Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Monday, 19 August 2013

போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் பிடியில் மேலும் 2 சிறுமிகள்

- 0 comments

போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் பிடியில் மேலும் 2 சிறுமிகள்: மீட்கப்பட்ட சிறுமி தகவல் Injection drug gang gain 2 girls recovery child information 

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

[Continue reading...]

Sunday, 28 July 2013

வேலை செய்யும் இடங்களில்பெண்களுக்கு செக்ஸ்தொல்லை கொடுக்கும் ஆண்கள்

- 0 comments
வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ்
தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய
சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான
விதிமுறைகளைக் கொண்ட
வரைவு மசோதாவை, மத்திய அரசின்
பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.
அதில், வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த
புகார் நிரூபிக்கப்பட்டால்
குற்றவாளி பணி நீக்கம் செய்வது,
பதவி உயர்வு மற்றும் ஊதிய
உயர்வை நிறுத்தி வைப்பது,
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான
இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள்
இடம் பெற்றுள்ளன.
அதேபோல் செக்ஸ்
தொல்லை என்று கொடுக்கப்பட்ட புகார்
பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால், புகார்
கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும்
பணி நீக்கம் உள்ளிட்ட மேற்கண்ட
அதே தண்டனைகளை வழங்கவும்
வரைவு மசோதாவில்
பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய
அம்சங்கள் வருமாறு-
இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக
அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில்,
தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில்
அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5
ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர்
ஒருவர் இடம் பெற வேண்டும்.
மாவட்ட அளவில் குழந்தைகள்
பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க
வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான
பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று,
விசாரணை கமிட்டிக்கு தேவையான
உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.
புகார் கொடுத்தவரையும், குற்றம்
சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர்
வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது.
விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும்
இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும்
ஆஜராக அனுமதி இல்லை.
மேற்கண்ட விதிமுறைகள் அதில் இடம்
பெற்றுள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த
புதிய சட்டம் அமலுக்கு வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[Continue reading...]

Wednesday, 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

Tuesday, 16 July 2013

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

Tuesday, 4 June 2013

அமெரிக்கா சுற்றுலா பயணி மணாலியில் கற்பழிப்பு

- 0 comments

அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா வந்திருந்தார். இன்று அதிகாலை அந்த பெண், அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகே பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அங்கு டிரக்கில் வந்த மூன்று பேர் அவருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.ஆனால், அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வண்டியை ஓட்டிச் சென்ற அவர்கள், அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக, அந்த பெண் கொடுத்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டெல்லியில் கடந்த ஆண்டு பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி 6பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றன.கடந்த மாதம் அயர்லாந்தில் இருந்து வந்திருந்த 21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் மத்திய பிரதேசத்திற்கு சைக்கிள் பயணம் வந்த சுவிட்சர்லாந்து பெண் கற்பழிக்கப்பட்டார். ஆக்ராவில்காமுகனின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இங்கிலாந்து பெண் ஒருவர், ஓட்டல் மாடியில் இருந்து குதித்தார்.இதுபோன்று பாலியல் தொந்தரவுகள்அதிகரித்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை 35 சதவீதம் குறைந்திருப்பதாக வர்த்தக மற்றும் தொழில் கூட்டுறவு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Saturday, 18 May 2013

பரமக்குடி சிறுமி பாலியல் பலாத்காரம்

- 0 comments

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோட்டை சேர்ந்தவர் பானு (வயது7)

(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரது வீட்டில் மாடியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. தர்மராஜாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (16), விக்கி என்ற எட்வர்டு கென்னடி (18) ஆகியோர் சித்தாள் வேலைபார்த்து வந்தனர்.வாலிபர்கள் 2 பேரும் சிறுமி பானுவை நைசாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறினாள்.அதனை தொடர்ந்து பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் கண்ணன், விக்கி என்ற எட்வர்டு கென்னடி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.பின்னர் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜேஸ் கண்ணன் மதுரை சிறையிலும், விக்கி என்ற எட்டுவர்டு கென்னடி வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

[Continue reading...]

Tuesday, 26 March 2013

7 வயது சிறுமியிடம் டாக்டர் பாலியல் தொந்தரவு

- 0 comments

மத்திய பிரதேச மாநிலம், ரெய்சன்மாவட்டத்தில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் கிளினிக்நடத்தி வருபவர் டாக்டர் வீரேந்திர ஜெயின்.தனது 7 வயது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் நோயாளியுடன் அவரது தாயார் இந்த கிளினிக்கிற்கு வந்து டாக்டரை சந்தித்தார். அந்த சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர் பாலியல் ரீதியாக சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.பயந்துபோன அந்த சிறுமி, வெளியே காத்திருந்த தாயாரிடம் ஓடி வந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். இதனையடுத்து, அவர் தனது கணவரை வரவழைத்து கொத்வாலி போலீஸ் நிலையத்தில் டாக்டர் வீரேந்திர ஜெயின் மீது புகார் அளித்தார்.இந்த புகாரை ஏற்றுக்கொள்ள போலீசார் மறுத்து விட்டனர். எனினும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தலையீட்டின் பேரில் டாக்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

[Continue reading...]

Tuesday, 26 February 2013

பாலியல் தொல்லை - 22 மாணவிகளிடம்

- 0 comments
மராட்டிய மாநிலம், பஷான் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், கையெழுத்து மேம்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுபவர் பிரதீப் கோட்டாஸ்கர் (50).


இவரிடம் பயிற்சி பெறும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொல்லை செய்ததாக அந்த பள்ளியின் ஆசிரியைகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் முன்னிலையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 22 மாணவிகள், பிரதீப் கோட்டாஸ்கர் தங்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணையில் அவர் தவறு செய்தது உறுதியானதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger