Thursday 11 August 2011

தோழர்

- 0 comments


அத்தியாயம் 38 1848 அவர்களுக்கு மறக்கமுடியாத ஒர் ஆண்டாக அமைந்தது. மார்க்ஸ் பாரிஸிலும் எங்கெல்ஸ் சுவிட்ஸர்லாந்திலும் அடைக்கலம் புகுந்தனர். புரட்சியின் தோல்வியில் இருந்து அவர்கள் சில பாடங்கள் படித்துக்கொண்டனர். மார்க்ஸால் பாரிஸில் தொடர்ந்து தங்கியிருக்கமுடியவில்லை. எனவே நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார். எங்கெல்ஸையும் அங்கேயே வந்துவிடும்படி கடிதம் எழுதினார். 'பிரஷ்ய அதிகாரிகள் உன்னை விடமாட்டார்கள். இங்கே வந்துவிடு. லண்டனில் நாம் செய்வதற்கு நிறைய இருக்கிறது.' மார்க்ஸுடன் இருப்பதுதான் எங்கெல்ஸின் விருப்பமும் என்றாலும் லண்டன் [...]

http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    மின்சாரத் தாரகை!

    - 0 comments


    சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகாவது பசங்களுக்கு பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார்களா என்று பார்க்க வேண்டும். இத்தனை நாட்கள் விளையாட்டு கற்றுக் கொடுத்ததற்கு ஒலிம்பிக்கிற்கு பழக்கப்படுத்தியிருந்தாலாவது நாலைந்து தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும்! *** கடந்த ஆட்சியைக் கவிழ்த்ததில் [...]

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    நெற்றியிலே மூன்��ு கோடுகள்!

    - 0 comments


    க – 15 கட்சி தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பிளவைச் சந்தித்த திமுக, அந்தச் சுவடு மறைவதற்குள் பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாரானது. கடந்தமுறை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதிக்கு இம்முறை அண்ணா ஒதுக்கிய தொகுதி தஞ்சாவூர். கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பது மட்டும் காரணமல்ல; அங்கு நடந்த ஒரு போராட்டத்தில் கருணாநிதியின் பங்களிப்பு. தஞ்சாவூரில் இருக்கும் எஸ்.எம்.டி. பேருந்து நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் குதித்தனர். மறியல் செய்ய முயன்ற தொழிலாளர்களை [...]

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    ஐ!

    - 0 comments


    அத்தியாயம் 14 “நான் ஆப்பிளின் பொறுப்பில் இருந்தால் என்ன செய்வேன்? இதை எப்படி செய்வேன்? அதை அப்படி செய்வேன்?" என ஸ்டீவ் ஜாப்ஸ் நினைக்காத நாளில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ், கனவு காண்பவர் அல்ல. கனவுகளை வாழ்பவர் என்று அறிந்திருந்தவர்கள் அனைவருக்கும் அவரின் இந்த மைண்ட் வாய்ஸ் மிக நன்றாக கேட்டது. கேட்ட அனைவரும் கேட்ட கேள்வி, ஸ்பெஷல் அட்வஸைராக ஆப்பிளுக்கு வந்திருக்கும் ஜாப்ஸ் ஆப்பிளுக்காக என்ன செய்வார் என்பது அல்ல. ஆப்பிளை ஆள என்ன செய்யப் போகிறார் [...]

    http://sirappupaarvai.blogspot.com/




  • http://sirappupaarvai.blogspot.com/


  • [Continue reading...]

    தமிழ் பேப்பர்

    - 0 comments
    [Continue reading...]

    ஜெயலலிதாவை எதிர��த்து போட்டியிட்���வர் கைது

    - 0 comments


    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது செய்யப்பட்டார். வாக்கு பதிவின் போது வாக்காளர் பட்டியலை கிழித்த வழக்கில் ஆஜர் ஆகாததால் போலீசார் மேலும்படிக்க

    http://tamilfashionshow.blogspot.com/




  • http://tamilfashionshow.blogspot.com/


  • [Continue reading...]

    இலங்கை தமிழர்கள��க்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது - ஜெயலலி���ா

    - 0 comments


    "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியத் தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, மேலும்படிக்க

    http://tamilfashionshow.blogspot.com/




  • http://tamilfashionshow.blogspot.com/


  • [Continue reading...]

    மலையாள பட வாய்ப்���ை நழுவவிட்ட திர��ஷா

    - 0 comments


    தெலுங்கு, இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாக காத்திருந்தார் திரிஷா. பிரித்விராஜ் நடிக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங் மேலும்படிக்க

    http://tollywwod.blogspot.com/




  • http://tollywwod.blogspot.com/


  • [Continue reading...]

    Nithya Menon

    - 0 comments
    [Continue reading...]

    பத்மநாபசாமி கோவ��ல் 6-வது அறையை திறப்பவரின் வம்சம் ���ழிந்துபோகும்

    - 0 comments


    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழிந்து போகும் என, தேவ பிரசன்னத்தில் தெரிய வந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் கூறினர்.

    புகழ்பெற்ற திருவனந்தபுரம் மேலும்படிக்க

    http://tollywwod.blogspot.com/




  • http://tollywwod.blogspot.com/


  • [Continue reading...]

    எத்தனை நாள் தான் நல்லவனாவே நடிக்��ிறது ?" : அஜீத் -மங்காத்தா ஸ்பெஷல்

    - 0 comments



    மங்காத்தா ஸ்பெஷல் அஜீத்-மங்காத்தா சூப்பர் ட்ரைலர்


    ஒரு வழியாக இன்று அதிகாலை அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் இசை வெளீயிட்டு விழா ரேடியோ மிர்ச்சியில் வைத்து நடைபெற்றது.
    மேலும் படிக்க »

    http://naamnanbargal.blogspot.com/




  • http://naamnanbargal.blogspot.com/


  • [Continue reading...]

    நீ எம்.எல்.ஏ..வா இ��ுந்தா எனக்கென்ன..?

    - 0 comments


    இதாண்டா போலீஸ்...ராஜசேகர் போல காலரை தூக்கிக்கொண்டு,முஷ்டியை மடக்கி க்காட்டி தமிழக போலீஸ் புகுந்து விளையாடுகிறது....நடப்பது அ.தி.மு.க ஆட்சியா இல்லை..போலீஸ் ஆட்சியா என்ற சந்தேகம் வரலாம்..
    மேலும் படிக்க »

    http://naamnanbargal.blogspot.com/




  • http://naamnanbargal.blogspot.com/


  • [Continue reading...]

    நடிகர் செந்தாமர��யின் நாடிஜோதிட அனுபவம்

    - 0 comments


    நடிகர் ராஜேஷ் ராணி வார இதழில் எழுதி வரும் ஜோதிட தொடரில் இருந்து ஒரு பகுதி;

    நடிகர் செந்தாமரை மூன்றுமுகம் படத்தில் ரஜினிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வில்லன்...அலெக்சு..என் பேரை சொன்னா கர்ப்பத்துல இருக்குற குழந்தை கூட வாயை பொத்தும்....என போலீஸ் ஸ்டேஷனில் கால்மேல்போட்டுக்கொண்டு ரஜினியை மிரட்டுவாரே அவர்தான்....இனி ராஜேஷ் சொல்வதை பார்ப்போம்.

    மேலும் படிக்க »

    http://naamnanbargal.blogspot.com/




  • http://naamnanbargal.blogspot.com/


  • [Continue reading...]

    லட்சுமி வந்தாச்��ு...!! - லட்சுமி குப��ர மந்திரம்

    - 0 comments


    இன்று வரலட்சுமி பூஜை..!!

    லட்சுமி நம் வீட்டிற்கு வரும் நாள்.!இத்தனை நாள் வரலையா...அட..நம்ம வீட்லதான் லட்சுமி எப்பவுமே..இருந்தாலும் அந்த லட்சுமிக்கு வருசம் ஒரு தடவை குளிர்விக்க வேணாமா..?
    மேலும் படிக்க »

    http://naamnanbargal.blogspot.com/




  • http://naamnanbargal.blogspot.com/


  • [Continue reading...]

    நல்ல நேரம்

    - 0 comments


    ஜோதிடம் / ஜாதகக் கணிப்பு/ராசிபலன்/எண்கணிதம்/ராசிக்கற்கள்/சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011/குருபெயர்ச்சி பலன்கள்/tamil astrology/sani peyarchi/vasthu/jothidam/guru peyarchi/sani peyarchi 2011

    http://naamnanbargal.blogspot.com/




  • http://naamnanbargal.blogspot.com/



  • [Continue reading...]

    n s v sithan DINDIGUL,THUROGI

    - 0 comments




    ராஜபக்சேவின் கைகூலிகள் நம் பாராளுமன்றத்திலேயே இருக்கிறார்கள். இன்று நடைபெறவேண்டிய இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சியை நேற்றே காங்கிரஸ் தமிழக எம் பி என்.எஸ்.வி. சித்தன் , மீரா குமாரை சந்தித்து மாற்றம் செய்து விட்டார். அதனால் இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் என்ற தலைப்பாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. தமிழனின் இனப்படுகொலை முற்றிலும் மறைக்கப்பட்டது. இந்திய நாட்டில் இனி காங்கிரஸ் இருக்கும் வரை தமிழனுக்கு நீதி கிடைக்காது.

  • [Continue reading...]

    "எத்தனை நாள் தான் நல்லவனாவே நடிக்���ிறது ?" : அஜீத்

    - 0 comments


    ஒரு வழியாகநேற்று  அதிகாலை அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் இசை வெளீயிட்டு விழா ரேடியோ மிர்ச்சியில் வைத்து நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,வைபவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று இசை வெளீயிடு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்காக பிரத்யேக டிரெய்லரும் வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்த்த அஜீத் ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் இயக்குனர் வெங்கட்பிரபுக்கு அவரது டிவிட்டர் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " டிரெய்லரில் அஜீத்தின் கடைசி வசனம் வரவேற்பை பெறும் " என்று கூறி இருந்தார். அது போலவே " எவ்வளவு நாள் தான் நான் நல்லவனாவே நடிக்கிறது? " என்று அஜீத் பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

    'ஆயுத எழுத்து', 'மன்மதன் அம்பு' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார் த்ரிஷா.



  • [Continue reading...]

    நடிக்க வந்த நாசர���ன் பேரன்? அறிமுக விழாவில் சுவாரஸ��யம்

    - 0 comments


    படத்தை பற்றி நாலு வரி பேசினால் கூட அதை சுட்டு வேறு படத்தில் வைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் எந்த கேள்வி கேட்டாலும், அதை எப்படி இப்பவே சொல்றது, படத்தில பாருங்க என்று பதில் சொல்வதுதான் இன்றைய இயக்குனர்களின் வழக்கம்.
    ஆனால் தான் இயக்கப் போகும் கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் படத்தின் கதையை கிட்டதட்ட பாதிக்குமேல் சொல்லி அசத்தினார் வெங்கி.
    சித்தார்த்-பிரியங்கா இருவரும் முதன் முதலில் காபி ஷாப்பில் சந்திக்கிறார்கள்.மெல்ல மெல்ல அது காதலாக மாறுகிறது. பெற்றோரின் சம்மதத்துக்கு காத்திருக்காத அவர்கள், திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் செல்கிறார்கள். ஜாலியாக கழிகிறது வாழ்க்கை. அந்த நேரத்தில் விதி குறுக்கிடுகிறது. சித்தார்த்துக்கு அச்சத்தை கொடுக்கிறளவுக்கு இருவரும் பிரிகிறார்கள். தனியே கலங்கி நிற்கும்போதுதான் வேறு இருவரை சந்திக்கிறான் சித்தார்த். அதன் பின் அவன் வாழ்க்கை மாறிவிடுகிறது. அந்த இருவரும் யார்? அவன் அடைந்த மாற்றம் என்ன? இதுதான் கதை என்றார் வெங்கி.
    மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன ஹ்ரிதய்ராஜ்தான் இந்த படத்தின் ஹீரோ. பிரபல மாடலிங் அழகி அதிதி என்பவர்தான் ஹீரோயின்.
    வெங்கியும் நாசரும் நண்பர்களாம். அதுமட்டுமல்ல, இப்படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருக்கிறார் நாசர். கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் Konjam Coffee Konjam Kadhalஅறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், சொன்ன ஒரு விஷயம் நச்.
    நடிகர்களுக்கு இருபது வயதில் மகன் இருந்தால் போதும். எப்போ அவனை ஹீரோவாக்குறீங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ஹீரோவாக்காமலிந்தால், பெரிய குற்றம் போல நினைக்கிறார்கள். இந்த படத்தில் நடித்திருக்கும் ஹ்ரிதய்ராஜ் பம்பாய் படத்தில் எனக்கு பேரனா நடிச்சிருந்தார். என் பேரன் ஹீரோவா அறிமுகமாகிற படத்தில் நான் நடிக்கிறேன்னு சொல்லிக்க வேண்டியதுதான் என்றார் நாசர். அப்புறம் அவர் தன் மனைவிக்கு காபி போட்டுக் கொடுத்த விஷயத்தையெல்லாம் சொல்லி, ஆடியன்சை சிரிக்க வைத்தது தனி டிராமா.



  • [Continue reading...]

    துப்பாக்கி குண்��ுகளுக்கு பலியாக���ம் ஒட்டகங்கள்!

    - 0 comments


    சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்கு, எது தெரியுமா? பாலைவன கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் தான். இவற்றின் வாயிலிருந்து வெளியேறும் மீத்தேன் என்ற நச்சு வாயு, புவி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக, அறிவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஒட்டகமும், ஒரு ஆண்டுக்கு, தலா, 45 கிலோ கிராம் மீத்தேன் நச்சு வாயுவை வெளிப்படுத்துகின்றனவாம். இந்த, 45 கிலோ மீத்தேன் வாயுவால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு, ஒரு மெட்ரிக் டன் கரியமில வாயுவால் ஏற்படுத்தும் பாதிப்புக்கு சமம். இதனால், ஒட்டகங்களை கண்டாலே, உலக நாடுகள் அலறுகின்றன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியாவை கங்காரு நாடு என, பலரும் அழைத்தாலும், ஒட்டகங்களும் அங்கு அதிக அளவில் உள்ளன.
    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள், ஆஸ்திரேலியாவில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் மக்கள் குடியேறாத காலத்தில், புதிய பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக வந்தவர்கள், தங்களின் பயணத்துக்காக, ஒட்டகங்களை இங்கு கொண்டு வந்தனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டகங்கள் தான், தற்போது பெருகி, ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன.
    இவற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு, அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. காடுகளில் சுற்றித் திரியும் ஒட்டகங்களை, ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு, சுட்டுத் தள்ளுவதற்கு வேட்டையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கொல்லப்படும் ஒவ்வொரு ஒட்டகங்களுக்கும், வேட்டையாளர் களுக்கு வெகுமதியும் உண்டு.
    இந்த வெகுமதியை அளிக்கப் போவது, ஆஸ்திரேலிய அரசு அல்ல. தொழிற்சாலைகளை அமைத்துள்ள தொழில் அதிபர்கள், தங்களின் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்கான நஷ்ட ஈடாக, வேட்டையாளர்களுக்கு பணம் அளிக்க வேண்டும்.
    இது தான், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரமோ?
    எது எப்படியோ, ஒரு காலத்தில், ஆஸ்திரேலியாவில் மக்கள் குடியேறுவதற்காக உதவிய ஒட்டகங்கள், தற்போது, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகப் போவதை நினைத்தால், வேதனையாகத் தான் இருக்கிறது.



  • [Continue reading...]

    பரவாயில்லை, ஆடும���வரை ஆடட்டும்: கல���ஞர்

    - 0 comments



    திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என்று நீதிபதியே கூறியுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த கலைவாணன் மீது 7 பிரிவுகளில் அவசரம் அவசரமாக அதிமுக அரசு மற்றொரு வழக்கைப் பதிவு செய்தது.


    போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டார்.


    அதிமுகவினர் மீது நிலஅபகரிப்பு புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் சமாதானம் பேசி அனுப்புகின்றனர். ஆனால் நிலத்தை விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால், அதனை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துகைது செய்யப்படுகின்றனர்.


    கைது செய்துவிட்டு புகாரைத்தேடி போலீசார் அலைகின்றனர். ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னொரு புகாரைத் தயார் செய்கின்றனர். நீதிமன்றங்களின் மீது உள்ள கோபத்தின் காரணமாக குண்டர் சட்டம் என்னும் கொடுமையான அஸ்திரம் ஏவி விடப்படுகிறது.


    நிலஅபகரிப்பு என்று சொல்லி அதற்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், ஆக்கமும் எதிர்காலத்தில் சிவில் பிரச்சனைகளில் காவல்துறையினரின் தலையீடு, கட்டப் பஞ்சாயத்து போன்ற


    விரும்பத் தகாத விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திவிடும்.

    காவல்துறையின் துணையோடு திமுகவை நிலை குலையச் செய்து விடலாம் என்கிற அதிமுக ஆட்சியாளர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை. இதுபோன்ற சிந்தனைகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்காக சிந்தித்து செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு.

    மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல, பரவாயில்லை, ஆடும்வரை ஆடட்டும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.





  • [Continue reading...]

    சிங்களருக்கு இண��யான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்க��ம் வரை எனது அரசு ���யாது!- ஜெ

    - 0 comments


    இலங்கையில் சிங்களருக்கு இணையாக அந்தஸ்து தமிழர்களுக்கும் கிடைக்கும்வரை எனது அரசு ஓயாது, என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

    தமிழக சட்டப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முழு விவரம்:

    கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். 

    எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. 

    இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி...
    இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

    சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும். 

    இலங்கையின் போர்க்குற்றங்கள்...
    இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது. 

    இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது. 

    சாத்தான் வேதம் ஓதலாமா...
    அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

    கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசாவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 

    தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை
    மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுதான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். 

    இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பதுதான். 

    இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். 

    ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. 

    நான் கொண்டு வந்த தீர்மானத்தின் தாக்கம்....
    கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

    இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில், 

    "போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால்தானே இந்த பேட்டி...
    இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

    இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். 

    -இவ்வாறு அவர் பேசினார்.





  • [Continue reading...]

    மங்காத்தா - புத்தம் புது டிரெய்லர���

    - 0 comments









  • [Continue reading...]

    ஊழல் குற்றச்சாட��டில் சோனியாவும் சிக்குவார்

    - 0 comments


    ஊழல் குற்றச்சாட்டில் விரைவில் சோனியாவும் சிக்குவார்," என்று பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் நேற்று ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வியில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது:

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்தால் ஏற்கனவே அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு அருகதை இல்லை.

    சீனாவோடு சேர்ந்து இலங்கை செய்யும் துரோகத்திற்கு இந்தியாவும் துணை போய்விடக்கூடாது. அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தனக்கு சொந்தமானது என்று கூறுவதற்கு இடம் தந்துவிடக்கூடாது.

    கடலில் 6 மணி நேரம் படகில் தங்கி முற்றுகை போராட்டம் நடத்திய என்மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு ஜோடித்துள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். பெருவாரியான இடங்களில் பதவிக்கு வருவோம். தற்போது ஊழல் வழக்கில் கைதாகி வரும் காங்கிரஸ் கட்சியினரை தொடர்ந்து விரைவில் சோனியாவும் சிக்குவார், என்றார். பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் முரளீதரன் உள்ளிட்ட கட்சினர் உடன் இருந்தனர்.


  • [Continue reading...]

    "உன்னைவிட பெரிய ஆளை கைபிடிச்சு கா���்டுறேன்" :நயன்தா���ா விட்ட சவால்

    - 0 comments


    நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் திருமணம் நடக்க போகிற இந்த நேரத்தில், கேரளாவிலிருக்கும் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் பேசப்படும் விஷயங்கள் நச்சு காற்றாக பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் சூறைக்காற்றே அடித்தாலும், நயன்தாராவின் சுடிதார் முனையை கூட ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பும் மாஸ்டர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் இழிச்சொல்லும் பழிச்சொல்லும் அவ்வளவு எளிதில் ஓயாதே!


    அப்படியென்ன கூறிக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில்? நடிக்க வந்த புதிதில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்தாராம் நயன். ஆரம்பத்தில் ஏற்பட்ட பழக்கம் மேலும் மேலும் வலுவடைய, அப்புறம் லால் கொடுத்த டார்ச்சரால் தானாக விலகியதாம் தொடர்பு. இருந்தாலும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மட்டுமல்ல, காட்டுக்கூச்சலுடன் சண்டையும் நடந்ததாம்.
    அப்போது "உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன்" என்று படப்பிடிப்பில் அத்தனை பேர் முன்னிலையும் சவால்விட்டாராம் நயன். சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று இலவம் பஞ்சில் மிளகாய் பொடிய தடவி பறக்கவிடுகிறது திருவில்லா.




  • [Continue reading...]

    ஜெயலலிதாவை எதிர��த்துப் போட்டியி���்ட வைரமுத்து உற��ினர் கைது

    - 0 comments


     தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரான சீமான் டுடோரியல் நிறுவனத்தின் தலைவர் சீமான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

    சீமான் சென்னையில் டுடோரியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் உறவினரும் கூட.

    தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் சீமானை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பலமுறை சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்து வந்ததால், அவர் விசாரணைக்கு ஆஜரகாவில்லை.

    இதையடுத்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் போலீஸ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சீமானைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த சீமான் கைது செய்யப்பட்டு ஆண்டிப்பட்டி கொண்டு செல்லப்பட்டார்.





  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger