Sunday 9 August 2015

அஜித்தின் மனம் கவர்ந்த நபர் யார் தெரியுமா?

- 0 comments


சினிமா பிரபலங்கள் பலருக்கும் அஜித்தைப் பிடிக்கும், ஆனால் அஜித்தின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரின் இசையை அஜித் கேட்டுள்ளார். இசை மட்டுமின்றி அனிருத் பணியாற்றும் முறையும் அஜித்திற்கு மிகவும் பிடித்து போயுள்ளது.

எனவே தல-57 படத்திற்கும் அனிருத்தையே இசையமைப்பாளராக்க அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு முன் அஜித்தின் குட் மியூசிக் லிஸ்டில் எப்போதும் யுவன் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இப்போது அனிருத்தும் இணைந்துவிட்டார்.

[Continue reading...]

Friday 7 August 2015

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘புலி’ படத்திற்கு கிடைத்த வாய்ப்பு!

- 1 comments


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி , சுதீப், தம்பி ராமையா நடிப்பில் உருவாகிவரும் படம் 'புலி' படத்தின் டீஸர், பாடல்கள் என விஜய் பிறந்தநாள் சிறப்பாக வெளியாகி வைரலாகியுள்ளது.

படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு இன்னொரு சிறப்பாக ஆண்ட்ராய்டு, விண்டோஸ் , மற்றும் ஐஓஎஸ் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் விளையாடும் கேம் உருவாக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 'கத்தி' படத்திற்கு ஆண்ட்ராய்டு கேம் ரிலீஸ் செய்த ஸ்கைடௌ ஸ்டூடியோஸ் தான் 'புலி படத்திற்கான கேமையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரேடர்ஜி கேம் எனப்படும் , ஒரு கிராமம், போர் கருவிகள் உருவாக்கம், மற்றும் போர் களம் அமைத்தல் என உருவாக்கப்பட உள்ளது புலி கேம்.

இவ்வளவு நாளாக ரேஸ் அல்லது சண்டை கேமாக ஒவ்வொரு லெவலாக முன்னேறி வித்யாசமான பின்னணி என மட்டுமே இந்தியாவில் படங்களை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் உருவாக்கப்பட்டன. 'கத்தி', கப்பர் என இதில் பல கேம்கள் அடக்கம். இப்போது இந்தியப் படங்களில் முதல் முறையாக அரசர் கால கதையையும் உள்ளடக்கிய 'புலி' படத்தின் கேம் போர்களம் அமைத்தல் அதில் ஹீரோவாக விஜய் அரசனாக செயல்படுதல் என விளையாட்டு சுவாரஸ்யம் நிறைந்த கேமாக உருவாக உள்ளது. இதற்கான டீஸரும் விரைவில் வெளியிட உள்ளனர்.

[Continue reading...]

Sakalakala Vallavan Movie Tamil review

- 0 comments

இதுவரை வந்த கமர்ஷியல் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிட்டு பிட்டாய் வெட்டி எடுத்து ஒரு கலர் ஃபுல் காஸ்ட்டியூம் தைத்துவிடுவார் இயக்குனர் சுராஜ். இதிலும் அது தொடர்ந்திருக்கிறது. சூரியின் காமெடி, த்ரிஷா-அஞ்சலியின் கலர்ஃபுல் & கிளாமரான தோற்றம் என சக்கைபோடு போடுகிறான் சகலகலா வல்லவன்.

அப்பா சொல்லை மீறாத பிள்ளையான ரவி, பிராபுவின் சொல்லைக் காப்பாற்ற காதலித்த பெண்ணாண அஞ்சலியை மறந்து, த்ரிஷாவை மணக்கிறார். (இது ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?). சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டுவிட்ட திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள நினைக்கும் த்ரிஷாவிடம், நான் உன் வீட்ல இருந்தா மாதிரி நீ என் வீட்ல ஒரு மாசம் இரு. நான் டைவர்ஸ் தரேன் என வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். (இதுவும் ஒரு படத்தை நியாபகப்படுத்துகிறதா?)

அந்த ஒரு மாதத்தில் ஜெயம்ரவியின் குடும்பம் த்ரிஷாவை எப்படி மாற்றுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸாக இருந்திருந்தால் சகலகலா வல்லன் நம்மை ஏமாற்றியிருப்பான். த்ரிஷா டைவர்ஸ் பத்திரத்தை வாங்கிக்கொண்டு போய்விட, எப்படித் தான் இருவரும் சேர்கிறார்கள் என்பது ஆர்ப்பாட்டமான க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க அலப்பறை செய்துவரும் சூரியை, சில நிமிடங்கள் வரும் விவேக் ஓவர்டேக் செய்கிறார். 5 நிமிடத்தில் 500 டபுள் மீனிங் வசனங்கள் பேசுகிறார். (சில வசனங்கள் வீட்டுக்கு போன பிறகு தான் புரியும்). விவேக்கின் மொட்டை கதாபாத்திரம் சிரிக்க வைக்க, சால்ட் & பெப்பர் லுக் விவேக் எரிச்சல்.

'நான் கடவுள்' ராஜேந்திரன் போலிஸ் உடையில் அதட்டுகிறார். பறந்து பறந்து அடிப்பது, பஞ்ச் வசனங்கள் பேசுவது என ஆரம்பித்து, எந்திரன் ரோபோட் வேடம் போடுவதெல்லாம் வேற லெவல் காமெடி. சிரித்து சிரித்து வாய் வலி வருவது உறுதி.

பெரிய வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமான கேரக்டரில் ஜெயம் ரவி கலக்குகிறார். அப்பா பாசத்தில் மூக்கால் அழுது வசனம் பேசுவது, குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவது என பல வருடங்களுக்கு முன்பு பார்த்த விஜய் சேதுபதி மீண்டும் கண்முன். 'குடி' என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. த்ரிஷா துரத்திவிட்டதால் குடித்துவிட்டு ஆட்டம் போடும் 'பல்பு வாங்கிட்டேன் மாமா பல்பு வாங்கிட்டேன்' பாடலின் துள்ளல் இளைஞர்களுக்கான கொண்டாட்டம்.

பாடல் என்றதும் நினைவிற்கு வருவது இந்த படத்தின் முதல் பாடல் தான். 'ஹிட்டு சாங்கு' என குத்தாட்டம் போடும் பூர்ணா ஜொலிப்பு. பூர்ணாவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு அஞ்சலியின் ஆட்டமெல்லாம் எம்மாத்திரம் என தோன்றுவது இயல்பே. வயதாகிவிட்டதால் இப்போதெல்லாம் த்ரிஷா சிரமமெடுத்து நடனமாடுவதில்லை என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவிவந்தது. 'புஜ்ஜிமா புஜ்ஜிமா' பாடலில் ஜெயம் ரவிக்கு இணையாக பின்னி பெடலெடுத்திருக்கிறார். தாவணியில் ஜிவ்வ்வ்வுனு வரும் அஞ்சலி மாடர்ன் டிரஸ்ஸில் தொப்பையுடன் டான்ஸ் ஆடுவதை பார்த்த உடனேயும் சகிக்கவில்லை. பார்க்க பார்க்கவும் பிடிக்கவில்லை.

பக்கா கமெர்ஷியல் என்பதால் கலகலப்பை மட்டுமே கொடுக்கிறது சகலகலாவல்லவன். இளம்புயல் பட்டத்தை வைத்துக்கொண்டு சாதாரண ரௌடிகளை அடித்தும், பீர் பாட்டிலை தலையில் உடைத்தும் தனது ஆக்‌ஷன் ப்ளாக்கை ரவி முடித்துக்கொண்டது சிறிய வருத்தம். காமெடி, காதல், க்ளாமரில் மட்டும் சகலகலாவல்லவன் தேறுகிறான்.

சகலகலாவல்லவன் – ரகளை செய்கிறான்!

[Continue reading...]

Saturday 30 May 2015

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் தனி திறமை

- 0 comments

இயக்குநர் பாரதிராஜா மற்றும் அகத்தியன் ஆகியோர் தன் மீது கோபத்தில் இருந்த போது, தனது டப்பிங் திறமையால் அசரடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.

சீன் 1: 'நாடோடித் தென்றல்' டப்பிங் விவகாரம்

பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா நடிப்பில் உருவான படம் 'நாடோடித் தென்றல்'. அப்படத்திற்காக கார்த்திக் டப்பிங் மட்டும் பாக்கி இருந்தது. அப்போது கார்த்திக் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருந்தது. டப்பிங் பண்ணுவதற்காக நீண்ட நாட்களாக கார்த்திக்கை படக்குழு கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், கார்த்திக் வரவே இல்லை.

ஒரு நாள் பாரதிராஜா பரணி ஸ்டூடியோவில் பயங்கர கோபமாகி, "இன்று கார்த்திக் வந்து டப்பிங் பேசியே ஆக வேண்டும். நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

பாரதிராஜா கிளம்பிய சில மணித்துளிகளில் கார்த்திக் பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு டப்பிங் பேசலாம் என்று ஆரம்பித்திருக்கிறார். இதை பாரதிராஜாவிடம் படக்குழு தெரிவிக்க, "எங்கேயும் கார்த்திக்கை விட்டு விடாதீர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பேன்" என்று பதிலளித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்திருக்கிறார் பாரதிராஜா. அதற்குள் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசி முடித்துவிட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தார் கார்த்திக்.

டப்பிங் பேசிய காட்சிகள் அனைத்தையும் பாரதிராஜா பார்த்துவிட்டு கார்த்திக்கிடம், "இந்த திறமை தான் உன்னை இன்னும் திரையுலகில் நீடிக்க வைக்கிறது" என்று மனம்விட்டு பாராட்டினார்.

சீன் 2: 'கோகுலத்தில் சீதை' டப்பிங் விவகாரம்

'கோகுலத்தில் சீதை' படத்துக்கும் நீண்ட நாட்களாக டப்பிங் பேசாமல் இருந்து வந்தார் கார்த்திக். இயக்குநர் அகத்தியன் பயங்கர கோபத்தில் இருந்திருக்கிறார். ஒரு நாள் இரவு 9 மணிக்கு பரணி ஸ்டூடியோவிற்கு வந்தார் கார்த்திக். 'கோகுலத்தில் சீதை' டப்பிங் பேசலாமா? எனக் கேட்டு அப்படத்தை முழுக்க ஓடவிட்டு பார்த்திருக்கிறார். பின்னர் கார்த்திக் "ஒரு மணி நேரம் போன் பேசிவிட்டு வருகிறேன்" என்று கூற, அனைவருமே எங்கேயோ கிளம்ப போகிறார் என்று எண்ணி இருக்கிறார்கள். ஏனென்றால் 'கோகுலத்தில் சீதை' படத்தில் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருப்பதால் இன்று டப்பிங் பேசாமல் ஏமாற்றிவிட்டு கிளம்பி விடுவார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து டப்பிங் அறைக்கு சென்று பேச ஆரம்பித்த கார்த்திக், காலை 8:30 மணி வரை இருந்து, முழுப்படத்தையும் பேசி முடித்துவிட்டார். கார்த்திக்கை கடுமையாக திட்டிவந்த படக்குழு, டப்பிங் பேசி முடித்தவுடன் ஒரே இரவில் முழுப்படமுமா?! என்று மகிழ்ந்து பாராட்டி இருக்கிறது



[Continue reading...]

Sunday 26 April 2015

Brain Death "மூளை இறக்குமா?..."

- 0 comments

(தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாகப் படியுங்கள்... பகிருங்கள்)

"மூளை இறக்குமா?..."
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்...
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...

இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...

உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

[Continue reading...]

Monday 20 April 2015

ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா - வாட்ஸப்பில் பரவும் ’மணிரத்னம்’ டா ManiRathnam WhatsApp message

- 0 comments
வாட்ஸப்பில் பரவும் 'மணிரத்னம்' டா மொமெண்ட்!
தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கல்ச்சர் பற்றி 'ஓ காதல் கண்மணி' படத்தில் அலசியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இப்போது, தாலி தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, மணிரத்னம் எடுத்துள்ள படம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

மணிரத்னம் தாலியை பற்றி இப்போது அவர் சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறார் என்று மணிரத்னம் குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைகளில் மெஸேஜ் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் மணிரத்னத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து ஒரே வரியில் கூறியுள்ளனர்.




தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி 

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா

இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி

ரத்னம் 'டா' ... 'மணிரத்னம்' டா

இப்படி ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் பரவி வருகிறது வாட்ஸ் அப்பில். இப்படியும் ஒரு ட்ரெண்டா பாஸ்.
[Continue reading...]

Sunday 19 April 2015

வாட்ஸ் அப் நகைச்சுவை தொகுப்பு whatsapp jokes collection

- 0 comments

GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?

BOY : ஆமா.

GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?

BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.

GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?

BOY : மூனு பாக்கெட்

GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?

BOY : 40 ரூபாய்.

GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.

BOY : ஆமா.

GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : வருசத்துக்கு 43,200 ரூபாய்?

BOY : கரெக்ட்டா சொன்னீங்க.

GIRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.

BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?

GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.

BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?

GIRL : !!!!! (speechless)

கொய்யால யாருகிட்ட வந்து அட்வைஸ் பன்னுறே.
வாய்விட்டுச் சிரிப்போம்..!!
...........................................................................

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

😳😳
மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா?? இல்லையா??     

"நம்பிக் கட்டினோம் ... நன்றாக இருக்கிறோம்"
😳😳

[Continue reading...]

Saturday 11 April 2015

’ஜிகர்தண்டா’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம்

- 0 comments

 

'ஜிகர்தண்டா' படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா மற்றும் கருணாகரன் , நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.  இப்படத்திற்கு 'இறைவி' என பெயரிடப்பட்டுள்ளது.

 

சி.வி.குமாரின் "திருகுமரன் எண்டெர்டெயின்மெண்ட்" இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்போது ஹீரோயின்கள் தேர்வு நடந்துவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறுகையில் "6 நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் இன்னமும் முடிவு செய்யவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 'ஜிகர்தண்டா' வெற்றியால் இந்த படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

[Continue reading...]

Tuesday 31 March 2015

கெட்டும் குட்டிச்சுவராகி

- 0 comments

 

கெட்டும் குட்டிச்சுவராகி  
=========================

இருள் அவிழ்ந்துகொண்டிருக்கும்   
அந்த அறைக்குள்  
இதுவரை  
அகல்விளக்கொளியான எவரும்  
அடிமையில்லைதான்  
இனி எனக்குள் அவிரவேண்டாம் 
காரையிழந்த 
நான்கு அகச்சுவர்களின்மேல் 
கரிசனம் வேண்டாம்
குட்டிச்சுவராக போவதென்பது 
அதை கட்டியபோதே 
இட்டவிதிபோல் 
அப்படியே போய்விட்டது 
ஆம்,, அப்படியே போய்விட்டது
இறுக்கம் விட்டப் பின்னாலே
புதிதான காரைவாசத்தையும் 
வண்ணத்துப் பூச்சுகளையும் 
ஏற்றுக்கொள்ளும் திடமுமில்லை அதற்கு 
ம்ம்ம் அது அபாயக்கரைதான் என்று
அதற்குள் ஏற்பட்டு முடிந்தவைகளையும்  
நடவாததையுமாய்   
புரளி பேசிக்கொண்டிருக்கும்  
எத்தனையோ ஊர்க்கதைகளின் பின்னணியில்   
என்றாவது இடிபட்டு 
பாழடையும் வரையிலாவது  
அது கிடந்துவிட்டுப்போகட்டுமே
அதனால் 
யாருக்கென்ன நஷ்டம்  
அதை அப்படியே விட்டுவிடுங்கள் 
யார் யாரோ அதில் 
வாழ்ந்துவிட்ட சுவடுகளோடு
சொற்பநாட்களேனும் 
அங்கோர் மூலையில் 
அது கிடந்துவிட்டுப்போகட்டுமே ம்ம்ம்ம் ,, 

அனுசரன்

 

[Continue reading...]

Monday 23 March 2015

ஞாபக சக்தி அதிகரிக்க ! Tamil Facebook Message and GK

- 0 comments

ஞாபக சக்தி அதிகரிக்க !

ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.

வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும்.

செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.

முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.

துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும்.

 

[Continue reading...]

Wednesday 11 March 2015

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? How to idendify the pure Honey ?

- 0 comments

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம்

[Continue reading...]

Monday 9 March 2015

என்னம்மா வித்தியாசம் ? Tamil Super Facebook message Girl talk with her Father

- 0 comments

"என்னம்மா வித்தியாசம்'?

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தை கடக்க முயல்கின்றனர்.

தந்தை சொல்கிறார், "என் கையை கெட்டியா புடிச்சிக்கோ'' '

மகள் சொல்கிறாள், ''நீங்க என் கையை புடிச்சிக்கோங்க"

'ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்'' என தந்தை கேட்கிறார்.

''நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்தவொரு நிலையிலும் என் கையை விட மாட்டிங்கப்பா'' என்றாள் மகள்..

[Continue reading...]

இந்தியர் அமெரிக்கர் சொக்லேட் திருட்டி மேஜிக் Indian American Chocklet Magic WhatsApp Joke

- 0 comments

இந்தியண்டா ..

இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி,

'நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம்.

விடுவாரா இந்தியர். '. உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..

பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து,

அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், ' எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.'

இந்தியர் அமைதியாக பதில் அளித்தார்,

' என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.'

[Continue reading...]

Friday 6 March 2015

உறுதியானது 'அமரன்' இரண்டாம் பாகம்

- 0 comments

கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.

 

1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. ஆதித்யன் மற்றும் விஸ்வா குரு இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அன்னலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள்.

 

'அனேகன்' படத்தின் மூலமாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற கார்த்திக், 'அமரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

[Continue reading...]

Tuesday 3 March 2015

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன? Symptoms of Swine Flu

- 0 comments

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது '' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை.

ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது. 2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் 'A' ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.

மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?

மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.

கடந்த காலங்களில் இந்நோய் வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே, ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..

இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?

இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.

 

நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.

 

ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.

ஸ்வைன் நோய் வராமல் தடுத்து ஆரோக்கிய வாழ்வு வாழ.....

இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.

தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.

கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.

இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்

உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

 

இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?

உங்களுக்கு இந்நோய் இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.

இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும்.

ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.

நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?

அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர் அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர் இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும் காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.

குழந்தைகளாக இருப்பின்....

வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.

தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.

அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.

குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.

ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.

தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்

பெரியவர்களுக்கு.........

சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்

மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு

தீடீர் மயக்கம்.

தடுமாற்றம்.

H1N1 வைரஸ் பொது அறிகுறிகள் மற்றும் தற்காப்பு செயல்பாடுகள்

H1N1 வைரஸ் உலக மக்கள் சமுதாயத்திடையே மிகுந்த பீதியை கிளப்பிவிட்டது. இந்த உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றன. கிழ்க்குறிப்பிட்டுள்ள சுலபமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்..

H1N1 காய்ச்சல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்

சாதாரண சளி காய்ச்சல் போல் அல்லாது அதிக அளவு காய்ச்சல் சில நோயாளிகளிடம் இந்த அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.

வறட்டு இருமல்

மூக்கு அடைப்பு (அ) ஒழுகுதல்

தொண்டை புண்

உடல் வலி

குளிர் நடுக்கம்

வழக்கத்திற்கு மாறான அதிகளவு களைப்பு

குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு

முற்றிய பன்றிக்காய்ச்சலால் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழத்தல் ஏற்படலாம்.

H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உலகெங்கும் பரவிய உயிர்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் இந்திய மன்னில் வந்தடைந்து பல உயிர்களை குடித்திருக்கிறது. இந்த நோய் வருமுன் காப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுதல் போதுமானது. படி அளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மரக்கால் அளவிற்கு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பின்பற்றி பன்றிக் காய்ச்சல் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியிருப்பதாக உணர்ந்தால், கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களான பள்ளி மற்றும் அலுவலகம் செல்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி சோப்பு கொண்டு நன்றாக நுரைக்க சோப்பிட்டு (குறைந்தபட்சம் 15 நொடிகள்) ஓடும் தண்ணீரில் கழுவவும்.

இரவில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.

தினமும் குறைந்தபட்சம் 8 அல்லது 10 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அது வறட்சி ஏற்படாமல் குழிவுகளில் எச்சில்/சளி ஊற செய்யும்.

இருமல் மற்றும் தும்மல் வரும்போது மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட காகிதத்தால் வாயை மூடிக்கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக் கிருமிகள் யாருக்கும் பரவாமல் தடுக்கலாம்.

கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளால் தொடுவதை தவிற்பதன் முலம் பரவுவதை தவிற்கலாம்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள (அ) பாதிக்கப்பட்ட நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு கவணித்தல் வேண்டும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் / உடலை வலிமையுடன் பேணவும் / முழுதானியங்கள், பல்வகை வண்ணக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை உண்ணவும்.

தெரிந்துக்கொள்க:

இத்தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்நோய்க்கு எதிரான வழிகாட்டிகள் அவ்வபோது பிரசுரிக்கப்படுகிறது. நோய் பற்றிய அவ்வபோது வெளிவரும் புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன்படி முறையாக செயல்படுதல் வேண்டும்.

[Continue reading...]

Monday 2 March 2015

அமர்க்கள ஜோடிக்கு அழகான ஆண்குழந்தை

- 0 comments

தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு இன்று காலை 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அமர்க்களம் படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர். கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது.

இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள். கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர், சினிமா உலகினர் மற்றும் 'தல' ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் 'தல' ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

[Continue reading...]

Friday 27 February 2015

கவிஞர் தாமரை போராட்டம்

- 0 comments

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். 'சொல்லொண்ணாத் துயரம்' என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்.

 

மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014-ல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார். அதன் பின் இன்று வரை நான் அவரைக் காணவில்லை. என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது

 

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார். அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார். ஆதன் ஊடாக நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை.எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமை / தமிழ்த் தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும் அடங்கியிருந்ததுவே..!

 

2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

 

ஆனால் இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம்.

 

'தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.'

 

ஊரறிந்த தமிழ்க் கவிஞராகிய எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? இதன் பின்னணி என்ன?

 

தியாகு வீட்டை விட்டு ஓட, சொல்லிக் கொள்ளும் காரணம் 'புரட்சிகர அரசியலுக்கு என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன், அதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது' என்பதுதான்.

 

அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.

 

தியாகு 2001-ல் என்னைப் பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். என்னைப் போலவே தாமரையையும் அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்' என்று உறுதி கூறியே என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

 

இணைவதற்கு அனுமதி வாங்கிய தியாகு, வீட்டை விட்டு ஓடுவதற்கு இவர்களிடமெல்லாம் அனுமதி வாங்கினாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

 

அவர்கள் முன் வந்து இதற்குப் பதில் சொல்ல வேண்டுகிறேன். அந்தப் பதிலினூடாக 'தமிழ்த் தேசியம்' என்றால் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, நாளை இவர்கள் அமைக்கப் போகிற தமிழ்த்தேசத்தில் என்னவகையான விழுமியங்கள் இடம் பெறப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்.

 

என்னுடைய கோரிக்கைகள்:

 

1. வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.

 

2. நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.

 

நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.

 

எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

 

எனக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத் தியாகுவே பொறுப்பு.

 

நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?

 

Keywords: கவிஞர் தாமரை, தியாகு, தாமரை போராட்டம்

[Continue reading...]

Thursday 26 February 2015

நடிகை சொனாக்சி சின்ஹா வின் ஆபாச வீடியோ

- 0 comments

நடிகை சொனாக்சி சின்ஹா வின் ஆபாச வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி வருகிறது . நடிகைகளின் ஆபாச படம் இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் களில் தொடர்ந்து வருகின்றன.. கதாநாயகிகள் ராதிகா ஆப்தே , வசுந்தரா , ஸ்ரீ திவ்யா போன்றோர்களின் படங்கள் சமீபத்தில் வலி வந்தன.. படுக்கையறை மற்றும் குளியலறைகளில் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் . நடிகை லக்ஷ்மி மேனன் பெயரில் ஆபாச வீடியோ வும் வெளி வந்தன. இதனை அவர்கள் மறுத்தனர்.. லக்ஷ்மி மேனன் கூறும்போது ஆபாச படத்தில் இருப்பது நான் இல்லை என விளக்கம் அளித்தார். ராதிகா ஆப்தே மார்பின் மூலம் தனது தலையை ஆடை இல்லாத வேறு பெண்ணுடன் ஒட்டி வெளியிட்டுள்ளனர்..நடிகை ஹன்சிகா பெயரிலும் ஆப்பச குளியல் வீடியோ உள்ளது... இதன் வரிசையில் தற்போது சொனாக்சி சின்ஹா ஆபாச படம் வெளிவந்துள்ளது .. அனால் வீடியோ வில் இருப்பது தான் அல்ல என்று நடிகை மறுத்துள்ளார்... ..

சொனாக்ஷி சின்ஹா தமிழில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 'How Old Are you'  என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு '36 வயதினிலே' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  'How Old Are you' படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்தார். இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி மிகபெரிய வசூல் சாதனை படைத்தது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடிக்க படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருக்கின்றது . இந்த படத்திற்கு ''36 வயதினிலே " என தலைப்பு வைத்துள்ளனர்.. ஏற்கனேவே பாரதி ராஜா "16 வயதினிலே " என்ற பெயரில் எடுத்த படம் வெற்றி படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Monday 23 February 2015

விடைகொடு எங்கள் நாடே - ஜெசிக்கா Tamil Girl Jesicca

- 0 comments

விஜய் டி.வி. சார்பில் சிறந்த இளம் பாடகியாக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா, தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி. சார்பில் நடததப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி, இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படுகிற 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்து ஜெசிக்கா பாடிய போது, அரங்கத்தில் குழுமியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோர் கண்களில் கண்ணீர் தேங்கியது. ஜெசிக்கா பாடி முடிக்கவும் நடுவர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்றி கை தட்டினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ்,''இளம் வயதில் ஈழத்தமிழரின் வலிகளையும் வேதனைகளையும் தனது பாடலால் பதிவு செய்ய ஜெசிக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றார்.

ஆனால் உண்மையிலேயே ஜெசிக்கா செய்த அடுத்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இந்த நிகழ்வில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தையும், தமிழக மற்றும் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்குவதாக ஜெசிக்காவின் பெற்றோர் அறிவித்த போது, அரங்கத்தில் கூடியிருந்த ஒவ்வொருவரும் உருகிதான் போனார்கள்.

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜெசிக்கா...''இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன்'' என்றார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது தாய் தமிழகத்தையும் நெகிழச் செய்தது.!

உன் போன்ற பிஞ்சு நெஞ்சங்களில் உள்ள

உணர்வு பெரிய பதவிகளில் உள்ள பெரியவர்களிடம்

இல்லையே ? வணங்குகிறோம் , வாழ்த்துகிறோம் !!

[Continue reading...]

Thursday 12 February 2015

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

- 0 comments

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். www.puradsifm.com

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger