Monday 15 August 2011

ஆபாச படம் பார்த்���தாக கூறி 2 சிறுமிகள் மீது தாக்குத���்



இன்டர்நெட் மையத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகளை மட்டக்களப்பு மாவட்டம் கட்டங்குடி என்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியைத் தாக்கியவர்கள் அனைவருமே ஆண்கள்.

கட்டங்குடி பகுதியில் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் பெருமளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள மத அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 2 டீன் ஏஜ் வயதுப் பெண்களை சிலர் சரமரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில், இந்த இரு சிறுமியரும் ஆபாசப் படம் பார்த்ததாக அடித்தவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த 2 பெண்கள் தவறு செய்ததால், தண்டிக்கப்பட்டனர் என அலுவலக மைக்கில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஆவேசமடைந்த அப்பகுதியினரும், இளம்பெண்களை அடிக்க ஆரம்பித்தனர். இதற்கு 2 சிறுமிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த, அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தவறு செய்ததாக அடித்து, உதைக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டனர்.

ஆனால் தாங்கள் அதுபோல படம் எதுவும் பார்க்கவில்லை என்றும் பொய்யான புகாரின் பேரில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த இரு சிறுமிகளும் கூறியுள்ளனர். மேலும் இன்டர்நெட் மையத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஆபாசப் படம் பார்த்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






http://short-news.blogspot.com




  • http://short-news.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger