Saturday 18 May 2013

பரமக்குடி சிறுமி பாலியல் பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோட்டை சேர்ந்தவர் பானு (வயது7)

(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரது வீட்டில் மாடியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. தர்மராஜாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (16), விக்கி என்ற எட்வர்டு கென்னடி (18) ஆகியோர் சித்தாள் வேலைபார்த்து வந்தனர்.வாலிபர்கள் 2 பேரும் சிறுமி பானுவை நைசாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறினாள்.அதனை தொடர்ந்து பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் கண்ணன், விக்கி என்ற எட்வர்டு கென்னடி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.பின்னர் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜேஸ் கண்ணன் மதுரை சிறையிலும், விக்கி என்ற எட்டுவர்டு கென்னடி வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger