Monday 28 April 2014

த்ரிஷாவின் மாஸ்டர் பிளான்!

- 0 comments


சில வருடங்களுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்தார் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட த்ரிஷாவை அண்மைக்காலமாக எல்லா ஹீரோக்களுமே ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே, கன்னடப் படங்களில் நடிக்கும் அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் கவலைக்கிடமாகிவிட்டது. எனவே இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாரம் த்ரிஷா. அதற்காக புதிய டெக்னிக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

அதாவது, இளம் ஹீரோக்களை டார்கெட் வைத்து அவர்களை நெருங்கி வருகிறார் த்ரிஷா. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இளம் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டமாம். அதன்படி, அதர்வா, கௌதம் கார்த்திக், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரை டார்கெட் வைத்து, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வெளிப்படையாக புகழ ஆரம்பித்திருக்கிறார்.

இப்படி புகழ்வதால் என்ன லாபம்?

இருக்கிறது...இளம் ஹீரோக்களை புகழ்வதன் மூலம் அவர்களின் பார்வை தன் பக்கம் திரும்பும், அதை வைத்து அவர்களது படங்களில் கதாநாயகி வாய்ப்பை வாங்கிவிடலாம் என்பதே த்ரிஷாவின் திட்டம்.

யப்பா! என்னமா பிளான் போடுறாங்க பாருங்க!
[Continue reading...]

நயன்தாராவை புலம்ப விட்ட ஹன்சிகா!

- 0 comments


நயன்தாரா செகண்ட் இன்னிங்சில் என்ட்ரியானபோது அவர் மீது எந்த நடிகைகளுக்கும் பயம் இல்லை. இரண்டு படங்களில நடிப்பார். அதோடு காணாமல் போய் விடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் நடித்த ஆரம்பம், ராஜாராணி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததோடு, மீண்டும் சிம்பு, ஜெயம்ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட்டானபோது, அடுத்த நம்பர்ஒன் நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைளுக்கு ஏற்பட்டது.

இதில், நயன்தாராவின் வரவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகாதான். அவர் நடிக்க வேண்டிய ஓரிரு படங்கள் நயன் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதித்தன. இதனால் விவேகத்துடன் யோசித்த ஹன்சிகா, சிம்புவின் காதலை நிராகரித்த அதே வேகத்தில் சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை அபேஸ் பண்ணிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள மான்கராத்தே ஹிட்டடித்திருப்பதால் இறங்குமுகத்தில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தனது காதலரான சிம்புவை தன்னிடமிருந்து அபகரித்த நயன்தாராவுக்கு தகுந்த அட்டாக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, அவர் பேசிக்கொண்டிருக்கும் சில படங்களை தன் பக்கம் இழுக்கும் அதிரடி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம். இதில் சில வாய்ப்புகள் ஹன்சிகா பக்கம் திரும்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நயன்தாரா, மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தேவையில்லாமல் சிம்புவுடன் நடிக்க கமிட்டாகி, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

விஷாலை வியக்க வைத்த ஸ்ருதிஹாசன்!

- 0 comments


தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப்பிறகு தெலுங்கு, இந்தி என பிஸியாகி விட்ட அவர் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். முக்கோண ஆக்சன் படத்தில் ஒரு சிட்டி கேர்ளாக நடிக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, ஏழாம் அறிவு படத்தைப்போலவே கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்.

அதன்காரணமாகவே இந்த படத்தை அவர் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சின்சியராக இருந்தாராம் ஸ்ருதி. ஓய்வு நேரங்களில் செல்போனில் கேம் ஆடிக்கொண்டிருந்தாலும், ஷாட் ரெடி என்று உதவியாளர் வந்து சொன்னதும் உடனே, கேரவனை விட்டு வெளியே வந்து கேமரா முன்பு ஆஜராகி விடுவாராம். அதோடு, எத்தனை பெரிய ஷாட்டாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓ.கே செய்து கொடுத்தாராம் ஸ்ருதிஹாசன். இதனால், டைரக்டர் ஹரி திட்டமிட்டபடியே விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்ததாம். அந்த வகையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட பூஜை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.

இதையடுத்து, வழக்கம்போல் தனது பட கதாநாயகிகளின் திறமையை புகழ்ந்து தள்ளிக்கொண்டு திரியும் விஷால், தனது அபிமானிகளிடம், ஸ்ருதி இவ்வளவு கற்பூரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் டான் டான் என்று முடித்துக்கொடுக்கிறார். அவரது நடிப்பைப்பார்த்து ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம், அவரைப்போலவே நாமும் சொதப்பாமல் ஓ.கே பண்ணி கொடுக்க வேண்டுமே என்ற பயமும் மனதளவில் ஏற்பட்டது என்று கூறும் விஷால், ஸ்ருதிஹாசனின் படக்கூலி சற்று ஜாஸ்தியாக இருந்தாலும், அதற்கு அவர் ஒர்த்தபுளான ஆர்ட்டிஸ்டுதான் என்கிறார்.
[Continue reading...]

மீண்டும் பவர்ஸ்டாருடன் கூட்டணி அமைத்த சந்தானம்!

- 0 comments

லத்திகா என்ற படத்தில் நடித்திருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்காக தேடிச்சென்று புக் பண்ணினார் சந்தானம். அதோடு, அப்படத்தில் தனக்கு இணையான ரோலை கொடுத்து பவர்ஸ்டாரையும் ஒரு நடிகராக்கி விட்டார். விளைவு, அதன்பிறகு சந்தானத்தின் மார்க்கெட்டையே காலி பண்ணும் அளவுக்கு விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றார் பவர் ஸ்டார். இதனால் அதன்பிறகு அவருடன் நடித்தால் தனக்கு ஆபத்து என்று அவரை தனது படங்களில் நடிக்க வைப்பதை தவிர்த்து வந்தார் சந்தானம்.

இதற்கிடையே கோர்ட்டு, கேசு என்று அலைந்து கொண்டிருந்த பவர்ஸ்டார் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருவதால், தற்போது தான் ஹீரோவாகியுள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டாரை காமெடியனாக நடிக்க வைத்துள்ளார். கதைப்படி தான் ஹீரோ என்பதால் அதிகமான காமெடி காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால், காமெடி ஏரியாவுக்குள் பவரை இறக்கி விட்டுள்ளாராம் சந்தானம்.

ஆனால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழாவுக்கு 2 லாரிகளில் ஆட்களை கொண்டு இறக்கி விட்டு அரங்கத்தை திணற வைத்து விட்ட பவர்ஸ்டாரை, இந்த படத்துக்கு புக் பண்ணும்போதே, படம் ரிலீசாகும் வரை இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி மூச் விடக்கூடாது என்று ஆப் பண்ணி வைத்து விட்டாராம் சந்தானம். அதனால்தான் இப்போதுவரை தான் நடித்திருக்கும் விசயத்தை வெளியில் சொல்லி பில்டப் கொடுக்க முடியாமல் பல்லை கடித்துக்கெணர்டு இருக்கிறாராம் பவர்.

மேலும், இதே படத்தில் தேவயானியின் கணவரான சோலார் ஸ்டார் இராஜகுமாரனையும் காமெடி களத்தில் இறக்கி விட்டிருக்கிறார் சந்தானம். ஆக, பவர்ஸ்டார், சோலார் ஸ்டார் என்ற இரண்டு காமெடி புயல்கள் சந்தானத்துக்கு பக்கபலமாக நடித்திருக்கிறார்களாம்.
[Continue reading...]

ரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...!

- 0 comments


கோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி. இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் கைவிடப்பட்டது. மாறாக அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ் தேதியை(மே 9ம் தேதி) நெருங்கிவிட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்திற்கு ரஜினி, கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் ஆகிய மூவரில் ஒருவரது படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார். பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார் சொல்ல, ரஜினிக்கு அக்கதை மிகவும் பிடித்து போனதால் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி. இதற்கிடையே இப்படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். இதனை கில்டு சங்கத்திலும் ரவிக்குமார் முறையாக பதிவு செய்துள்ளார். ரஜினி-ரவிக்குமார் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று, இப்படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

லிங்கா பெயர், நடிகர் ரஜினிகாந்தின் பேரனும், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

பார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன்!

- 0 comments


வித்தகன் படத்திற்கு பிறகு படம் இயக்குவதை தள்ளி வைத்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் இந்த முறை நடிகராக களமிறங்கவில்லை. அதேசமயம், முதலில் இந்த படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இயக்கப்போகிறேன் என்று சொன்னவர், இப்போது ஆர்யா,விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி,நஸ்ரியா என பலரை நட்புக்காக களத்தில இறக்கி விட்டிருக்கிறார்.


அதோடு, சிம்ரனை முதன்முறையாக ஒரு பாடல் பின்னணி பாட வைத்த பார்த்திபன், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை நடனமாட கேட்டிருந்தார். அவரும் கண்டிப்பாக ஆடித்தருகிறேன் என்று சொன்னவர், இப்போது இந்தி படத்தில் தான் பிசியாக இருப்பதாக சொல்லி தனது இயலாமையை கூறுகிறாராம். அதனால், அந்த பாடலுக்கு யாரை நடனமாட வைக்கலாம் என்று யோசித்த பார்த்திபன், சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருதி, அவரை தனது வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலுக்கு தனுஷ் நடனமாட வைத்திருப்பது போன்று இப்போது பார்த்திபனும் அவரது வேல்யூ தெரிந்து நடனமாட வைக்கிறார். ஆக,பார்த்திபனின் கதையே இல்லாத படத்துக்கு ஒரு பெரிய கமர்சியல் கூட்டமே சேர்ந்து விட்டது. 
[Continue reading...]

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி!

- 0 comments


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் அறிமுகமானவர்தான் ஜோதிகா. அதையடுத்து விஜய்யுடன் நடித்த குஷி உள்ளிட்ட சில படங்களில் தொடர் வெற்றி அவரை பிரபல நடிகையாக்கியது. அதோடு, எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் அதை பிரித்து மேய்ந்து விடும் அளவுக்கு திறமையான நடிகையாகவும இருந்தார் ஜோதிகா. அதன்காரணமாக, மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தமைக்கு சிறந்த நடிகைக்கான அரசு விருதுகளையும் பெற்றார்.

ஆனால், நடிகர் சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு, எந்த படத்திலும் அவர் தலைகாட்டவில்லை. ஒரு விளம்பர படத்தில் மட்டுமே சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில், பசங்க பாண்டிராஜ், இது நம்ம ஆளு படத்தையடுத்து இயக்கும் ஒரு படத்தில் ஜோதிகா ரீ-என்ட்ரி ஆகிறாராம்.

பசங்க படத்தை போன்றே குழந்தைகள் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறாராம் பாண்டிராஜ். அந்த படத்தில் ஒரு பிரதான ரோலில் நடிப்பதற்கு ஜோதிகாதரப்பை அணுகி கதை சொன்னாராம். அது சூர்யா குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்து விட்டதாம். அதனால் மீண்டும் ஜோதிகா நடிப்பதற்கு சூர்யா குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம்.

இந்த சேதி பரவியதையடுத்து, மேலும் சில இயக்குனர்களும் ஜோதிகாவுக்கான வெயிட்டான கதாபாத்திரங்களை தயார் செய்யத் தொடங்கி விட்டனர். ஆனால், இப்போதைக்கு இந்த ஒரு படம்தான். இப்படத்திற்கு பிறகுதான் அடுத்து நடிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சூர்யாதரப்பு உறுதியாக அறிவித்து விட்டனர். 
[Continue reading...]

சொந்தக்கதையை படமெடுக்கும் கவர்ச்சி நடிகை ஷகீலா!

- 0 comments


தப்பு என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷகீலா. அதனால்தானோ என்னவோ அதையடுத்து அவர் தப்பு தப்பான கேரக்டர்களாகே செலக்ட் பண்ணி நடித்தார். லயம், மாமி, ஆஸ்டல், ராக்கிளிகள், டியர் சினேகா, பருவம் என காமக்கொடூர படங்களாக நடித்து மலையாள சினிமாவில் வீறு நடை போட்டு வந்தார் ஷகீலா. அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் அலைமோதியதால், ஒவ்வொரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வந்தன.

அந்த அளவுக்கு மலையாள இன்டஸ்ட்ரியையே கலக்கிக்கொண்டு வந்தார் ஷகீலா. ஆனால், ஒரு கட்டத்தில் அவரது உடம்பு பூதாகரமாக பெருத்து விட்டதையடுத்து அவரது கவர்ச்சிக்கு மவுசு குறைந்து போனது. அதனால், மீண்டும் தமிழுக்கே வந்து கிளுகிளுப்பான காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருகிறார் ஷகீலா. அந்த வகையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், குரு சிஷ்யன், ஆசாமி என பல படங்களில சமீபகாலமாக அவர் நடித்து வந்தார்.

இந்த நிலையில, தற்போது ஷகீலாவுக்கும் சொந்தமாக படம் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை தனது தாய்மொழியான தெலுங்கில் இயக்குகிறாராம்.

இதுபற்றி ஷகீலா கூறுகையில், படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த வாய்ப்புக்காக நானாக முயற்சி எடுப்பதற்கு முன்பே அதுவாக அமைந்து விட்டது. இப்படத்தில் துளியும் கிளாமர் இருக்காது. ஒரு பெண்ணை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இந்த சமுதாயத்தில் அவள் சந்திக்கிற பிரச்னைகள், போராட்டங்களைத்தான் படமாக்குகிறேன்.

மேலும், இந்த படத்தையடுத்து, எனது சொந்த கதையையும் படமாக்கப்போகிறேன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அப்படம் தயாராகிறது. அந்தக் கதையில் நானே நாயகியாக நடிப்பேனா இல்லை, வேறு நடிகையை நடிக்க வைத்து விட்டு நான் இயக்குனராக மட்டுமே இருப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் ஷகீலா.
[Continue reading...]

மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!

- 0 comments




பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு துருவங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அப்படி எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்த பிரபு-குஷ்பூ இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் தற்போது ஒரு இயக்குனர் இறங்கியிருக்கிறார். அவர் முதலில் கதையை பிரபுவிடம் சொல்லி இதில் உங்களுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூவிடம் பேசப்போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் நடித்தால் நானும் நடிக்கத்தயார். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்து இதுபற்றி குஷ்பூவிடம் பேசியபோது, கதையும், எனக்குரிய கேரக்டரும பிடித்திருக்கிறது. அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாராம். ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பிரபுவும், குஷ்பூவும் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.
[Continue reading...]

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால், கைவிட்டுப்போன படங்கள்!

- 0 comments


கதாநாயகி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவது காஜல் அகர்வால்தான். இவரது போட்டியாளர்களான மற்ற நடிகைகள் எல்லாம் லட்சங்களில் சம்பளம் வாங்கியபோது, காஜல்தான் முதன்முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கி மற்றவர்களுக்கும் கோடி ரூபாய் கனவை விதைத்தார். இத்தனைக்கும் துப்பாக்கி, ஜில்லா இரண்டு படங்கள் தவிர காஜல்அகர்வால் நடித்து எந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியடையவில்லை. ஆனாலும் படத்துக்குப் படம் தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேபோனார் காஜல் அகர்வால். கடைசியாக, ஒன்றரை கோடியாக இருந்த தன் சம்பளத்தை ஜில்லாவுக்குப் பிறகு இரண்டு கோடியாக உயர்த்தினார். அவரது சம்பள உயர்வை தெலுங்கில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் காஜல் கேட்கும் இரண்டு கோடி சம்பளத்தை தமிழில் தர யாரும் தயாராக இல்லை. நண்பேன்டா படத்துக்கு காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின், காஜலை நீக்கிவிட்டு நயன்தாராவை புக் பண்ணியதற்கும் கூட இந்த சம்பள உயர்வுதான் காரணமாம்.
[Continue reading...]

என் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை! லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால்!!

- 0 comments



நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால். 

ஆனால், யாராவது லட்சுமிமேனன் அந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் என்று சொன்னால், டென்சனாகி விடுகிறார்கள். அந்த படத்தில்தான் அவர் சிட்டி பெண்ணாக நடித்தார். அதனால் அதை கிளாமர் என்று சொல்ல முடியாது, சாதாரண பெண்களைப் போல்தான் இருந்தார் என்று சொல்லும் விஷால், என்னைப்பொறுத்தவரை லட்சுமிமேனன் சாதாரண நடிகையல்ல. ரொம்ப வித்தியாசமான நடிகை என்கிறார்.

அதாவது, இந்த படத்துக்காக தண்ணீருக்கு அடியில் நாங்கள் நடிக்க வேண்டிய காட்சியை 8 மணி நேரம் தண்ணீருக்குள் மூழ்கியபடி நடிக்க வேண்டும். நாங்கள் உள்பட கேமராமேன், டைரக்டர் என அனைவருமே உள்ளே இருந்தோம. அப்போது குளிரில் நடுங்கி விட்டார் லட்சுமிமேனன். அதுவும் முத்தக்காட்சியில் முதன்முதலாக நடிக்கிறார். இருப்பினும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அவரை தவிர வேறு எந்த நடிகைகளாக இருந்தாலும் இந்த மாதிரி தண்ணீருக்கு அடியில் முத்தக்காட்சி என்றால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அதோடு, இன்னொரு காட்சியிலும் அப்படித்தான். நான்கு நாட்களாக கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடித்தார். சில சமயங்களில் அவரை அறியாமல் அவரது உடம்பு குளிரினால் நடுங்கும். அப்போது அவரிடம் ரொம்ப கஷ்டமா இருக்கா என்று கேட்டால், அது ஒன்னுமில்லை சார். பரவாயில்ல டேக் போகலாம் என்று சொல்வார். அந்த வகையில் எனது கேரியரில் இந்த அளவுக்கு நடிப்புக்காக எந்த கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய நடிகையை நான் பார்த்ததில்லை என்கிறார் விஷால்.
[Continue reading...]

Friday 25 April 2014

கைவிட்டது அகரம் பவுண்டேசன் ... காப்பாற்றினார் அஜித்

- 0 comments

கைவிட்டது அகரம் பவுண்டேசன் ...
காப்பாற்றினார் அஜித்

அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்
தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார். . இரண்டு மகன்களும் நன்றாக படித்து வருகிறார்கள். ஒரு சமயத்தில் இளையமகன் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படியும்,அங்கு வேலை செய்துகொண்டே படிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
வேலைபார்த்துக்கொண்டே படிப்பதாக மகன் கூறிய உறுதியை நம்பி ஒருவழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் ஓவியர். ஆனால் அங்கு பகுதி நேர வேலை செய்ய கல்லுரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் இங்கிருந்தே படிப்பு செலவையும் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஓவியருக்கு ஏற்பட்டது. எல்லா கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ஓவியர். மகனுக்கு இது இறுதியாண்டு ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. பணம் கட்டவில்லை என்றால் கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம்.
வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் நடிகர் சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகரம் பவுண்டேஷன்லேர்ந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர். அதற்கு சிவக்குமார், ஞானவேலை கேட்டுபாரேன் என்று கூறினாராம் இதனையடுத்து ஞானவேலுவை ஓவியர் தொடர்பு கொண்டார். அபபோது அவரோ, அகரம் பவுண்டேஷன்லேர்ந்து உதவணும்னா, அந்த பையன் அநாதையா இருக்கணும். உங்க பையனுக்கு எங்க ரூல்ஸ்படி உதவ முடியாதே என்றார்.
மிகவும் மனம் வருந்திய ஓவியர், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது சில நபர்கள் அஜீத்தை தொடர்பு கொள்ள கூறினர். இதனையடுத்து நண்பர்களின் உதவியுடன் அஜீத்தை தொடர்பு கொண்ட ஓவியர் தன் நிலைமையை விவரித்துகூறினார். பின்னர் வீடு வந்து சேர்வதற்குள் அவருக்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. பையன் குறித்த முழு விபரங்களை கொடுத்துட்டு கவலைபடாமல் இருங்கள்.. உங்க பையனின் முழு படிப்பு செலவின் முழுதொகையும் கட்டிவிடலாம் என்று அஜீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித் மனம் யாருக்கு வரும்... - தினமணி

[Continue reading...]

நயன்தாராவை சாடும் அனாமிகா படக்குழுவினர்!

- 0 comments


இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. அந்த படத்தின் ரீமேக் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழிலும் உருவாகியுளளது. இந்த இரண்டு பதிப்பிலுமே நயன்தாராதான் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது படத்தின் இயக்குனர் மட்டுமே கலந்து கொண்டார். நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், நயன்தாரா திறமையான நடிகை. அவரது நடிப்பைப்பார்த்து அவர் கேட்டதைவிட அதிக சம்பளம் கொடுக்கலாமா என்றுகூட நான் யோசித்தேன் என்று அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, சமீபத்தில் அப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடந்தபோதும் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் அப்போதும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம். லீடு ரோலில் நடித்த ஒரு நடிகை இப்படி வேறு படங்களில் பிசியாக இருப்பதாக காரணம் சொல்லிக்கொண்டு விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதால், அப்படக்குழுவினர் நயன்தாராவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து, தான் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு படத்தை நயன்தாரா தவிர்க்கிறார் என்றால், அவர்களுக்குள் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது. இல்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்று சிலர் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இதுகுறித்து நயன்தாராவை தொடர்பு கொண்டு விசாரித்தவர்களிடம் அவர் மெளனத்தையே பதிலாக்கி விட்டாராம். 

ஆக, ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை...
[Continue reading...]

மேடை நாகரீகம் தெரியாமல் விஜய்யை அசிங்கமாக திட்டிய அரசியல்வாதி!

- 0 comments


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்காரணமாகவே மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அதனால் தன்னைத்தேடி வரும் அவர்களுடன் விஜய்யும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.


ஆனால், அந்த சந்திப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் அதை டீசன்டாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு பிரபலமில்லாத அரசியல்வாதி விஜய்யை கண்டபடி அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டி பேசியுள்ளார். அவரை மட்டுமின்றி ஒட்டு மொத்த நடிகர்களையே அருவருப்பான ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். 

அதேசமயம், அவர் யார்? எங்கு நடைபெற்ற கூட்டததில் இப்படி பேசினார் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஆனால், அவரது பேச்சு யு-டியுப்பில் வெளியானதையடுத்து சமூக வலைதள நேயர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் நின்று பேசிய மேடையில் உள்ள கட்சியின் கொடியை வைத்து அவர் ஒரு மதவாத கட்சியைச்சேர்ந்தவர் என்பது அறியப்பட்டுள்ளது.

மேடை நாகரீகமே தெரியாமல் அவர் பேசியுள்ள இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய் ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
[Continue reading...]

நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்

- 0 comments


நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தை பப்ளிசிட்டி செய்து வியாபாரம் செய்வதும், அதன் லாப நஷ்டமும் யுடிவியைச் சேர்ந்தது. எனவே நான் சிகப்பு மனிதன் படத்தை மார்க்கெட்டிங் செய்யும் வேலையில் யுடிவி இறங்கியபோது, அவர்களிடம் விஷால் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

அதாவது, பாரிவேந்தரின் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும் தனக்கும் ஒரு கமிட்மெண்ட் உள்ளதாகவும், அதனால் நான் சிகப்பு மனிதன் படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே படத்தை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்படி தமிழக தியேட்டர் ரைட்ஸை 10 கோடிக்கு விஷாலுக்குக் கொடுத்திருக்கிறது யுடிவி. விஷாலோ அதை 11 கோடிக்கு வேந்தர் மூவிஸுக்கு விற்றிருக்கிறார். 11 கோடிக்கு வாங்கிய வேந்தர் மூவிஸ் சில கோடிகள் லாபம் வைத்து தியேட்டர்காரர்களுக்கு பிரித்து விற்றிருக்கிறார்.

நெட் ரிசல்ட் என்ன? நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் தியேட்டர்காரர்களுக்கு சுமார் 25 சதவிகிதம் நஷ்டமாம்.
[Continue reading...]

தாமதமாக வந்து வாக்களித்த வடிவேலு

- 0 comments


நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்களித்த கை(மை)யோடு, அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் ஷேர் பண்ணி சீன் போட்டனர். வழக்கமாக தேர்தல் அன்று காலையிலேயே உற்சாகமாக வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிரிப்பு நடிகர் வடிவேலு. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை நேரத்திலேயே வந்துவிடுவார். வாக்களித்துவிட்டு, மீடியாக்களின் கேமரா முன்பு நின்று முழங்குவார். இந்த தேர்தலில் வடிவேலுவின் முழக்கம் கேட்கவில்லை. என்ன காரணம்?

விஜயகாந்த் வாக்களிப்பதும் வடிவேலு வாக்களிக்கும் அதே வாக்குச்சாவடியில்தான். எனவே, காலை நேரத்தில் வாக்களிக்க வந்தால் அங்கே திரண்டு நிற்கும் விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களினால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற நினைத்தாராம். ஏற்கனவே ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் நமக்கு இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பது வடிவேலுவின் அச்சம். எனவேதான், விஜயகாந்தின் தொண்டர்கள் கூட்டம், மீடியாக்கள் இல்லாத நேரமாகப் பார்த்து...அதாவது வாக்குப்பதிவு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்.
[Continue reading...]

ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்

- 0 comments



இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம். இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. அப்படிப்பட்ட என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இருப்பது ஆச்சர்யப்படுகிற விஷயம் இல்லை. என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் சிவகார்த்திகேயன்.

தன் அடுத்தப் படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் சூட்டி இருப்பதன் மூலம், சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. கோச்சடையான் படத்தில் நடிக்கவே விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் நடித்தேன், நடிப்பிலிருந்து ரிடையர்ட் ஆக விரும்புகிறேன் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருகிறார் ரஜினி. அவர் இதே மனநிலையில் இருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார். எனவே இப்போதே ரஜினி ரசிகர்களை டார்கெட் வைத்தால் பிற்காலத்தில் மொத்த பேரும் தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதுதான் சிவகார்த்திகேயன் போட்டு வைத்திருக்கும் கணக்காம்.

சிவகார்த்திகேயன் படிக்கும் காலங்களில் கணக்கில் புலியாய் இருந்திருப்பாரோ?
[Continue reading...]

Wednesday 23 April 2014

வெட்கத்தில் தேன்துளிகளை சிந்திய வண்ணத்து பூச்சி

- 0 comments

வேடிக்கையான நேரம்

வேடிக்கையான நேரம்

மனைவி: டேய்,
எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த
உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக
இருக்கா? நீயா?? நானா???
கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான்
தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல
வேலைக்கு போனா, இரவு தான் வர..
உனக்கு தான் உலகத்தை ரசிக்க
நேரமே இல்லையே….
கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள்
முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன
என்ன
பண்ணனும்னு தோணுதோ எல்லாம்
செய், நாளைக்கு இரவு நான் பதில்
சொல்றேன்..
(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி:
அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன்,
பூக்களை ரசித்தேன்,
கோவிலுக்கு போனேன், அம்மா,
அப்பா, நண்பர்களோடு பேசினேன்,
நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன்,
நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன்,
கவிதைகள் படித்தேன், கார்ட்டூன்
நெட்வொர்க் பாத்தேன்,
மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின்
அமைதியில் கரைந்தேன்,
இன்று மாலை பெய்த, மழையிலும்
நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால்
மொட்டை மாடியில்
பௌர்ணமி நிலவின் அழகையும்
ரசித்தேன், அனால் ஒன்னு தான்
பன்னல…. இந்தா உம்மா…. இதோ என்
செல்லத்தையும் முத்தமிடுவிடேன்…
எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த
மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார்
அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன்,
எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…
மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள்,
உலகத்தை பலமுறை சுற்றி, அதில்
உள்ள அணைத்து அழகான பூக்களில்
இருந்தும் தேனை சேகரித்து, என்
இதழ்களில் வந்து சிந்திவிட
வண்ணத்து பூச்சி போல, என்
தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த
ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன்
உன்னைவிட
நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில்
இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க
வேண்டும்
என்று வரைமுறையை கடவுள்
விதிக்கவில்லை, இல்லையெனில் நீ
முத்தமிட்ட நொடியில்
சென்றிருப்பேன் நரகத்திற்கு…
மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம்
தானடி எனக்கு…), உனக்கு இந்த
உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,
எனக்கு என்
உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட
மாதிரி இருந்தது….
இப்பொழுது சொல் யாருக்கு அதிக
மகிழ்ச்சி?????
(வெட்கத்தில் இன்னும்சில
தேன்துளிகளை சிந்தியது,
வண்ணத்து பூச்சி...)

[Continue reading...]

Tuesday 22 April 2014

பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!

- 0 comments


சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.

இதனால் தற்போது சிங்கிள் காமெடியனாக களத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூரி. அதனால் காமெடியனுடன் சீன் பை சீன் என்ட்ரி கொடுக்க நினைக்கும் ஹீரோக்கள் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். அதனால் ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் சூரி, படத்துக்குப்படம் சத்தமில்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், கருணாஸ், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க. இது காமெடியன்களின் காலம். அதனால் இந்த சந்தர்ப்பதில் நீங்களும் ஹீரோ வேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிடுறது நல்லது என்று சில டைரக்டர்கள் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஹீரோ என்றதும் சூரி மனதளவில் சபலப்பட்டு நின்று கொண்டிருக்க, அவரது அபிமானிகளோ, காமெடியனா நடிச்சா பெரிய எதிர்காலம் இருக்கு, ஹீரோவா நடிச்சா ஒருவேளை படம் அவுட்டான்னா அது அப்புறம் மதுரைக்கு வண்டியேறிட வேண்டியதான் என்று சொல்லி சூரியை யோசிக்க வைத்துவிட்டனர். இதனால் தன்னை ஹீரோவாக்க முயற்சித்தவர்களை, கொஞ்சம் அசந்தா என் பொழப்பையே கெடுத்து விட்டுறுவீங்க போலிருக்கே என்று துரத்தியடித்து விட்டார் சூரி.
[Continue reading...]

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்...! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

- 0 comments


சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயக்கிய இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான மான் கராத்தே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். "சமீபத்தில் திரைக்கு வந்துள்ள 'மான் கராத்தே' படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் குத்துச்சண்டையை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே 'மான் கராத்தே' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மான் கராத்தே' படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அம்மனுவில் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இம்மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
[Continue reading...]

சாராவுக்கு பிடித்த 10...!

- 0 comments


சைவம் படத்தின் ஹீரோயின் சிறுமி சாரா. தெய்வதிருமகள் படத்தில் சுட்டிக் குழந்தையாக நடித்தவர், சைவத்தில் துறுதுறு சிறுமி, சைவம் புரமோசனுக்கு வந்திருந்தவரிடம் நைசாக பேசி அவருக்கு பிடித்த 10 விஷங்களை தெரிந்து கொண்டோம்.

1. பிடித்த நடிகர் யார்?

பிரகாஷ்ராஜ் அங்கிள். அவரோட நடிக்க ஆசை

2. பிடித்த நடிகை யார்?

கரீனா கபுர். அவுங்க எவ்ளோ அழகு தெரியுமா?

3. பிடித்த கிப்ட் எது?

டெடி பியர். ஷாருக்கான் அங்கிள் வாங்கிக் கொடுத்தது.

4. பிடித்த வீடியோ கேம்?

ஐஸ் ஏஜ் கேம்

5. பெஸ்ட் பிரண்ட்?

அனுஷ்கா ஆன்ட்டி. அவுங்கள மாதிரி நான் உயரமா வளரணும்.

6. பிடித்த ஸ்போர்ட்ஸ்?

நீச்சல். கிரிக்கெட், புட்பால் பிடிக்காது.

7. பிடிச்ச பெட் அனிமல்?

நான் வளர்க்குற பப்பி (நாய்குட்டி)

8. ரொம்ப பிடிச்சது தெய்வதிருமகள் நிலாவா, சைவம் தமிழ் செல்வியா?

நிலாதான். அவளுக்குத்தான் யாருமே இல்ல

9. என்ன மாதிரி படங்கள் பிடிக்கும்?

இங்கிலீஷ் அனிமேஷன் படங்கள்.

10. சினிமால பிடிச்ச துறை எது?

டைரக்ஷன். நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்.
[Continue reading...]

அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தது! பூசணிக்காய் உடைத்தார் லிங்குசாமி!!

- 0 comments


சூர்யா- சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த அஞ்சான் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை படமாக்கிய பிறகு க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் படமானது. அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் இல்லை. சிறிய காயங்களோடு தப்பினார். அதனால் படப்பிடிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. அதன்காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்திய லிங்குசாமி, நேற்றோடு மொத்த படக்காட்சிகளையும் முடித்து விட்ட நிலையில் பூசணிக்காய் உடைத்து விட்டாராம்.

இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அந்த பாடலில் மரியம் சகாரியா, சித்ரங்கதா சிங் போன்ற கவர்ச்சி புயல்கள் இடம்பெறுகிறார்களாம். அந்த பாடல் காட்சி ஜூன் மாதம் படமாக்கப்படுகிறது. இந்த பாடலுக்குத்தான் இந்தி நடிகை கரீனா கபூரை கேட்டு, அவர் நடனமாட மறுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
[Continue reading...]

நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி!

- 0 comments
மோடி-ரஜினிக்கு இடையே பரஸ்பர நட்பு உண்டு என்றாலும், அதை அவர்கள் இருவரும் இதுவரை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை. ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் சந்தித்துக்கொண்டது பரபரப்புக்குள்ளானது. அதுவும் தேர்தல் நேரம் என்பதால், தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளை அது அதிர்ச்சியடையச் செய்தது.

இந்தநிலையில், மோடிக்கும், தனக்குமிடையிலான நட்பு தொடர நினைக்கும் ரஜினி, மகள் செளந்தர்யா இயக்கத்தில் தான் நடித்துள்ள கோச்சடையான் படம் மே 9-ந்தேதி உலகமெங்கும் ரிலீசாக இருப்பதால், முன்னதாக, அதை சில முக்கியஸ்தர்களுக்கு பிரிமியர் ஷோ போட்டு காட்ட திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நபராக மோடிதான் இடம்பெற்றுள்ளாராம். அவருக்காக மே 8-ந்தேதி அன்று மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ காண்பிக்கயிருக்கிறார்கள்.

இதையடுத்து, தனது படத்தை பார்த்து ரசிக்க வரவேண்டும் என்று மோடிக்கு ரஜினி அழைப்பு விடுத்ததும், உங்களது படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன் என்று உடனடியாக செய்தி அனுப்பி விட்டாராம் மோடி. இருப்பினும் அவரை முறையாக அழைக்க வேண்டும் என்பதற்காக விரைவில் குஜராத் செல்லவிருக்கிறாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா.
[Continue reading...]

நடிகைகளுடன் என் மகன் அடித்துள்ள லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன்! - கார்த்திக்

- 0 comments



கடல் படத்தை அடுத்து கெளதமின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் என்னமோ ஏதோ. தெலுங்கில் வெளியான ஆலா மொதலாயிந்தி என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம். இதில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல் என்ற இரண்டு கொளுகொளு கவர்ச்சி பொம்மைகள் நடித்திருக்கிறார்கள். கதைப்படி, இவர்கள் இருவரையும் மாறி மாறி காதலிப்பதுதான் கெளதமிற்கு வேலையாம். ஆனால், எதற்காக அவர்களை அப்படி காதலித்தார் என்பதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்களாம். ஆக, அப்பா நவரசநாயகன் கார்த்திக் ரொமான்டிக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்ததை விட பலமடங்கு எகிறி அடித்து சிக்சர் போட்டிருக்கிறாராம் கெளதம்.

படத்தைப்பார்த்த நவரசநாயகன், இதுவரை தமிழ் சினிமாவில் ரொமான்டிக் காட்சிகளில் என் இடத்தை பிடிக்க ஆளில்லை என்றுதான் இறுமாப்புடன் இருந்தேன். ஆனால், அதை இப்போது என் மகன் கெளதம் பிடித்து விட்டான் என்று சொல்லி புழகாங்கிதமடைந்தாராம் கார்த்திக். அதோடு, நான் நடிகைகளுடன் அடித்தெல்லாம் ஒரு லூட்டியா... என் மகன் கெளதம் அடித்த லூட்டிக்கு முன்பு நான் தோற்று விட்டேன் என்றாராம் நவரசம்.
[Continue reading...]

இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை! ஜெய்

- 0 comments


இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா, முஸ்லீம் மதத்துக்கு மாறியதை அடுத்து, கோடம்பாக்கத்தில் மேலும் சில நடிகர்களும் அந்த மதத்தில் மாறயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல் ஏதும் இல்லை. அதனால் அவை அனைத்தும் வதந்திகளாகி விட்டன. இந்தநிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்ததில் இருந்து அப்படத்தில் அறிமுகமான முஸ்லீம் நடிகை நஸ்ரியாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியிருநத நடிகர் ஜெய்யும் இப்போது முஸ்லீம் மதத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

அதையடுத்து, ஜெய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் இசையமைப்பளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன். பிறப்பால் இந்துதான். ஆனால், முஸ்லீம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை பின்பற்றினேன். அவ்வளவுதான். மற்றபடி நான் முஸ்லீமாகி விட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று மறுக்கிறார் ஜெய்.

ஆனால், இஸ்லாம் மதத்தில மாறுவதற்கு அதிக ஆர்வமாக இருக்கும் ஜெய்க்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். அதனால்தான் மனசுக்குள் அந்த மார்க்கம் பிடித்திருந்தும், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் அவர் திணறிக்கொண்டிருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.
[Continue reading...]

ரஜினியின் பாட்ஷா கதையை தழுவி உருவாகும் அஞ்சான்!

- 0 comments


ரஜினி நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் பாட்ஷா குறிப்பிடத்தக்கது. வசூலில் மட்டுமல்லாது அவரது கேரியரிலும் முக்கியமான படமும் கூட. சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தைதான் தான் நடித்ததில் பிடித்த பட வரிசையில் முதலிடம் கொடுத்து வருகிறார் ரஜினி. மேலும், அதையடுத்து ஆக்சன் கதைக்களம் என்று யோசிக்கும் அத்தனை டைரக்டர்களுக்குமே ரஜினியின் பாட்ஷாதான் முன்னுதாரணமாக கருத்தில் கொண்டு ஸ்கிரிப்ட் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில், சூர்யாவைக்கொணடு அஞ்சான் படத்தை இயக்கி வரும் லிங்குசாமியும் பாட்ஷா படத்தை தழுவிதான் அஞ்சான் படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே பாட்ஷாவைப்போன்று மும்பையில் கதைக்களத்தை வைத்திருக்கிறாராம். அப்படத்தில் நண்பனுக்காக ரஜினி பழி வாங்குவது போன்று இப்படத்திலும் தனது நண்பனுக்காக சூர்யா பழி வாங்குவதுதான் கதையாம்.

அதோடு, பாட்ஷாவில் மறைந்த ரகுவரன் வில்லனாக நடித்த வேடத்தில் இப்போது இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் நடிக்க, சூர்யாவின் உயிர் நண்பராக வித்யு ஜம்வால் நடிக்கிறார். இவர்தான் ப்பாக்கியில் விஜய்யுடன மோதிய வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

கேமராமேனுடன் சண்டை போட்ட கேரளத்து நடிகை வீணா நாயர்!

- 0 comments


ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படத்தையடுத்து வட சென்னையில உள்ள பாக்சர்களைப்பற்றிய கதையில் உருவாகியுள்ள இன்னொரு படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். புதுமுகங்கள் மனோஜ்- வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர் அறிமுகமாகியுள்ளார். கேரளத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்த இவரை, இந்த மாதிரியான ஒரு நடிகைதான் இந்த படத்துக்கு வேண்டும் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். படத்திலும் அவருக்கு சாப்ட்வேட் இன்ஜினியர் வேடம்தானாம். அதனால் தான் அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற நடிப்பையே யதார்த்தமாக கொடுத்துள்ளாராம் வீணா நாயர்.

இதுபற்றி அவர் கூறுகையில், எனது நிஜ பெயர் பார்வதி. ஏற்கனவே கேரளாவில் இருந்து வந்த பார்வதி மேனன் என்ற நடிகை தமிழில் நடித்துக்கொண்டிருப்பதால், என்னை வீணா நாயராக்கி விட்டனர். கேரளாவில் இருந்து அசின், நயன்தாரா, அமலாபால், லட்சுமிமேனன் என ஏராளமான நடிகைகள் தமிழ் சினிமாவில் சைன் பண்ணியிருப்பதால், எனக்கும் ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தின் மூலம் என்ட்ரியாகியுள்ளேன்.

மேலும், இந்த படத்தில் நடித்தபோது கேமராமேன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணி விட்டார். அப்படி திரும்பி நில், இப்படி லுக் கொடு என்று ஒரு வழி பண்ணி விட்டார். அதனால் படப்பிடிப்பு முடியுற நேரத்தில் எனக்கும், அவருக்குமிடையே ஒரு நாள் சண்டையாகி விட்டது. அந்த அளவுக்கு என்னை கோபப்படுத்தி விட்டார் என்று கூறும் வீணா நாயர், ஆனால் இப்போது அவருடன் நான் சமரசமாகி விட்டேன். அதோடு, அவர் மூலமாக நடிப்பில் இருக்கிற நெழிவு சுழிவுகளையும் கற்று விட்டேன் என்கிறார் வீணா நாயர்.
[Continue reading...]

தேர்தல் பிரசாரத்தில் குதித்த ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதி

- 0 comments

பாலிவுட்டின் பிரபல காதல் தம்பதி ஸ்ரீதேவி-போனி கபூர் ஜோடி. பல்வேறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து இவர்களும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் குதித்து உள்ளனர். உத்திர பிரதேசத்தின் பதேக்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தள கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஸ்ரீதேவியும், அவரது கணவர் போனி கபூரும் பிரசாரம் செய்து வருகின்றனர். முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ள ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக அவரது ரசிகர் கூட்டம் பெருமளவில் திரண்டு வருகிறது. இதனால் ஸ்ரீதேவி பிரசாரத்திற்கு செல்லும் சாலைகள் எல்லாவற்றிலும் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி ஆதரவு அளித்து வரும் அமர் சிங், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர் ஆவார்.
[Continue reading...]

சென்னை நீச்சல்குளத்தில் பிகினியில் குளித்த ஷெர்லின் சோப்ரா

- 0 comments



தோஷ்தி படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. டைம்பாஸ், ஜவானி திவானி, உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக காமசூத்ரா 3டி இந்திப் படத்தில் நடித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். ஷெர்லின் தற்போது பேட் கேர்ள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் உலக புகழ் பெற்ற செலீனா என்ற படத்தின் தழுவல் ஆகும். விரைவில் படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ஷெர்லின் சோப்ரா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் அவர் மீடியாக்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்றபோது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நேரத்தில் அவர் நீச்சல்குளத்தில் பிகினி டிரஸ்சில் குளியல் போட்டுக் கொண்டிருந்தார். அதை படம் எடுத்துக் கொள்ளலாமா என்று மீடியாக்கள் கேட்டபோது கொஞ்சமும் தயக்கம் இன்றி போஸ் கொடுத்தார். பின்னர் உடை மாற்றி வந்து மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததோடு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களோடு நின்று போட்டா எடுத்து மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்தார்.
[Continue reading...]

Monday 21 April 2014

முத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்!

- 0 comments



தமிழில் தாம்தூம் உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ரிவால்வார் ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் கங்கனா நடித்துள்ள முத்தக்காட்சி தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக். முத்தக்காட்சி இப்போ சர்வசாதரணம் தான் என்றாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல். இந்த முத்தக்காட்சியில் நடித்தபோது ஹீரோ வீர்தாசின் உதட்டை கடித்து கங்கனா ரத்தகாயமாக்கியது தான் அந்த சிறப்பு.

சில நாட்களுக்கு முன்பு மும்பை ஸ்டூடியோ ஒன்றில் இந்த முத்தக்காட்சியை எடுத்தார்கள். ஹீரோ வீர்தாசுக்கு முத்தக் காட்சி புதுசு. அதனால் தயக்கத்துடன் நடித்தார். இதனால் பல டேக்குகள் போனது. எரிச்சலுற்ற கங்கனா, ஒரு டேக்கில் வீர்தாசின் உதட்டை இழுத்து வைத்து கடித்துவிட, வீர்தாஸ் உதட்டில் ரத்தம் கசிந்தது. கங்கனா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு வீர்தாசுக்கு பயிற்சி கொடுத்து கங்கனாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த ரத்தமுத்த காட்சியை மேக்கிங் வீடியோவில வெளியிட்டு படத்துக்கு பரபரப்பு பப்ளிசிட்டியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
[Continue reading...]

இந்தியில் நடிக்க விரும்பாத அனுஷ்கா

- 0 comments


சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே, எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது தான், 'ஜக்குதாதா என்ற கன்னட படத்தில், முதன் முதலாக நடிக்கிறார். இதுபற்றி, அவர் கூறுகையில், 'நான் பிறந்தது கர்நாடகத்தில் உள்ள, மங்களூர் தான் என்றபோதும், இதுவரை கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு அமையாதது, மனதளவில் வருத்தமாக இருந்தது. இப்போது, அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷமாக உள்ளது என்றார். 'அப்படியென்றால், அடுத்து இந்தி சினிமா பிரவேசம்தானா? என்று அனுஷ்காவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதே, எனக்கு திருப்தியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என, எப்போதும் ஆசைப்பட்டது இல்லை என்கிறார்.
[Continue reading...]

மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது!

- 0 comments


தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை இந்தியில் த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக்கினர். ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்குவதா? என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதில் நடித்த வித்யாபாலனையும் சில அமைப்புகள் விமர்சித்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில்க் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு அவரது கேரியரில் அது முக்கியமான படமானது. அதையடுத்து, அப்படத்தை சிலம்பாட்டம் சனாகானின் நடிப்பில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கினர்.

இந்த நிலையில், தற்போது பிரபல இந்தி நடிகையான மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளதாம்.

மேலும், மனீஷா கொய்ராலா சினிமாவில் நடிகையானது முதல், அவர் 2010ல் சாம்ராட் தஹால் என்ற தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டது.பின்னர் இரண்டே வருங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தது. அதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா, அதை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பது வரையிலான முக்கிய அம்சங்கள் அப்படத்தில் இடம்பெறுகிறதாம். இப்படத்திலும் வித்யாபாலன்தான் நடிப்பார் என்று செய்திகள் பரவியபோதும், இன்னும அது உறுதிப்படுத்தப்படவில்லை.
[Continue reading...]

கோடை காலத்தில் சூடேற்றும் இலியானா!

- 0 comments


பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டுகளிலும் இப்போது இலியானாதான் கவர்ச்சிவுட். வருண் தவானுடன் லிக் லாக் கிஸ்சில் தொடங்கி தனக்கு வருண் தவான் மாதிரி குணங்கள் கொண்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று பரபரப்பை கிளப்புவது வரை இலியானாதான் இப்போது நியூஸ் பாயிண்ட். இப்போது அடுத்த அதிரடி.

ஆண்களுக்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு கோடைக்காலத்துக்கேற்ற உடை என்ற பகுதியில் இலியானா கொடுத்திருக்கும் டூ பீஸ் போஸ்கள்தான் இப்போது நெட்டுகளில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

இந்த போஸ்களுக்காக இலியானா பெரும் தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். தேரா ஹீரோ படத்திலும் பிகினி டிரஸ்சில் கேட்வாக் போட்டிருப்பதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ்படமான நண்பனில் இடுப்பை மட்டும் வெட்டி வெட்டி ஆட்டியவர் இப்போது துட்டுக்காக உரிச்ச கோழியாகவும் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.
[Continue reading...]

கோச்சடையான் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்: ரஜினி ஓப்பன் டாக்

- 0 comments




ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சன் டெக்னாலஜியில் உருவாகி உள்ள முதல் படம். இந்தப் படம் தெலுங்கில் விக்ரம் சிம்பா என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு. நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா, படத்தின் இயக்குனரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ஆகியோரும் சென்றனர்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:
இரண்டறை வருடங்களுக்கு முன்பு ராணா படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது திடீர்னு உடம்பு சரியில்லாம போனதால டாக்டர்கள் நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் உடம்பு சரியாகி வந்த பிறகு லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னிடம் வந்து கோச்சடையான் கதையை சொன்னார். அதை என் மகளே இயக்குவதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடமாக சவுந்தர்யா சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை 3டியில் பத்து நிமிடங்கள் பார்த்தேன் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது படம். ஒரு ரசிகனா அனிமேஷன் படம் என்பதையே மறந்து ரசித்து பார்த்தேன். பொதுவாக உயிரோடு இல்லாதவங்களைத்தான் அனிமேஷன் படமாக எடுப்பார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் கதையும், விறுவிறுப்பும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது. 
எனக்கு சினிமா டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. அதை தெரிந்தவர் கமல்தான். எந்திரன், கோச்சடையான் படங்கள் கமல் நடிக்க வேண்டியது. டெக்னாலஜி தெரியாத நான் நடிக்க நேர்ந்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு.
இவ்வாறு ரஜினி பேசினார்.
[Continue reading...]

Wednesday 16 April 2014

ஒரே பாட்டில் லிப் லாக் முத்த மழை: ஜெய் ஆகாஷின் காதல் விளையாட்டு!

- 0 comments




அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய் ஆகாஷ். அதற்குபிறகு அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இதனால், தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு படம்கூட தேறவில்லை. இப்போது, காதலுக்கு கண்ணில்லை என்ற படத்தை இயக்கி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் சிவப்பு மனிதன் படத்தில் விஷால் லட்சுமிமேனனுக்கு கொடுத்த ஒரே ஒரு லிப் லாக் முத்தக்காட்சிக்கே நாடே அதகளப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஒரே பாடல் காட்சியில் ஹீரோயின் அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோருக்கு காட்சிக்கு காட்சி லிப் லாக் முத்த மழையாக பொழிகிறார். அதுவும் காருக்குள்ளேயே ஒரு பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். பார்த்தாலே முகம் சுழிக்க வைக்கிற மாதிரி மூவ்மெண்ட்சுகளை வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று டிரைலரில் சொல்கிறார்கள். இரண்டு நிமிட டிரைலரில் நான்கு லிப் லாக் முத்த காட்சிகள் இருக்கிறது. மற்றபடி பெண்களை போட்டு அடிஅடியென்று அடிக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தேறவேண்டிய நேரத்தில் இதுபோன்ற குறுக்குவழியை ஜெய்ஆகாஷ் ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
[Continue reading...]

பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்-சந்தானம்!

- 0 comments


கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, தனது சார்பில் இரண்டு லாரிகளில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார் பவர்ஸ்டார் சீனிவாசன். அதனால் அந்த விழா நடந்த அரங்கமே நிரம்பி வழிந்தது. விழாவில், பவர்ஸ்டாரைப் பற்றி யாராவது வாய் திறந்தாலே கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தார் சீனிவாசன்.

அவரையடுத்து, மான்கராத்தே படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்கள் என்ற பெயரில் பெரும்படையை அடியாட்கள் ரேஞ்சுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார். இதனால் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களெல்லாம் எங்கே அமர்வது என்றே தெரியாமல் அலைமோதிக்கொண்டு திரிந்தார்கள். கூடவே மீடியாவினருக்கும் பெரும் தொல்லை கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இப்போது சந்தானமும் அந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார். தான் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஆடியோ விழாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தேவி தியேட்டரில் நடத்தியவர், ஒரு பெரும் கும்பலையே கொண்டு வந்து இறக்கி விட்டார். ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தியேட்டருக்குள் செய்த தள்ளுமுள்ளுவில் சில விஐபிக்களே உள்ளே வர முடியாமல் தடுமாறிப்போய் நின்றனர். சிலர் கீழே தள்ளியும் விடப்பட்டனர்.

இந்த செய்தி கோடம்பாக்கத்தை அச்சுறுத்தியுள்ளது. இதையடுத்து, தற்போது யாராவது நடிகர்கள், தங்கள் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ள சினிமா விஐபிக்களை அழைக்க சென்றாலே, ஆளை விடு சாமி என்று பயந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
[Continue reading...]

பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்: சந்தானம் சொல்கிறார்

- 0 comments


சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மற்றவர்கள் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் விழாக்களுக்கோ, புரமோஷனுக்கோ வராத சந்தானம் தன் படம் என்பதால் மீடியாக்களை கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். "நான் பணத்துக்காக நடித்ததை விட நட்புக்காக நடித்ததுதான் அதிகம்" என்ற புதிய தகவலையும் கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஹீரோவாகவே நடிக்க ஆசைப்பட்டிருந்தால் அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது அப்போதே நடித்திருப்பேன். பயந்துதான் நடிக்கவில்லை. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் ஹீரோவாக நடிக்கும் துணிச்சலை கொடுத்தது. நான் ஹீரோவாயிட்டா காமெடியன்களுக்கு பஞ்சம் வந்திடாது. வேற ஒருத்தர் வந்து அசரடிப்பார். இப்பவே புதுசா நிறைய பேர் வந்து கலக்குறாங்க.

மற்ற படங்களோட புரமோஷனுக்கு வர்றதில்லைன்னு மைக் கிடைக்கிறவங்கதான் மேடைக்காக சொல்றாங்க. நான் நடிச்ச படத்தோட தயாரிப்பாளரோ, இயக்குனரோ சொல்லியிருக்காங்களா, ஏன்னா அவுங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் பணத்துக்காக நடிச்சதை விட நட்புக்காக நடிச்சதுதான் அதிகம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு ஹீரோவத்தான் தொடர்ந்து நடிப்பேன்னு நான் எங்கேயும் சொன்னதில்லை. மீண்டும் காமெடியனாகவும் நடிப்பேன்.

இவ்வாறு சந்தானம் கூறியுள்ளார்.
[Continue reading...]

மனித மாமிசம் தின்ற மிருக ' சகோதரர்கள் ; பாகிஸ்தானில் பிணங்களை தேடி அலைந்தனர்

- 0 comments



கராச்சி: சுற்றும், முற்றும் இருந்த சுடுகாட்டிற்கு சென்று பிணங்களை தோண்டி எடுத்தும், சிலரை கொலை செய்தும் மனித மாமிசம் தின்ற 2 மிருக சகோதரர்களை பாக்., போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பக்கார் மாவட்டம், இங்குள்ள தர்யாகான் என்ற கிராமம். இங்கு ஒருவர் வீட்டில் பிண வாடை மூக்கை துளைத்தது. இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசில் புகார் செய்யவே இந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தியது. வீட்டில் முகம்மது ஆரீப் அலி (35), முகம்மது பர்மன் அலி ( 30) ஆகிய இருவர் இருந்தனர். வீட்டின் ஒரு மறைவு அலமாரியில் 3 வயது சிறுவன் தலை இருந்தது. இதனை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.


100 பேர் உடல்கள் தின்றனராம் ! இந்த விசாரணையில் " இதுவரை நாங்கள் 100 பேர் உடல்களை தின்றுள்ளோம். அக்கம் பக்கம் உள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி அதன் உடல் பாகங்களை தின்போம். என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். 


இது குறித்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி அமீர் அப்துல்லா, கூறுகையில் போலீசுக்கு தகவல் கிடைத்த உடன் அந்த வீட்டில் சென்று ரெய்டு நடத்தினோம். இங்கு சில உடல் பாகங்கள், தலை, கால், கைகள் இருந்தன. முதலில் ஆரீப் அலியை கைது செய்தோம், தொடர்ந்து சகோதரரை கைது செய்தோம். அருகில் உள்ள சுடு காட்டில் சென்ற பார்த்த போது பல குழிகள் தோண்டப்பட்டது தெரியவந்தது. இந்த இருவரும் ஏற்கனவே கடந்த 2011ல் பெண் உடலை தின்ற குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை அநுபவித்துள்ளனர். என்றார்.


[Continue reading...]

பெங்களூர் பஸ்சில் தீ; அசாம் ரயில் ஏரியில் மூழ்கியது : பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா?

- 0 comments



புதுடில்லி : பெங்களூரு பஸ்சில் தீ விபத்து, அசாமில் பயணிகள் ரயில் ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளானது என ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள விபத்துக்கள் பஸ் பயணம், ரயில் பயணம் என எதிலும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது. பெங்களூரு விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அசாம் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பெங்களூரு பஸ்சில் தீ :


கர்நாடகாவின் தாவன்கிரி பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த தனியார் சொகுசு ஏசி பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதில் 6 பயணிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பஸ்சில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடிய டிரைவர் தலைமறைவாகி உள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் 3வது பஸ் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஏசி பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். அதற்கு முன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு சென்ற வால்வோ பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். 

ஏரியில் மூழ்கிய ரயில் :


அசாமின் மொரிகான் மாவட்டத்தில் அஜூரி ஸ்டேஷனுக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் அருகில் இருந்த ஏரிக்குள் மூழ்கியது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் 3 பெட்டிகள் ஏரிக்குள் மூழ்கியது. இதில் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏரிக்குள் மூழ்கிய 3 பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து பற்றி விபரங்கள் அறிந்து கொள்வதற்காக திமாபூர், லம்டிங் மற்றும் கவுகாத்தியில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயமணிகளுக்கு பாதுகாப்பில்லையா? :


ஒரே நாளில் பஸ்சிலும், ரயிலிலும் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. ஏசி பஸ்களில் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதும், ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. இருப்பினும், இத்தகைய விபத்துக்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ரயில்வே நிர்வாகமோ, சாலை போக்குவரத்து கழக நிர்வாகமும் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுத்தபாடில்லை. பாதுகாப்பில்லாத, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அபாயகரமாக பயணத்தையே மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். எத்தனை விபத்துக்கள் ஏற்பட்டாலும், எத்தனை உயிர்கள் பலியானாலும் போக்குவரத்து நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவரிடமும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 

[Continue reading...]

Monday 14 April 2014

குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி? சிவகார்த்திகேயன்

- 0 comments


ஹாட்ரிக் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார், சிவகார்த்திகேயன். அவரின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, ஆராதனா என, பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பெயரை, நடிகர் தனுஷ் வைத்ததாக கூறப்பட்டது. 

ஆனால், இதுகுறித்து சிவ கார்த்திகேயன் கூறுகையில், என் மனைவி மற்றும் என் பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துக்களை திருடி, ஆராதனா என, நானே பெயர் வைத்து விட்டேன். எப்பவுமே, புதிதாக யோசித்து பழக்கப்பட்ட நான், இந்த விஷயத்தில் மட்டும், எழுத்துக்களை திருடி பெயர் வைத்து விட்டேன் என்கிறார். 
[Continue reading...]

ஜூனியர் குஷ்புவா நான்? சந்தோஷத்தில் ஹன்சிகா

- 0 comments


சினிமா உலகத்தைச் சேர்ந்த பலரும் ஹன்சிகாவை, ஜூனியர் குஷ்பு என்கின்றனர். இதை, ஹன்சிகாவின் காதுபடவே சொல்ல, அதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போகிறார். ஆனால், இதுகுறித்து, குஷ்புவின் கணவர், சுந்தர்.சி கூறுகையில், ஹன்சிகாவை, சின்ன குஷ்பு என்று சொல்வதை, என்னால் ஏற்க முடியவில்லை. அதே சமயம், சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வருவது, சின்சியராக நடிப்பது போன்ற விஷயங்களில், குஷ்புவை ஒத்துப் போகிறார் என்கிறார். 

ஆனால், இதை அப்படியே ஹன்சிகாவிடம் திருப்பி விட்டால், குஷ்பு மேடம் சாயலில், நான் இருப்பதால், சிலர் என்னை, அப்படி அழைக்கின்றனர். ஒரு பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிடுவதால், அது, எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால், நான், குஷ்பு போன்று சிறந்த நடிகை இல்லை. என் முன்னோடியான அவரை பின்பற்றுகிறேன். அதுதான் உண்மை என்கிறார் ஹன்சிகா. 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger