Friday 8 March 2013

கேரளாவில் 3 வயது தமிழ் நாடு சிறுமி கற்பழிப்பு வாலிபர் கைது

கோழிக்கோடு கோட்டைக்கல் அருகே திரூர் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.    

அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி தமிழ்நாட்டை சேர்ந்த நாடோடி கூட்டத்தை சேர்ந்தவள் என்பதும், தாயுடன் தங்கியிருந்த அவளை மர்ம நபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து வீசியதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த முகமது ஜாசின் (வயது 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏராளமான பிக்பாக்கெட், திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger