Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Friday, 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள
ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர்
சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.

ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில்
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான
முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது மர்ம உறுப்பையும்
கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த
கொலையின் பின்னணி பற்றி போலீசார்
பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின்
மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’ மூலம்
அனுப்பட்டது.

அந்த பார்சலில் இருந்து ரத்தம் வடிந்ததால்
சந்தேகப்பட்ட கொரியர் நிறுவன ஊழியர்கள்
போலீசில் புகார் அளித்தனர்.
பார்சலை பிரித்து பார்த்த போலீசார்
திகைப்படைந்தனர்.
கொரியர் நிறுவன ஊழியர்கள் கூறிய
அடையாளங்களை அடிப்படையாக
வைத்து போலீசார்
ஒரு பெண்ணை கைது செய்தனர்.
டாக்டரை கொன்றது ஏன் ? என்பது தொடர்பாக
போலீசாரிடம் வாக்குமூலம்
அளித்த அந்த

பெண் கூறியதாவது:-
சுமார் 13 வருடங்களாக
எனக்கு போதை ஊசி போட்டு டாக்டர்
என்னை தொடர்ந்து கற்பழித்து வந்தார்.

இதேபோல் கடந்த 16-ம் தேதி எனக்கு போன்
செய்து ரணியாவில் உள்ள
லாட்ஜுக்கு வரவழைத்தார்.
சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லாட்ஜ்
அறையில் ஒன்றாக மது குடித்தோம்.

போதையில் இருந்த டாக்டரின்
கழுத்தை அறுத்துக் கொன்றேன். மர்ம
உறுப்பையும்
வெட்டி எடுத்து அவரது மனைவிக்கு கொரியர்
மூலம் பார்சலாக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்
இருப்பதாகவும், இதற்காக
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.

[Continue reading...]

Monday, 17 June 2013

மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர்

- 0 comments
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் சாட் செய்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்த பிறகு தனது கணவனுக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருப்பதை அறிந்த அந்த பெண், அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கை தொடர்ந்த பின்னர் அந்த பெண் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்ற மனைவியை அவமானப்படுத்தி பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண்ணின் பெயரால் புதிய ஈ மெயில் ஐ.டி. யை உருவாக்கி அவரது ஆபாச படங்களை நந்தகுமார் ஜெய் இன்டர்நெட்டில் பரவ விட்டார்.

என்னுடன் உறவு வைத்துக்கொள்ள இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று மனைவியின் கைபேசி எண்ணையும் விளம்பரம் செய்து தனது வன்மத்தை அவர் வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் பெங்களூரில் அந்த வாலிபரை கைது செய்தனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger