Tuesday 31 December 2013

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா? Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

- 0 comments

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பல தருணங்களில், மீண்டும் பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை. பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்றால் அவருக்கு வழி காட்ட தயராக இருக்கிறேன் என்று மன்மோகன்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இதை தெரிவித்து விட்டார்.

ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் என்று வரும் 17–ந்தேதி நடைபெறும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கென தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 3–ந்தேதி பகல் 11 மணிக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார். அன்றைய தினம் எதிர்கால திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த தகவலை மையமாக வைத்து பத்திரிகையாளர்களுடனான அன்றைய சந்திப்பின் போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மன்மோகன் சிங் அறிவிப்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.

மேற்கண்ட யூகத்திற்கும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுடெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, பிரதமர் ராஜினாமா செய்கிறார் என்று வெளியாகும் யூகங்கள் தவறானவை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை என ஊடகங்கள் குறை கூறி வந்தன. சரி, 2014-ம் ஆண்டு பிறக்கும் வேளையில் அவர்களை சந்திக்கலாமே என்று கருதிய பிரதமர், 3-ம் தேதி பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம் பதவி விலகப் போவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என சில ஊடகங்கள் புரளியை கிளப்பி வருகின்றன. என்னைப் பொருத்த வரையில், இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலை என்றே கருதுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
...

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

[Continue reading...]

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

- 0 comments

Img 2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

ஆக்லாந்து, டிச. 31-

உலகம் முழுவதும் நாளை தொடங்கவுள்ள 2014 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டு வாணவேடிக்கைகள் தொடங்கின. கிரீன்விச் நேரப்படி இன்று 11 மணியளவிலேயே அவர்களுக்குப் புத்தாண்டு பிறந்துவிடுவதால் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடியது ஆஸ்திரேலியாவில்தான். இதையொட்டி சிட்னி நகரத்தில் பிரமாண்ட வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இங்கு பிரபலமாக நடைபெறும் வாணவேடிக்கைகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். ஜப்பானில் உள்ள ஷிண்டோ மதகுருமார்கள் புதிய ஆண்டை வரவேற்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துபாய் நகரம் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளது. கடற்கரைக்கு முன்னால் 30 மைல் தொலைவிற்கு நீண்டு செல்லும் இந்த வாணவேடிக்கைகள் ஒரு கி.மீ உயரம் வரை செல்லுமென்று கூறப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்கள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

சீனாவின் பல நகரங்களிலும் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்படும்போது மோசமான பனிமூட்டம் காரணமாக வுஹான் நகரம் மட்டும் இந்தக் கொண்டாட்டங்களைக் கைவிட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களான மாஸ்கோ, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களிலும் பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெறும். தென் அமெரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 5 ஆம் தேதி மறைந்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லேசர் காட்சிகள், வாணவேடிக்கைகள் அடங்கிய ஒரு முப்பரிமாண சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் எப்போதும்போல் பாரம்பரிய முறையிலான புத்தாண்டுத் துவக்கத்தினைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வண்ணமயமான திருவிழாக்களுக்குப் பெயர்போன பிரேசில் இந்த ஆண்டும் கோபகபானா கடற்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை வரவேற்க 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
...

[Continue reading...]

Monday 30 December 2013

தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

- 0 comments

Img தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

கொழும்பு, டிச.30-

இலங்கையின் திருக்கேத்தீஸ்வரம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கிடைத்தன. இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.

இலங்கை அரசு இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மண்டை ஓடுகளை தொடர்ந்து தோண்டி எடுக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதிர்ச்சி திருப்பமாக மண்டை ஓடுகளை தோண்டும் பணியை நேற்று அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி திருப்பமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண்டை ஒடுகளை தடவியல் துறை ஆய்வுக்காக சீனாவிற்கு அனுப்பியுள்ளது ராஜபக்சே அரசு. இது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது இறந்த தமிழர்களின் உடலை புதைப்பதற்கு ஏதுவாக சீனா பல ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. போரின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை சீனா உதவியுடன் இலங்கை அழித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளும் சீனாவிற்கு அனுப்பப்படுவது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி என குற்றம்டசாட்டப்படுகிறது.

எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
...

[Continue reading...]

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

- 0 comments

gang attacks on Indian students in Melbourne went into a coma ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

புதுடெல்லி, டிச.30-

ஆஸ்திரோலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை, பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்வீந்தர் சிங் என்ற அந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

சிங்கின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
...

[Continue reading...]

Sunday 29 December 2013

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

- 0 comments

UK Government website publishes advertisement for call girls job

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

லண்டன், டிச. 30-

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தனியாக வரும் ஆணுக்கு துணையாக அழகான பெண்களையும், பெண்ணுக்கு துணையாக இளமையும், நல்ல உடல்கட்டும் கொண்ட ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ..? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் இ-மெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் அவர்களை விமான நிலையத்திற்கே வந்து அந்த நபர்கள் அழைத்து செல்வார்கள்.

அந்த நேரம் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்து தூங்குவார்கள்.

எஸ்கார்ட் சர்வீஸ் என்றழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹார்னி எஸ்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில், தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 1020 ரூபாய்) வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.
...

UK Government website publishes advertisement for call girls job

[Continue reading...]

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

- 0 comments

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student லிஃப்ட் தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

லக்னோ, டிச. 30-

உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா அருகே உள்ள நாக்லா ஹன்சி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மணவி கடந்த 26-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரை சேர்ந்த 3 பேர் காரில் வந்து அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறினர்.

இதற்கு சம்மதிக்காத அந்த இளம் பெண்ணை பலவந்தமாக காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத ஓரிடத்தில் காரை நிறுத்தி, காரினுள் வைத்தே அந்த பெண்ணை கதறக் கதற மூவரும் கற்பழித்தனர். அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த அண்ணு, ராஜேஷ், லலித் ஆகியோர் தனது மகளை கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக மாணவியின் தந்தை அருகில் உள்ள ரயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை வாங்கிக்கொள்ள மறுத்த போலீசார், குற்றவாளிகளுடன் சமரசமாக போகும்படியும் புகார்தாரரை வற்புறுத்தினர்.

பாதிக்கப்பட்ட தலித் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும் போலீசார் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்துக் கொண்ட தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடந்த கொடுமைகளை எல்லாம் விபரமாக கூறினார்.

சூப்பிரண்ட்டின் உத்தரவையடுத்து, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.
...

[Continue reading...]

பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

- 0 comments

Img பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

மேல்புறம், டிச.29–

பாரதீய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரத்தினமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:––

தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து ஆகியோர் பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசி விட்டனர். பா.ம.க.வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி. அந்த கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என நம்புகிறோம். அப்படி கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இன்று தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. நாளை திடீரென கூட்டணி என்று பேசுவார்கள். அவர்களது முடிவுகளை புரிந்து கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் 1½ லட்சம் தமிழகர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து விதவைகள் ஆனார்கள். 50 ஆயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆனது. அங்குள்ள தமிழர்களின் உடமைகள், நிலங்கள், வீடுகள் இலங்கை அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தமிழர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழக மீனவர்களை நிம்மதியாக கடலுக்கு போய் மீன் பிடிக்க விடாமல் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கடலோர கிராமங்களில் ஒரு ஓட்டு கூட விழாது.

ப.சிதம்பரம் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியாக பதவி வகித்துள்ளார். ஆனால் அவரால் தமிழகத்துக்கோ, அவரது தொகுதிக்கோ ஒரு நன்மையும் கிடைக்க வில்லை. தமிழகத்தில் ஒரு வளர்ச்சித்திட்ட பணிகள் கூட அவரால் செய்யப்படவில்லை.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடினார். தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளார். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரே வெளியே வருவார்.

குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்து மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறுகையில் சிறிய துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி உள்ளார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குளச்சல் பெரிய வர்த்தக துறைமுகமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

[Continue reading...]

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

- 0 comments

Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed லஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம் Kejriwal to eradicate corruption crackdown Delhi officials unfazed

புதுடெல்லி, டிச.29–

டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார்.

அவரது காரில் சிகப்பு விளக்கு இல்லை. டிரைவர் கூட கிடையாது. ரெயில் நிலையத்தில் இருந்து பதவி ஏற்பு விழா நடைபெற்ற ராம்லீலா மைதானத்துக்கு காரில் 6 மந்திரிகளை உட்கார வைத்து அவரே ஓட்டி வந்தார்.

முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய டெல்லி போலீசார் நேற்று அவரை வரவேற்று பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பதவி ஏற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என்று தொண்டர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

வெறும் உறுதிமொழியுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்வடிவம் காட்டவும் தீவிரமாக உள்ளார். ஊழல் லஞ்சம் பற்றி தகவல் தெரி விப்பதற்காக 2 நாளில் டெலிபோன் எண்ணை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுகிறார்.

லஞ்சம் வாங்குவோர் பற்றி பொதுமக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் செய்யலாம். அந்த எண் முதல்–மந்திரி அலு வலகத்தில் இருக்கும். புகார் வந்ததும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல அதிரடி கட்டளைகளும் பிறப்பித்துள்ளார். அதன்படி மந்திரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்குகளை பொருத்திக் கொள்ள மாட்டார்கள்.

அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்பட மாட்டாது. அச்சுறுத்தல் அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முடிவு எடுத்துள்ளார்.

டெல்லியில் எங்கு பார்த்தாலும் அதிகாரிகள் சிகப்பு விளக்கு பொருத்திய கார்களில் வலம் வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டே கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கவில்லை. எனவேதான் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் வி.ஐ.பி.க்கள் போல் வலம் வரக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் அமர்ந்ததும் தனது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்தார்.

டெல்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் 9 பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரிய முதன்மை அதிகாரிதான் முதலில் மாற்றம் செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக உயர் கல்வித் துறை செயலாளர் ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முன்னுரிமை கொடுத்துள்ளார். தினந்தோறும் நபருக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இலவச குடிநீர் பற்றிய அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடுகிறார். அதுபோல் மின் கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் அல்லது புதன் கிழமை வெளியிடவும் திட்ட மிட்டுள்ளார்.

இதேபோல் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் பயணிகளின் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கியாஸ் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர், மின்சாரத்திற்கு அடுத்தப்படியாக டெல்லியில் இதுவும் பெரும் பிரச் சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை அளித்துள்ளார்.

அரசுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தீவிரமாக உள்ளார். இதனால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

...

[Continue reading...]

Saturday 28 December 2013

சன்னியாசி ஆனது ஏன்? நடிகை ரஞ்சிதா விளக்கம் Why are the saints Actress Ranjitha explain

- 0 comments

Img சன்னியாசி ஆனது ஏன்? நடிகை ரஞ்சிதா விளக்கம் Why are the saints Actress Ranjitha explain

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40–க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய சடங்குகள் செய்து ரஞ்சிதா சன்னியாசியாக தீட்சை பெற்றார். படுக்கையறை ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்பும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்களிலும் நித்யானந்தாவுடன் சென்றார். தியான கூட்டங்களிலும் பங்கேற்றார். தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

மேடையில் அவர் பேசும்போது உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன் என்றார். ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
...

[Continue reading...]

Thursday 26 December 2013

இந்தியாவில் புழங்கும் 1000 கோடி ரூபாய் கள்ளநோட்டுக்கள்: பாகிஸ்தான் முகமூடி கிழிந்தது India 1000 crore fake money Pakistan mask torn

- 0 comments

Img இந்தியாவில் புழங்கும் 1000 கோடி ரூபாய் கள்ளநோட்டுக்கள்: பாகிஸ்தான் முகமூடி கிழிந்தது India 1000 crore fake money Pakistan mask torn

மும்பை, டிச.26-

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுபவர்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவது தடவியல் துறை ஆய்வில் உறுதியாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே இவ்விவகாரத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை ஆய்வு செய்ததில், பாகிஸ்தானின் முகமூடி கிழிந்தது.

கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தீவிரவாதம், புதிய வடிவில் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சி என கருதப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட அளவிலான ரகசிய குழு நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.  மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ம.பி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கள்ள நோட்டு மாதிரிகளை ஆய்வு செய்து பாகிஸ்தான், இலங்கை மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் உண்மையான ரூபாய் நோட்டுக்களோடு ஒப்பிட்டு பார்த்ததில், பாகிஸ்தான் நாட்டு ரூபாயோடு தற்போது இங்கு புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் ஒத்துப்போகின்றன.

இன்னும் சில கள்ளநோட்டுகளில் பாதுகாப்பு நூல், மறைந்துள்ள பிம்பம் ஆகியவை சரியாக ஒத்துப்போவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நாடு ரூபாய் நோட்டின் ஜி.எஸ்.எம், தடவவேண்டிய மெழுகின் அளவுகள், பாலி வினைல் ஆல்கஹால் போன்றவை கள்ளநோட்டுளோடு மிகச்சரியாக ஒத்துப்போகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 100 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
...

[Continue reading...]

‘லைப் பார்ட்னரா’ வர்றீங்களா?: ஆண்களை அழைக்கும் சுடிதார் மோகினி Chudi Girl welcomed the boy asking for life partner in Trichy

- 0 comments
'லைப் பார்ட்னரா' வர்றீங்களா?: ஆண்களை அழைக்கும் சுடிதார் மோகினி Chudi Girl welcomed the boy asking for life partner in Trichy

திருச்சி, டிச. 26–

அப்பாவிகளை திசை திருப்பி பணம் பறிக்க புதுப்புது யுக்திகளை ஏமாற்று பேர்வழிகள் ஏராளமானோர் இன்றும் கையாண்டு வருகின்றனர். 'இப்படியுமா' என வியக்கும் வகையில் திருச்சி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் பணம் பறிக்க பெண் ஒருவர் முயன்றுள்ளார்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் 'காபி ஷாப்' உள்ளது. இங்கு வரிசையில் நின்று டோக்கன் வாங்கினால் தான் காபி கிடைக்கும். அந்த அளவிற்கு எப்போதும் கூட்டம் இருக்கும்.

இரவு 7 மணிக்கு சுதாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்ற வாலிபர் காபி டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுடிதார் அணிந்த பெண் ஒருவர் வந்துள்ளார். 'எனக்கு தலை சுற்றுகிறது, ஒரு டோக்கன் வாங்கி தாருங்கள், என்னால் நிற்க கூட முடியவில்லை' என கூறினார்.

பரிதாபப்பட்ட சுதாகரும் தனது காசிலேயே டோக்கன் வாங்கி, காபியும் வாங்கி அந்த பெண்ணிடம் கொடுத்தார். அப்போது சுதாகரிடம் நைசாக பேசத் துவங்கினார் அந்த பெண். 'உங்கள மாதிரி நல்லவங்கள இப்ப பார்க்கவே முடியலீங்க... உங்க காசிலேயே காபி வாங்கி தந்திட்டீங்களே...' என கூறி விட்டு சுதாகரின் வேலை, குடும்பம் பற்றி விசாரித்துள்ளார்.

பின்னர், 'வாங்களேன் அந்த ரிசர்வேஷன் பகுதிக்கு சென்று உட்கார்ந்து பேசலாம்' என அழைத்துள்ளார், என்ன தான் பேசுவார் பார்க்கலாம் என்ற ஆவலில் சுதாகரும் உடன் சென்றுள்ளார்.

ரிசர்வேசன் பகுதியில் காலியாக இருந்த சேரில் இருவரும் அமர்ந்துள்ளனர். அதன் பின் அந்த பெண் 'நான் பைனான்ஸ் கன்சல்டன்ட் வேலை செய்கிறேன். சொத்தின் பேரில் கடன் வாங்கி கொடுப்பேன். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருக்கிறேன். நான் ஒரு நல்ல லைப் பார்ட்னரை தேடிக் கொண்டிருக்கிறேன். உங்கள பார்த்தா 'ரொம்ப நல்லவரா' தெரியுது. நீங்க என் லைப்– பார்ட்னரா வர்றீங்களா?' என்றார்.

சுதாரித்துக் கொண்ட சுதாகர் 'நீங்க சொல்றது சரியா புரியலியே' என தூண்டில் போட்டுள்ளார். 'சார்... எனக்கு இப்போ கொஞ்சம் பைனான்ஸ் பிரச்சினை..., நீங்க எனக்கு பண உதவி செஞ்சா நான் உங்களுக்கு நல்ல பார்ட்னரா இருப்பேன்... வாரம் ஒரு தடவை நீங்க என்னை வெளியில் எங்க வேண்டுமானாலும் கூட்டிட்டு போங்க... புரியுதா...' என்றார்.

'ஐயோ..., எனக்கு நல்ல குடும்பம் ஒன்னு இருக்கு மேடம், ஆள விடுங்க' என்று சொல்லிவிட்டு புறப்பட முயன்றுள்ளார் சுதாகர். 'சார் ஒரு நிமிஷம், அவசரத்துல பர்ஸ்ல பணம் எடுக்காம வந்துட்டேன்... ஒரு 500 ரூபா இருந்தா குடுங்க நாளைக்கு இதே இடத்துல வந்து தந்துடுறேன்...' என்றார் அந்த பெண்.

'500 ரூபாவை பார்த்தே ரெம்ப நாளாச்சு மேடம்... நான் ரொம்ப ஏழை... நீங்க வேற ஆள பாருங்க...' என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார் சுதாகர்.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம் என பல இடங்களில் இப்படிப்பட்ட 'தில்லாலங்கடி' பெண்கள் உலா வருவதாக தெரிகிறது. சிக்கும் சிலரிடம் முடிந்தவரை பணம் பறித்து விடுகின்றனர் அவர்கள்.

மேலும் திருச்சியின் முக்கிய வர்த்தக பகுதியில் கல்லூரி மாணவிகள் என கூறிக் கொண்டு சில மணி நேரங்கள் 'கம்பெனி' கொடுத்து பணம் வசூலிக்கும் 'வசூல் ராணிகளும்' வலம் வருகின்றனர்.

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய திருச்சி காவல் துறையோ தொடர் கதையாக நடக்கும் கொலை வழக்குகளில் தலையை தேடுவது, குற்றவாளிகைள தேடுவது என பிஸியாக உள்ளது.

திருச்சியில் சமீபத்தில் நடந்துள்ள கொலைகளின் பின்னணியில் இது போன்ற தவறான பாலியல் தொடர்புகள்தான் உள்ளன. எனவே குற்றம் நடந்த பின்பு குற்றவாளிகளை தேடி அலையாமல், குற்றம் நடக்கும் முன்பு தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் வரும் காலங்களில் காவல் துறையினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

இல்லை எனில் அடிக்கடி முகவரி இல்லா சடலங்களும், தலையில்லா உடல்களும் வரிசைகட்டி பயமுறுத்தும்.

என்ன பாஸ்..., நாங்க சொல்றத சொல்லிட்டோம் இனிமே நீங்கதான் சூதானமா இருக்கனும். இது போலீசுக்கு மட்டும் இல்லீங்க, பொது மக்களுக்கும் தான்.

...
 
[Continue reading...]

Wednesday 25 December 2013

இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

- 0 comments

Img இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

ஆலந்தூர்,டிச.26-

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10–ம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு அன்று முதல் மாயமான 3 மகள்களையும் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தாயின் நிலைமையை நினைத்து பார்க்க பரிதாபமாக உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 50). இவர், இதற்கு முன்பு ஆவடியை அடுத்த வேப்பம்பட்டில் குடியிருந்து வந்தார். அப்போது அவருடைய கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004–ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர்.

அங்கிருந்து டிசம்பர் மாதம் 25–ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு மறுநாள் (26–ந்தேதி) ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கினார்கள். இதில் மீட்பு குழுவினர் கோவிந்தசாமியை மட்டும் காயங்களுடன் நாகப்பட்டினத்தில் மீட்டனர். பின்னர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தசாமிக்கு நினைவு திரும்பியது.

அப்போது அவர், தனது மனைவியிடம், ''நமது மகள்கள் 3 பேரும் சுனாமியில் சிக்கவில்லை. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடி'' என்று கூறி விட்டு பரிதாபமாக இறந்துவிட்டார். தற்போது செண்பகவள்ளி, சுனாமியில் கணவரை இழந்து, மகள்களையும் தொலைத்து விட்டு பெருங்களத்தூரில் தனிமையில் வசித்து வருகிறார்.

வருமானத்துக்கு தாம்பரம் மெப்சில் உள்ள ஒரு கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் சுனாமியின் போது மாயமான தனது மகள்களையும் தீவிரமாக தேடி வருகிறார். இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என தேடி வருகிறார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேடியும் இன்னும் அவரது மகள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது? என்றும் தெரியவில்லை. இதுபற்றி செண்பகவள்ளி, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது,

''கடந்த 2004–ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார்.

நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என உறுதியுடன் தெரிவித்தார்.

''அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும்'' என வேண்டியபடி அந்த பகுதி மக்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
...

[Continue reading...]

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

- 0 comments

Casino magnate Adelson made 254 crore per day in 2013 .

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

வாஷிங்டன், டிச. 26-

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்.

இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 41 மில்லியன் டாலர் சம்பாதித்த கேசினோ அதிபரின் சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவதாக அமேசன் அதிபர் ஜெப் பெஸோஸ் உள்ளார். 
...

[Continue reading...]

மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

- 0 comments

Img மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

கொல்கத்தா, டிச. 26-

மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

'இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.

...

[Continue reading...]

தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

- 0 comments

Img தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

நியுயார்க், டிச.25-

விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டாலர் என்று தேவயானி குறிப்பிட்டதை, சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவயானி சங்கீதாவுக்கு 1560 டாலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவயானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.

இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவயாணி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என டேனியல் மேலும் தெரிவித்துள்ளார்.
...

[Continue reading...]

Tuesday 24 December 2013

சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

- 0 comments

Img சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

சென்னை, டிச. 25–

அடையாறு சாஸ்திரி நகரைச்சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). கடத்தப்பட்டு இரவு முழுவதும் வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ப்ரியாவை மயக்க மருந்து கொடுத்து கடத்திய கும்பல் அவரை செக்ஸ் சித்ரவதை செய்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–

சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் காலையில் ப்ரியா வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ப்ரியாவின் முன்னால் வந்து நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி குண்டு கட்டாக அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். மாலையில் ப்ரியா வீடு திரும் பாததால் பெற்றோர் கலக் கம் அடைந்தனர்.

ப்ரியா எங்கு சென் றாளோ? என்கிற பதட்டத்து டன் உறவினர்கள் வீடுகளி லும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென் றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதுபற்றி ப்ரியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட் டனர்.

இரவு முழுவதும் தேடிப் பார்த்ததும் ப்ரியாவை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என கூறி அவரை அலைக்கழித்த கடத்தல் ஆசாமிகள் கடைசியாக ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர்.

இதையடுத்து நேற்று காலையில் கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது போலீஸ் பிடியில் சிக் கியது.

ப்ரியாவை கடத்தியதாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.

இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங் களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை போலீசார் அதிரடியாக மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். எனவே கடத்தல் கும்பல் ப்ரியாவை செக்ஸ் சித்ரவதை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''காதல் விவ காரம் காரணமாகவே இக்கடத்தல் சம்பவம் நடந் துள்ளது என்று நினைத்தோம். ஆனால் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே ப்ரியா கடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்து வரு கிறோம்'' என்றார்.

சென்னையில் கிழக்கு கடற்கரைசாலை கடந்த சில நாட்களாகவே கடத்தல் களமாக மாறி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்னர் கூட இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் விரட்டிச் சென்று அப்பெண்ணை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தார். அச்சம்பவத்தில் சம்பந்தப் பட்ட ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சாதாரண சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ப்ரியா கடத்தல் சம்பவத்திலும் அதே போன்று நடவடிக்கையை போலீசார் எடுத்து விடுவார் களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கடத் தல் சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

...

[Continue reading...]

கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

- 0 comments

Img கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

புலந்த்ஷர், டிச. 24-

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் சோஹி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வயல் உரிமையாளர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கற்பழிக்கவும் முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்வகுப்பைச் சேர்ந்த பெரிய மனிதர் என்பதால், அவருக்கு சாதாரண தண்டனையாக 5 முறை அறை கொடுக்க வேண்டும் பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பினால் மனமுடைந்த இளம்பெண், தற்கொலை செய்வதற்காக நேற்று கால்வாயில் விழுந்தார். அப்போது அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

...

[Continue reading...]

தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

- 0 comments

Img தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

சென்னை, டிச. 24-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-

கேள்வி :- பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்திருக்கிறார்களே?

பதில் :-  2001-2006 வரையான அ.தி.மு.க. ஆட்சியில், ஐந்தாண்டுகளில், பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசுகளும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 56 காசுகளும் என்ற அளவுக்கு விலை உயர்த்தப்பட்டது. ஆனால் தி.மு.கழக அரசு, 2006ஆம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு, ஐந்தாண்டுக் காலத்தில் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு கொள்முதல் விலையை 6 ரூபாய் 60 காசுகள் கூடுதலாகவும், எருமைப் பாலுக்கு 12 ரூபாய் 70 காசுகள் கூடுதலாகவும் உயர்த்தி வழங்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை நானே என் அறைக்கு அழைத்துப் பேசி கலந்தாலோசனை செய்த பிறகு தான் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இப்போது யாரையும் அழைத்துப் பேசாமலேயே பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி :- அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே" கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில் :- அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?

கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, மற்றும் வழக்கறிஞர்  வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராசா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங்களை, இராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறிஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் இராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 
...

[Continue reading...]

பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

- 0 comments

Img பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

தெவனகரெ, டிச.24-

மத்திய கர்நாடகாவிலுள்ள தெவனகரெவில் 19 வயது மாணவியை கற்பழிக்க முயன்ற நண்பன், மாணவியின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

தெவனகரெவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அப்பெண், கல்லூரியின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது தங்கையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாணவிக்கு, ஏற்கனவே அறிமுகமான தனியார் கல்லூரியை சேர்ந்த பிரித்வி என்ற மாணவன், இருவரையும் வழிமறித்தான். பின்னர் அந்த மாணவியை வீட்டில் கொண்டுவந்து விடுவதாக அவரது சகோதரியிடம் கூறிய அந்த மாணவன், தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு அம்மாணவியிடம் அவன் தவறாக நடக்க முயன்றுள்ளான். மாணவி அதற்கு உடன்படவில்லை. பலாத்காரம் செய்ய அவன் முயன்ற போது, மாணவி அவனை, தான் கற்று வைத்திருந்த கராத்தே கலையை அவனிடம் காண்பித்தார். சகட்டு மேனிக்கு உதை வாங்கிய மாணவன் நிலைகுலைந்த சமயத்தில், அங்கிருந்த பெரிய கல்லை கொண்டு அவன் தலையை பலமாக தாக்கினார் அம்மாணவி. மாணவியை அவனும் முகத்தில் கடுமையாக தாக்கினான். அதில் மாணவியின் தாடை எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. மாணவியின் கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினான்.

பின்னர் வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் மாணவியை சேர்த்த பெற்றோர், காவல்துறையிலும் புகார் அளித்தனர். மாணவி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், முகத்தில் அறுவை சிகிச்சை செய்த பின்னரே மாணவி தனது பழைய முகத்தை காணமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
...

[Continue reading...]

விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

- 0 comments

Img விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

நியூயார்க், டிச.24-

உலகின் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் மலாய் புலிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புலிகள் 500 மட்டுமே உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் இவ்வகை புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை எட்டியதும் இவ்வகை புலிகளை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் இனப்பெருக்கத்துக்கு தயார் செய்கின்றனர்.

அவ்வகையில், 2 வயதான கொன்னோர் என்ற ஆண் புலியின் கூண்டை டிகா டகுன் என்ற பெண் புலியின் கூண்டின் அருகே கடந்த மாதம் மாற்றி அமைத்தனர். கடந்த சில வாரங்களாக இளம் புலிகள் இரண்டும் தனித்தனி கூண்டில் இருந்தவாறே ஒன்றையொன்று முகர்ந்துப் பார்த்தும், முத்தமிட்டும் கொஞ்சி மகிழ்ந்தன.

இனப்பெருக்கத்துக்கு அவை தயாராகி விட்டதற்கான அறிகுறிகள் தோன்றவே, 2 புலிகளும் சற்று விசாலமான ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டன.

பெண் புலியை நெருங்கி சற்று நேரம் விளையாடி மகிழ்ந்த ஆண் புலி, தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஆவேசமாக டிகா டகுன் மேல் பாய்ந்தது. அதன் வீரியத்தை கண்டு பயந்துப் போன டிகா டகுன், சிணுங்கலுடன் ஒதுங்க ஆரம்பித்தது.

காம வெறி தலைக்கேறிய நிலையில் இருந்த கொன்னோருக்கு தன்னுடன் சேர்க்கைக்கு வராமல் முரண்டு பிடிக்கும் டிகா டகுனின் செயல் ஆத்திரத்தை வரவழைத்தது. சற்றும் எதிர்பாராத வகையில் டிகா டகுனின் மீது பாய்ந்த கொன்னோர், அதன் கழுத்தை வெறியுடன் கடித்துக் குதறி எடுத்தது.

இதை பார்த்து அதிர்ந்துப் போன வனவிலங்கு காப்பக ஊழியர்கள், கூண்டை திறந்து உள்ளே சென்று, டிகா டகுனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள், சுவாசக் குழாய்க்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்ட நிலயில் டிகா டகுன் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ வனவிலங்கு காப்பகத்தில் நிகழ்ந்த இதேப் போன்ற சம்பவத்திலும் ஆண் புலியிடம் கடிபட்டு இவ்வகை பெண் மலாய் புலி பலியானது குறிப்பிடத்தக்கது.
...

[Continue reading...]

Monday 23 December 2013

ஏதாவது செய்து தேவயானியின் பிரச்சினையை தீருங்கள்: அமெரிக்காவிடம் கெஞ்சும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் Please solve Devayani problem by doing something Indian officials entreat America

- 1 comments

Img ஏதாவது செய்து தேவயானியின் பிரச்சினையை தீருங்கள்: அமெரிக்காவிடம் கெஞ்சும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் Please solve Devayani problem by doing something Indian officials entreat America

புதுடெல்லி, டிச. 23–

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விசா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை கடந்த 12–ந்தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தேவயானி கைது செய்யப்பட்ட போது அவர் கை விலங்கிடப்பட்டதாகவும், ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் கொந்தளிப்புக்குள்ளான காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த அமெரிக்கா, தேவயானி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தப் போவதாக கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதராக்கி அவரை தப்புவிக்க முயன்றது. ஆனால் அதற்கும் வெற்றி கிடைக்கவில்லை.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் இறங்கி வரவில்லை. இதனால் மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம், ஏதாவது செய்து தேவயானியை விடுவியுங்கள் என்று கெஞ்ச தொடங்கியுள்ளனர். வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை திரும்ப தர வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது.

...

[Continue reading...]

Sunday 22 December 2013

UN India Embassy work appointed devayani special offers receiving problem

- 0 comments

UN India Embassy work appointed devayani special offers receiving problem

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும் தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்? UN India Embassy work appointed devayani special offers receiving problem

நியூயார்க், டிச.23-

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும், தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நியூயார்க் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு ஆளாக்கப்பட்டது இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் இந்தியா-அமெரிக்கா இடையே தூதரக அளவில் மோதல் உருவாகி உள்ளது.

'வியன்னா உடன்படிக்கை' யின்படி, தூதரகப்பணியில் உள்ள தேவயானிக்கு விலக்குரிமை உள்ளிட்ட சலுகைகளை தர முடியாது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரை ஐ.நா. தூதரகத்தில் கவுன்சலராக (ஆலோசகராக) நியமித்து, இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில், தேவயானியின் பணி நியமனம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியா முறைப்படி கடிதம் எழுதி உள்ளது. இந்தக் கடிதத்தை இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி எழுதி உள்ளார். அத்துடன், தேவயானி தொடர்பான ஆவணங்கள், பாஸ்போர்ட்டு விவரங்களையும் அவர் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். அதில் எங்கள் தூதரகக்குழுவில் ஆலோசகராக தேவயானி கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றியும், அவருக்கு தூதரக அதிகாரிக்குரிய அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எழுதி உள்ளேன். அவரது பெயர், எங்கள் தூதரகக்குழுவில் எந்த இடத்தில் இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

நான் அனுப்பியுள்ள ஆவணங்களை ஐ.நா. சபை, அமெரிக்காவில் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கி வருகிற வெளிநாட்டு தூதரகங்களுக்கான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்குதான் மரபுரிமைப்படி அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் ஜன் எலியாசனையும் நேரில் சந்தித்துப் பேசினேன். தேவயானி தொடர்பான பிரச்சினைகளை ஐ.நா. அறியும். எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியாகிவிட்டது. அந்த ஆவணங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதில் அளிக்க வேண்டும். இனி இந்த விவகாரம் ஐ.நா.வுக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையேதான் கையாளப்படும்.

தேவயானியைப் பொறுத்தமட்டில், அவர் ஆலோசகர் பதவியுடன் தூதரக அதிகாரியாக இருப்பார். அந்த வகையில் தூதரக அதிகாரிக்கான அடையாள அட்டையை அவருக்கு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவயானி ஐ.நா.வில் பணியில் சேர்ந்த பிறகுதான் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் வந்து சேரும், தேவயானிக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டியது தொடர்பாக ஐ.நா. பங்களிப்பு ஏதும் கிடையாது, இதில் முடிவு எடுக்க வேண்டியது அமெரிக்காதான் என தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஐ.நா.வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உடன்படிக்கை உள்ளது. தேவயானிக்கு புதிய பதவி காரணமாக கூடுதல் சிறப்புச்சலுகை வந்து சேர முடியும், ஆனால் கிரிமினல் வழக்கிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

தற்போது விசா மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தேவயானிக்கு சிறப்புச்சலுகைகளை அமெரிக்கா வழங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.நா.வில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டையையே அமெரிக்க வெளியுறவுத்துறை தான் வழங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
...
UN India Embassy work appointed devayani special offers receiving problem

[Continue reading...]

இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

- 0 comments

Img இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

கொழும்பு, டிச. 22-

2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமும் வரும் மார்ச் மாதம் பாதுகாப்பு சபையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

உலக நாடுகளும் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று நெருக்கடிகள் கொடுத்துவருகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது எலும்புக்கூடுகளுடன் 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வடக்குப்பகுதியில் மேலும் சவக்குழிகள் இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன. நேற்று மேலும் 4 பேரின் மண்டை ஓடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  

இதையடுத்து இங்கு யாரேனும் சட்டவிரோதமாக கொன்று புதைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இன்று நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கையின் மத்தியிலுள்ள மடேலாவிலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஜே.வி.பி. கட்சியை சேர்ந்தவர்களை இலங்கை அரசு கொன்று புதைத்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

[Continue reading...]

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் TV channel Editor arrested on molest harassment charges in Chennai

- 0 comments

TV channel Editor arrested on molest harassment charges in Chennai பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது TV channel Editor arrested on molest harassment charges in Chennai

சென்னை, டிச.22-

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு
பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என கூறியுள்ளது.
...

[Continue reading...]

Saturday 21 December 2013

பாராளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் பாடுபட பொகிறேன் நடிகை குஷ்பு பேச்சு Ensure the success of the parliamentary elections for the full range Actress Khushboo Talk

- 0 comments

Img பாராளுமன்ற தேர்தலில் முழு வீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி: நடிகை குஷ்பு பேச்சு Ensure the success of the parliamentary elections for the full range Actress Khushboo Talk

சேலம், டிச. 22–

தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். குகை பகுதி செயலாளர் ச.சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி பட்டு வேட்டி, பட்டு சேலை, வெள்ளி குத்து விளக்கு, கூடவே பணத்தையும் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளனர். ஆனால் யாருடைய ஆதரவும் இன்றி சுமார் 64ஆயிரம் வாக்குகள் தி.மு.கவுக்கு கிடைத்தது என்றால் அது தான் உண்மையான வெற்றியாகும்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். பாரதீய ஜனதா சார்பில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் வாஜ்பாய், வி.பி.சிங், குஜ்ரால் என அனைவரையும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்த பெருமை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசியலில் கோபாலபுரம் வீட்டில் கதவை தட்டாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சியின் பொதுக்குழுவில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். இருப்பினும் தனித்து போட்டியிடக்கூடிய தைரியம் தி.மு.கவுக்கு உண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிகாட்டுபவரே பிரதமராக முடியும்.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடு படக்கூடிய ஒரே தலைவர் நமது தலைவர் கலைஞர் தான். 90 வயதிலும் 16 வயது போல் அவருக்கு மூளை வேலை செய்வதை நம்மால் உணர முடிகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.கவினர் முழுவீச்சில் பாடுபட்டால் வெற்றி உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா, மாநகர செயலாளர் எஸ்.டி.கலையமுதன் உள்பட பலர் பேசினர்.

...

[Continue reading...]

மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு வீடியோ Students kidnapped forced relationship video threatened 8 people arrest

- 0 comments

Img மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது Students kidnapped forced relationship video threatened 8 people arrest

மங்களூர், டிச. 21-

கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியிருக்கின்றனர். மங்களூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் வந்தபோது, அவர்களின் காரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் அவர்கள், மாணவர்களை ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் உள்ள வீட்டுக்கு காரை ஓட்டும்படி மிரட்டியுள்ளனர்.

அந்த வீட்டிற்குச் சென்றதும், நண்பர்கள் இருவரையும் மிரட்டி செக்ஸ் உறவில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்த அந்த கும்பல், இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர். 
...

[Continue reading...]

Friday 20 December 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

- 0 comments

Img பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

புதுடெல்லி, டிச.21-

டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது.

அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தன.

ஆனால் டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டீலர்களின் கமிஷனை உயர்த்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து டீலர்களின் கமிஷனை உயர்த்த மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் (இதர வரிகள் சேர்க்கப்படவில்லை) உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16-ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த நவம்பர் 1-ந்தேதி லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 21 காசு கமிஷன் உயர்வுடன் சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு 28 காசும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மொத்தம் 49 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. டெல்லியில் ரூ.71.02 ஆக இருந்து வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில், 53 காசுகளும், மும்பையில் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

டீலர் கமிஷன் தொகை உயர்வான லிட்டருக்கு 9 காசு மட்டுமே டீசல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலைப்படி சென்னையில், ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது.

டெல்லியில், ரூ.53.67-ல் இருந்து ரூ.53.78 ஆக உயர்த்தப்பட்டது.
கொல்கத்தாவில், 10 காசுகளும், மும்பையில் 10 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
...

[Continue reading...]

காங்கிரஸ் இல்லாத இந்தியா - நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

- 0 comments

Img காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech

வாரணாசி, டிச.21-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதா சார்பில் நேற்று 'விஜய் சங்நாத்' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் உங்கள் மூதாதையர்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவினர். ஆனால் தற்போது அதை எங்குமே பார்க்க முடியவில்லை. இதனால் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநிலத்தில் மீண்டும் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டியது அவசியம்.

இது நீங்கள் நினைத்தால் நிச்சயமாக சாத்தியமாகும். இதற்காக நீங்கள் சரியான அரசை தேர்ந்தெடுத்தால் அதை (ராம ராஜ்ஜியம்) நீங்கள் அடைய முடியும். அதை செயல்படுத்த உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிறந்த களப்பணியாற்றும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. வெறும் வாக்குறுதிகளை கேட்டு மக்களுக்கு போரடித்து விட்டது. மக்களுக்கு நாங்கள் வெற்று வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக பல்வேறு திட்டங்களைச் சொல்லியே அவர்களை சந்திக்கிறோம்.

உத்தரபிரதேசத்தில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்தது. இத்திட்டத்துக்காக பல்வேறு குழுக்களையும் அமைத்தது. ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் இருந்து எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். குஜராத்தில் பாயும் சபர்மதி நதியை பா.ஜனதா அரசு தூய்மைப்படுத்தியது. அதைப்போல கங்கை நதியை ஏன் தூய்மைப்படுத்த முடியவில்லை?

நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஏழைகள் கோஷத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அக்கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை எதுவும் இல்லை. நாட்டில் வறுமைக்கு காரணமே ஒரு குடும்பம் தான். எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.

டீ விற்பவர் நாட்டின் பிரதமராக முடியாது என சமாஜ்வாடி கட்சியினர் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் டீ விற்பவர் மட்டுமல்ல நெசவாளி, விவசாயி ஏன் செருப்பு தைப்பவர் கூட பிரதமராக முடியும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
...

[Continue reading...]

சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

- 0 comments

policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

சண்டிகர், டிச. 20-

சண்டிகர் நகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 17வயது பள்ளி மாணவி ஒருவர் தனது குடும்ப பிரச்சனை பற்றி புகார் அளித்துள்ளார். அவர் பேசிய செல்போன் நம்பரை வைத்து அவரது விலாசத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று போலீஸ் வேனில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் வேனுக்குள் வைத்தே கற்பழித்துள்ளனர். இவ்வாறு பல வாரங்கள் தொடர்ந்து சித்ரவதை அனுபவித்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றபோதுதான், நடந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர்கள் 4 பேர், குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். பின்னர் திடீரென அவர்கள் போலீஸ்காரர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

...

[Continue reading...]

Wednesday 18 December 2013

முதலிரவு அறை First night tamil sex jokes

- 0 comments
 முதலிரவு அறை First night tamil sex jokes

புதுமணத் தம்பதிகள்  சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.


எதுக்கு கண்ணே இனி ஆடை...! உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.
[Continue reading...]

உனக்கு துரோகம் Unakku Thurogam Tamil Sex Joke

- 0 comments
உனக்கு  துரோகம் Unakku Thurogam Tamil Sex Joke 
tamil sex jokes collection , tamil jokes , tamil jokes news


நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.
[Continue reading...]

தொழிலதிபர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்: நடிகை ராதா திடீர் பல்டி Actress Radha lawsuit withdrawn against businessman

- 0 comments

Actress Radha lawsuit withdrawn against businessman தொழிலதிபர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்: நடிகை ராதா திடீர் பல்டி Actress Radha lawsuit withdrawn against businessman

சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு பேட்டி கொடுத்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து நடிகை ராதா முறையிட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார். ஆனால் போலீசார் இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.

நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது நடிகை ராதா எது எப்படியோ பைசூல் எனது கணவர் தானே! அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
...

Actress Radha lawsuit withdrawn against businessman

[Continue reading...]

செல்போனில் டி.வி. பார்க்கும் புதிய சேவை: பி.எஸ்.என்.எல். வழங்குகிறது TV on cell phone the new service will see bsnl offers

- 0 comments

Img செல்போனில் டி.வி. பார்க்கும் புதிய சேவை: பி.எஸ்.என்.எல். வழங்குகிறது TV on cell phone the new service will see bsnl offers

சென்னை, டிச. 18–

செல்போனில் டி.வி. பார்க்கும் வசதியை பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், தமிழ், ஆங்கிலம் உள்பட 104 டி.வி. சேனல்களை செல்போன் மூலம் பார்த்து ரசிக்கலாம். மாதம் ரூ.81, ரூ.165, ரூ.291 ஆகிய 3 வித கட்டணங்களில் இந்த வசதி கிடைக்கிறது.

மாதம் 81 ருபாய் கட்டணம் செலுத்தினால் 15 நாட்களுக்கு, '500 எம்.பி.' அளவில் 104 டி.வி. சேனல்களை பார்க்கலாம். இதில் தூர்தர்ஷன், என்.டி.டி.வி. உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.

165 ரூபாய் கட்டணத்தில் '1ஜிபி' அளவில் 50–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்குப் பார்க்கலாம். இதில் தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும் கார்ட்டூன் உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.

மாதம் தோறும் 291 ரூபாய் கட்டணம் செலுத்தி '2ஜிபி' அளவுள்ள 30–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்கு பார்க்கலாம். இதில் ஆங்கில செய்தி சானல்கள், விளையாட்டு சேனல்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.

பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு வட்டத்தில் (சர்க்கிள்) புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் (டிசம்பர்) 31–ந்தேதி வரை இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது. இதுபோல் ரூ.220 மற்றும் ரூ.550 மதிப்புள்ள 'டாப் அப்'களுக்கு 'புல் டாக்டைம்' வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 31–ந்தேதி வரை உண்டு.

பிரீபெய்டு முறையில் 'நேசம் கோல்டு' என்னும் திட்டப்படி ரூ.49 வவுச்சர் கட்டணத்தில் 180 நாட்கள் பேசலாம். சி.டி.ஏ. பிரிபெய்டு சேவை முறையிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

...

[Continue reading...]

Tuesday 17 December 2013

நியூசிலாந்தில் இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை two women jailed 8 years for killing indian youth in new zealand

- 0 comments

two women jailed 8 years for killing indian youth in new zealand நியூசிலாந்தில் இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை two women jailed 8 years for killing indian youth in new zealand

two women jailed 8 years for killing indian youth in new zealand
மெல்போர்ன், டிச.18-

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற 2 பெண்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வம்சாவழியினரான அமந்தீப் சிங்(22) நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி  கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் லிஃப்ட் கேட்டார்.

அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர், மெஸேஜ் மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை அமந்தீப் சிங் உடலுறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு மெஸேஜ் அனுப்பினார்.

தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்தார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றார்.

கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். கெய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம் என்று அமந்தீப் சிங்கின் மனதில் கிரிஸ்டல் ஆசை தீயை மூட்டினார். கள்ளுண்ட குரங்காக மாறிப்போன அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கெய்ட்டி கடற்கரைக்கு சென்றார்.

இதற்கிடையில், அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த போலீசார், கெய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி கண்டெடுத்தனர்.

பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை கிரிஸ்டலும் அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் கிரெடிட் கார்ட் மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். போலீஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 மெஸேஜ்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விபச்சாரத்திற்காக அந்த வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், கிரெடிட் கார்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்தார்.
...

two women jailed 8 years for killing indian youth in new zealand

[Continue reading...]

College girl molested 6 people arrested செல்போனில் அழைத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

- 0 comments

Img செல்போனில் அழைத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: 6 பேர் கைது College girl molested 6 people arrested

தர்மபுரி, டிச. 17–

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜகணபதி. இவரது மகள் வித்யா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் தான் பெயர் பிரபு என்றும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கள்ளியூரை சேர்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து பேசிய அந்த நபர் உன்னுடைய தாயார் தற்போது எங்கள் வீட்டில் உள்ளார். இதனால் அவரை வந்து அழைத்து செல்லுமாறு அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவி வித்யா கள்ளியூர் கிராமத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அவரை பிரபு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் அவரை ராமியம்பட்டி காப்பு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்த அவர்கள் மாணவி வித்யாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு இருந்து தப்பி வந்த மாணவி வித்யா பாப்பிரெட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடினர்.

பின்னர் இது தொடர்பாக பிரபு, சம்பத், ரமேஷ், அஜித்குமார், மற்றொரு பிரபு, வெள்ளையன் ஆகிய 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

...

[Continue reading...]

Monday 16 December 2013

SSLC girls first place in kashmir காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் முதலிடம் பிடித்தனர்

- 0 comments

SSLC girls first place in kashmir காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் முதலிடம் பிடித்தனர்: ஆண்கள் வழக்கம்போல் கோட்டைவிட்டனர் SSLC girls first place in kashmir

ஸ்ரீநகர், டிச.16-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் முதல் 20 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முதல் 20 இடங்களில் 70 சதவிகித இடங்களை மாணவிகளே கைப்பற்றியுள்ளனர். 269 பேர் முதல் 20 இடங்களை பிடித்துள்ளனர். அதில் 186 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். முதல் பத்து இடங்களை 68 பேர் பிடித்தபோது அதில் 55 பெண்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

49,358 பேர் தேர்வெழுதிய நிலையில் 31130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெமினா நகரை சேர்ந்த இக்பால் மெமோரியல் பள்ளியில் படித்த மாணவி காசர் ஜான், 99 சதவிகித மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றார். 2ஆம் இடத்தை மூன்று மாணவர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் மூவரும் 500-க்கு 494 மதிப்பெண்களை பெற்றது சிறப்பம்சமாகும்.
...

SSLC girls first place in kashmir

[Continue reading...]

Rajasthan judge daughter freed by Supreme Court to marry நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

- 0 comments

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Rajasthan judge daughter freed by Supreme Court to marry

சித்தார்த் முகர்ஜி என்ற இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது காதலி சுப்ரியா ரத்தோரை (30), உயர் நீதிமன்ற நீதிபதியான அவரது தந்தை ஆர்.எஸ். ரத்தோர் சட்டத்திற்கு விரோதமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் சிறை வைத்துள்ளார் என்றும், அவரை மீட்டு தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும், காதலர்களான நாங்கள் இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், நீதிபதி ரத்தோர் அதை விரும்பவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். வீட்டுச்சிறையில் இருந்த சுப்ரியா ரத்தோரும், இதுகுறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கும் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியும் இருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சுப்ரியா ரத்தோரை நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுப்ரியா ரத்தோர், எனது பெற்றோருக்கு எதிராக எந்த கோபமும் இல்லை. ஆனால், எனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் செல்ல விரும்புகிறேன். அவரையே நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார்.

இதையடுத்து சுப்ரியா ரத்தோரை தனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் கோர்ட்டில் இருந்து காதலனுடன் சுப்ரியா ரத்தோர் புறப்பட்டுச் சென்றார்.
[Continue reading...]

Sunday 15 December 2013

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: பிரான்சை வீழ்த்தி ஜெர்மனி 6 வது முறையாக கோப்பையை தட்டிசென்றது Germany beat France record sixth world title

- 0 comments

Img ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: பிரான்சை வீழ்த்தி ஜெர்மனி 6 வது முறையாக கோப்பையை தட்டிசென்றது Germany beat France record sixth world title

புதுடெல்லி, டிச. 16-

ஹீரோ ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதியாட்டம் புதுடெல்லி மேஜர் தியான் சந்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறையாக உலகக்கோப்பையை வென்ற ஜெர்மன் அணியானது, பிரான்ஸ் அணியுடன் மோதியது.  

இதில் ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் நிக்லஸ் வெல்லென் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து 44, 46 வது நிமிடங்களில் அடுத்தடுத்து அவர் இரண்டு கோல்களை அடித்தார். இடையே பிரெஞ்சு வீரர்களும் இரு கோல்கள் போட்டனர்.

பின்னர் கடைசி நேர ஆட்டத்தில் ஜெர்மனியின் ஜொனாஸ் கோமாலும், கிறிஸ்டோபர் ரூரும் தலா ஒரு கோல் போட்டனர். இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 5-2 என்ற புள்ளிகளில் ஜெர்மனி அணியினர் பிரான்சை வெற்றி கண்டனர். இந்த வெற்றியை அடுத்து ஜெர்மனி அணியினர் 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger