், என் முஸ்லீம் நண்பர்களுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன், உடனே கிளம்பி வா மனோஜ் இப்பவே தூக்கிருவோம்'ன்னு சொன்னார்கள்...

    ஒன்னும் செய்யவேண்டாம் ஜஸ்ட் வார்ன் பண்ணுவோம், இனி இதேபோல யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கேன், பார்ப்போம் இன்று ராத்திரி என்ன நடக்குது என்று...!!!


    டிஸ்கி : யப்பா மும்பை ஹிந்து முஸ்லீம் சண்டையில் நானும் என் நெருங்கிய முஸ்லீம், இந்து நண்பர்கள் உயிரை பறி கொடுத்துருக்கேன், இன்றும் மும்பையில் என் நெருங்கிய நண்பர்கள் குழு எல்லா மதத்தவர்களும்தான், மதம் பற்றி பேசும் போது மாறி மாறி கிண்டல் செய்து கொள்ளுவோமே அல்லாமல் மனதில் ஒன்றுமே இருப்பது இல்லை, இருக்கவும் செய்யாது, ஆனால் என் வாழ்க்கையில் முதல்முறை இந்த ஆள் பேசிய பேச்சு சத்தியமா கேட்கிற இந்தியா'காரனுக்கு கண்ணில் ரௌத்திரம் வரவைக்கும்...!!!

    பஸ்கி : ஹா ஹா ஹா ஹா பதிவு கொஞ்சம் சூடா இருக்கோ, நீங்க கூலா இருங்கப்பா...!!

    முஸ்கி : இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு, ஏன் சொல்றேன்னா நானும் இன்டலி ஓட்டு உங்களுக்கு போட்டுட்டு இருக்கேன்னு தெரியப்படுத்ததான் ஹி ஹி...




    http://galattasms.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger