Thursday 24 October 2013

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது பெயர் சூட்டுவதை அனுமதிக்க வேண்டாம்: சச்சினுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் Mumbai cricket club please do not let your name Aam Admi letter to Sachin

- 0 comments

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது பெயர் சூட்டுவதை அனுமதிக்க வேண்டாம்: சச்சினுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் Mumbai cricket club please do not let your name Aam Admi letter to Sachin

மும்பை, அக்.25-

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மேற்கு புறநகர் பகுதியான காந்திவிலியில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் மதுபான விடுதிகள், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கட்டப்படுவதாக கிரிக்கெட் சங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த கிளப் ஹவுசுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவிற்கு சிவசேனா கட்சியின் கவுன்சிலர் யசோதர் பன்சே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள காந்திவிலி கிளப் ஹவுசிற்கு சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மராட்டிய மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா சச்சின் தெண்டுல்கருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், நீங்கள் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலம். ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் நீங்கள் துடித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கிளப் ஹவுசுக்கு உங்களுடைய பெயர் வைக்கப்போவதாக அறிந்தோம். இதனை ஒருபோதும் நீங்கள் அனுமதிக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

...

shared via

[Continue reading...]

காங்கிரஸ்தான் மதச்சார்புடன் செயல்படுகிற ஒரு வகுப்புவாத கட்சி : ராஜ்நாத் சிங் Congress the most communal party Rajnath says

- 0 comments

காங்கிரஸ்தான் மதச்சார்புடன் செயல்படுகிற ஒரு வகுப்புவாத கட்சி : ராஜ்நாத் சிங் Congress the most communal party Rajnath says

கொச்சி, அக். 24-

ராஜஸ்தானில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கோபம் மற்றும் வெறுப்பான அரசியலை பாரதிய ஜனதா நாட்டில் விதைத்து வருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் கேரள மாநில கொச்சியில் நாளை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் தலைவர்களை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிதான் மதவாதக் கொள்கையுடன் செயல்படும் முக்கியமான வகுப்புவாத கட்சி என்று கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:-

மிகப்பெரிய வகுப்புவாதக் கட்சியாக காங்கிரஸ் தான் நாட்டில் செயல்படுகிறது. அந்த கட்சிதான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட காங்கிரசார் அதை கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

[Continue reading...]

விஜய் சார் பஞ்ச் டயலாக் பேசல… பேசல… vijay special news

- 0 comments

விஜய் சார் பஞ்ச் டயலாக் பேசல… பேசல…

இருமினால் கூட யாருக்கும் சங்கடமில்லையே என்று கேட்டுதான் இருமுவார் போலிருக்கிறது. அந்தளவுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிட்டார் விஜய்.

தனது ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை அவர் ஐதராபாத் ஷூட்டிங்கில் வைத்து சந்தித்தார் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது. அலறி அடித்துக் கொண்டு அந்த செய்திக்கு மறுப்பு அனுப்பி விட்டார். நான் பாட்டுக்கு என் வேலை உண்டு, ஷுட்டிங் உண்டுன்னு போயிட்டு இருக்கேன். எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டாக்காதீங்க என்கிற அளவுக்கு சூடு பறந்தது அந்த அறிக்கையில்.

அப்படியே நம்ம படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லேங்கிற விஷயத்தையும் வெளியே சொல்லியாகணுமே என்று யோசித்தவர், ஜில்லா படத்தின் டைரக்டர் நேசனை அழைத்து நீங்க கொடுக்கிற பேட்டிகளை கொஞ்சம் விளக்கமே கொடுத்துருங்க என்றாராம். அதாவது இந்த படத்தில் பஞ்ச் டயலாக் இல்லே என்பதை பளிச்சுன்னு சொல்லிடுங்க என்று அர்த்தம்.

மிக சரியாக அதை புரிந்து கொண்ட நேசன், எந்த நிருபரை பார்த்தாலும் இதில் விஜய் சார் ஒரு பஞ்ச் டயலாக்கும் பேசல என்கிறார். இப்படி சொன்னால்தான் என்னவோ இருக்குன்னு அர்த்தம்.

shared via

[Continue reading...]

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

- 0 comments

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

புதுடெல்லி, அக். 24-

ஐதராபாத்தில் பிறந்தவரான தொழிலதிபர் அசன் அலி கான் ரியல் எஸ்டேட், குதிரை வியாபாரம், பழையப்பொருட்கள் விற்பனை என பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவர் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து பணமுறைகேடு செய்ததாக மத்திய அமலாக்கப்பிரிவினர் கடந்த 2011-ம் ஆண்டு அசன் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சுவிஸ் நாட்டின் யூபிஎஸ் வங்கியில் 800 கோடி டாலர் மதிப்பிலான பணத்தை  பதுக்கி ஹவாலா மோசடி செய்துள்ளார் எனவும், இதனால் அவர் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அசன் அலியின் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிக்கு எதிரான ஆவண விவரங்களை வழங்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இந்திய அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கேட்டார்.

கருப்பு பணம் மற்றும் பண முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அசன் அலி வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வர போதுமான ஆதாரம் இல்லாமல் அரசு திணறி வருவதாக கூறப்படுகிறது.

...

shared via

[Continue reading...]

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

- 0 comments

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

கந்தகார், அக். 24–

ஆப்கானிஸ்தான் நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இதுபற்றி தலிபான் தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிந்தது. அந்த ஆணையும், பெண்ணையும் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய உடல் ஊருக்கு வெளியே கிடந்தது.

இதுபோல கள்ளக் காதலில் ஈடுபட்ட பலரை தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது இருக்கும், ஆண் பற்றிய மற்ற விவரங்கள் தெரிய வில்லை.

...

shared via

[Continue reading...]

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: உதயகுமார் kudankulam nuclear power plant shut down permanently udayakumar

- 0 comments

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: உதயகுமார் kudankulam nuclear power plant shut down permanently udayakumar

ராதாபுரம், அக். 24–

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முன் தினம் மின் உற்பத்தி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இடிந்தகரையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்தேச பொது உடமை கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், ம.தி.மு.க. உள்பட 30 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கூடங்குளம் 1 மற்றும் 2–ம் அணுஉலைகளை பற்றி மத்திய அரசும், அதன் அணுசக்தி துறையும், இதர அரசு அமைப்புகளும் தமிழ் மக்கள் உயிருக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்காமல் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக, உண்மைக்கு புறம்பாக தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்போது மின்சார உற்பத்தி தொடங்கி விட்டது என்று நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி விட்டது என்று கூடங்குளம் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மின் இணைப்பு அதிகாரிகள் இரண்டாம் நிலை அமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று தங்களது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மின்சாரம் வந்ததாகவும் குறிப்பிடவில்லை.

கூடங்குளம் முதல் மற்றும் 2–வது அணு உலைகள் குறித்த உண்மை தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தரமற்ற பொருள்களால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் கூடங்குளம் உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

முதல் இரு உலைகளே முடங்கி கிடக்கும் நிலையில் 3–வது, 4–வது உலைகளுக்கு ஒப்பந்தம் போடுவது என்பது மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இந்திய இழப்பீடு சட்டத்தை அவமதித்து ரஷிய அரசுக்கு உதவும் வகையிலான நடவடிக்கையில் இறங்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் தமிழ் மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger