Showing posts with label கறபழிப்பு. Show all posts
Showing posts with label கறபழிப்பு. Show all posts

Friday, 9 August 2013

குடித்துவிட்டு சக தோழியை கதறக் கதற கற்பழித்த நான்கு கல்லூரி மாணவிகள்

- 0 comments
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, கல்லூரி விடுதியில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.


சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.
[Continue reading...]

Thursday, 25 July 2013

பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு 2 days 3 women torture in bihar

- 0 comments
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.

இரவு 7 மணி ஆகி விட்டதால் வீடு திரும்புவதற்காக காத்து இருந்தார். அப்போது ஒரு மினி பஸ் வந்தது. அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக ஏமாற்றி ஏற்றிச் சென்று ஓடும் பஸ்சில் ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர்.
[Continue reading...]

Wednesday, 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

Tuesday, 16 July 2013

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

Friday, 8 March 2013

கேரளாவில் 3 வயது தமிழ் நாடு சிறுமி கற்பழிப்பு வாலிபர் கைது

- 0 comments
கோழிக்கோடு கோட்டைக்கல் அருகே திரூர் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.    

அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி தமிழ்நாட்டை சேர்ந்த நாடோடி கூட்டத்தை சேர்ந்தவள் என்பதும், தாயுடன் தங்கியிருந்த அவளை மர்ம நபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து வீசியதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த முகமது ஜாசின் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏராளமான பிக்பாக்கெட், திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
[Continue reading...]

Saturday, 2 March 2013

அக்கா தங்கை கற்பழிப்பு

- 0 comments

டிசா மாநிலம் பாதாம் பகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுபாடா கிராமத்தை சேர்ந்த அக்காள்- தங்கை இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்கள். மலைவாழ் சிறுமிகளான இவர்களை பெற்றோர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் 2 சிறுமிகளும் பேஜாபஞ்ச் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களது வீட்டில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் 2 சிறுமிகளின் உடல்களும் கிடந்தன. மர்ம கும்பல் அவர்களை கடத்தி சென்று கற்பழித்து கொன்று உடல்களை வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த கற்பழிப்பு சம்பவத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதில் ஒருவர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 376 (ஜி) கும்பலாக சேர்ந்து கற்பழித்தல், 302 (கொலை) உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட அந்த வாலிபரும் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த வாலிபர் சிக்கினால்தான் சிறுமிகளை கற்பழித்து கொன்றது யார்- யார் என்று தெரியவரும்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger