Sunday 22 April 2012

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.2

- 0 comments


குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.

இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் நாம் எடுத்துக் க ொண்டதோ கலியுகத்தை மட்டுமே.
மேலும் விவரங்களுக்கு

அக்காலத்தில் பாமரனுக்கும் பாராளுபவனுக்கும் வானியல் விளக்கங்களைக் கூறி அன்றைய நாள் எப்படிப் பட்டது, என்ன வருடம், என்ன மாதம், என்ன தேதி, என்ன கிழமை, என்று கூறுவதற்கு ஒரு ஆள் தேவைப் பட்டான். அதற்காகவே ஒரு குழுவினர ் இருந்தனர். அவனும் தனது முன்னோர்களின் வாய்மொழியில் பின் பற்றப்பட்ட காலண்டரை தினசரி அப்டேட் செய்து கண்கானித்து அவனே ஒரு நாட்காட்டியாகவும், (Event Manager) ஈவண்ட் மேனேஜராகவும் செயல்பட்டான். 

உதாரணமாக, ஒருவர் கணபதி பூஜை செய்து இந்தப் பதிவை இடுகிறார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி பூஜையின் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது. அடுத்தமுறை விஷேசங்களில் கலந்து கொள்ளும் போது கவனியுங்கள்.

அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பிப்பார்கள் .

அடுத்து வருடம்,மாதம் ,� �ிழமை, திதி, நட்சத்திரத்தையும் (மொத்தத்தில் காலத்தையும்) அடுத்து பூகோள ரீதியாக இடத்தையும் குறிப்பிடுவார்கள், உதாரணத்திற்கு இன்றைய நாளுக்கான மந்திரமும் விளக்கமும்.

"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே
இந்த இனிய நல்ல வேளை ,பிரம்மனின் இரண்டாவது பரார்த்தத்தில்
� �்வேத வராஹ கல்பே
முப்பத்தாறு கல்பங்களில் முதல் கல்பமாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில்
வைவஸ்வத மன்வந்த்ரே
பதினான்கு மன்வந்திரங்களில் ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் .
அஷ்டாசாவிகும்சதி தமே
71 சதுர்யுகங்களில் 28வது சதுர்யுகத்தில்
கலி யுகே 5113
நான� ��காவது யுகமாகிய கலியுகத்தில் 5113வது வருடத்தில் . (2012)
ப்ரதமே பாதே
பிரபஞ்சத்தின் முக்கியமான பகுதியில்
ஜம்புத்வீபே
ஏழு தீபகற்பங்களில் முதல் தீபகற்பமாகிய ஜம்பூ த்வீபத்தில் (நீரால் சூழப்பட்டுள்ள,  நாம் வசிக்கும் இந்திய தீப கற்பத்தில்),
பாரத வருஷே
ஒன்பது வர்ஷத்தில் முதல ் வர்ஷமாகிய பாரத வர்ஷம், (இதுவும் இடம் பற்றியதே)
பரத கண்டே
ஒன்பது கண்டங்களில் முதல் கண்டமாகிய.பரத கண்டத்தில்,
மேரோர்: தக்ஷ'ணே பார்ச்வே
மேரு எனும் இமயமலையின் தெற்கு புறத்தில்.
சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே
மேற்கண்ட ப ிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்தில், பூஜை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலமாகிய
நந்தன.. நாம ஸம்வத்ஸரே
26 வது வருடமாகிய ..நந்தன.. எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்,
(உத்தர/தக்ஷ¢ண) உத்தராயனே
உத்த்ராயண காலத்தில்
(வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) வஸந்த ருதௌ
வஸந்த ருது எனப்படும் வஸந்தகால பருவத்தில்
சித்திரை மாஸே
சித்திரை மாதத்தில்
(சுக்ல/ கிருஷ்ண) கிருஷ்ணபட்க்ஷ திரயோதசி
தேய்பிறையில் திரயோதசி திதியில்
சுபதிதௌ வாஸர:
(பானு/ இந்து/� �ௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) குரு வாஸர யுக்தாயாம்
சுபயோக சுபதினமான வியாழக்கிழமையில் (19-04-2012)
.உத்திரட்டாதி...... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
இந்தப் பதிவு இடப்பட்டது. என்று முடித்து , யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
மேலும் விளக்கமறிய

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சில குடும்பத்தினர் அப்டேட் செய்து பஞ்சாங்கம் வெளியிடுகிறார்க� �். மேலும் நீங்களே பஞ்சாங்கம் தயாரித்துக் கொள்வதற்கான அட்டவணைகளும் தற்பொழுது வந்துவிட்டன. 

திண்டுக்கல்லைச் சேர்ந்த இரா.அருள்வேல் என்பவர் கூட மூன்று புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார்.


காலத்தை இவ்வளவு தெளிவா க கணிதம் செய்து இருப்பவன், இவர்கள் கூறும் அயனாம்சத்தையும் தெளிவாக கண்டு அதற்கான கணக்கீடுகளையும் அப்டேட் செய்துள்ள விதமறிய பஞ்சாங்கம் வாங்கிப் படித்துப்பாருங்கள் . இவர்களது கணிதம் துல்லியமானது என்பதை அறிய கிரஹணங்கள் பற்றிய குறிப்புகள் ஒன்றே போதும், நிகழும் நேரம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் (Duration) ஆகியவற்றை வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு (பல) வர� ��டத்திற்கு முன்பே கணித்துக் கூறும் திறமை ஒன்றே போதும் பஞ்சாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள. 

காலண்டரைப் பற்றி அறியாத மூடன்தான் தனது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் வருடப் பிறப்பை மாற்றுவான். இப்பொழுது "தை " மாதம் என்பார்கள். பின்பு சங்ககாலத்தில் "தயா "என்று இருந்ததை ஒரு குள்ள நரிக் கூட்டம் "தை" என்று மாற்றி விட்டது என்பார்கள ்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளாக்கில் பூமியின் அச்சுக்கு ஏற்படும் பம்பர சுழற்சியைப் பற்றியும் அது 25783 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றும் அதனால் காலம் சிறிது சிறிதாக முன் செல்கிறது எனவும் கூறப் படுகிறது.

 
அதனால்தான் 2200 வருடங்களுக்கு முன்பு தையாக இருந்தது இன்று சித்திரையாகிவிட்டது என கூறப்படுகிறது. அப்படியானால் இன்னும் கொஞ்சம் முன்னால் போய் 25783 வருடங்களுக்கு முன் இதே மாதம் சித்திரையாகத் தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே குஜ்ஜாலின் objection if any,overruled.


எது எக்கேடு கெட்டாலும் பூமத்திய ரேகை இடம் மாறுவதற்கான வாய்ப்பு கிடையாது. � �கவே காலக் கணிதத்தில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பு
இல்லை.
A 12th century text by Bhāskara II[9] says: "sampāt revolves negatively 30000 times in a Kalpa of 4320 million years according to Suryasiddhanta, while Munjāla and others say ayana moves forward 199669 in a Kalpa, and one should combine the two, before ascertaining declension, ascensional difference, etc."[10] Lancelot Wilkinson translated the last of these three verses in a too concise manner to convey the full meaning, and skipped the portion combine the two which the modern Hindi commentary has brought to the fore. According to the Hindi commenta ry, the final value of period of precession should be obtained by combining +199669 revolutions of ayana with −30000 revolutions of sampaat to get +169669 per Kalpa, i.e. one revolution in 25461 years, which is near the modern value of 25771 years.

துருவ நட்சத்திரம் என்று ஒன்று இருப்பதால் அதை வைத்து இந்த பம்பர சுழற்சியையும் ஜோதிடர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்கள் கணக்கீட்டில் வைத்துள்ளனர். அயாணாம்சம் என வைத்து அதற்கான திருத்தத்தையும் வைத்துள்ளனர். தங்கள் கணிதத்தில் இவர்கள் கூறும� � பம்பர சுழற்சியினால் சுமார் 12,000 வருடங்களுக்கு ஒரு முறை தென் துருவத்தில் நிகழும் வெட்பதட்ப நிலை வட துருவத்திலும், வடதுருவத்தில் நிகழும் வெட்ப தட்ப நிலை தென்துருவத்திலும் மாறி மாறி நிகழும். சிலர் இதைத் தவறாக புரிந்து கொண்டு தென் துருவம் வடதுருவமாக மாறிவிடும் என்பார்கள். அப்படியெல்லாம் பூமி தலைகீழாக மாறுவதில்லை. சுக்கிரன்தான் அப்படி சுமார் (177 அதாவது தலைகீழுக்கு 3 ட� ��கிரி கம்மி) தலைகீழாக மாறுகிறது. ஆகவே பஞ்சாங்கம் தவறென்பதற்கும் வழி இல்லை.

ஆகவே வினோத்குமாரின் objection overruled.

இரா.சந்திரசேகர்,
பழனி.


http://tamil-shortnews.blogspot.com




[Continue reading...]

இலங்கையில் கோழி "பிரசவித்தது'!!வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம்

- 0 comments


வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல் பல்வ ேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக முட்டையிட்டதும் கோழி அதன் மீதமர்ந்து அடை காக்கும். கோழியின் உடல் வெப்பத்தால் முட்டையில் இருந்து சில நாட்களுக்குப் பின் கோழிக் குஞ்சு வெளிவரும். இது தான் வழக்கம். ஆனால் இலங்கையில் கோழியொன்று முட்டையிடாமல் நேரடியாக குஞ்சை பிரசவித்த சம்பவம ் நடந்துள்ளது.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள கால்நடை மருத்துவர் பி.ஆர்.யாப்பா என்பவர் கூறுகையில் "இந்த கோழியின் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கோழியின் வயிற்றிலேயே முட்டை தங்கிவிட்டது. கோழிக்குள்ளேயே இருந்த முட்டையிலிருந்து 21 நாட்கள் கழித்து குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சை பிரசவித்த கோழி அடுத்த சில நிமிடங்களில் இறந்து விட்டது. கோழி இறந்தத� ��்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் உள்காயங்கள் காரணமாகத் தான் கோழி இறக்க நேரிட்டது என்பது தெரியவந்தது.


http://kaamakkathai.blogspot.com/




[Continue reading...]

தமிழீழம் குறித்து பேசும் கருணாநிதி பயங்கரவாதி: கோத்தபாய பாய்ச்சல்

- 0 comments


தமீழீழம் குறித்து பேசுபவர்களை பயங்கரவாதிகளாக கருதுவதாகவும் தமீழீழத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளும் படியும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தம்பி கோத்தபாய ஆவேசமாக கூறியுள்ளார்.
தனித் த� �ிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒரு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை � �ழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.

அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்க� ��ம் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்


http://kaamakkathai.blogspot.com/




[Continue reading...]

சுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்டம்

- 0 comments


எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து ஸ்விட்சர்லாந்து வருவதற்கு மீண்டும் ஒதுக்கீடு கொண்டுவரும் அரசின் திட்டம் குறித்து பல பத்திரிகைகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான போலந்து வங்கேரி செக் குடியரசு ஸ்லோவேனியா சுலோவேகியா மற்றும் லித்துவேனியா பால்டிக் நாடுகள் லாத்வியா எஸ்டோனியா போன்றவற்றிலிருந்து 2000பேர் வரை ஸ்விட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து வர புதிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 மாதம் வரை இங்கு தங்கலாம். இந்தத் திட்டம் குறித்து பத்திரிகைகள ் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன. அவற்றில் சில ஆதரவும் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுமின்றி ஐரோப்பாவிற்குப் போய் வர இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் நாளிலிருந்து அறிமுகமாகும் இத்திட்டம� �� மறு ஆய்வுக்கு உட்பத்தப்படும்.

ஸ்விட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இதனால் மேம்படும் என்றாலும் இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றுவது குறித்தும் இதன் விளைவுகள் குறித்தும் பல பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன.




http://kaamakkathai.blogspot.com/




[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger