Thursday 25 August 2011

மக்கள் மாற்றத்த�� ஏற்படுத்துவார்���ள் : கமல்ஹாசன் பேட்டி!

- 0 comments


லஞ்சம், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு கிளம்பியுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என நடத்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பங்கிற்கு ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் அளித்துள்ள பேட்டியில், மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற்போல், அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறியுள்ளார்.

இதேபோல ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு நடிகர்-நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை சப்னா ஆஷ்மி கூறுகையில், அன்னா ஹசாரேவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவரது போராட்டத்துக்கு தடை விதித்தது நியாயம் அல்ல. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது, என்றார்.

நடிகர் மாதவன் கூறும்போது, அன்னாஹசாரே போராட்டத்தை தடுத்து அவரை கைது செய்தது முட்டாள்தனமானது. அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளது, என்றார்.

நடிகை பிபாஷாபாசு கூறும்போது, ஊழல் பேயை கொல்ல போராடும் அன்னா ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    இலங்கையில் தமிழ��ப் பெண்களிடம் பாலியல் வன்முறை தொ���ர்கிறது: சீமான்

    - 0 comments


    இலங்கையில் தமிழ்ப் பெண்களிடம் மர்ம மனிதர்கள் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.

    வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மர்ம மனிதரின் நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.

    அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

    மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

    இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
    இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபய மிரட்டியுள்ளார்.
    ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
    இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது.

    இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ்ப் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.

    இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.
    இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று சீமான் கூறினார்.



    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    உலகின் சக்திமிக��க பெண் அஞ்சலா மே��்க்கல்

    - 0 comments


    அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அது போன்ற நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது.

    ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு 2-ம் இடத்தை அந்த பத்திரிகை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இவர் 5-வது இடத்தில் இருந்தார்.
    இப்போது 3 இடம் முன்னேறி உள்ளார்.

    பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபரான டில்மா ரவுஸெப் 3-ம் இடத்தில் உள்ளார். அமெரிக்க இந்தியரும் பெப்சி குளிர்பான நிறுவனத்தின் தலைவருமான இந்திரா நூயி 4-வது இடத்திலும், பேஸ் புக் தலைமை அதிகாரி ஷெரில் சான்ட் பெர்க் 5-வது இடத்திலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசனின் துணை தலைவர் மெலிண்டா கேட்ஸ் 6-வது இடத்திலும் வருகின்றனர்.



    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    செவ்வாய் கிரகத்��ில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞா���ிகள்

    - 0 comments


    செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் "நாசா" விஞ்ஞானிகள் பல ஆண்டு களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.

    சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய போட்டோவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்ப தற்கான அறிகுறிகள் காணப் படுவதாக தெரிவித்தனர். நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காணப்படு கின்றன. எனினும் புகைப் படம் தெளிவாக இல்லாத தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இப்போது அங்கு மனிதர்களும் வாழ முடியும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன என்று விஞ் ஞானிகள் தகவல் வெளி யிட்டுள்ளனர். இது மனிதர்கள் செவ் வாய் கிரகத்தில் வாழ முடியாது என்ற முந்தைய கருத்தை பொய்யாக்கி இருக் கிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பிராணவாயு வின் (ஆக்சிஜன்) கலவையை கொண்டதாக உள்ளது. இங்குள்ள ரசாயன ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆக்சிஜன் உள்ளதால் செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் வாழ முடியும். ஆக்சிஜன் காணப்படுவதால் அங்கு தண்ணீரும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மனி தர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் காணப்படவில்லை. இந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக் கையை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் காணப் படும் தண்ணீர் பருவ நிலையால் உருவாகிறதா? அல்லது நிரந்தரமாக உள்ளதா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. நிலையாக தண்ணீர் இருக்குமானால், செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானி கள் நம்பிக்கை தெரிவித்துள் ளனர்.



    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    விஜயகாந்துக்கு ���து தான் சத்திய ச���தனைக்காலம்..

    - 0 comments




    ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக விளங்ககூடியவர் என்று அடையாளம் காட்டக்கூடிய வகையில் தமிழகத் தலைவர்களில் மீதமிருப்பவர் என பெரும்பாலானவர்களின் ஈர்ப்பை பெற்றிருந்தார் விஜயகாந்த்.

    கறுப்பு எம்.ஜி.ஆர்., என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் விஜயகாந்த், "நானே முதல்வர்" என்ற அறைக்கூவலுடன் அரசியலுக்கு வந்தார் என்றாலும் கூட, "நாற்பது சட்டமன்ற தொகுதிக்கான சீட்" என்ற தொகுதி உடன்பாட்டுக்குள் வந்தவுடன், "அட போங்கப்பா... மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதி தானா?" என்று நடுநிலை வாக்காளர்கள் சலிப்பு தட்டினார்கள்.

    ஆளுங்கட்சிக்கு எதிராக செய்யும் அரசியல் நடத்தி, சீக்கிரம் கால் ஊன்றுதல், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் இழுத்தல் என்ற அரசியல் ஆரம்ப பாடத்தில் தேர்ச்சி பெற்று, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்துக்கு இனி வரும் தேர்தல்கள் நிச்சயம் சத்திய சோதனை தான்.

    திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, கலைஞர் அரசுக்கு எதிராக அறிக்கை அரசியல் நடத்திய பாமகவின் மருத்துவர் பாணியில், அம்மாவிடம் கேப்டன் "உள்ளிருந்து எதிர்த்தல்" அரசியல் பண்ண முடியாது. 

    சட்டமன்றத்தில் இவ்வளவு அசுர பலம் கிடைக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு முன்பே தெரிந்திருந்தால், விஜயகாந்துக்கு நாற்பது சீட்டுக்களை ஜெயலலிதா ஒதுக்கி இருக்கமாட்டார், ஏன் கூட்டணியில் கூட சேர்த்திருக்கமாட்டார். விஜயகாந்த் இத்தனை தொகுதியில் ஜெயித்ததை அம்மா, அவ்வளவாக ரசித்திருக்க மாட்டார் என்பது தான் உண்மை.

    தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், தேர்தலுக்கு பின்பு ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது விஜயகாந்துக்கு இப்போதைய சூழ்நிலையில் கஷ்டம் தான்.

    இன்னும் ஆட்சிக்கு எதிராக அதிக அளவில் போராட்டங்களோ, முணுமுணுப்புகளோ, பெரிய அளவில் கிளம்பாத நிலையில்,
    ஜெயலலிதாவை எதிர்த்தால், தேமுதிகாவுக்கு உள்ளாட்சி தேர்தலில் இதே அளவு அடையாளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

    சமச்சீர் கல்வி விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் அரசுக்கு, எதிர்ப்பு காட்டிய போது, விஜயகாந்த் எதிர்க்க துணியவில்லை என்பது தான் உண்மை. குதிரை கிடைக்கும் வரை கழுதை என்று சப்பைக்கட்டு தான் கட்ட முடிந்தது.(இப்போது கழுதை தான் என்று முடிவாகிவிட்டபின், குதிரை தேடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, அம்மா சொன்னால் கழுதை தான் இந்த கள்ளழகரின் குதிரை போல)

    அதிமுக போலவே தேமுதிகவும் கிராமப்புறங்களில் அதிக வாக்கு வங்கியைக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இது முக்கியமாக "கவர்ச்சியை அடிப்படியாகக் கொண்ட வாக்கு வங்கி". எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் என்ற பிம்பங்களுக்காக மட்டும் வாக்களிப்பவர்கள் இன்றும் அதிக அளவில் இருக்கிறார்கள்.

    தமிழக அரசியலைப் பொறுத்தவரை, நடிகர்கள் மீதான கவர்ச்சியை அப்படியே, ஓட்டுக்களாக மாற்றும் வித்தை எம்.ஜி.ஆர், தவிர வேறு யார்க்கும் வாய்க்கவில்லை. விஜயகாந்துக்கு கட்சியை நடத்தும் அளவுக்கு அந்த கவர்ச்சி உதவியிருக்கிறது அவ்வளவே.

    இலவசங்களை காட்டி இந்த ஓட்டு வங்கியை தன் பக்கம் திருப்ப திமுக போட்ட திட்டங்கள் அரசியல் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால்.., சினிமாவை அடிப்படையாக கொண்ட, வெள்ளந்தி மனிதர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதில் உண்மையில், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தான் போட்டி.

    கிராமப்புறங்களில் தேமுதிக வேர் ஊன்றி விட்டால், தமிழக அரசியலில் விஜயகாந்த், தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிடுவார் என்பது ஜெயலலிதா தெரியாமல் இல்லை.

    ஆட்சியில் இருப்பதால், சலுகைகளை வழங்கி, கிராமபுற ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புவார் என்பதால், இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அவர் வழிவிடப்போவதில்லை.

    டிஸ்கி:    
    ஆட்சியாளர்களை ஆதரித்து அரசியல் நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சரத்குமார், கிருஷ்ணசாமி, ஜாவஹிருல்லா என பெரும் கூட்டமே காத்துகொண்டிருக்கிறது. (உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதேனும் ஒரு நாளின் சட்டமன்ற நிகழ்வை ஜெயா டிவியில் பாருங்களேன்)


    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    கோத்தபயா ராஜபக்��ேவை அமெரிக்காவி���் வைத்து விசாரி��்க வேண்டும்

    - 0 comments


    தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக தமிழர்களை இலங்கை அரசு கொல்லவில்லை. மாறாக, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனவெறியுடன் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றும், பெண்களை மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்தும் இனவெறி படுகொலையை நடத்தியுள்ளனர் என்று திருச்சி சிவா எம்.பி இன்று ராஜ்யசபாவில் கடுமையாக சாடினார்.

    ராஜ்யசபாவில் இன்று பெரும் இழுபறிக்குப் பின்னர் அரை மனதாக இலங்கைப் பிரச்சினை குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாஜக, அதிமுக, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பேசினர்.

    திருச்சி சிவா பேசுகையில், தமிழர்கள் தனி நாடு கேட்டார்கள் என்பதற்காக அவர்களைக் கொல்லவில்லை இலங்கை. மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்தனர். கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் மீது துவேஷம் காரணமாக, தமிழ் நூல் நிலையத்தை தீவைத்து எரித்தனர். பெண்கள் மொத்தமாக மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழ் இளைஞர்களே இல்லாத நிலையை இலங்கை அரசு உருவாக்கி விட்டது.

    உள்நாட்டுப் போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை இனவெறி ஆட்சி.

    இலங்கைக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதியை அளித்தது இந்தியா. அந்த நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும்.

    அமெரிக்கப் பிரஜையாகவும் உள்ள கோத்தபயா ராஜபக்சேவை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க வேண்டும். அதேபோல முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் விசாரிக்க வேண்டும் என்றார் சிவா.

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    இலங்கையில் ZEE தமி���் தொலைக் காட்சி��்கு இராணுவம் திடீர்த் தடை!

    - 0 comments


    தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் Zee தமிழ் தொலைக்காட்சிக்கு இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் வடக்கு கிழக்கிலும் திடீர்த் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அலைவரிசையில் இலங்கையின் இறுதிப் போர் தொடர்பாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் ஆவணப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்ற நிலையிலேயே ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பில் செய்மதி ஒளிபரப்பை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவை Zee தமிழ் ஒளிபரப்பைத் தவிர்த்துக்கொண்டுள்ளன. அதேவேளையில் வடபகுதியில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொள்பவர்களுக்கு இராணுவம் இது தொடர்பில் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    ரத்தம் உறையும் இ���ங்கை தமிழினப் ப��ுகொலைக்கு நியாய���் கேட்டு நாடாளு��ன்றம் நோக்கிப் பேரணி

    - 0 comments


    இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் இளைஞர் - மாணவர்களை திரட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி 2011 ஆகஸ்ட் 26ல் டெல்லியில் நடைபெறுகிறது.

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சந்தோஷ்குமார் இந்தப்பேரணிக்கு தலைமை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்தப்பேரணியில் கலந்துகொள்கின்றனர்.

    இந்தப்பேரணியில் பங்கேற்க இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மற்றும் தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறனும் வழியனுப்பி வைத்தனர்.

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    கேணல் ராயுவின் 8��் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)

    - 0 comments


    கேணல் ராயு [குயிலன்]
    (அம்பலவாணர் நேமிநாதன்)
    ஏழாலை, யாழ்.

    வீரப்பிறப்பு: 30.05.1961

    வீரமரணம்: 25.08.2002

    தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு.

    முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர்.

    விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்.

    விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு.

    அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார்.

    கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.

    மாவீரர் மகுடம்: கேணல் ராயு


    தொடு வானம்: கேணல் ராயு




    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    இலங்கைத் தமிழர்��ளுக்கு காங்கிரஸ��� அரசு துரோகம்: கம்யூனிஸ்ட்

    - 0 comments


    இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலங்களவையில் இன்று கோரிக்கை விடுத்தது. மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    நெருக்கடியான தருணங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது. போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை. 2009 மே மாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மாபெரும் இனப்படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.ராஜா தெரிவித்தார்.

    இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தை ராஜா தொடங்கிவைத்துப் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திராகாந்தி இருந்தவரை இந்தியாவை உலகம் கவனித்தது. இப்போது யார் இந்தியாவை கண்டுகொள்கிறார்கள் என்றார் அவர்.

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    ஈழ பெண்களிடம் பா���ியல் வன்முறை தொ��ர்கிறது: சீமான்

    - 0 comments


    இலங்கையில் தமிழ்ப் பெண்களிடம் மர்ம மனிதர்கள் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.

    வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மர்ம மனிதரின் நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.

    அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

    மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

    இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
    இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபய மிரட்டியுள்ளார்.
    ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
    இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது.

    இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ்ப் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.

    இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.
    இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று சீமான் கூறினார்.

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    அன்னா ஹசாரே தொடங���கும் புதிய கட்ச��

    - 0 comments
    [Continue reading...]

    கைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்

    - 0 comments
    [Continue reading...]

    ஜோதிடம் பார்ப்ப��ரின் ஜாதகம் அமைப்பு;

    - 0 comments
    [Continue reading...]

    சவுக்கு வேண்டுக��ளை நிறைவேற்றுவோ���்

    - 0 comments
    [Continue reading...]

    !!! A 1 நல்ல நேரம் new !!!

    - 0 comments


    astrology,josiyam,ஜோசியம்,ஜோதிடம்,ராசிபலன்,சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி,நல்ல நேரம்,astrosuper

    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com



  • [Continue reading...]

    ஏர் செல் கம்பெனி���ால் பட்டபாடு!

    - 0 comments



                                                                                  சென்னையில் தி.நகரில் நின்று கொண்டிருக்கிறேன்.தம்பி ஒருவன் வர வேண்டும்.சரவணபவன் அருகில் இருப்பதாக சொல்லியிருந்தேன்.வருவதற்கு நேரமாகும் என்றுமுன்னால் உள்ள கோயிலுக்கு சென்று விட்டேன்.வெகு நேரம் என்னைப் பார்க்க  முடியாமல் அலைந்திருக்கிறான்.திரும்பி வந்தவுடன் சொன்னான்."அண்ணா ,முதலில் உங்களுக்கு ஒரு செல்போன் வாங்க வேண்டும்.அன்றே வாங்கியாகி விட்டது.அதன் பிறகு சுகமோ சுகம்.

                                                                                                      தகவல் தொடர்பு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லை.இப்போது ஏர்செல் போஸ்ட் பைடு வைத்திருக்கிறேன்.பழகிப்போய் விட்டது.காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஏழரை மணி இருக்கும் .ஒரு மெசேஜ் வந்தது.இது மாதிரி ஏராளம்.சிறுவன் இன்னொரு சிறுவனிடம்,"எங்கள் வீட்டு டி.வி. வரிவரியா தெரியுதுடா! மற்றவனின் பதில் "அதற்கு இப்போ என்ன பண்றது வாங்கும்போதே அன்ரூல்டு என்று கேட்டு வாங்கி இருக்கவேண்டும்." இப்போதைய சிறுவர்கள் அவ்வளவு விவரம் இல்லாமல் இல்லை.போகட்டும்.அந்த குறுஞ்செய்தியோடு என்னுடைய சந்தோசம் காணாமல் போய் விட்டது.


                                                                                                        அவசியமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும்.பார்த்தால் நெட் ஒர்க்கே காணோம்.இன்னொரு நம்பர் வைத்திருப்பதன் அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.நல்ல வேலை கைவசம் ஏர் டெல் இருக்கிறது.மகிழ்ச்சியுடன் தொடர்பு கொண்டால் பலிக்க வில்லை.அவருடையது ஏர் செல் நம்பர்.வேறு நம்பரும் இல்லை.என்னுடைய ஏர் டெல் நம்பரும் அவரிடம் இல்லை.இன்னொரு நண்பர் ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்கு சொல்ல வேண்டும்.இப்போ என்ன செய்றதுன்னே தெரியலை என்றார்.கணவன் மனைவி இருவருடையதும் ஏர் செல் .
                                                                                                          பக்கத்து ரூம்காரரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அவரும் இரண்டு கம்பெனி சிம்மை பயன்படுத்துகிறார்.எட்டிப் பார்த்த போது முகம் விழுந்து போய் கிடந்தது.நான் அதிகம் பகலில் செல்போன் உபயோகிப்பதில்லை.அது தர்மமும் அல்ல என்பது வேறு விஷயம்.ஆனால் அவர் அதையெல்லாம் பார்க்கமாட்டார்.அடிக்கடி போனிலேயே இருப்பார்.''என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.இரண்டு நெட் ஓர்க்கும் வேலை செய்யவில்லை.இன்னொரு கம்பெனிவீடியோகானாம்.



                                                                                                             வேலை பார்த்தார்களோ இல்லையோ அடிக்கடி ''டவர் வந்து விட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.நண்பர் ஒருவர் அம்மாவை பேருந்து நிலையத்தில் வந்து தனக்கு போன் செய்யச்சொல்லியிருந்தார்.அவரால் தொடர்பு கொள்ள முடியாது என்று இவரே போய் காத்திருந்து அழைத்து வந்தார்.அவருடைய வேலையையும் நாங்கள் செய்ய வேண்டிய நிலை.எனக்கும் எதிலும் அதிகம் ஒட்டவில்லை.அடிக்கடி செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

                                                                                                                 எப்போதும் செல்போனிலேயே இருக்கும் பையனை பார்த்து "நாங்க எல்லாம் செல்போன் வச்சிகிட்டா வாழ்ந்தோம்?" என்று ஒரு பெரிசு கேட்டது நினைவுக்கு வருகிறது.ஆனால் செல்போன் இல்லாமல் இன்று அணுவும் நகராது.எத்தனையோ மோசடிகள் இருக்கட்டும்,பணம் பிடுங்கட்டும்,அலைக்கழிப்பு இருக்கட்டும்.அது இல்லாமல் இன்று வாழ்க்கை இருக்க முடியாது.மதியம் ஒரு மணிக்கு "டவர் வந்து விட்டது" என்றார்கள் யாரோ! நானும் அப்புறம் தான் பார்த்தேன்.அப்பாடா! பலர் நிம்மதியாக சாப்பிடுவார்கள்.ஆனால் இது அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை.மீண்டும் வெறுப்பு.


                                                                                                                 சக நண்பர் ஒருவர் எனக்கு ஐடியா சொன்னார்.''சேலத்தில் ஏர் செல்லில் இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவர்தானே? அவரிடம் கேட்டுப் பாருங்களேன்! என்ன பிராப்ளம் என்று!" அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.''அவரும் ஏர் செல் நம்பர்தான் வைத்திருக்கிறார்"என்றேன் எரிச்சலுடன்! வேறொரு நண்பர் போன் செய்தார்.அவரிடம் கேட்டேன்,''ஏர் செல்லுக்கு என்ன பிரச்சினை?'' "அதுவா ? அது மலேசியக் கம்பெனி,ஸ்பெக்ட்ரம்  என்று ஏதேதோ ஆரம்பித்தார்.நான் அப்புறம் பேசுவதாக சொல்லி வைத்து விட்டேன்.இந்த நேரம் வரை டவர் கிடைக்க வில்லை.இன்றைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் சில!

    •   இரண்டு சிம் கொண்ட செல்போன் பயன்படுத்துங்கள்.(இப்போது நோக்கியாவிலும் இருக்கிறது)
    •    கணவனும் மனைவியும் வேறுவேறு கம்பெனி சிம்மை பயன்படுத்துங்கள்.
    •    இரண்டு சிம் பயன்படுத்தும் போது எந்தெந்த கம்பெனி கூட்டு என்று அறிந்து சிம்மை தேர்ந்தெடுங்கள்.(ஏர் செல்லும் ,வீடியோகானும்  ஒரே டவர்)


    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    அன்னா ஹசாரே- காத்திருக்கும் தலைவ��ிகள்.

    - 0 comments



                                      இந்தியாவுக்கு இது முக்கியமான தருணம்.சுதந்திரப்போராட்ட்த்திற்குப் பிறகுதேசம் எந்த பிரச்சினைக்காகவும் இத்தனை முக்கியத்துவம் பெற்றதில்லை.நாடு முழுக்கமக்களின் ஆதரவைப் பெற்றதில்லை.ஊழல் போல மக்களை ஆத்திரப்படுத்துவது எதுவுமில்லை.எனதுபல பதிவுகளில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.

                                      உண்மையோ,இல்லையோ ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஆட்சியை மக்கள் எப்போதும் விட்டுவைத்த்தில்லை.குறைந்தபட்சம் அப்போதைக்காவது அகற்றிவிடுகிறார்கள்.இதற்கு யாராவதுவருவார்கள் என்று காத்திருந்த்து போல பிடித்துக்கொண்டார்கள்.இந்தியாவில் எந்த ஒருபோராட்டமும் சந்திக்காத ஆதரவு இது.

                                      பத்திரிகைகளின் பங்கு அதிகம்.முந்தைய உண்ணாவிரத்த்தை அடுத்துஅன்னாவைப்பற்றி பத்திரிகைகள் மக்களிடம் சிறப்பான பிம்பத்தை கொண்டு சேர்த்தன.நாடுமுழுக்க ஆதரவு பெருகி நிற்கிறது.மத்திய அரசை பல்வேறு யோசனைகளுக்கு ஆளாக்கியிருக்கவேண்டும்.கைது செய்யப்பட்டவுடன் நீர்த்துப்போகும் என்பதுதான் இவ்வளவு நாளும் நடந்தவிஷயம்.ஆனால் இப்போராட்ட்த்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதுபோலாகிவிட்ட்து.

                                         எதிர்க்கட்சிகள்ஆதரவு தெரிவிப்பது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில கட்சிகளுக்கு கஷ்டமாகவேஇருக்கும்.கட்சிகளைப் பொருத்தவரை மக்கள் ஆதரவு என்பது வோட்டு தொடர்பான ஒன்று.ஆதரவைவாக்குகளாக மாற்றுவது பற்றித்தான் சிந்திப்பார்கள்.கட்சி சாராமல் தனித்து இவ்வளவுஆதரவைப் பெறுவது அவர்களுக்கும் கொஞ்சம் யோசனைதான்.

                                         ஏதோ ஒருலோக்பால் வரட்டும்.அப்புறம் திருத்திக்கொள்ளலாம்.எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோஒன்று இருப்பது நல்லது என்பவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் பலனளிக்கும் ஒன்று தேவைஎன்பதே முக்கியம் என்ற கருத்தை ஆதரிப்பவர்களே அதிகம்.அடுத்து நடக்கவிருப்பவைமுக்கியமான தருணங்கள்.

                                         உடல் நலம்மோசமாகும் சூழலில் உண்ணாவிரதம் திசை மாறக்கூடும்.பேச்சுவார்த்தை துவங்கவாய்ப்புண்டு.மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் முன்னேற்றமானபோக்குகள் தென்பட வாய்ப்பிருக்கும்.அன்னா ஹசாரே குழு கோரும் லோக்பாலைஏற்றுக்கொண்டால் இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடும்.இந்த கலக்கம்தான் மத்தியஅரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்.

                                        தேசம்முழுக்க மக்களின் ஆதரவு பெற்றுவிட்ட நிலையில் அடுத்தடுத்து கோரிக்கைகள் பாயும்வாய்ப்பு அதிகம்.தேர்தல் சீர்திருத்தம்,கருப்புப்பணம் போன்றவை அடுத்துகாத்திருக்கின்றன.எப்போதும் வெளியில் இருந்து ஒரு குழு அரசை ஆட்டிவைப்பதுநினைப்பதற்கே அரசாங்கத்துக்கு கவலை தரும் ஒன்றாக இருக்கும்.ஒரே வழிதான்இருக்கிறது.நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.



    http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger