Monday 23 September 2013

காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்: சுப்பிரமணிய சுவாமி Modi following Gandhiji way Subramanya Swamy

- 0 comments

காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்: சுப்பிரமணிய சுவாமி Modi following Gandhiji way Subramanya Swamy
Tamil NewsYesterday, 05:30

மும்பை, செப். 24-

நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறையை பா.ஜனதா நடைமுறைப்படுத்தியது. பா.ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு ஆதரவு தெரிவித்து கூறியதாவது:–

இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.

இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''இந்த முடிவை நான் எடுக்க முடியாது. கட்சியின் மேலிடம் தான் இதனை தீர்மானிக்கும். மும்பை எனக்கு புகுந்த வீடு. ஏற்கனவே 2 முறை இங்கிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்'' என்றார். மேலும் பா.ஜனதா தலைவர் அத்வானி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி வாழ்த்து தெரிவித்தது அதற்கு அவர் கூறுகையில், ''குடியரசு நாட்டில் மற்ற கட்சி தலைவர்களை நாம் விரும்பாதபோது கூட அவர்களை சந்தித்தால் நமக்கு தயக்கம் ஏற்படும். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்'' என்றார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

கவுதம் கார்த்திக் என்னோட ஃப்ரண்ட்… சூர்யா தான் என் கனவு நாயகன் : லட்சுமி மேனன் actor gowtham karthik lakshmi menon love

- 0 comments

கவுதம் கார்த்திக் என்னோட ஃப்ரண்ட்… சூர்யா தான் என் கனவு நாயகன் : லட்சுமி மேனன்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

சிப்பாய் படத்தின் ஜோடியாக நடிக்கும் கவுதம் கார்த்திக்தான் திரை உலகில் தன்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன். சினிமாவில் நடிக்க வரும் முன்பிருந்தே சூர்யாதான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்று கூறியுள்ளார் அவர். சூர்யா உடன் நடிக்க கால்ஷீட் கேட்டால் கதையே கேட்காமல் ஓகே சொல்லிவிடுவாராம் லட்சுமி மேனன். சமீபத்தில் நாளிதழ் ஒன்றிர்க்கு அவர் அளித்த இன்டர்வியூவை படியுங்களேன்.
லட்சுமி மேனன் சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டானு நாலு படங்களில் நடிக்கிறார். நல்ல கதைகள் வந்தால் கால்ஷீட் தர தயார் என்கிறார்.
கவர்ச்சியான உடை அணிந்து நடித்தால் லட்சுமி மேனனுக்கு செட் ஆகாதாம். எனவே இப்போதைக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் டீசன்டாக நடித்துவிட்டு எதிர்காலத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்கிறார் லட்சுமி மேனன்.
கவுதம் கார்த்திக் உடன் சிப்பாய் படத்தில் நடிக்கிறார். இப்போதைக்கு கெளதம் கார்த்திக்தான் லட்சுமி மேனனின் க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்."
சூர்யாதான் அவரது கனவு நாயகனாம். காக்க காக்க, கஜினி போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறாராம். சூர்யாவோடு நடிக்க தேதிகள் கேட்டா, கதையே கேட்காமல் கால்ஷீட் ரெடி என்கிறார்.
விஜய், அஜித் என்று லட்சுமி மேனன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கதாநாயகர்கள் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. விரைவில் இது நடக்கும் என்று நம்புகிறார் லட்சுமி மேனன்
 

Show commentsOpen link

[Continue reading...]

ஐஸ்வர்யாராயே தான் வேணும்…. அடம் பிடித்துக் காத்திருக்கும் பவர்ஸ்டார் power star with ishwaryarai

- 0 comments

ஐஸ்வர்யாராயே தான் வேணும்…. அடம் பிடித்துக் காத்திருக்கும் பவர்ஸ்டார்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

சென்னை: வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடித்து விட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். சன்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'சூப்பர் குடும்பம்'. அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்போர் தங்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சியான இதில் நடுவர்களாக நடிகைகள் மீனா மற்றும் சங்கீதா, மற்றும் விஜய டி.ராஜேந்தர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சில வாரங்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. அந்தவகையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவர்ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவரது டிரேட்மார்க் பதில்களும் உங்களுக்காக….

இப்பவும் 'பெட்ரோமாஸ்'லைட் தானா…? முன்பொரு முறை அளித்த பேட்டியில் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பவர்ஸ்டார். அதனை நிகழ்ச்சித் தொகுப்பாளரான தீபக் மீண்டும் நினைவு படுத்தி, தற்போது யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.

ஐஸ் தான் வேணும்…. அதற்குப் பவர்ஸ்டார், 'தன் விருப்பத்தில் மாற்றமேயில்லை. ஐஸ்வர்யாவுடன் தான் நடிக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

யாரோடு ஜோடி போட ஆசை….? நிகழ்ச்சியில் இரண்டு நடிகைகள் நடுவர்களாக அமர்ந்துள்ளனரே, அவர்களில் யாருடன் ஹீரோவாக நடிக்க ஆசை என மீண்டும் தொகுப்பாளர் கேட்டார்.

நா சின்னப் பையன் மேடம்… அக்கேள்விக்கு டக்கென பதிலளித்த பவர், 'அவர்கள் இருவரும் நான் பள்ளி மாணவராக இருந்த போது ஹீரோயின்களாக அறிமுகமானவர்கள். எனவே, அவர்களுடன் நடிக்கும் எண்ணமில்லை' எனத் தெரிவித்தார்.

ரசித்து சிரித்த நடிகைகள்…. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னமே பவர்ஸ்டாரை கலாய்க்க முன் அனுமதி வாங்கியிருந்தார்கள் நடுவர்களாக இருந்த மீனாவும், சங்கீதாவும். எனவே, பவர்ஸ்டார் பேசுவதை இருவருமே ரசித்து சிரித்தார்கள்.

கலக்குறே பவர்…. பவரின் ஒரு பதிலுக்கு நடிகை சங்கீதா 'வாழ்றீங்க சார்' என சூது கவ்வும் பட டயலாக்கை கூறி கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

Show commentsOpen link

[Continue reading...]

கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail

- 0 comments

பெண் பாலியல் புகார் வழக்கு: கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail
Tamil NewsToday,

மதுரை, செப். 23–

தி.மு.க.வின் நெல்லை மாவட்ட செயலாளராக உள்ள கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை டவுனை சேர்ந்த தமிழரசி என்ற பெண் பாலியல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கருப்பசாமி பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வக்கீல் செல்லப்பாண்டியன் போலீசாரிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது பாலியல் புகார் கொடுத்த தமிழரசி கோர்ட்டில் ஆஜராகி தன்னையும் வழக்கில் சேர்த்து கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (இன்று) நீதிபதி சி.டி.செல்வம் ஒத்தி வைத்திருந்தார். மேலும் தமிழரசியின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று முன் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது கருப்பசாமி பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ், வக்கீல் ஆனந்த் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் கூறும்போது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 3 பிரிவு ஜாமீனில் விடக்கூடியதுதான். பெண் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு–4–ன் கீழான வழக்கில் இந்த புகார் வரவில்லை. பொது இடத்தில் பெண்களை துன்புறுத்தினால்தான் அந்த சட்டம் பொருந்தும். ஆனால் மனுதாரர் ஒரு அறையில் நடந்த சம்பவமாக புகாரில் தெரிவித்துள்ளார். எனவே கருப்பசாமி பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் செல்லப்பாண்டியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி செல்வம் அனைத்து வழக்குகளிலும் போலீஸ் காவல் தேவையற்றது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே அவரிடம் தேவைப்பட்டால் நீங்கள் விசாரிக்கலாம் என்றார்.

மேலும் கருப்பசாமி பாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கிய அவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் தொடர்ந்து கையெழுத்திடவும் உத்தரவில் கூறியிருந்தார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

அபிஷேக்குடன் ரீஎண்ட்ரியாகும் ஐஸ்வர்யா abisek and ishwarya rai

- 0 comments

அபிஷேக்குடன் ரீஎண்ட்ரியாகும் ஐஸ்வர்யா
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனது கணவருடன் மீண்டும் நடிக்க வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட்டின் கனவு கன்னியான ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

பின்பு பன்சாலி இயக்கத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரீ எண்ட்ரி ஆகப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.

ஆனால் குத்துபாடலுக்கு நான் நடனம் ஆடவில்லை என்று மறுத்துவந்தார் ஜஸ்வர்யா.

இந்நிலையில் ரீ எண்ட்ரியை தனது கணவருடன் ஆரம்பிக்கப்போகிறாராம்.

இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிமேஸ் ரேஷாமியா மாசும் படத்தினை ரீமேக் செய்யப்போகிறாராம்.

இந்த படத்தில் நசுதின் ஷா மற்றும் சபானா அசிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய உள்ளராம்.

இதற்காக பச்சன் குடும்பத்திடம் இருந்து வரும் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.

Show commentsOpen link

[Continue reading...]

விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது mumbai woman molested 5 people arrest

- 0 comments

மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது mumbai woman molested 5 people arrest
Tamil NewsYesterday, 05:30

மும்பை, செப். 23-

மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார்.

காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த சங்கீதாவிற்கு, முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் இரவில் அந்த டெம்போவிலேயே தனது குழந்தைகளுடன் தூங்கிவந்தார். வழக்கம்போல் நேற்று சங்கீதா டெம்போவில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் வந்து சங்கீதாவை எழுப்பி தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்தார். உடனே 2 பேரும் டெம்போவில் ஏறி சங்கீதாவை மிரட்டி கற்பழித்தனர்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் டெம்போ டிரைவரும், அவரது நண்பரும் சென்ற பிறகு அந்த 2 பேரும் சங்கீதா அருகே சென்றனர். அவரை மிரட்டி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கற்பழித்தனர்.

பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் சங்கீதாவை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. 5 பேரும் காட்டுமிராண்டிதனமாக சங்கீதாவை கற்பழித்து அங்கேயே விட்டு விட்டனர்.

இந்த நிலையில் காலையில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சங்கீதா அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் தன்னை 9 பேர் சீரழித்து விட்ட கதையை கூறி கதறி அழுதார். உடனே போலீசார் அவருக்கு மாற்று உடை கொடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் முதலுதவி சிகிச்சைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் குரே முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே, முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சங்கீதா போலீசாருடன் சென்று தான் கற்பழிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். அங்கு கிடந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சங்கீதா கொடுத்த அடையாளத்தின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 30–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமீபத்தில் மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் 23 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர், 18 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஆகியோர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அதிர்வலை அடங்குவதற்கு முன் மற்றொரு கும்பல் கற்பழிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

இந்தியன் ஆயில் அணி ‘சாம்பியன்’ india hockey match indian oil team win

- 0 comments

அகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ஆயில் அணி 'சாம்பியன்' india hockey match indian oil team win
Tamil NewsYesterday,

சென்னை, செப்.23-

சென்னையில் நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ஆயில் அணி 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

88-வது எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது.

இதில் இந்தியன் ஆயில்-ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் ஆயில் 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

இந்தியன் ஆயில் அணியில் கேப்டன் தீபக் தாகூர், பிரப்ஜோத்சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். ஐ.ஓ.பி.அணியில் ரூபிந்தர் பால்சிங் 2 கோலும், எஸ்.எம்.ரபீக், அமர்தீப் எக்கா தலா ஒரு கோல் திருப்பினார்கள். பரிசளிப்பு விழாவில் முருகப்பா குழும சேர்மன் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஆயில் அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்தியன் ஆயில் வீரர் ரகுநாத் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger