Monday 15 August 2011

மொழிப்போர் தொடங��கியது!

- 0 comments


க – 16 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்தது. ஆட்சி மற்றும் அரசுப் பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவற்றில் இருந்து விலகி, கட்சிப்பணிக்குத் திரும்பவேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்தத் திட்டத்தின் பெயர் காமராஜர் திட்டம் (K Plan). அதன்படி நாற்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சிப்பணிக்குச் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பதவி விலகினார். அந்தப் பதவிக்கு பக்தவத்சலம் வந்தார். காமராஜரின் ராஜினாமாவுக்குப் பரிசாக அகில [...]

http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    தோழர்

    - 0 comments


    அத்தியாயம் 39 1848-49 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தது பிரிட்டனில் மட்டும்தான். மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் இது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. சாசன இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். ஹார்னே, ஜோன்ஸ் ஆகிய இருவரின் தலைமையில் சாசன இயக்கத்தின் ஒரு பகுதி தனியே இயங்கிக்கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் லீகின் உறுப்பினர்கள். மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தப் புதிய புரட்சிகர சாசன இயக்கத்தை ஆதரித்தனர். புதிய சாசன இயக்கத் தலைவர்களுடன் நட்பு உருவானது. கம்யூனிஸ்ட் [...]

    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    ஜெயலலிதா கைது பட���மும்-சசிகலாவின் வலிப்பு நாடகமும���..!

    - 0 comments



    13-08-2011

    என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

    மீண்டும் காப்பி பேஸ்ட்டா என்று அயர்ச்சியடையாதீர்கள்..! இன்றைய இணையத்தள வரலாற்றில் எவையெல்லாம் அவசியம் பதிந்து வைக்கப்பட வேண்டுமோ அவைகள் இன்னமும் சரிவரச் செய்யப்படவில்லை என்றே கருதுகிறேன்.

    ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்ட தேதியை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் துழாவியபோது பெரும் ஏமாற்றமே கிடைத்தது..! தமிழில் 'ஜெயலலிதா கைது', 'கைது செய்யப்பட்டார்' என்றெல்லாம்  வேறு விதமாகவெல்லாம் தட்டச்சு செய்தும் கூகிளாண்டார் உண்மைத் தேதியை கண்ணில் காட்டவில்லை.

    ஆனால் ஆங்கிலத்தில் 'Jayalalitha Arrested' என்று தட்டச்சு செய்தவுடன் வந்து கொட்டியது தகவல்கள்...! ஆங்கில பத்திரிகைககள்கூட பல தகவல்களை இணையத்தில் சேகரித்து வைத்திருக்கும்போது தமிழ்ப் பத்திரிகைகள் ஏன் இப்படி கஞ்சத்தனம் செய்கின்றன என்று தெரியவில்லை..!

    நல்லவேளையாக சென்ற 4 இதழ்களுக்கு முன்பாக ஜூனியர்விகடனில் ஜெயலலிதா கைது பற்றிய பழைய செய்தியை, மீண்டும் பதிவு செய்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். வாழ்க விகடனார்கள்..!

    இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்காகவும் கூடுதலாக சில தகவல்களைச் சொல்வதற்காகவுமே இந்தப் பதிவு..!

    இனி ஜூனியர்விகடன்

    தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்​பட்ட முதல் - முன்னாள் முதல்வர் இவர்தான்!

    தான் கைது ஆவதைத் தடுத்து நிறுத்த, ஏழு விதமான முன் ஜாமீன் மனுக்களை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்​தார். அவை நிராகரிக்கப்பட்ட மறு நாள், 1996 டிசம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு, போயஸ் தோட்டத்தில் அவரைக் கைது செய்ய போலீஸ் நுழைந்தது. டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் எட்டு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அது.

    அங்கே பி.ஹெச்.பாண்டியன் இருந்தார். கைது செய்வதற்கான சம்மன் அவரிடம் போலீஸாரால் தரப்பட்டது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி-க்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்படுகிறார் என்பதை அறிந்தவுடன் பி.ஹெச்.பாண்டியன், போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ''முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறோம்... அதற்குள் கைது செய்வதா?'' என்று அவர் எதிர்த்ததை, போலீஸ் ஏற்கவில்லை. காலை 9.05-க்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

    போயஸ் தோட்ட வாசலில் ஏராளமான நிருபர்கள் அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு. ''அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இது!'' என்று நிருபர்களிடம் ஜெயலலிதா சொன்னபோது, அவர் கண்களில் நீர் திரையிட்டது. அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்​பட்டார்.

    போலீஸ் வண்டியான டயோட்டா வேனில், காலை 9.10 மணிக்கு கமிஷனர் ஆபீஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு - உளவுப் பிரிவு டெபுடி கமிஷனர் அறையில் அமரவைக்கப்பட்டார். பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, மணி 11.05. அவரை டிசம்பர் 21-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் என்கிற அளவில் சுலோசனா சம்பத் மட்டுமே தென்பட்டார். ஜெயலலிதா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது நேரம்... காலை 11.45.

    சிறைச்சாலை வாசலில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெருவாரியாகக் குழுமி இருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெயலலிதா உணர்ச்சிவயப்பட்டு, ''தி.மு.க. ஆட்சியின் இந்த அராஜகத்தைப்பற்றி மக்களிடம் போய் விளக்கிச் சொல்லுங்கள்...'' என்று பேசினார்.

    ஆங்காங்கே தாங்கள் பார்த்த காட்சிகளை இதோ நிருபர்கள் தருகிறார்கள்...

    ஜெயலலிதாவைக் கைது செய்யப் போவது எந்த போலீஸ், எந்த வழக்கில் என்பது பற்றி ஒரு போட்டியே இருந்தது. சி.பி.ஐ. 'நாங்கள்தான் கைது செய்யப் போகிறோம்' என்று சொன்னது. கடைசியில் மாநிலக் குற்றப் புலனாய்வு போலீஸ் கைது செய்தது. கைது செய்தவர் - இதன் டி.ஐ.ஜி-யான ராதாகிருஷ்ணன். ஒரு விசேஷம் என்னவென்றால், இதே ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு வழக்கில் கலைஞரையும் கைது செய்தவர்!

    ஜெயலலிதாவின் தலைமுடி மிகவும் நரைத்து இருந்தது. காபி கலரில், பூப்போட்ட புடவையும் அதே கலர் கோட்டும் அணிந்து இருந்தார். போலீஸ் தன்னை மறுநாள் கைது செய்யப் போகும் தகவல் வெள்ளி இரவு 11 மணிக்கே ஜெயலலிதாவுக்குத் தெரியும். காலையில் 5 மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராகக் காத்திருந்தார். அதிகாரிகள் வரும்வரையில் பூஜை செய்து இருக்கிறார். 'பூஜை முடியட்டும்' என்று போலீஸார் சிறிது நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் அவரைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர். எந்த வழக்கில் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவர், 'பத்து நிமிடங்கள் பொறுங்கள்' என்று உள்ளே சென்று, தான் அணிந்திருந்த வைரக் கம்மல் உட்பட நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வந்தார். வரும்போது வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாராம்.

    ஜெயலலிதாவை போலீஸ் வேனில் ஏற்றியபோது, சமையல்காரி ராஜம்மாள் கதறி அழுதார். ராஜம்மாளை போயஸ் தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்தவர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்!

    ஜெயலலிதா போலீஸ் வண்டியில் ஏறிய​போது, தோட்டத்தில் இருந்த அத்தனை நாய்களும் பயங்கரமாகக் கத்தித் தீர்த்தன!

    போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்​தவுடன், ஜெயலலிதா சுதாரித்துக்​கொண்டு​விட்டார். புகைப்படக்காரர்களைப் பார்த்து முகத்தில் புன்னகை தவழவிட்டார். போலீஸ் டி.எஸ்.பி-யான சென்ராய பெருமாள் விசாரணை நடத்தினார்.

    போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்து ஜெயலலிதா அழைத்து வரப்பட்டபோது, நிருபர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வர - ஒரே கூச்சல், குழப்பம். ஒரு தனியார் டி.வி-யின் பெண் நிருபர் தடுமாறிக் கீழே விழ, 'தடதட'வென மற்ற நிருபர்களும் சரிந்து விழுந்தனர். அதைப் பார்த்த ஜெயலலிதா பதறிப்போய், அந்தப் பெண் நிருபரைத் தூக்கிவிட்டு, 'என்ன? அடி எதுவும் பட்டதா?' என்று டென்ஷனுடன் விசாரித்துவிட்டு நகர்ந்தார்.

    ஜெயலலிதா கைது படலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வி.ஐ.பி. மரியாதை கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்கள் - சன் டிவி-க்காரர்கள்!
    நீதிபதி வீட்டில்...

    மிகச் சரியாக 11.05-க்குக் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள 'டவர் பிளாக்' முன்பு ஜெயலலிதாவைக் கொண்டு வந்து இறக்கினார்கள் போலீஸார். எல்லோரும் இறங்கிய பின் இரண்டு மூன்று பெண் போலீஸ் புடைசூழ வேனைவிட்டு இறங்கினார் ஜெயலலிதா.

    ஐந்தாறு நபர்களை மட்டும் ஜெயலலிதா உடன் செல்ல அனுமதித்தனர்.

    கொஞ்ச நேரத்தில் கறுப்பு கவுன் சகிதம் பி.ஹெச்.பாண்டியன் வர, அவரை நீதிபதி வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். அவர் பின்னாலேயே சஃபாரியில் வந்த ஜீனசேனன், ''என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? ரூல்ஸ் தெரியாதவன்கிட்ட உங்க வேலையைக் காட்டுங்க!'' என்று டென்ஷனுடன் கத்த... அவரையும் உள்ளே அனுப்பியது போலீஸ்.

    நீதிபதி ராமமூர்த்தி முன்பு, ஜெயலலிதா சிலையாக நின்று இருந்தார். நீதிபதி சோபாவில் அமர்ந்திருந்தார். பி.ஹெச்.பாண்டியன்தான் வாதிட்டார். ஜெயலலிதா அவரிடம் சில பாயின்ட்டுகளை எடுத்துத் தந்தார். ''டி.வி. வாங்கியது முறையாக நடந்த ஒன்று. கேபினெட் கூட்ட முடிவுதான் அது. இந்தக் கைது, அரசியல் நோக்கம் உடையது!'' என்றார் பாண்டியன். ''அரசியல் பற்றி இங்கே பேச வேண்டாம். வழக்கு பற்றி பேசலாம்...'' என்றார் நீதிபதி. ஜெயலலிதா, 'ஊழல் எதுவும் நடக்கவில்லை' என்று விளக்கினார். 'ஜெயிலில் தனக்குத் தகுந்த பாதுகாப்பு வேண்டும்' என்றார் ஜெயலலிதா. 'அதற்கு ஏற்பாடு செய்யப்படும்' என்றார் நீதிபதி!

    ஏறத்தாழ 35 நிமிடங்கள் கழிந்த பின், எட்டாவது மாடியில் உள்ள நீதிபதி ராமமூர்த்​தியின் வீட்டில் இருந்து லிஃப்ட் மூலம் ஜெயலலிதாவைக் கீழே இறக்கிக் கொண்டு வந்து, போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.

    கிராமங்களுக்கு 45,000 கலர் டி.வி. வாங்கியதில் எட்டரைக் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளார் (இது பற்றி ஜூ.வி. 14.8.96 இதழில் முன்பே செய்தி வந்துள்ளது).

    இந்த டி.வி-க்கள் முறையாக வாங்கப்படவில்லை​யாம். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் ஆட்சேபனை தெரிவித்திருந்தும், முதல்வராக இருந்த ஜெயலலிதா வலுக்கட்டாயமாக வாங்க உத்தரவு போட்டார் என்று குற்றச்சாட்டு.

    டெய்ல் பீஸ்...

    ஜெயலலிதாவைக் கைது செய்வது பற்றி தமிழக அரசு முதலில் எந்த முடிவுக்கும் வரவில்லை. கைது திடீரென்று நடந்தது.

    மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோரைத் திரும்பத் திரும்பத் தாக்கி ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உடனே கைது செய்யக் காரணமாயிற்று என்கிறார்கள். இந்தக் கைது படலத்துக்குப் பிறகு போயஸ் கார்டனில் இரவுவரை ரெய்டும் நடந்தது.

    - நமது நிருபர்கள்

    சசிகலாவுக்கு வலிப்பு!      11.12.1996

    ஜெ.ஜெ. டி.வி. மூலம் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்த அவரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, ரத்த அழுத்தமும் வலிப்பும் வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சசிகலா. இதன் பிறகு, புதியதொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட, கடந்த 3-ம் தேதியன்று ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கோர்ட்டுக்கும் கொண்டுவரப்பட்டார்.

    ஆனால், சசிகலாவின் உடல்நலக் கோளாறை, 'ஒரு புரியாத புதிர்' என்றே வர்ணிக்கிறார்கள் டாக்டர்களும் மற்ற மருத்துவ ஊழியர்களும்!

    அரசு பொது மருத்துவமனையில் உள்ள 'இன்டென்ஸிவ் கேர்' யூனிட்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இருந்த இந்த அறையில் சசிகலாவின் படுக்கை தனியாகவே இருந்தது. சசிகலாவுக்கு அருகில் பெண் வார்டன்கள் நான்கு பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர், வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள்! இவர்களுக்கிடையே சசிகலாவின் உறவினர்கள் ஏராளமான பேர் மருத்துவமனையில் வலம் வந்தபடி இருந்தனர். பெரும்பாலானோர் கைகளில் செல்​போன்!

    சசிகலாவுக்காகவே ஐந்து ஹவுஸ் சர்ஜன்கள் தயாராக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சசிகலாவுக்குப் பரிசோதனை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஓரளவு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அதற்கான மருந்தைக் கொடுத்தவுடன் சசிகலா குணமாகி​விட்டார். ஆனால், அதன் பிறகு உணவு அருந்த மறுப்பதும், உட்காராமல் பிடிவாதம் செய்வதுமாக இருந்துள்ளார்.

    அதனால் வேறு வழி இன்றி அவருக்கு குளு​கோஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அவ்வப்​போது சசிகலாவுக்குக் கை - கால்கள் இழுத்தபடி இருக்க... அதற்கான காரணத்தைத் தேடினார்கள்.

    முதலில் ரத்தப் பரிசோதனைகள். அதில் எதுவும் பிடிபட​வில்லை என்று தெரிந்ததும், 'மூளையில் ஏதாவது பிரச்னை இருந்தால்தான், இப்படி வரும்' என்று நினைத்து, இ.இ.ஜி பரி​சோதனை செய்யப்பட்டது. அதிலும், 'எந்தக் கோளாறும் இல்லை' என்று தெரியவந்தது.

    சி.டி. ஸ்கேன் மூலம் 'மூளையில் ரத்தக் கட்டி இருக்குமா...?' என்றும் சோதனை செய்ய... 'அப்படி எந்தக் கட்டியும் இல்லை' எனத் தெரிந்தது. மனநல ரீதியாக உடல் பாதித்து இருந்தால், அதையும் கண்டறிய முடியும். ஆனால், அந்தச் சோதனை செய்யப் பொது மருத்துவமனையில் வசதி இல்லை. இதனால் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, எம்.ஆர்.ஐ. சோதனை செய்து பார்த்தனர். பிறகு, 'உடலில் ஏதாவது ரசாயன மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ..?' என்று 'Knee Hammer' என்ற பரிசோதனையையும் செய்தனர். பிறகு இதயம், லிவர், கிட்னியைப் பரிசோதனை செய்ய, எல்லாமே நன்றாகவே இருந்துள்ளன!

    இப்படி எல்லாமே சரியாக இருக்க, சசிகலாவுக்கு வலிப்பு வந்தது எப்படி என்று டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். மற்றொரு சோதனைதான் ஹைலைட். நோயாளியின் கால் பாதத்தில் 'ரிஸீமீமீ பிணீனீனீமீக்ஷீ' என்ற கருவியைக் கொண்டு இழுக்கும்போது, காலின் பெருவிரல் விறைத்து நீட்டிக்கொண்டால், நோயாளிக்கு மூளையின் பாதிப்பால் வலிப்பு நோய் வந்து இருக்கிறது என்று அர்த்தமாம். ஆனால், இ.இ..ஜி. மூலம் மூளையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெளிவான பிறகு, இந்தச் சோதனையின்போது மட்டும் சசிகலாவின் கால் பெருவிரலில் விறைப்பு ஏற்பட்டது கண்டு டாக்டர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

    'ஏன் இப்படி இருக்கிறது? முரண்பட்ட வலிப்பு நோயாக இருக்கிறதே என்று டாக்டர்கள் மத்தியில் பேச்சு! இருந்தாலும், 'ஹார்லிக்ஸ் வேண்டுமா..? போர்ன்விட்டா வேண்டுமா..?' என்று சசிகலாவுக்கு கொடுத்த உபசரணைகள், ஜெயலலிதாவின் ஆட்சிதான் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது!

    சென்னை மனநல மருத்துவமனை டாக்டர்கள் பாஷ்யம் உட்பட நான்கு பேர் வந்து சசிகலாவை பார்த்தனர் அப்போது சசிகலா தனக்கு 12 வயதிலும் பிறகு 18 மாதங்​களுக்கு முன்பும் இதே போன்று வலிப்பு வந்ததாகக் கூறியுள்ளார். பிறகு உயர் மட்ட கமிட்டி முடிவின்படி, கடந்த 5-ம் தேதி மாலை 4 மணிக்கு மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார் சசிகலா.

    - கண்பத்

    நன்றி : ஜூனியர்விகடன்

    இனி நான்..

    ஜெயலலிதா கைதினைவிடவும் சசிகலாவின் கைது விஷயமும், அவர் மருத்துவமனையில் நோயாளி போல் டிராமா போட்டு தப்பித்ததுதாம்தான் அன்றைய பத்திரிகையுலகில் ஹாட் டாபிக்..!

    சசிகலா மீது முதலில் அன்னியச் செலாவணி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவரை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினார்கள் அதிகாரிகள்.

    இந்த நோட்டீஸை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்வரைக்கும் சென்றார் சசிகலா. ஆனால் பலனில்லை. நேரில்  ஆஜராகத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தது சுப்ரீம் கோர்ட். ஒரு நாள் ஆஜராவதற்காக சாஸ்திரி பவனுக்குள் காலடி எடுத்து வைத்தார் சசிகலா. அவரோடு தடி, தடியான எருமை மாடு மாதிரியான வாட்ட சாட்டமான அடியாட்களும் வந்திருந்தார்கள். இவர்களுக்கு கேப்டன் தினகரன், சுதாகரன், பாஸ்கரன்களின் தங்கை கணவரான ரிசர்வ் வங்கி பாஸ்கரன்..!

    இவர்களது முக்கியப் பணி சசிகலாவை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், சசிகலாவைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வேண்டுமென்றே சுற்றி சுற்றி நடந்தபடியே ஹாலுக்குள் வந்தார்கள். அவர்களை மீறி புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களைத் தடுக்கும்பொருட்டு வேண்டுமென்றே அவர்கள் மீது விழுந்து எழுந்தார்கள். பின்னர் தங்களது இரண்டு கைகளை விரித்து மறைத்துக் கொண்டார்கள். தங்களது பூட்ஸ் கால்களால் வேண்டுமென்றே புகைப்படக்காரர்களை உதைத்தார்கள். மிதித்தார்கள். இவர்களது இந்தக் கொடூரத்தையும் தாண்டித்தான் அன்றைய தினம் பத்திரிகையாளர்கள் சசிகலாவை புகைப்படம் எடுக்க முடிந்தது..!

    அப்போது நான் வேலை பார்த்த தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகம் சாஸ்திரி பவன் அருகிலேயே இருந்ததாலும், அப்போது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்ததால், ஒரு ஆர்வக் கோளாறில் இதையெல்லாம் பார்க்கப் போய்தான் சசிகலா அண்ட் கோ- எந்த அளவுக்குக் கொடூரமானவர்கள் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

    சசிகலா தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாட்கள் அங்கு வந்தார் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்புதான் அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் உடனேயே மயக்கம் வருவதைப் போல் விழுந்துவிட ஸ்ட்ரெச்சரில் அலுங்காமல், குலுங்காமல் அவரை கொண்டு சென்றவிதத்தையும், செத்த பொணம் போல் அவர் படுத்திருந்து ஆக்ட்டிங் கொடுத்ததையும் பார்த்து அப்போதைய பத்திரிகையுலகம் நடிப்பில் சாவித்திரியை மிஞ்சிவிட்டார் சசிகலா என்றே எழுதினார்கள்.. இது உண்மையும்கூட..!




    http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • [Continue reading...]

    ஆபாச படம் பார்த்���தாக கூறி 2 சிறுமிகள் மீது தாக்குத���்

    - 0 comments


    இன்டர்நெட் மையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகளை மட்டக்களப்பு மாவட்டம் கட்டங்குடி என்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியைத் தாக்கியவர்கள் அனைவருமே ஆண்கள்.

    கட்டங்குடி பகுதியில் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் பெருமளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மத அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 2 டீன் ஏஜ் வயதுப் பெண்களை சிலர் சரமரியாக அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில், இந்த இரு சிறுமியரும் ஆபாசப் படம் பார்த்ததாக அடித்தவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த 2 பெண்கள் தவறு செய்ததால், தண்டிக்கப்பட்டனர் என அலுவலக மைக்கில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஆவேசமடைந்த அப்பகுதியினரும், இளம்பெண்களை அடிக்க ஆரம்பித்தனர். இதற்கு 2 சிறுமிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த, அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தவறு செய்ததாக அடித்து, உதைக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டனர்.

    ஆனால் தாங்கள் அதுபோல படம் எதுவும் பார்க்கவில்லை என்றும் பொய்யான புகாரின் பேரில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த இரு சிறுமிகளும் கூறியுள்ளனர். மேலும் இன்டர்நெட் மையத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஆபாசப் படம் பார்த்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






    http://short-news.blogspot.com




  • http://short-news.blogspot.com


  • [Continue reading...]

    மங்காத்தா ரிலீஸ�� தியதியை வெளியிட்டார் வெங்கட் பி���பு

    - 0 comments


    அஜீத்தின் பொன்விழா படமான மங்காத்தா வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

    அஜீத், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர்.

    இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரஜினியின் எந்திரன் படத்துக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஆடியோ சிடி மங்காத்தாதான் என்று விற்பனையாளர்கள் பாராட்டும் அளவுக்கு பரபரப்பான விற்பனையில் உள்ளது இந்த சிடிக்கள்.

    சமீபத்தில் மங்காத்தா பட வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "மங்காத்தா படத்தில் அஜீத் கெட்டவனாக நடித்துள்ளார். இந்தக் கதையில் மொத்தம் 5 கேரக்டர்கள். அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப ரொம்ப கெட்டவர்.

    எனது படங்களின் கதை கிரிக்கெட்டோடு தொடர்புடையதாகவே இருக்கும். சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களைச் சொல்லி இருக்கிறேன்.

    அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார்.

    ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையான வேடத்தில் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இது அஜீத்தின் பொன்விழா படம். அஜீத்துக்குதான் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிந்தும் அர்ஜூன் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்," என்றார்.

    மங்காத்தாவை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியிடுகிறது.






    http://short-news.blogspot.com




  • http://short-news.blogspot.com


  • [Continue reading...]

    மாணவியை வலுக்கட��டாயமாக கெடுத்தா���் கல்லூரி தலைவர��- மாணவர்

    - 0 comments


    நாகர்கோவில் நர்சிங் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கல்லூரித் தலைவர் பலாத்காரம் செய்ததாக அக்கல்லூரியின் மாணவர் கூறியுள்ளார்.

    நாகர்கோவிலில் பிரபலமான பகுதியில் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு முதலாமாண்டு படித்து வரும் மாணவி அவசர கால ஹெப்-லைனுக்கு போன் செய்தார். அதில் கல்லூரியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்த தகவலை அடுத்து, குழந்தைகள் கடத்தல் மற்றும் சித்ரவதை தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர்.

    முதலில் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அந்த மாணவிக்கும், ஒரு மாணவருக்கும் இடையேயான காதலை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர். மற்ற மாணவ, மாணவிகள் வேண்டுகோளுக்கு இணங்கி, நேற்று காலையில் இருவரையும் கல்லூரியை விட்டு வெளியேற்றினோம்.

    மாணவியின் உறவினர்களை வரசொல்லி இருக்கிறோம். அதற்குள் போன் செய்து விட்டாள் என்றனர். இதை கேட்ட போலீசார் மாணவிகளிடம் விசாரித்தனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தினரே 2, 3 மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரித்தனர்.

    அப்போதுதான் கல்லூரி சேர்மன் தன்னை பலத்காரம் செய்துவிட்ட தகவலை கூறி அவர் அழுதார். மேலும் சில மாணவிகளை விசாரிக்க அவர்களும் தங்கள் தோழிக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் இதை மறுத்தனர். நிலை வேறு விதமாக சென்றதால் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உடனடியாக வடசேரி போலீசார் விரைந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜிடி தலைமையில் போலீசார் விசாரித்த போது தான் பலாத்கார விவகாரம் வெளியானது. இதனால் காதல் ஓன்று குற்றம்சாட்டப்பட்ட மாணவரை விசாரிக்க முடிவு செய்தனர். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் எங்குசெல்வது எனதெரியாமல் நாகர்கோவில் பூங்காவில் இருப்பதாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் பூங்காவில் இருந்து மாணவரை வரவழைத்து பேசினர். அப்போது கடந்த 11ம் தேதி பகல் 2.30 மணிக்கு மாணவியை ஆண்கள் விடுதிக்கு சேர்மன் அசோக்குமார் அழைத்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் நான் வேறொரு அறையில் படுத்திருந்தேன். அப்போது மாணவியை தனி அறைக்குள் கூட்டி சென்றார்.

    பின்னர் வெளியே வரும்போது அவர் பலத்காரம் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டினார். ஆனால் நான் வெளியே சொல்லி விடுவேன் என பயந்து கல்லூரியில் இருந்து வெளியை அனுப்பி விட்டனர்.

    மாணவி தனக்கு உதவும்படி இந்த மாணவரை கேட்டு கொண்டுள்ளார். இந்த விபரம் தெரிந்து தான் இருவரையும் வெளியேற்ற கல்லூரி நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






    http://short-news.blogspot.com




  • http://short-news.blogspot.com


  • [Continue reading...]

    காங்கிரஸ் ஒழிந்��ால் இந்தியா வல்லரசு ஆகும்..?

    - 0 comments


    அன்னா ஹசாரேவுக்கு ஊழலுக்கு எதிராக போராட,அன்னா ஹசாரேவுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் மூன்று தினம் அனுமதி.அப்புறம் திடீரென அனுமதியே ரத்து.வெள்ளையனே வெளியேறு என போராடினார் காந்தி.அஹிம்சை வழியில் போராட வெள்ளையர்கள் கூட இந்தளவு சர்வாதிகாரம் காட்டவில்லை.ஊழலுக்கு எதிராக அமைதியான வழியில் போராட எதற்கு தடை.?
    மேலும் படிக்க »

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    சுதந்திர நாடெனு��் போதினிலே......!!!

    - 0 comments


    சுதந்திர இந்தியாவில்......

    ஒரு லட்சத்தி எழுபத்தாறு லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் செய்துவிட்டு ஹாயாக ஜெயிலில் நாளை கழிக்கும் குடும்பம்....!!! # சி பி ஐ விசாரணை நாசமா போயாச்சு.....!!!???


    பத்மநாத சுவாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தங்கம்......!!! அப்பிடின்னு முதல்ல சொன்னவிங்க, இப்போ ஒரு லட்சத்தி அம்பதாயிரம் கோடி தங்கம்னு சொல்றாயிங்க # அப்போ மீதி தங்கம் போன இடம் எங்கே.....???


    காமென்வெல்த் ஊழல் செய்தவன் விரைவில் விடுதலை, மறதி நோய் பிடிச்சிருக்காம் # பொண்டாட்டியாவது நினைவிருக்குமா...???


    யோகா மாஸ்டர் ராம்தேவ் போராட்டம்னு ஓங்கி அடிச்சார், அவருக்கு காங்கிரஸ்காரன் வச்ச ஆப்புல எஸ்கேப் # பணம் பத்துமில்லை, ஓடவும் வைக்கும்.....!!!!??


    தமிழகத்தையே மொத்தமா விலைக்கு வாங்கிய குடும்பமும் கட்சியும் படும் அவஸ்தையும், பாடும் இருக்கே.....!!!?? # ராவா குடிக்கிரவன் ஊறுகாயை நக்கியே ஆகணும் [[ஹி ஹி]]


    டாஸ்மாக் கடையும் இவன்தான் திறந்து வச்சிருக்கான், கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு போலீஸ்காரன் ஊதுங்குறான் # கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா...???!!!


    மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு # போயஸ்கார்டனில், கோபாலபுரத்தில், சி ஐ டி காலனியிலும் மின்வெட்டு உண்டா..?? டவுட்டு....!!!


    தலையில ஹெல்மெட் இல்லாம ஸ்டைலா போகமுடியலை, போலீஸ்காரன் அம்பது ரூவா வாங்கிட்டு இருந்தவன் இப்போ நூறு ரூவா தான்னு வெக்கமே இல்லாமல் கேக்குறான் # யோவ் சாவுறது நான்தானே, நீயான்னு சண்டை நடக்குது....!!!


    பிள்ளைங்க சுமக்கும் பாடபுஸ்தகங்களை, புஸ்தகமூட்டைன்னு சொல்லுங்கன்னு பிள்ளைங்க சொல்லுது # பாவம் பிஞ்சிகள்....!!!

    பிளாக்ல தகிரியமா எழுதுனா மைனஸ் ஓட்டு # நல்லதுதானே எழுதுறோம்...!!!

    டிஸ்கி : இப்பிடி ஆயிரத்தேழு கேள்விக்கு மேலே இருக்கு சொன்னா எவன் கேக்குறான்........

    டிஸ்கி : பாத்தீங்களா இதுதான் நம்ம சுதந்திர நாட்டின் நிலை.....!!!

    "ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"


    http://youngsworld7.blogspot.com




  • http://youngsworld7.blogspot.com


  • [Continue reading...]

    செஞ்சோலைப் படுக��லை 5ம் ஆண்டு நினை���ு நிகழ்வு பிரான��ஸ்

    - 0 comments


    பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரில், வள்ளிபுனம் செஞ்சோலைப் படுகொலை 5ம் ஆண்டு நினைவு நிகழ்வும், ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி மாநிடநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆறு உறவுகளினதும் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றிருந்தது.

    சிறீலங்கா அரசின் கிபீர் விமானத்தின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலைச் சிறார்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரையும், கவிதையும் இடம்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யூலை மாதம் 23ம் திகதி அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி மானிடநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆறு உறவுகளும் தங்களினுடைய கருத்துப் பகிர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    சொந்தச் சகோதரர்கள் தீயினிலே சொந்தங்கள் நாங்களோ பாரினிலே! என்னசெய்வோம் எம் உயிர்களைக் காக்க. சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்துள்ளது.

    இதில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சிறீலங்கா அரசு. ஆனாலும் நீதி சாகாது. குற்றமிழைத்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமைகள் நிறையவே இருக்கின்றன.

    பிரான்ஸ் வாழ் அன்பான தமிழ் உறவுகளே!

    பிரான்ஸ் அரசின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிற்கு, மனு அனுப்பிவைக்கும் முகமாக, கையெழுத்து மனு ஒன்றும் தயாரித்து வருகிறார்கள். கையெழுத்துப் போட விரும்பும் உறவுகள் கீழ்க்காணும் தளத்திற்கு சென்று உங்கள் கையெழுத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

    http://roland.corrier.over-blog.com/article-caravane-tamoule-en-route-pour-une-enquete-internationale-80348288.html

    http://tamilfashionshow.blogspot.com




  • http://tamilfashionshow.blogspot.com


  • [Continue reading...]

    விஜய்யின் சுதந்��ிர தின ஆசை

    - 0 comments


    அனைவருக்கும் கல்வி வசதி அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

    நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளைத் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் விஜய் கூறுகையில், "இந்தியாவில் நூறு சதவித மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். இதன் மூலம் வேலையின்மை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது என் விருப்பம். ஒவ்வொரு வருடமும் நான் இலவச நோட்டு புத்தகங்கள் சீருடைகள், ஏழைகளுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றை வழங்கி வருவதன் காரணம் இதுவே.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம். இதற்காக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    நடிகை அமலா பால் கூறுகையில், "நாட்டில் ஊழல் முற்றாக ஒழிய வேண்டும் என்பதுதான் எனது சுதந்திர தின ஆசை" என்று கூறியுள்ளார்.

    தமன்னா கூறுகையில், "நன்கு படித்தவர்கள் உள்ள இந்த நாட்டில்தான் குற்றங்களும் வழக்குகளும் அதிகமாக உள்ளன," இந்த நிலை மாற வேண்டும் என்றார்.

    நடிகை த்ரிஷா இப்படிச் சொல்கிறார்:
    சுதந்திரம் எத்தனை அற்புதமான விஷயம் என்பது அனுபவிக்கும்போதுதான் புரிகிறது. நமது முன்னோர்களுக்கு நன்றி. நல்ல சிந்தனைகள் பெருக வேண்டும். அப்போதுதான் சமூகக் குற்றங்கள் குறையும், என்றார்.






    http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • [Continue reading...]

    வலுக்கிறது மோதல��- அன்னா உண்ணாவிர��த்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

    - 0 comments


    நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    அன்னா ஹஸாரே நாளை முதல் 3 நாட்களுக்கு டெல்லியில் உள்ள ஜேபி நரேன் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கலாம், 5 ஆயிரம் பேருக்கு மேல் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது உள்பட 22 நிபந்தனைகள் விதித்து டெல்லி போலீஸ் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்தது.

    ஆனால் அன்னா குழுவினர் 22-ல் 6 நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். 

    சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் போட்ட 22 நிபந்தனைகளை ஏற்க அன்னா குழுவினர் மற்றுத்துவிட்டனர். அதனால் தான் நாங்கள் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

    அன்னா குழுவினர் ஏற்க மறுத்த நிபந்தனைகள் வருமாறு,
    3 நாட்கள் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். 5 ஆயிரம் பேருக்கு மேல் யாரும் உண்ணாவிரத இடத்தில் இருக்கக் கூடாது. அன்னா ஹஸாரேவை மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. 50 பைக்குகள், 50 கார்களுக்கு மேல் வாகனங்களை நிறுத்தக் கூடாது. டென்ட் அடிக்கக் கூடாது. 

    தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க வந்தார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






    http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • [Continue reading...]

    அறிவாலயத்தில் ம��தல் முறையாக சுதந்திர தினத்தைக் க���ண்டாடிய திமுக

    - 0 comments


     மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவரே திமுக தலைவர் கருணாநிதி தான் என்று டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முதலாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    அறிவாலயம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் இன்று காலை 8 மணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபப்ட்டது.

    இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் க.ராமசந்திரன், பொன். முத்து ராமலிங்கம், மேயர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, சங்கரி நாராயணன், வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், ஆயிரம் விளக்கு உசேன், விஜயாதாயன்பன், தொண்டரணி மாசிலாமணி, பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, ஏகப்பன், கொளத்தூர் ஐ.சி.எஸ்.முரளி, இளைஞரணி வி.எஸ்.ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது,

    மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தவரே திமுக தலைவர் கருணாநிதி தான். முதன்முறையாக இன்று அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மரபுப்படி காலை 8 மணிக்கு கொடியேற்றி மரியாதை செய்தோம் என்றார்.

    அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் தேசிய அரசியலில் இருந்து திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு அவர், தேசிய அரசியலில் இருந்து திமுகவை யாராலும் தனிமைப்படுத்த முடியாது என்றார்.




    http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • [Continue reading...]

    சுதந்திர தினத்த��்று ப.சிதம்பரம் ��ீட்டில் துணிகர கொள்ளை

    - 0 comments


    உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் கொள்ளையர்கள் தங்களை கைவரிசையை காட்டியுள்ளனர். சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் வீட்டில் நடந்துள்ள இந்த கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ளது. அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். அந்த வீட்டில் உள்ள 6 அறைகளை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 அறைகள் ப. சிதம்பரத்திற்கு சொந்தமானவை ஆகும்.

    உள்துறை அமைச்சரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ப. சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீக நகைகள் அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.






    http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • [Continue reading...]

    மம்முட்டி ,மோகன்���ால் -தேவை இன்னும���ரு விடுதலை

    - 0 comments



    ஆகஸ்டு பதினைந்துநமக்கு மகத்தான நாள்.அந்நியர்களை விரட்டி நாம் விடுதலை பெற்றோம்.ஊழல் புற்றுநோய்என்றும் அதற்கு எதிரான நடவடிக்கை தேவை என்றும் குடியரசுத்தலைவர் உரைகூறுகிறது.சென்ற மாதம் கணையாழியில் தலையங்கம் படித்தேன்,ஊழலைத்தவிர இந்தியாவில்எதுவும் இல்லையா? என்று.

                                       எனக்கும்அப்படித் தோன்றுகிறது.ஊழலை விடவும் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன.நம்முடையபாரம்பரியம்,உழைப்பு,வளங்கள் என்று நிறைய உண்டு.ஆனால் ஊழலை விடவும் வாக்களனைஅவமதிப்பது போன்ற செயல் வேறில்லை.மாற்றி மாற்றி பார்க்கிறான்.திரும்பத்திரும்பஆட்சிகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

                                       அரசியல்வாதிகளின் நிலை நமக்கு தெரிந்து போய்விட்ட்து.அவர்களின் ஊழல்களில்ஆச்ச்ர்யப்பட எதுவும் இருப்பதில்லை.சில நேரங்களில் தொகை மட்டும் ஆச்சர்யம்ஏற்படுத்தி விடுகிறது.கறுப்புப் பணமாக உள்ள கோடிகள் நாட்டுக்கு வந்துசேர்ந்துவிட்டால் தேசம் நன்மை பெற்று விடாதா என்ற ஏக்கம் நமக்கு இருக்கிறது.

                                        அரசைஏமாற்றி கணக்கில் காட்டாமல் சுருட்டுவது பலருக்கும் வாடிக்கை.சென்ற மாதம் மலையாளநடிகர்கள் ம்ம்மூட்டி,மோகன்லால் வீடுகளில் சோதனைகள் நடந்தன.கேரளாவிலும்,தமிழ்நாட்டிலும்பரிசோதனைகளுக்குப் பின் தகவல்கள் வெளிவரவே நீண்டகாலம் ஆனது.ஒருவழியாக முப்பது கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கணக்கில் காட்டப்படவில்லை என்று வருமான வரித்துறைஉறுதிப்படுத்தியிருக்கிறது.

                                        அரசின்வருவாய் என்பது வரிகளை சார்ந்து இருக்கிறது.அதிலிருந்துதான் மக்களுக்கு தேவையானஎதையாவது செய்யமுடியும்.உண்மையான சொத்துக்களை மறைத்து வரியை குறைத்துகட்டுகிறார்கள்.லட்சோபலட்சம் ஏழைகள் உள்ள நாட்டில் நடிகர்களுக்கு என்னஇல்லை?முப்பது கோடி என்பது முழுமையான மதிப்பீடு அல்ல.இன்னும் மதிப்பிடவேண்டியிருக்கிறது.

                                        இதுவும்ஏழைகள் பணம்தான்.சினிமா தியேட்டரில் 50,100 என்று ஏழை கொடுத்த பணத்தில்மாளிகைகளில் வாழும் நட்சத்திரங்கள் அவர்களையே வயிற்றில்அடிக்கிறார்கள்.இந்தியாவில் வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் சுரண்டுவதை வேலையாககொண்டிருக்கிறார்கள்.சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஏழைகளைஏழைகளாகவே வைத்துக்கொண்டிருப்பதற்கு ஊழல் ஒரு முக்கிய காரணம்.
                                         தெருவில்குப்பைகளை பொறுக்கி பையில் சேகரிக்கும் மனநோயாளியைப் போல பணம் சேர்ப்பதில் ஆர்வமாகஇருக்கிறார்கள்.மக்கள் நலனைப் பற்றி சிந்திப்பதற்கு இவர்களுக்கு எங்கேநேரமிருக்கிறது? சதா சர்வ காலமும் பணம் சேர்ப்பதற்கும்,கணக்கிடுவதற்கும் பொழுதுசரியாகப் போகிறது.

                                         தேசம் ஊழல்களிடமிருந்துவிடுதலை பெறும்போதே நிஜமான சுதந்திரம் நமக்கு வாய்க்கும்.ஏழைகள் இல்லாத நாடுஎன்பதே விடுதலையை அர்த்தமுள்ளதாக்கும்.அதற்கான முயற்சிகளும்,சிந்தனையும் நமக்குஇந்நாளில் தேவைப்படுகிறது.அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.



    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தவற விடக்கூடாத ச���ரு நிவேதிதாவின் கட்டுரை

    - 0 comments


      நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷ்யம். எனவே தான் நண்பர்களை சந்திக்க கூடுதல் கவனம் எடுத்து கொள்வது என் இயல்பு..

    சென்ற வாரம் ஒரு நாள் , நண்பர் சந்திப்புக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன்.. 3 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றால் , இரண்டரை மணிக்கே அந்த இடததை அடைய பிளான் செய்வது என் வழக்கம்... சென்னை டிராபிக் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு..

    ஆவலுடன் சொன்ன இடத்தில் காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால், சென்னை நகரின் டிராபிக் வேலையை காட்டிவிட்டது... நண்பரால், சொன்ன நேரத்துக்கு அந்த இடத்துக்கு வர இயலவில்லை...

    அதற்கு பிறகு அரைமணி நேரம் காத்து இருந்தும் அவரால் வர இயலவில்லை....- டிராபிக்...

    வேறு சில வேலைகள் இருந்ததால், அவரை சந்திக்காமலேயெ கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்... கனத்த மனத்துடன் அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்...


    சென்னையில் சாலைகள் அமைக்கிறோம் , நகரத்தை விரிவாக்குகிறோம் என சொல்லி , மரங்களை அழிக்கிறார்கள் .. ஆனாலும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை... சரியான திட்டமிடுதல் இல்லாததால், தேவையின்றி மரங்கள் அழிக்கப்படுகின்றன, எந்த பயனும் இல்லாமல்..

    இந்த சிந்தனையோடு நான் இருந்த போது, தினமலரில் சாரு எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..

    அட... என ஆவலுடன் படித்தேன்...  மிகவும் தேவையான ஒரு விஷயத்தை , அழகாக சொல்லி இருந்தார்..
    அவர் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுத்தி விட்டார் அவர்.. விரைவில் படிக்க வேண்டும்..

    எழுத்தாளர் என்பதை தாண்டி , ஒரு ஜென் குரு போல அவர் மாறிக்கொண்டு இருப்பது கட்டுரையின் பல இடங்களில் தெரிகிறது..

    மரம் பற்றிய கட்டுரையில், கோமியம் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என பல இடங்களை அவர் தொட்டாலும், என்னை கவர்ந்த இடம் இன்னொன்று...

    ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.


    இப்படி அவர் முழங்கும்போது, எல்லோரும்  உயர் நிலை அடையும்  நன்முறையை , இந்தியா உலகுக்கு அளிக்கும் என பாரதியார் வரிகள் நினைவுக்கு வந்தன..
    பொருத்தமான வரிகளை , கடைசியில் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு..

    அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது...படித்து பாருங்கள்.. பிரிண்ட் எடுத்து நண்பர்களுக்கு கொடுங்கள்

    ****************************************************************************


    மனிதர் வாழ மரம் வாழட்டும்
    - அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. 





    வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.
    சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

    ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
    கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
    விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.

    நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

    "மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

    மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?
    "மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

    இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.
    அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

    மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

    "இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.
    இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

    மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.

    ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.
    "பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

    நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.
    ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.
    இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:

    ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?

    -  நன்றி , தினமலர்


    http://tamilhot.blogspot.com




  • http://tamilhot.blogspot.com


  • [Continue reading...]

    பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக் கொண்டி��ுக்கிறது: மு.க.ஸ்���ாலின் பேச்சு

    - 0 comments



    சென்னை ஆவடியில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    1977ம் ஆண்டு தேர்தலில் தோற்ற தி.மு.க. 13 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிற்கே வர முடியவில்லை. அதன்பின்னர் 1989 ம் ஆண்டு மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையிலே ஆட்சிக்கு வந்தோம். 2 ஆண்டுகளிலேயே நம்மீது அபாண்ட குற்றச்சாட்டை சொல்லி ஆட்சியை கலைத்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் நம்மீது அபாண்டமான கொலைப் பழி சுமத்தப்பட்டு அந்த தேர்தலில் தலைவர் கருணாநிதியை தவிர அனைவரும் தோற்று மோசமான தோல்வியை சந்தித்தோம். அதிலும், கருணாநிதிக்கு ஒரு பெருமை உண்டு. இதுவரையில் தேர்தலில் நின்று தோற்ற வரலாறே அவருக்கு கிடையாது.


    அதற்கு பிறகு 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையா? அதற்கு பிறகு 2001 ல் தோற்றோம். மீண்டும் 2006 ல் ஆட்சிக்கு வந்தோம். இப்போது 2011 ல் தோற்று இருக்கிறோம். மீண்டும் 2016 ல் தேர்தல் வரும், ஏன் அதற்கு முன்பே கூட தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்று அலையவில்லை. அது பதவிக்காக அல்ல. மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டிற்காக. இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தி.மு.க. எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தது உண்டு. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதி உழைத்து கொண்டிருக்கக் கூடிய ஒரே இயக்கம் தான் தி.மு.க.


    இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்கள்? முதன்முதலில், சமச்சீர் கல்வி ரத்து என்பதைத்தான் கொண்டு வந்தார்கள். அதை உச்சநீதிமன்றமே தவறு என்று தீர்ப்பளித்து, இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல, மற்றொரு காரியம் மக்கள் வரிப்பணத்திலே கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மூடியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவோம் என்றார்கள். ஆனால், இன்றைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாமல் செய்தியே கிடையாது.


    தி.மு.கவினர் மீது பல வழக்குகள் போடப்படுகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம். என்.கே.கே.பி.ராஜா என பலர் மீது வழக்கு போடுகிறார்கள். பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவனை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து, பாடங்களை படிக்க விடாமல் செய்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. கலைவாணன் அந்த வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று, பாளைச் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவர் மீது இன்னொரு வழக்கைப் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள். ஆட்சிக்கு வந்த 3 மாதத்திலேயே இத்தனை அராஜகங்கள், அக்கிரமங்கள் நடக்கிறதென்றால் அதற்கெல்லாம் பதில் சொல்ல, பாடம் புகட்ட நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


    சட்டமன்றத்தில் நாம் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, மக்கள் மன்றம் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.








    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    காங்கிரஸ் கட்சி��ில் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார���த்தால்கூட சிரிப்பது கிடையாது: ஈ.��ி.கே.எஸ். இளங்கோவ���்

    - 0 comments



    விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

    தற்போது ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் 33 சதவீத இடஒதுக்கீடு போதாது 50 சதவீதம் வேண்டும் என கேட்கிறார்கள். இது விரைவில் நிறைவேறும் காலம் வரும். இந்த இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் ஏமாற்றிவிட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கடைசி வரை நம்ப வைத்து ஏமாற்றியது. அதற்காக வருத்தப்பட வில்லை.


    மேலிடத்தின் மீது கோபம் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கட்சி நன்றாக இருந்தால்தான் இந்தியா நன்றாக இருக்கும். இந்தியா நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும். 1967 ம் ஆண்டு இழந்த பெருமையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். காந்தியடிகள், காமராஜர் உள்பட பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்திற்காக சிறைக்கு சென்றுள்ளனர். இதுதான் உண்மையான தியாகம். ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் பலர் சிறைக்கு செல்கின்றனர். அதற்கு வேறு காரணம்தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இந்த கோஷ்டி, அந்த கோஷ்டி என உள்ளது. ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்த்தால்கூட சிரிப்பது கிடையாது. இது மாறவேண்டும். ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து நட்பு பாராட்ட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து ஒருவராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger