Showing posts with label உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதம். Show all posts

Thursday, 8 August 2013

கோபால்தாஸ் போராட்டம்

- 0 comments

கோபால்தாஸ் போராட்டம்
------------------------------------
ஹரியானாவை சேர்ந்த கோபால்தாஸ் என்னும்
துறவி கடந்த 81 தினங்களாக மத்திய மாநில
அரசுகளை எதிர்த்து போராடி வருகிறார். மக்கள்
மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றாலும்,
இவரை பற்றி ஒரு வார்த்தை கூட எந்த
ஒரு மீடியாவிலும் வரவில்லை.

இவரின்
போராட்ட நோக்கம் மக்களுக்கு சுத்தமான பால்,
பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் &
பசு பாதுகாப்பு. இதன் பின்னணியில் உள்ள
பல்வேறு ஊழல்களையும்,
மாபியா நோக்கங்களையும் வெளிப்படுத்தியதன்
காரணமாக இவரின் போராட்டங்கள்
இருட்டடிப்பு செய்யப்படுகிறது;
அதற்கு மீடியாவும் துணை போகிறது. இவரின்
போராட்டம் பற்றிய சில செய்தி துளிகள்,

• மேய்ச்சல் நிலமாக இருந்த ஹரியானாவின் 18
லட்சம் பசுக்கள் மேய வேண்டிய பல லட்சம்
ஏக்கர்கள் ஊழல் காரணமாக மிக குறைந்த
குதகைக்கும் பிற காரணங்களுக்கும்
அழிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க வேண்டும்.

• இங்கிலாந்து அரசுக்கு வருடம் 33,000 டன்
பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்ய
சுதந்திரத்தின்போதே ரகசிய ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படுத்துகிறார்!

• இந்தியாவில் சப்ளை செய்யப்படும் பாலில்
88% கலப்படம்!

• இதனால் அதிகரித்த தீவன
தேவையை செயற்கை தீவனம் வாங்கிய
வகையிலும் பெரும் ஊழல்
நடப்பதை வெளிப்படுத்துகிறார்.

• உண்ணாவிரத
போராட்டத்தோடு மாட்டு வண்டியில் கிராமம்
கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்கிறார். இதை குறித்து பிரதமர, முதல்வர்,
தலைமை நீதிபதி என பலருக்கும் கடிதம்
எழுதியும் எவனும் கண்டுகொள்ளவில்லை.
ஆயினும் பொதுமக்கள் ஆதரவு பெருமளவில்
பெருகி வருகிறது.

• காவல்துறையால் அர்ரஸ்ட்
செய்யப்பட்டு ஜெயிலிலும் போராட்டம் தொடர
சக கைதிகளும் இவரோடு போராட்த்தில்
இறங்கிவிட்டனர்!

• சில நாட்களுக்கு முன்
டெல்லி நேரு பல்கலைகழகத்தில் பீப்
சப்ளை செய்யப்பட்டபோது, என்
சதையை சாப்பிடுங்கள்
பசுக்களை கொள்ளாதீர்கள் என்று தன்
உடலை கீறி போராடியது பெரிய
அதிர்வு அலையை ஏற்ப்படுத்தியது.

• நான் எனது போராட்டத்தில்
எங்கு வேண்டுமானாலும் சாவேன். நான்
எங்கு இறக்கிறேனோ அங்கேயே எரிக்கவும்.
இருந்தாலும் என் போராட்டம் மக்களால்
நடத்தப்படும் என்கிறார்.

இப்படித்தான் கங்காதாஸ் என்பவர் கங்கா நதிநீர்
மாசுபாட்டை எதிர்த்து நூறு நாட்கள்
உண்ணாவிரதம் இருந்து இறந்தார். பொதுமக்கள்
நாம் மீடியாக்கள் போலவே அமைதி காத்தோம்.
அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும்
அறிவுகெட்ட ஜடங்களாக இருக்க வேண்டாம்!
-நிலவரசு கண்ணன்

[Continue reading...]

Tuesday, 6 August 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில், நாளை கருணாநிதி உண்ணாவிரதம்

- 0 comments
 ஏன்  ?  இந்த கொலைவெறி ....!
யாருக்காவது சீட்  வேணுமா ? 


இல்லை தாயாளு அம்மாளை  காபாத்தவா ?
நல்லதொரு குடும்பத்தலைவன் நீ !



இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள   ‘‘காமன்வெல்த்’’ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாது காத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
தென் சென்னை மாவட்ட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger