Saturday 1 November 2014

ஆச்சரியப்படும் உண்மைகள் - World Amazingly Facts

- 0 comments

ஆச்சரியப்படும் உண்மைகள்:

 

1. இன்னும் 100 வருடம்

கழித்து பேஸ்புக்கில் 50

கோடி இறந்தவர்களின்

அக்கவுன்ட் இருக்குமாம்.

 

2. குதிக்க முடயாத

ஒரே உயரினம்

யானை தான்.

 

3. டைட்டானிக்

கப்பலை உருவாக்க 7

மில்லியன் டாலர்

செலவானது ஆனால்

டைட்டானிக்

படத்தை உருவாக்க 200

மில்லியன் டாலர்

செலவாகியுள்ளது.

 

4. சோனி கம்பெனியின்

ஒரிஜினல் பெயர்

டாட்சூகன்.

 

5. யூடியூபில்

இப்பொழுது உள்ள

வீடியோவை முழுவதுமாக

பார்க்க 1000 வருடம்

தேவைபடும்.

 

6. ஒருவர் சந்தோஷமாக

அழும் பொழுது முதலில்

வலது கண்ணிலும்,

வலியால் அழும்

பொழுது இடது கண்ணிலும்

கண்ணீர் வரும்.

 

7. 67. 99 சதவீத மக்கள்

தங்கள்

பாஸ்வேர்டை டைப்

செய்யும்

பொழுது ஒரு எழுத்து தப்பாக

டைப் செய்துவிட்டால்

பாஸ்வேர்டை முழுவதுமாக

அழித்து புதிதாக டைப்

செய்கின்றனர்.

 

8.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்

ஆய்வின் படி ஒரு நபர்

காதலில் விழும்

பொழுது தனது இரண்டு நெருங்கிய

நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9. கெட்டு போகாத

ஒரே உணவு பொருள்

தேன்

 

10. வெங்காயம் உரிக்கும்

போது ச்சீவிங் கம்

சாப்பிட்டால்

அழுகை வராதாம்...

[Continue reading...]

நடிகை ரேவதி சிறப்பு பார்வை

- 0 comments

நடிகை ரேவதியை 80-90களின் பிரபல நாயகியாகவும், தற்போது முன்னணி ஹீரோக்களின் அம்மாவாகவுமே பலருக்கும் தெரியும். தேசிய விருது பெற்ற முழுநீள ஆங்கிலப் படத்தையும், தேசிய விருது பெற்ற குறும்படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அந்த வகையில் மூன்று வித்தியாசமான பிரிவுகளில் தேசிய விருது பெற்றிருக்கிறார்.

 

விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களையே இயக்கியிருந்தாலும், அந்தப் படங்கள் எதைப் பற்றியதாக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மான உணர்வில் இருந்து ரேவதியின் படைப்பாளுமையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

 

பின்னணி

 

கொச்சியில் பிறந்த ரேவதியின் உண்மைப் பெயர் ஆஷா. அவருடைய அப்பா ராணுவ மேஜர் கேளுன்னி. அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரேவதி வாழ்ந்துள்ளார்.

 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'டூ ஸ்டேட்ஸ்' உட்பட 12 இந்திப் படங்களும் இதில் அடக்கம்.

 

முதல் அரும்பு

 

ஆரம்பத்தில் இரண்டு தொலைக்காட்சிப் படங்களை இயக்கிய பிறகு முழுநீளப் படத்தை இயக்க வந்தார். அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் 'மித்ர: மை ஃபிரெண்ட்'. இதில் பணிபுரிந்த முதன்மை தொழில்நுட்பக் கலைஞர்கள் அனை வரும் பெண்கள், இசையமைப்பாளர் பவதாரிணி உட்பட.

 

தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய நாயகி, அமெரிக்காவில் சென்று வசிக்கும்போது இரண்டு கலாசாரங்களுக்கு இடையே நடக்கும் மோதலே கதை. அமெரிக்க கலாசாரத்தில் ஊறிய நாயகியின் மகள் காதல் வசப்படுகிறாள். அதனால் அவளுக்கும் நாயகிக்கும் இடையே உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு இடையே நாயகிக்கும் ஒரு நண்பர் கிடைக்கிறார்.

 

உலகத் திரை விழாக்களில் பாராட்டப்பட்ட படம் இது. 2002-ல் தேசிய அளவில் சிறந்த இந்திய ஆங்கிலப் படம், சிறந்த நடிகை (ஷோபனாவுக்கு இரண்டாவது தேசிய விருது), சிறந்த படத் தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருது பெற்றது.

 

முக்கியப் படைப்புகள்

 

இந்தியில் எடுக்கப்பட்ட 'ஃபிர் மிலேங்கே' (மீண்டும் சந்திப்போம்) அவருடைய இரண்டாவது படம். எய்ட்ஸைப் பற்றிப் பேசிய முதல் இந்தியப் படங்களில் ஒன்று.

 

தங்கைக்கு ரத்தம் கொடுக்கச் செல்லும்போது, ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறாள் நாயகி. ஆதரவுக்காகத் தன் காதலனைத் தேடுகிறாள், ஆனால் பயனில்லை. அவளுடைய வேலையும் பறிக்கப்படுகிறது.

 

அதற்கு எதிராக வழக்குத் தொடுக்க முயற்சிக்கும்போது, அதை எடுத்து நடத்த ஒரு வழக்கறிஞர் முன்வருகிறார். ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இன்றுவரை எதிர்கொண்டு வரும் சமூகப் புறக்கணிப்பைப் (social stigma) பற்றி இப்படம் பேசுகிறது. அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

 

மலையாள இயக்குநர்கள் 10 பேர் இணைந்து உருவாக்கிய புகழ்பெற்ற தொகுப்புப் படமான 'கேரளா கஃபே'யில், பெண் குழந்தை கடத்தல் தொடர்பாக 'மக்கள்' என்ற படத்தை ரேவதி இயக்கினார்.

 

பெற்றோர் இடையிலான சண்டைகள் குழந்தைகளை எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றிய 'ரெட் பில்டிங் வேர் தி சன் செட்ஸ்' என்ற குறும்படத்துக்கு தேசிய விருது பெற்றிருக்கிறார்.

 

தெரியுமா?

 

ரேவதி நல்ல பரதநாட்டியக் கலைஞர். அவருடைய பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்த இடம் சென்னை, வருடம் 1979. இந்தியில் அவர் அறிமுகமான படத்தின் ஹீரோ சல்மான் கான், படத்தின் பெயர் 'லவ்'.

 

'மின்சாரக் கனவு' படத்தில் கஜோலுக்கு, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் தபுவுக்கு, 'தேவராகம்' படத்தில் தேவி ஆகியோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

 

எபிலிட்டி அறக்கட்டளை மூலம் ஊனமுற்றோருக்கான திரை முயற்சிகளை ஊக்குவித்துவருகிறார். தவிர பேன்யன், டாங்கர் அறக்கட்டளை, வித்யாசாகர் போன்ற சமூக அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.

 

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, இந்திய சர்வதேசத் திரைப்பட விழாக்களின் தேர்வுக் குழு-விருதுக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

 

 

Keywords: நடிகை ரேவதி, இயக்கும் கரங்கள், திரைப்படங்கள், சினிமா

[Continue reading...]

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டித் தொடர்

- 0 comments

போட்டியில் அந்த அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பயிற்சி ஆட்டத்தில் சதம் எடுத்த ரோகித் சர்மா முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. அதே போல் பந்து வீச்சில் மொகமது ஷமி, புவனேஷ் குமார் இல்லை. எனவே இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்பது இயற்கை.

 

ரெய்னாவின் 200வது ஒருநாள் போட்டி:

 

தோனி இல்லாத நிலையில் பினிஷிங் பொறுப்பு தலையில் விழுந்துள்ள சுரேஷ் ரெய்னா 200வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்குகிறார். இவர் 44 ரன்களை எடுத்தால் 200வது போட்டியில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டுவார்.

 

சங்கக்காரா:

 

இலங்கை அணியில் மேட்ச் வின்னர் சங்கக்காரா என்றால் மிகையாகாது. இந்த ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் 728 ரன்களை குவித்து சரியான பார்மில் உள்ளார். ஆனால்.. இவர் இந்த அவசரத் தொடர் குறித்து விமர்சனன் வைத்ததும் அவர் ஆட்டத்தைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

இலங்கை அணியில் மலிங்கா இல்லை. எனவே பந்து வீச்சு நுவன் குலசேகரா, திசர பெரேரா, தம்மிக பிரசாத் ஆகியோர் கையில் உள்ளது. மேத்யூசும் சிக்கனமாக வீசுபவரே.

 

புள்ளி விவரங்கள்:

 

இந்தியாவில் இதுவரை 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை விளையாடியுள்ளது. இதில் 1997-98- தொடரில் 1-1 என்று டிரா செய்ததே அதன் சிறப்பான தொடர். மீதி 7 தொடர்களில் இந்தியா இலங்கையை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் இந்தியா எந்தத் தொடரிலும் 1 போட்டிக்கு மேல் தோற்றதில்லை.

 

Tags : இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டித் தொடர் 2014, விராட் கோலி, மேத்யூஸ், மலிங்கா, சங்கக்காரா, ரெய்னா, கிரிக்கெட்

[Continue reading...]

லிங்கா படத்தின் கதை - Lingaa movie story

- 0 comments

படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டர். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன். *

 

கதை: 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர் பஞ்சம் வருகிறது. அதை போக்குவதற்காக ஊர் பண்ணையார் ரஜினி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறார். ஊர் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று கருதும் சமூகவிரோத கூட்டம் அணை கட்டும் ரஜினி பற்றி தவறான செய்திகளை ஊருக்குள் பரப்புகிறது. அதை நம்பும் ஊர் மக்கள் ரஜினியை தூற்றுகிறார்கள். இதனால் மனம் வருந்தும் ரஜினி அணையை கட்டிவிட்டு ஊரைவிட்டே சென்று விடுகிறார். அதன் பிறகு அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை. *

 

அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. அவரை போலீஸ் வலைவீசி தேட அணையில் வந்து மறைந்து தலைமறைவாக இருக்கிறார். அப்போதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒழிந்து இருந்து அந்த வழியாக வருகிறவர்களிடம் வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவது தெரிகிறது. அணையை காப்பாற்ற வந்த பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை

[Continue reading...]

மாமியார் வீடு - குடும்ப கதை

- 0 comments
தீபாவளிக்காக அவரது அம்மா இருக்கும் தட்டாம் பாளையம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் ஆர்வமாய் இருந்த குழந்தைகள் இப்போது முகம் சுளித்தார்கள். இன்னும் நான்கு நாட்கள் எப்படி போகப்போகிறதோ?

இத்தனை வருடம் அவர் எவ்வளவோ போராடியும் நான் இந்த கிராமத்துக்கு தீபாவளி கொண்டாட வர சம்மதிக்கவே இல்லை. இந்த வருடம் 'அம்மா உடம்பு சரியில்லாம இருக்காங்க...' என்று அவர் செண்டிமென்டாய் பேசியதால் வந்தேன்.

சொந்த ஊருக்கு வந்த சந்தோஷத்தில் அவர் கலகலப்பாக இருக்கிறார். அம்மாவும், மகனும் கொஞ்சிக் கொள்வதைப் பார்க்க, பார்க்க எனக்கு தாங்க முடியாத எரிச்சல்.

மழை வேறு சமயம் பார்த்து பழிவாங்கிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் பட்டாசு கொளுத்த முடியாமல் பயங்கர டென்ஷனில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார் கள். அதைப் பற்றிய கவலைகூட அவருக்கு இல்லை.

வேண்டாவெறுப்புடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தேன். "வாம்மா, டீ போட்டு தரேன். குடிக்கிறீயா...?" – மாமியார் கேட்கிறார்.

"ப்ச், வேணாம் அத்தே, நான் இதெல்லாம் குடிக்கிறதில்லை. கிரீன் டீதான் குடிப்பேன்!" – வெடுக்கென்று சொன்னேன்.

"அதென்ன டீயோ... நான் என்னத்தக் கண்டேன்?" என்று புலம்பியவாறு பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார் என் மாமியார்.

"அத்தே, மதியத்துக்கு என்ன சமைக்கணும்னு சொல்றீங்

களா... ஏன்னா, இங்க விறகடுப்பில தான் சமைக்கணும். எனக்கு பழக்கம் இல்லாததால சமைக்க ரொம்ப நேரம் ஆகும். அதான் இப்பவே ஆரம்பிச்சுட்டா நல்லா இருக்கும்.."

"என்னடா சொல்ற நீ?... பட்ட ணத்துல சொகுசா வாழற எங்க வீட்டு மகராசி நீ. நல்ல நாளும் அதுவுமா உன்னை இங்க வேலை செய்யவிட்டு நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா? வேளாவேளைக்கு உங்க ஒவ்வொ ருத்தருக்கும் பிடிச்ச சமையல் முதல்கொண்டு... தீபாவளிக்கு பலகாரம் செய்யறது... உங்களை கவனிச்சிக்கிறது... பிள்ளைங்க ஜாலியா இருக்க ஏற்பாடு செய்ய றதுன்னு எல்லாத்துக்கும் நான் பாத்து, பாத்து ஆள் தயார் பண்ணி வைச்சிருக்கேம்மா. நீ ராணி மாதிரி எந்த குறையும் இல்லாம, இங்க பண்டிகையை கொண்டாடிட்டு சந்தோஷமா ஊருக்கு போனா போதும். அதுதான் இந்த அத்தைக்கு சந்தோஷம்."

அதைக் கேட்ட நான் "அம்மா..!"என்று கதறியவாறு மாமியாரை கட்டிக்கொள்வதை பார்த்து, என் கணவர் கண்கலங்கினார்.

Keywords: ஒரு நிமிடக் கதை, மாமியார் வீடு, மருமகள்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger