Tuesday 18 October 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!

- 0 comments
 

பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர்.

குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

ஏற்கெனவே சினிமா மற்றும் விளம்பரங்களில் தோன்றியுள்ளார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

ஐஸ்வர்யா ராய்க்கு வளைகாப்பு… பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு!

- 0 comments
 

காலங்கள் கடந்தாலும் இன்றும் உலக அழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு இன்று மாலை மும்பையில், அவரது மாமியார் வீட்டில் வளைகாப்பு நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் திரளாக பங்கேற்கின்றனர்.

எட்டு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் வளைகாப்புக்காக அமிதாப்பச்சனின் இல்லம் இன்று வண்ணமயமாக ஜொலிக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் இந்த விழாவை நடத்துகிறார். மும்பை கலாச்சாரப்படி இந்த விழா நடக்கிறது.

ஐஸ்வர்யா ராய் நவம்பரில் குழந்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் கூறுகையில், "குழந்தை பிறக்கும் தேதி இன்னும் எங்களுக்கு கூறப்படவில்லை. எனினும் அது நவம்பர் மாத குழந்தையாக இருக்கும்.

இந்தக் குழந்தை மூலம் எங்கள் குடும்பத்தில் நவம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6-ஆக உயரப் போகிறது," என்ரார். குழந்தை பிறக்கும்போது ஐஸ்வர்யாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என வெளியான செய்திகளை மறுத்தார் அபிஷேக்.

2007-ல் அபி – ஐஸ் திருமணம் விமரிசையாக நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது!

இன்று நடக்கும் சீமந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷாரூக்கான் மனைவி கௌரி கான் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.

[Continue reading...]

படப்பிடிப்பின்போது முதுகில் காயம் – மருத்துவமனையில் ஹிருத்திக் ரோஷன்!

- 0 comments
 

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக்ரோஷனுக்கு படப்பிடிப்பின்போது முதுகில் அடிபட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிரபல டைரக்டர் கரன் ஜோகர் இயக்கி வரும் 'அக்னிபாத்' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இந்தப் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 110 கிலோ எடையுள்ள ஸ்டன்ட் நடிகரை ஹிருத்திக் ரோஷன் அலாக்காக தூக்குவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

ஹிருத்திக் ரோஷன் தனியொரு ஆளாக அந்த குண்டு துணை நடிகரை தூக்க விரும்பினார். உடனே துணை நடிகரை ஹிருத்திக் ரோஷன் சட்டென்று தூக்கினார். இதில் அவருடைய முதுகில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார் ஹிரித்திக்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹிருத்திக் ரோஷனை பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

ஹிருத்திக் ரோஷன் காயம் அடைந்ததால் அக்னிபாத் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது.

[Continue reading...]

வந்து விட்டது “உர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்…’: இந்தியாவில் முதல் “பார்முலா-1′ கார் பந்தயம்

- 0 comments
 

புதுடில்லி: இந்தியாவில் முதல் கார்பந்தய திருவிழா வரும் 30ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக, புதிதாக தயாரிக்கப்பட்ட "புத்தா சர்வதேச சர்கியூட்' தயாராக உள்ளது.
உலகளவில் கார்பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது "பார்முலா-1′. ஆண்டு முழுவதும், உலகின் 19 முன்னணி நகரங்களில் போட்டி நடக்கிறது. மொத்தம் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவில் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தை பெறுபவர் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டம் வெல்லலாம்.
இதுவரை நடந்த 17 சுற்று போட்டிகளில், 10ல் முதலிடம் பெற்ற "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மொத்தம் 349 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
முதன் முறையாக…
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்த இந்த பந்தயம், முதன் முறையாக வரும் 30ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டின் 17வது பந்தயத்தை நடத்த, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 875 ஏக்கர் நிலப்பரப்பில், புதிதாக "புத்தா சர்வதேச சர்கியூட்' மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
மொத்தம் 5.14 கி.மீ., சுற்றளவு கொண்ட, இந்த போட்டியின் பந்தய தூரம் 308.4 கி.மீ., ஆகும். இம்மைதானத்தில் சராசரியாக 210.03 கி.மீ., வேகத்தில் செல்லும் போது, இந்த ஒரு சுற்றை ஒரு நிமிடம், 27.02 வினாடியில் கடக்கலாம்.
மொத்தம் 60 சுற்றுகள் சுற்ற வேண்டும். வீரர்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என்பதால், இது உலகின் இரண்டாவது அதிவேக மைதானம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
இந்திய அணி:
உலகின் முன்னணி அணிகளாக உள்ள ரெனால்ட், மெக்லாரன்-மெர்சிடீஸ், பெராரி, மெர்சிடீஸ் போன்றவற்றுடன் இந்தியா சார்பில், போர்ஸ் இந்தியா-மெர்சிடீஸ் என்ற அணியும் உள்ளது. இதுவரை நடந்த 16 சுற்றுகளில் இந்திய அணி 49 புள்ளிகள் மட்டும் பெற்றுள்ளது.
பெயர் மாற்றம்:
பெங்களூரு ஐ.பி.எல்., அணியின் விஜய் மல்லையா, இந்த அணிக்கு உரிமையாளராக இருந்தார். கடந்த வாரம் இந்த அணியின் 42.5 சதவீத பங்குகளை, ரூ 500 கோடிக்கு சகாரா நிறுவனம் வாங்கியது. மீதம் 42.5 சதவீதம் மல்லையாவிடமும், நெதர்லாந்து கம்பெனியிடம் 15 சதவீத பங்குகளும் உள்ளன. இதனால் டில்லி "பார்முலா-1′ பந்தயத்தில் "சகாரா போர்ஸ் இந்தியா' என்ற புதிய பெயரில், இந்திய அணி களமிறங்குகிறது.
விவசாயிகள் எதிர்ப்பு
கார்பந்தய மைதானத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தபட்டதில், விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு தரவில்லை. இதனால், போட்டி நடக்கும் போது, விவசாயிகள் இடையூறு செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" போட்டி நடக்கும் போது, யாராவது இடைஞ்சல் ஏற்படுத்த முயன்றால், அவர்களை தகுந்த முறையில் அணுகுவோம்," என்றார்.
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
"பார்முலா-1′ கார் பந்தயத்துக்கு உத்தரபிரதேச அரசு வரிவிலக்கு அளித்து இருந்தது. இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.கே.ஜெயின், அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில்,"பொது மக்களுக்கு பயன்தரும் நிகழ்ச்சிகளுக்கு தான் வரிவிலக்கு தரமுடியும். "பார்முலா-1′ கார்பந்தய டிக்கெட் விலை ரூ. 35 ஆயிரம் உள்ள நிலையில், வரிவிலக்கு எப்படி தரலாம்," என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேன் பாராட்டு
இந்தியாவின் முதல் "பார்முலா-1′ கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், இப்போட்டியில் "ஹிஸ்பானியா ரேசிங் டீம்' என்ற அணிக்காக பங்கேற்கிறார். டில்லி போட்டி குறித்து கூறுகையில்,"" உலகின் முக்கியமான அனைத்து "பார்முலா-1′ டிராக்குகளிலும், கார் ஓட்டியுள்ளேன். இந்த "சர்கியூட்' உலகின் சிறப்பானதாக உள்ளது," என்றார்.

[Continue reading...]

பாக்., அபார பந்துவீச்சு

- 0 comments
 

அபுதாபி: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் போட்டுத்தாக்க, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 197 ரன்களுக்கு சுருண்டது.
ஐக்கிய அரபி எமிரேட்சில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர்(3 போட்டிகள்) நடக்கிறது. முதல் டெஸ்ட், அபுதாபியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
மாத்யூஸ் ஆறுதல்:
இலங்கை அணிக்கு பரணவிதனா (37), திரிமன்னே (20) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. அடுத்து வந்த சங்ககரா (2) ஏமாற்றினார். அனுபவ வீரர்களான மகிளா ஜெயவர்தனா (28), கேப்டன் தில்ஷன் (19) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மாத்யூஸ், அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
ஜுனாய்டு மிரட்டல்:
அடுத்து களமிறங்கிய பிரசன்னா ஜெயவர்தனா, ஹெராத் "டக்-அவுட்' ஆனார்கள். லக்மல் (18), வெலகேதரா (11), பெர்னாண்டோ (1) நிலைக்கவில்லை. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (52) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஜுனாய்டு கான் 5, உமர் குல், சயீத் அஜ்மல் தலா 2, சீமா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. டயுபீக் உமர் (8), முகமது ஹபீஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

[Continue reading...]

வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி: 61 ரன்களுக்கு சுருண்டது

- 0 comments
 

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 61 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்டகாங்கில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
பாவல் ஆறுதல்:
வங்கதேச பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. டான்சா ஹயாத் (3) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் (5) சொதப்பினார். பாவல் (25) ஆறுதல் அளித்தார். போலார்டு (0), டேரன் பிராவோ (0), கேப்டன் டேரன் சமி (2), தினேஷ் ராம்தின் (4) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
மோசமான ஸ்கோர்:
"டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவரில் 61 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தனது இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக 2004ல், கேப்டவுனில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 54 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
சுலப வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ் (11), நபீஸ்(0) மோசமான துவக்கம் தந்தனர். பின் தமிம் இக்பால் (36*), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (10*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. வங்கதேச அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை வங்கதேச வீரர் சாகில் அல் ஹசன் தட்டிச் சென்றார். தொடர் நாயன் விருதை வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் பெற்றார்.

[Continue reading...]

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறல்: மாணவர்களை தாக்கிய நடிகர்

- 0 comments
 
 
 
கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்துகொண்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை நடிகர் நவ்தீப்பும் நண்பர்களும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக நவ்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன் அஆஇஈ, சொல்லச்சொல்ல இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நவ்தீப். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
 
 
ஐதராபாத் அருகே மாதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நவ்தீப், அவரது நண்பர் ஜெயவர்த்தன், அவர்களது கேர்ள் பிரெண்ட்கள் உள்ளிட்டோர் சென்றனர். ஓட்டலில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.
 
 
அவர்கள் நவ்தீப்பின் கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து அவர்களை தேடினார் நவ்தீப். அதற்குள் அவர்கள் அருகே உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றுவிட்டனர். நவ்தீப் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
 
நவ்தீப்பின் நண்பர் ஜெயவர்த்தன் ஒரு மாணவரின் செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இதையடுத்து மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மாதாபூர் போலீசில் புகார் அளித்தனர். நவ்தீப், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்



[Continue reading...]

Bollywood Wallpaper - Sneha Ullal

- 0 comments
 


Bollywood Wallpaper - Sneha Ullal

 
 
 
[Continue reading...]

Gallery Tamil Actress - Malavika Hot South Indian Actress

- 0 comments


Gallery Tamil Actress - Malavika Hot South Indian Actress

Tags :malavika hot photos,malavika hot pictures,malavika singer,singer malavika,malavika hot pics,malavika images,malavika gallery,malavika hot photo,malavika stills,malavika hot stills

 
 
 
 
 
[Continue reading...]

billa 2 movie stills,news,reviews,wallpaper, cast & crew

- 0 comments
 
 


Ajith's Billa 2 started rolling in Ramoji Rao Film city in Hyderabad, directed by Chakri Toleti

Billa 2 is a prequel of Billa. Mumbai models Huma Qureshi, Bruna Abdullah are playing the lead roles. Sudhanshu Pandey from Murder 2 plays the villan. Others in the cast include Manoj K Jayan, Prabhu and Rahman.

Billa 2 is the first Indian film to use Epic RED camera, with 5K resolution picturising by Kaka Kakka fame RD Rajasekhar. Art direction by Madhrasapattinam fame Selva Kumar and music scored by Yuvan Shanker Raja. Billa 2 is produced by IN Entertainment,and Suresh Balaje's Wide Angle Films.

Billa 2 will be shot in Hyderabad studio, Goa, Pondicherry, Thailand and Eastern Europe. It will be released on April 2012, as Ajith's Tamil New Year release.

Keywords:billa 2 movie stills,billa 2 movie news,billa 2 wallpapers,billa 2 review,billa 2 Cast &Crew,billa 2 movie news,billa 2 preview,billa 2trailer,billa 2 movie pictures,billa 2 movie gallary,billa 2 movie picture gallary,billa 2 photo gallary ,billa 2 location stills,billa 2 location photos,billa 2 location pics,ajith billa 2 location stills,ajith rare stills,ajith fans stills

[Continue reading...]

இது அழகல்ல

- 0 comments
 


சொத்துக் குவிப்பு வழக்கு தொட்ர்பாக ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவது உறுதியாகிவிட்டது. நேற்று கடைசி முறையாக பாதுகாப்பு குறித்து மனு ஒன்றை சமர்பித்தார் ஆனால் அதை கோர்ட் நிராகரித்துவிட்டது. அதுவும் வந்திருக்க மாட்டார் ஆனால் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்திரவால் நேரில் வர சம்மதித்தார்.

பொதுவாழ்வுக்கு வந்த பின் உயிரைப்பற்றி கவலைப்படுபவர்கள் பொதுவாழ்வுக்கே தகுதி அற்றவர்கள். ஜெயலலிதா செய்வது சட்டப்படிதான் என்றாலும், மனசாட்சி படி இது தப்பு. ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல.

திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட தமிழக மக்கள் இனி 'கோவணத்துண்டு' என்ற சின்னதுக்கு ஓட்டு போடலாம்.
எதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ரெடியாக இருப்பது நல்லது !
[Continue reading...]

Velayudham Before Diwali?

- 0 comments
 
 
Vijay's 'Velayudham' and Suriya's 'Ezham Arivu' are gonna be the titans clashing in box office for this festive season of Diwali. While the booking plans for both the films are scheduled to open by tomorrow, here is an interesting news from closer sources to 'Velayudham' team.

According to the inside reports, both Jeyam Raja and producer Aascar Ravichandran are planning to release the film a day prior to Diwali, which is on October 25. But till now nothing has been confirmed while the booking plans for Shah Rukh Khan's 'Ra One' has already commenced and is getting sold like hot cakes.
[Continue reading...]

ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது

- 0 comments
 
 
ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேரை பொலீசார் கைது செய்தனர்.
 
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
 
 
கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.
 
 
அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து பொலீசாருக்குத் தெரிய வரவே அவர்களை பொலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.



[Continue reading...]

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை: இங்கிலாந்து பத்திரிக்கையாளர் தகவல்

- 0 comments

அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர். நாஜி படைத் தலைவராக இருந்த இவர் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 1945ம் ஆண்டு ஜேர்மனியில் உள்ள பெர்லினில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. தனது இறுதி நாட்களில் அர்ஜென்டினாவில் வாழ்ந்து இறந்தார். இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஜெர்ரார்டு வில்லியம்ஸ் சைமன் டன்ஸ்டன் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ஹிட்லரின் சரித்திரத்தை மாற்றி எழுத நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் சில குறிப்புகள் மற்றும் தகவல்கள் அவர் தற்கொலை செய்யவில்லை. அர்ஜென்டினாவில் வாழ்ந்து மறைந்தார் என தெரிவிக்கின்றன. எனவே இக்கருத்தும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

[Continue reading...]

300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (காணொளி இணைப்பு)

- 0 comments
 

விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது.

ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்கு பெரிதும் உதவும்.

இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.

அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர்.

ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.

நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.

பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம்.தன்னை ஒரு ஹீரோ நான் நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.

பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.

[Continue reading...]

வயிறு குலுங்க சிரிப்பீங்க பார்காதவங்க பாருங்க!(வீடியோ இணைப்பு)

- 0 comments
 

ஒர்மி எனும் பன்றிக்குட்டி செய்யும் அட்டகாசம் தான் குழந்தைகளுக்கான அனிமேஷன் குறும்படங்களில் இப்போது இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக…! ஸ்ப்ரோகெட்ஸ் 2010, நியூயோர்க் சிறுவர் திரைப்படங்களுக்கான விழா

2011 என அனைத்திலும் விருதுகளை அள்ளிக்குவித்தது இக்குறும் படம். இதன் பேஸ்புக் பேன் பேஜ்ஜும் பிரபலம். இதுவரை இந்த ஒர்மி அனிமேஷன் கார்ட்டூன் பார்க்கவில்லை என்றால் உங்களுக்காக! இல்லை இல்லை, உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக…

[Continue reading...]

தோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹரியானாவில் பரபரப்பு

- 0 comments

தோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள். ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் ஒரு பெண்கள் விடுதி உள்ளது.

தனியாருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஒரு அறையில் 2 முதல் 4 பெண்கள் தங்கி உள்ளனர்.

கடந்த மாதம் இங்கு தங்கியிருந்த சில பெண்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி, ஒருதரப்பை சேர்ந்த 4 பெண்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்தி சென்றனர்.

காரில் காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். முடிவாக அப்பெண்ணின் ஆடைகளை களைய செய்து, அவரது மொபைல் போனில் படம் பிடித்தனர். பல செக்ஸ் சில்மிஷங்களை செய்து கொடுமைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை எம்.எம்.எஸ். மெசேஜாக மாற்றினர்.

நிர்வாணமாக்கப்பட்ட அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்த சேமிக்கப்பட்ட மற்ற எண்களுக்கு அந்த வீடியோவை, எம்.எம்.எஸ்சாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிய கூட இல்லை.

பலருக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோ தற்போது ஹரியானா மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. இந்த சம்பவத்தினால் பெரும் அவமானம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தேசிய பெண்கள் அமைப்புகளின் உதவியை நாடியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு தேசிய பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை குறித்து வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர் பங்கச் சாண்கோதீயா என்பவர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதியாமல் விட்டுள்ளனர்.

ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி படம் எடுத்து, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் சைபர் கிரைம் குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலங்களில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கும், என்றார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger