
ஏன் ஒபாமாவே கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் தானே என்ற கேள்விகளும். இந்த நிகழ்ச்சியில் இதை பேசிய போது வட மாநில மாணவகள் கை தட்டி சிரித்ததாகவும், தமிழர்கள் மேடையிலும், அரங்கத்திலும் சும்மா இருந்தார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறது.
ஜெயலலிதா, ராமதாஸ், திருமா போன்றவர்கள் இந்த செய்தியை பார்த்துவிட்டு அறிக்கை விடுவதற்கு காத்துக்கொண்டு இருக்காமல், அந்த மேடையிலேயே அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்காதோ என்று தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள்.
24 மணி நேரத்தில் போக வேண்டிய ரயில் 72 மணி நேரத்தில் போய் செர்ந்ததை பற்றியும், ரயில் கழிப்பறை பற்றியும், ஒழுங்காக குளிக்காமல், சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வு போன்றவற்றை பற்றி எல்லாம் பேசாமல், எருமை மாடு போல வாழும் நாம் சும்மா 'கருப்பு' 'அழுக்கு' என்று சொன்னவுடன் கண்டனம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் ?
இன்றைய பாரத் மேட்ரிமோனியை பார்த்தால், 'நல்ல சிகப்பு அழகுடன் இருக்கும்' பெண்கள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பலரை என்ன சொல்லுவது ?
சூர்யாவும் ஷ்ரேயாவும் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தில் வந்தால் ஒரு வாரம் பூசுக்கொண்டு கண்ணாடி முன் நிற்பது எந்த வகையில் அடங்கும் ?

எதை பூசிக்கொண்டாலும், ஏன் அதிலேயே குளித்தாலும் ஒன்று ஆகாது என்று சிவாஜி படத்தில் நம்ம ரஜினி சாரே நமக்கு சொல்லியும் புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது ?
எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் !
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?