Wednesday 30 October 2013

Attakasamana Aarambam அட்டகாசமான ஆரம்பம்

- 0 comments
‘ஆரம்பம்’ – அமர்க்களம்…அட்டகாசமான ஆரம்பம்…

தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டதோ என நினைக்கத் தோன்றும் விதத்தில் ‘ஆரம்பம்’ படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று விடியற்காலையே பல திரையரங்குளில் ‘ஆரம்பம்’ படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
அஜித்தின் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர்.
[Continue reading...]

1 கோடி டாலரில் அசத்தல் பிரா அணியும் மாடல் அழகி Candice Swanepoel to promote 10 million bra

- 0 comments

1 கோடி டாலரில் அசத்தல் பிரா அணியும் மாடல் அழகி Candice Swanepoel to promote 10 million bra

நியூ யார்க், அக்.31-

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும்  நடத்தும்  பிரா கண்காட்சியில் ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய பணத்திற்கு சுமார் 61 கோடி ரூபாய்) மதிப்புடைய பிராவை அணிந்து காட்சிப்படுத்த மாடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராக்களை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மாடல் அழகிகள் காத்திருப்பதுண்டு. இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான்போல்(25)  இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப் பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வைரங்கள்,நீலக்கற்கள் மற்றும் 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டாலர் மதிப்புடைய பிராவை அணிந்து விளம்பரப்படுத்தினார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கென்டிஸ் ஸ்வான்போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்தார்கள்.

அன்றிலிருந்தே,அவர்கள் பிராவை எப்படி செய்வார்கள்? அது எப்படி காட்சியளிக்கும்? என கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இவ்வ்ளவு விலையுயர்ந்த ஆடை ஆபரணம் எதையும் நான்அணிந்ததே கிடையாது.' எனவும் அவர் கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை All parties courtesy to Thevar statue

- 0 comments

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை All parties courtesy to Thevar statue

சென்னை, அக்.30–

முத்துராமலிங்க தேவரின் 106–வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சாந்தி, காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.,கே.அன்பழகன், சீதாராமன், சொர்ண சேதுராமன், குமாரமுருகன், தி.நகர் கார்த்திக், கொய்யாதோப்பு ராம்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த்சாகர், சித்ரா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்..

பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், சக்கரவர்த்தி, பிரகாஷ், திருப்புகழ், ஆறுமுக ராஜ், கேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், எஸ்.பிரசாத், பாபு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

லட்சிய தி.மு.க. சார்பில் அதன் தலைவர் டி.ராஜேந்தர், எம்.எம்.ஆர். மதன் மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மணியரசன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

தமிழக யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷேக்தாவூத் மாலை அணிவித்தார்.

வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள தேவர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் பகுதி செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன், அருள் ராஜ், எட்.ராஜா, மாரிமுத்து உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்து சத்ய சேனா சார்பில் மாநில தலைவர் வசந்த குமார் தலைமையில் சீனிவாசன், காந்தி உள்பட அமைப்பின் நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர். தேவர் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் சுரேஷ் காந்தி, நீலகண்டன், ஆதிமூலம், அன்பழகன், நீதிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தேவர் பேரவை சார்பில் நிர்வாகிகள் செல்லம், சந்திரன், சித்திரை குமார், தர்மராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

...

shared via

[Continue reading...]

தேவர் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை Jayalalitha floral tribute Thevar statue

- 0 comments


பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 106–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 10.30 மணிக்கு தேவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை காட்டி கையசைத்தார். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வரவேற்றனர். அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க. கொடி, தோரணங்களுடன் விழாக் கோலம் பூண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் வேணு கோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, கலைராஜன், வி.என்.ரவி, எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, செந்தமிழன், வெற்றிவேல், நீலகண்டன், துணைமேயர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் லட்சுமி நாரயணன், டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர் டி.டி.ராஜா, ஆர்.டி.சாம்சன், ஏ.என். சுப்பிரமணி, மகிழன்பன், பேச்சாளர் ஜெயகோவிந்தன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் கே.பாண்டுரங்கன், தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், கவுன்சிலர்கள் சிவராஜ், நுங்கைமாறன், ஆறுமுகம், சின்னையன், கடலூர் ரா.ராஜேந்திரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

[Continue reading...]

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்–வைகோ மரியாதை Pasumpon muthuramalinga devar statue vaiko respect

- 0 comments
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், வாரியத் தலைவர்கள் முனியசாமி, தங்கமுத்து, முருகையா பாண்டியன் ஆகியோர் தேவர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger