Tuesday 27 December 2011

பிரதமருக்கு கறு��்புக்கொடி: விஜயகாந்த் கைது (காணொளி இணைப்பு)

- 0 comments


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முல்லைப் பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து சென்னைக்கு வந்த இந்திய பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் பனகல் மாளிகை முன்பு நடைபெற்றுது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உள்பட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.




http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    பெரியாறு அணை பிர���்சனையை தீர்க்க ��ெயலலிதா நடவடிக்���ை எடுக்கவில்லை: ���ிஜயகாந்த்

    - 0 comments


    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முல்லைப் பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து சென்னைக்கு வந்த இந்திய பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் பனகல் மாளிகை முன்பு நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,

    தமிழக பிரச்சனைகளில் பிரதமர் மன்மோகன் சிங் கவனம் செலுத்தவில்லை. 2 தனியார் நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்துக்கு பிரதமர் வந்தது ஏன். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கட்சியை தொடங்கி ���ோராட்டம் நடத்தி முதல் முறையாக விஜயகாந்த் கைது!

    - 0 comments


    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.

    சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், தனியார் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் செல்வது தவறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் வந்தாரா? அரசாங்கம் விழாவுக்கு வந்த மாதிரி வந்துவிட்டு, ப.சிதம்பரம் சொல்கிற 2 விழாவுக்கு போய் சேருகிறார் பிரதமர். மக்கள் செத்தாலும் பரவாயில்லை. பிரதமர் விழாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். 4 அடுக்கு பாதுகாப்பு என்று சொன்னார்கள். திருச்சியில் இருந்து காரில் போகிறார் என்றார்கள். எங்கே கருப்புக்கொடி காட்டுவார்களோ என்று உடனே விமானத்தில் போகிறார். இதுதான் மக்களுக்கு செய்கிற நல்ல காரியமா?

    திமுக அதிமுக ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு போராட தயாராக இருந்தால், தேமுதிகவும் போராட்டத்தில் இணையும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தேமுதிக தயாராக உள்ளது.

    கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

    பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும், தே.மு.தி.கவினர் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆயிரகணக்கானவர்கள் கைது செய்யபட்டனர். 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கைதானார்கள்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    நல்லிணக்க ஆணைக்��ுழு அறிக்கை தொடர்பில் தமிழீழ அரச���ங்கம் விரைவில் ��றிக்கை வெளியிடு���்!

    - 0 comments


    சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களுக்கான அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள்ளது.

    ஐ.நாவின் மனித உரிமை சாசனங்களுக்கு முரணான பல்வேறு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருப்பது தெட்டத் தெளிவாக உள்ளதென குறிப்பிட்டுள்ள நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவாகாரங்களுக்கான அமைச்சகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஜனவரி மாத தொடக்கத்தில் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்படுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமையாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்களினால் நியமிக்கப்படும் இத்தகைய ஆணையங்கள் சிங்கள பேரினவாத நிலைப்பாட்டடை நியாயப்படுத்துவதோடு, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை மூடிமறைக்க முனைகின்றது.

    சர்வதேசத்தை ஏமாற்றும் இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு, ஒருங்குபட்ட செயற்பாடுகளை மையப்படுத்தி 'நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்' என நா.த.அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.




    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கிளிநொச்சியில் ��ூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ம���ட்பு (படம் இணைப்���ு)

    - 0 comments


    கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    யாழ்ப்பாணம் அரியாலையை சொந்த இடமாகக் கொண்ட இ.இரவீந்திரன் வயது 49 என்பவரே தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த வியாபார நிலையத்தினர் நேற்று நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று, இன்று வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

    தற்கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.




    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர்களின் உணர��வுகளுக்கு மதிப்���ளிக்காத சங்கீத�� - கிரிஷ் துக்கடா���்களின் திமிர் ப��ட்டி (காணொளி இணை��்பு)

    - 0 comments


    சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

    அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கருணா (ஒட்டுக்குழு) கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.

    இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்'' என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் இன்று (26.12.2011) செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி, யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம் அடாவடி பேட்டி அளித்தார்கள். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள், அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை

    போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.

    பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ, ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.

    தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    சுவிட்சர்லாந்து விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்: நடிகர் ஜீவா




    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    எமது அன்பிற்கும�� மதிப்பிற்குமுர���ய சுவிஸ்வாழ் தம��ழீழ மக்களே!

    - 0 comments


    சுவிஸ் மண்ணில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எம்மால் புத்தாண்டு தின கலைநிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. புத்தாண்டும் புதுநிமிர்வும் என பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக நடைபெறும் இந்நிகழ்வு இந்த ஆண்டும் எம்மால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

    எமது செயற்பாடுகளில் குழப்பம் விளைவிக்க எண்ணும், எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள், தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கப்பட்டுள்ள சிலர், குறித்த நிகழ்வுகள் போன்றே தாமும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

    எமது நிகழ்வு போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், எமது நிகழ்வு போன்றே பெயர் மற்றும் நிகழ்வு வடிவமைப்பு என்பவற்றையும் செய்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் எமது கட்டமைப்பினூடாக கிடைக்கப்பெற்ற அறிமுகங்களை பயன்படுத்தி, போலியாக விளம்பரங்கள், பணவசூலிப்புகள், கலை நிறுவனங்களிலிடமிருந்து நிகழ்வுகள் என்பவற்றையும் பெற்றும் வருகின்றனர்.

    எமது அமைப்பின் பெயரால் இடம்பெறும் மேற்படி மோசடிச்செயற்பாடுகளை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தங்கள் தவறுகளின் தன்மையை உணர்ந்து, அவற்றிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

    தமது குறுகிய சுயலாப நோக்கில், இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களின் மோசடிச் செயற்பாடுகளுக்கு வர்த்தக பெருமக்கள், கலைநிறுவனங்களின் ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகிய எவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

    மெல்ல இனி இருள் கலையும். காலவோட்டத்தில் நம் கனவுகள் மெய்ப்படும். கிடைத்துள்ள குறுகிய கால இடைவெளியில் இடம்பெறும் குழுச்செயற்பாடுகளை வென்று, தேசிய பேரெழுச்சியுடன் ஒண்றிணைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    நன்றி.


    வி.ரகுபதி

    தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

    சுவிற்சர்லாந்து 25.12.2011




    http://tamil-cininews.blogspot.com



  • http://youtube-tamil.blogspot.com

  • [Continue reading...]

    2011 சென்னை மார்கழி இசைவிழா – 01

    - 0 comments


    வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் "பாட்டுக்கே" இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். "கேட்பர்களையே" கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும். டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் "பாட்ரன்" வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையில் அமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    சென்னை – சர்வதேச திரைவிழா – 21 டிசம���பர் 2011

    - 0 comments


    இன்று இரண்டு அழகான திரைப்படங்களைக் காண முடிந்தது. முதலில் LAS ACACIAS என்கிற அர்ஜென்டினா திரைப்படம். 85 நிமிடங்கள் ஓடினாலும் இதை குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். அதில் ஒன்று கைக்குழந்தை வேறு. படம் முழுக்க சலிப்பான வாகனப்பயணம். A Road Movie. இருபது வருடங்களுக்கும் மேலாக டிரக் டிரைவராக இருக்கும் ரூபன் அதிகம் பேசாத ஒரு தனிமைவாதி. பராகுவேயிலி்ருந்து Buenos Aires-க்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போது ஒரு பெண்ணையும் அழைத்துச் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    பெரியார் : ‘காங்கிரஸை ஒழிப்பதே என���ு வேலை!’

    - 0 comments


    பெரியார் நினைவுநாள் - 24 டிசம்பர் 2011 ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரிடமும் தொடர்பு இருந்தது. குறிப்பாக, சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ்காரர்களுடன் நல்ல நட்பு இருந்தது. ஈரோடு வட்டார மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றுள்ள ராமசாமியை எப்படியாவது காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடவேண்டும் என்பது ராஜாஜியின் விருப்பம். அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார். ராமசாமிக்கு அப்போதுதான் அரசியல் ஆசை [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    கண்ணாடிச்சுவர்கள் : உதயசங்கர் சி��ுகதைகள்

    - 0 comments


    வம்சி வெளியிட்டுள்ள உதயசங்கரின் சிறுகதைத் தொகுப்புக்கு மு. அப்பணசாமி எழுதிய முன்னுரை N o s t a l g i a உதயசங்கரின் படைப்புலகம் பற்றிச் சிந்திக்கும்போது பழைய நினைவுகள் தவிர்க்க முடியாததாகின்றன. இது Nostalgia தொற்றாகக்கூட இருக்கலாம். பால்ய காலத்தில் ஒரு தெருப் பையன்களாக வலம் வந்திருந்தாலும், இளம் பருவத்தில் ஒத்த சிந்தனையில் சந்தித்து, 'யாரோ என நினைத்தால் நம்ம தெருப்பையன்தான்' எனற லயிப்பில் நட்பு பாராட்டியவர்கள் நாங்கள். ஓர் இளம் படைப்பாளிக்கு [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    கைமாறிய கச்சத்த��வு!

    - 0 comments


    க – 30 மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, சைக்கிள் ரிக்ஷாக்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும். முதலமைச்சர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளுள் இதுவும் ஒன்று. 3 ஜூன் 1973 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அதற்கான பணிகளைத் தொடங்கினார். என்னை வாழ்த்த வருபவர்கள் எனக்கு சால்வை போர்த்தவேண்டாம்; மாலை போடவேண்டாம். மாறாக, நிதி கொடுங்கள். அந்த நிதியைக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் வாங்கப்படும். ஏழைத் தொழிலாளிகளுக்கு இலவசமாகத் தரப்படும். உதவுங்கள். தலைவரே [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    வலைவிரிக்கும் இ��்துத்துவம்

    - 0 comments


    பத்ரி நாராயண் திவாரி எழுதிய Fascinating Hindutva: Saffron Politics and Dalit Mobilisation என்னும் நூலை, வலைவிரிக்கும் இந்துத்துவம் என்னும் தலைப்பில் தமிழில் வெளியிடுகிறது கிழக்கு பதிப்பகம். ஒரு கதை முன்பொரு காலத்தில் ஓர் அடர்ந்த வனப்பகுதியில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் லால்முனி சிரியா. அந்தப் பறவைக்கு மிக இனிமையான குரல். அதன் குரலுக்கு அந்நாட்டு மக்கள் அனைவரும் மயங்கிக் கிடந்தனர். லால்முனி சிரியா பாடும்போது மக்களும் சேர்ந்து பாடினர். அது அழும்போது மக்களும் சேர்ந்து [...]


    http://blackinspire.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger