Friday 9 March 2012

காமெடி படங்களே ஜெயிக்கும் - நடிகர் விவேக்

- 0 comments
 

புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் கஞ்சா கூட்டம் படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ் பேசும் தமிழச்சிகள் கஞ்சா கூட்டம் படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு.

எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க.

சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கனும் 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடனும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது.

நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச் சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர் அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். இ

வ்வாறு அவர் பேசினார்.
[Continue reading...]

மகளீர் உரிமை சுவரொட்டிகளை அகற்றிய இராணுவம்!

- 0 comments

சர்வதேச மகளீர் தினத்தில் 'விடுதலைக்கான மகளிர் அமைப்பினால்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் குறித்த சுவரொட்டிகளை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.கொழும்பு, கோட்டே பிரதேசத்தில் நேற்று காலை சிலர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, LA 7438 என்ற இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில் சென்ற இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது எனத் தடை விதித்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என மகளீர் அமைப்பினர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஒட்டுவதால் சூழல் அசுத்தமடைகிறது எனக் கூறியுள்ளனர்.

எனினும், வேறு ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மகளிர் அமைப்பினர், இவற்றால் சூழல் மாசடையவில்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரியொருவர், இராணுவ உயர் அதிகாரியொருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.

இதனையடுத்து, இவை அரச விரோத சுவரொட்டிகள் என்பதால் இவற்றை ஒட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச மகளீர் தினத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் எந்தவகையில் அரச விரோத ஆர்ப்பாட்டமாக முடியும் என மகளீர் அமைப்பினர் இராணுவத்தினரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த இராணுவத்தினர், இது உங்களுக்குத் தேவையில்லையாத விடயம் எனவும், உடனடியாக இந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகளீர் அமைப்பினரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளில் தலையீடு செய்ய இராணுவத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என மகளீர் அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், தமக்கு மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கமையவே தாம் பணியாற்றுவதாகவும், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றுமாறும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

எனினும், இராணுவத்தினரின் உத்தரவிற்கு செவிசாய்க்காது மகளிர் அமைப்பினர் அங்கிருந்து அகற்றுசென்றுள்ளர்.

இதனையடுத்து மகளீர் அமைப்பினரது சுவரொட்டிகளை இராணுவத்தினர் முழுமையாக அகற்றியுள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger