Friday 13 December 2013

ஜெயலலிதா பிரதமராவதை வரவேற்கிறேன்: முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda

- 0 comments

Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda ஜெயலலிதா பிரதமராவதை வரவேற்கிறேன்: முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda

ஸ்ரீரங்கம்,டிச.14-

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும்(தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன்.

ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

மத்திய அரசு தனிப்பட்ட முறையில் இதில் முடிவு எடுக்கக்கூடாது. சமீபத்தில் நடந்து முடிந்த 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியது உண்மைதான். இந்த தேர்தலின் முடிவு காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஏற்க முடியாது என்ற மக்களின் முடிவையும் திட்டவட்டமாக காட்டுகிறது.

டெல்லி தேர்தலில் எவ்வளவு தூரம் மக்களை கவர காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவில் பகிரங்கமாக தெரிவித்து விட்டனர்.

தேசிய அளவிலும் இந்த தேர்தல் முடிவு பிரதிபலிக்கும். ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய 9 மாதத்திலேயே புது கலாசாரத்தை மக்களுக்கு தெரிவித்து விட்டது. ஊழலற்ற அரசு தான் மக்களின் எதிர்காலம் என்பதை மக்களுக்கு அந்த கட்சி உணர்த்தி விட்டது.

இவ்வாறு தேவே கவுடா கூறினார்.
...

Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda

[Continue reading...]

கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாயின் விசாரணை காவல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு Judicial custody of narayan sai extended till 18th

- 0 comments

Img கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாயின் விசாரணை காவல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு Judicial custody of narayan sai extended till 18th

புதுடெல்லி, டிச.14–

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு ஆசிரமம் நடத்தி வந்தார். இங்கு தங்கி படித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவியை சாமியார் ஆசாராம் பாபு கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து ஆசாராம் பாபு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய் மீதும் செக்ஸ் புகார் கூறப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் ஆசாராம் பாபுவும் அவரது மகனும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அக்டோபர் மாதம் போலீசில் புகார் செய்தார்.

2002–ம் ஆண்டு முதல் 2005–ம் ஆண்டு வரை சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்த போது தன்னை நாராயண் சாய் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைய சகோதரி புகாரில் கூறியிருந்தார்.

1997–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை ஆசிரமத்தில் தங்கியிருந்ததாகவும் அப்போது, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த சகோதரி புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகாரிலும் ஆசாராம் பாபு மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் மகன் நாராயண் சாய் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் 2 மாதத்துக்குப் பின்பு டெல்லி – அரியானா எல்லையில் பதுங்கி இருந்த நாராயணன் சாயை போலீசார் கடந்த 4ம் தேதி சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று அவரை சூரத் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கும், இவ்வளவு நாளாக பதுங்கியிருந்த லூதியானாவுக்கும் நாராயண் சாயை அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவரது விசாரணை காவலை நீட்டிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

இதனையடுத்து, நாராயண் சாயின் விசாரணை காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
...

[Continue reading...]

GMR decide to sell Delhi Daredevils team டெல்லி டேர்டெவில்ஸ் அணியை விற்க ஜி.எம்.ஆர். நிறுவனம் முடிவு

- 0 comments

GMR decide to sell Delhi Daredevils team டெல்லி டேர்டெவில்ஸ் அணியை விற்க ஜி.எம்.ஆர். நிறுவனம் முடிவு GMR decide to sell Delhi Daredevils team

இஸ்தான்புல், டிச. 13-

நாட்டின் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஜி.எம்.ஆர். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற அதன் தலைவர் முடிவு செய்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்திடம் உள்ள டெல்லி டேர் டெவில்ஸ் அணியை விற்பது தொடர்பாக இந்நிறுவனம் கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதவிர துருக்கியுலுள்ள இஸ்தான்புல் சபீஹா கோக்சென் விமான நிலையத்தின் மீதான தனது 40 சதவிகித பங்கை 350 மில்லியன் டாலருக்கு விற்கவும் முடிவு செய்துள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற முடிவு செய்துள்ள இதன் தலைவர் ஜி.எம்.ராவ், கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனது மின்சார நிறுவனத்தை 482 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார்.

மேலும் இந்தியாவிலுள்ள தனது இரண்டு நெடுஞ்சாலை திட்டங்களை 70 மில்லியன் டாலருக்கு விற்கவும், இங்குள்ள மின்சாரப்பணிக்கான திட்டம் ஒன்றை விற்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

...

GMR decide to sell Delhi Daredevils team

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger