Monday 8 July 2013

இளவரசன் – திவ்யா காதல் , கடைசி காதல் கடிதம்

- 4 comments
இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது. 
இளவரசன்–திவ்யா காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.
காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா, பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.
[Continue reading...]

முக்கியமான ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதல்

- 0 comments
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில்
இன்று நடைபெறும் முக்கியமான கடைசி லீக்
ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள்
மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய
3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்
தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக்
முடிவில் முதல்
இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டியின் 4-வது லீக் ஆட்டம்
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3
ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி,
ஒரு தோல்வி கண்டு 9 புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2
ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி,
ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று ரன்
ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும்,
இந்திய அணி 3 ஆட்டத்தில்
[Continue reading...]

பாகிஸ்தானின் நடுவானில் இந்திய பயணிக்கு மாரடைப்பு

- 0 comments

துருக்கியின் இஸ்தான்புல் நகரில்
இருந்து மும்பைக்கு கடந்த 6-
ம்தேதி ஒரு பயணிகள் விமானம் வந்தது.
பாகிஸ்தான் வான்பகுதியில் விமானம்
வந்துகொண்டிருந்தபோது, வாசன் போன்டால்
(வயது 75) என்ற இந்திய பயணிக்கு திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி,
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய
அதிகாரிகளைத்
தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக
தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களின்
கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அதிகாரிகள்,
உயிருக்குப் போராடும்
பயணியை காப்பாற்றுவதற்காக
உடனே கராச்சியில் தரையிறக்க
அனுமதி அளித்தனர்.
அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் கராச்சியில்
விமானம் தரையிறக்கப்பட்டது.
நெஞ்சு வலியால் துடித்த வாசன் ஆகா கான்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து வாசனின் மகன்
இன்று பாகிஸ்தான் தூதரை அணுகி,
பாகிஸ்தான் சென்று தன்
தந்தையை கவனிப்பதற்கு அவசர விசா வழங்க
வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த தூதரகம்,
அவருக்கு உடனடியாக விசா வழங்கியது.

[Continue reading...]

காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு

- 0 comments
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கோடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இருந்த போதிலும் அவள் ராமகிருஷ்ணனை தீவிரமாக காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் காதல் ஜோடியினர் கடந்த மாதம் 28–ந்தேதி ஊரை விட்டு ஓடியது. இது குறித்து ராஜேஸ்வரி உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடியினர் சேலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை அழைத்து வருவதாக சென்ற போலீசார் ராஜேஸ்வரியை மட்டும் மீட்டு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காதலன் ராமகிருஷ்ணா பற்றி எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

[Continue reading...]

நடிகை அஞ்சலி நாளை ஐகோர்ட்டில் ஆஜர்

- 0 comments
நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். சித்தி பாரதி தேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். இதை பாரதிதேவியும்,
களஞ்சியமும் மறுத்தனர். அஞ்சலியை யாரோ கடத்தி சென்று தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு தனக்கு எதிராக பேச வைப்பதாக பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். அவரை கண்டு பிடிக்கும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
ஐகோர்ட்டிலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஐதராபாத் போலீசில் அஞ்சலி ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார்.
ஹேபியஸ் கார்பஸ் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது அஞ்சலி மர்ம நபர் பிடியில் இருப்பதாகவும் எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் பாரதிதேவி வக்கீல் வாதிட்டார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger