Thursday 3 May 2012

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 8

- 0 comments


பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அ லிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்த ில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கி� � பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக � ��ிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.

வினோத்குமாரின் கே� ��்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற் சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடிய� �ம். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந் திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கி� �் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்� �ிற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்த� �ு நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திரும� � பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் "வியாழ நோக்கம்" என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வே லை இல்லை. அதிலும் இவர் "ரொம்ப நல்லவர்" ஆதலால் இவர் "அதுக்கு சரிப்பட மாட்டார்" ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அ� �்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங் குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு ய ானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட ்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோ திடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். "உபகிரகம்" என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 ச� �்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்� �ின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம� �� நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இர ு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள க� ��ஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலு ம் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இர� �சி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.


http ://indiangirlsshow.blogspot.in





[Continue reading...]

படைபலப் போட்டி: குழம்பிய ஆசியக் குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா

- 0 comments


அமெரிக்கா தனது உலக வல்லாதிக்கத்தைப் பாதுக்காக்க தனது படை பலத்தைக் கூட்டுகிறது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்க சீனா தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பலத்திறு ஈடு கொடுக்க இந்தியா தனது படைபலத்தைப் பெருக்கிறது. இந்தி� �ாவிற்கு ஈடு கொடுக்க பாக்கிஸ்த்தான் தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பல அதிகரிப்பு ஒஸ்ரேலியா முதல் ஜப்பான ஈறாக மத்திய கிழக்கு நாடுகள் வரை ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறு சிங்கப்பூரில் இருந்து பென்னம் பெரிய ஜப்பான் வரை படைக்கலன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகின்றன. அமெரிக்கா இலாபமீட்டுகிறது. சிங்கப்பூர் உலகின் பத்தாவது பெரிய படைக்கலன ் இறக்குமதி செய்யும் நாடு. வியட்னாம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிக் குவிக்கின்றன.

தீர்க்கப்படாத ஆசியப்பிரச்சனைகள்
இந்தியா சீனாவிடை எல்லைப் பதட்டம். தீர்க்க ப்படாத எல்லைப் பிரச்சனை. அப்படியே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிடையும். தென் கொரியாவை அழிக்க நினைக்கும் வட கொரியா. ஜப்பானின் வர்த்தகக் கடற்போக்குவரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் சீனா. தென் சீனக் கடல் முழுவதும் (மற்ற நாட்டுக் கடற்படுக்கை உட்பட) தனது என அடம்பிடிக்கும் சீனா. இப்படி ஒரு கொதி நிலை ஆசியா எங்கும். ஏபரல் மாதம் வட கொரியா, இந்தியா, பாக ்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நீண்ட தூர ஏவுகணைகளைச் பரீட்சித்துப் பார்த்தன.

 இந்திய சீனப் போட்டி
சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் தனது தடங்கலற்ற கடல் வழி வழங்கற்பாதையை உறுதி � ��ெய்யவும் தனது பாது காப்ப்புச் செலவீனங்களை அதிகரித்தது. 2011இல் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்ரேலியா தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையை மீளாய்வு செய்தது. மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியவர்களிலும் அதிக வறியவர்களைக் கொண்ட இந்தியா உலகின் மிகப்பெரிய படைக்கலன் இறக்குமதி நாடாகியது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா தனது அணுப் படைக்கலன்களை இரட்டிப்பாக்கியுள்ளத� ��. பாக்கிஸ்த்தானிடம் இந்தியாவிலும் பார்க்க அதிகமான அளவு அணுப் படைக்கலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானிடம் உள்ள அணுப்படைக்கலனகள் தீவிரவாதிகள் கைக்குப் போய்ச்சேரும் ஆபத்து உள்ளது. 2015இல் இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்தியா நூற்றுக்கு மேற்பட்� � கடபடைக் கப்பல்களை தனது படைக்குச் சேர்க்கவிருக்கிறது. இந்தியா சீனாவிலும் பார்க்க கிட்டத்த்தட்ட இரு மடங்கு தனது கடற்படையை நவீன மயப்படுத்தச் செலவு செய்கிறது. சீனாவின் படை பலம் இந்தியாவிலும் இரண்டு மடங்கு என்று சொல்லலாம். சில அம்சங்களைப் பொறுத்தவரை மூன்று மடங்கு என்றும் சொல்லலாம். ஆனால் கடற்படை வலிமையில் சினாவிற்கு இந்தியா பெரும் சவாலாக இருக்கிறது. சீனப் பொருள ாதாரம் இந்தியாவினதிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியது. சீனாவிற்கு படைக்கலன் அதிகரிப்புப் போட்டியில் இந்தியா ஈடாகமாட்டாது என்பது பலரது கருத்து. ஆசிய நாடுகளின் 2011இல் தமது பாதுகாப்பிற்கு செலவிட்ட தொகை

சீனாவின் தாழ்வு மனப்பான்மை

நேட்டோப் படைகள் அடிக்கடி உலகின் பல பகுதிகளிலும் சென்று படை நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா 1979இல் வியட்னாமில் மூக்க� �டை பட்டதன் பின்னர் வேறு எங்கும் போரில் ஈடுபட்டதில்லை. சீனாவின் கடற்படை ஒரு கடற் போரில் கூட ஈடுபட்டதாக சரித்திரம் இல்லை. தனது படையின அனுபவமற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை சீனாவிற்கு உண்டு. சீனா தனது படை பலத்தைப் பரீட்சிக்கவும் கள அனுபவம் பெறவும் முயலுமா என்ற அச்சம் பலரிடம் உண்டு. சுவிட்சலாந்தின் நிலப்பரப்பிலும் முன்று மடங்கு நிலப்பரப்புக் கொண்ட இந்தியாவின் � ��ருணாச்சலப் பிரதேசத்தை தன்னுடையது என்கிறது சீனா. இந்தியாவின் எல்லைகளுக்குள் பல இடங்களில் சீனா புகுந்து படை நிலைகளை அமைத்துள்ளது.

 ஆசியாவும் மக்களாட்சியும்
ஆசியர்கள் மக்கள் தொகையிலும் உழைப்பிலும் மூளைத் திறனிலும் ஐரோப்பா வாழ் ஐரோப்பியர்களையும் வட அமெரிக்கா வாழ் ஐரோப்பியர்களையும் மிஞ்சக் கூடியவர்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதாலும் சரியா� �� ஆட்சியாளர்களையோ சரியான ஆட்சி முறைமையையோ கொண்டிருக்காததால் பின் தங்கி விடுகிறார்கள். சீனாவில் அரச முதலாளித்துவம். இந்தியாவில் மக்களாட்சி முறைமை. ஆனால் மக்களாட்சி முறைமைக்குத் தேவையான அரசியல் கட்சிகளுக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. கட்சிகள் தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது தனிப்பட்ட குழுவினர்களின் பிடியில் இருக்கின்றன. கட்சிக்குள் மக்களாட்சி முறைமை சரியாக � ��ல்லாவிடில் மக்களாட்சி முறமை வேலை செய்யாது. ஊழல் நாட்டில் தவிக்க முடியாத ஒரு அம்சமாகிவிட்டது.

ஊர் இரண்டுபடக் கொண்டாடுக் கூத்தாடியாக அமெரிக்கா
சீனா தனது படைத்துறையை அபரிமிதமாகப் பெருக்க ஆசிய-பசுபிக் நாடுகள் சீனாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலனகளை வாங்குவதுடன் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நாடுகின்றன. அமெரிக்க இந்த நாடுகளுடன் தனது வர்த்தகத்த� �� வளர்த்தும் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்தும் தனது உலக ஆதிக்கத்தைப் பெருக்குகிறது.

http://naamnanbargal.blogspot.com





[Continue reading...]

பின் லாடன் கொல்லப்படு ஒராண்டின் பின்னர்????

- 0 comments


ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்று அது இரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று இன்னும் அவரது இயக்கமான அல் கெய்தா அழிவு விளைவிக்கக்� ��ூடிய ஒரு தீவிரவாத இயக்கமா? மற்றது ஒசமா பின் லாடன் கொலை பராக் ஒபாமாவின் வெற்றிக்கு வழிவகுக்குமா? பின் லாடன் கொல்லப்படதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மதபோதகர். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொலைக்கு பராக் ஒபாமா ப ெருமைப்பட முடியாது அவரது இடத்தில் ஜிம்மி காட்டர் இருந்திருந்தாலும் ஒசாமா பின் லாடனைக் கொல்ல உத்தரவிட்டிருந்திருப்பார் என்கிறார் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருப்பவராகக் கருதப்படும் மிட் ரூணி. பின் லாடன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு நாளில் பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானிற்கு திடீர்ப் பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்த அமெரிக்கர்களு� �்கு உரையாற்றவிருக்கிறார். இது அவரது தேர்தல் உத்தி. இனி வரும் நாட்களில் அமெரிக்கத் தேர்தல் களத்தில் பின் லாடன் கொலை பெரிதாக அடிபடலாம்.

பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். அமெரிக� ��க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் பின் லாடன் கடுமையாகத் தேடப்பட்டதால் அவரால் தனது இயக்கத்தினருடன் தொடர்பாடல்கள் மேற்கொள்வது கடினம் என்ற நிலை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றியிருந்தார் பின் லாடன். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த franchise இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து விட்டது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவரான � ��ன்வர் அல் அவ்லாக்கி இந்த இயக்கங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகிறார். சோமலியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் செயற்படும் அல் கெய்தாவினர் அன்வர் அல் அவ்லாக்கியின் தலமையில் திருப்தியடையவில்லை. அரபு வசந்தத்தில் ஈடுபட்ட போராளிகள் அல் கொய்தாவின் கொள்கைகளால் கவரப்பட்டவர்களுமல்ல. அமெரிக்க எதிர்ப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவர்களுமல்ல� ��்.

அய்மன் அல் ஜவாஹ்ரி  Ayman al-Zawahri தற்போது அல் கெய்தாவின் தலைவராகக் கருதப்படுகிறார். அவரது தற்போதைய பிரச்சனை அமெரிக்கவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க  அமெரிக்க ஆளில்லா விமானங்களிடமிருந்து தன்னையும் தனது அமைப்பையும் பாதுகாப்பதே. ஆப்கானிஸ்த்தானில் பதுங்கும் அல் கெய்தா Al Qaeda in the Arabian Peninsula (AQAP) அரபு குடாநாட்டில் அல் கெய்தா என்னும் பெயரில் யேமனில் வளர்� �்து வருகிறது. யேமனில் அதிக ஆளில்லா விமானத் தாக்குதல் நடாத்த அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவிடம் அனுமதி கோரியுள்ளது.

இலண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஒலிம்பிக் மைதானக் கூரைகளில் ஆறு இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அல் கெய்தா பற்றிய பயம் இன்னும் மேற்கு நாடுகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல் -கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் 2012 ஏப்ரல் 15 திகதி ஆப்கானிஸ்த்தானில் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலித்தன.

அல் கெய்தா பலவீனப்பட்டுவிட்டது என்று மேற்கு நாடுகளின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்த போதும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்கவிற்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்ப்பு உணர்வு மாறியதாகவோ அல்லது குறைந்ததாகவோ இல்லை. அதே வேளை அல் கெய்தவிற்கு அமெரிக்க ஆதரவு இசுலாமிய நாடுகளான எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாக வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பின் லாடனின் கடைசிக் கனவு 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் அமெரிக்கவின் பொருளாதாரத்தி� ��்கு நெற்றியடி கொடுக்கக் கூடிய ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே. பின் லாடன் இறந்து ஒரு ஆண்டு கடந்தும் அக்கனவை அல் கெய்தா நிறைவேற்றவும் இல்லை பின் லாடனின் கொலைக்குப் பழிவாங்கவுமில்லை. இது அல் கெய்தாவின் பலவீனத்தின் எடுத்துக் கட்டா?

http://naamnanbargal.blogspot.com





[Continue reading...]

மேதினம்: தகவல்களும் நகைச்சுவைகளும்

- 0 comments


 அமெரிக்காவில் இம்முறை மேதின ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்கள் நடக்க விருக்கிறது. காவல்துறையினர் பெரும் எடுப்பில் பாதுகாப்பு நடவடிக்கைக்களை எடுக்கின்றனர். உலகெங்கும் மே முதல் நாள் தொழிலாளர் தினமாகாக் கொண்டாடப் பட� �கிறது. ஆனால் அமெரிக்காவிலும் கனாடாவிலும் அது தடை செய்யப்பட்டு அன்றைய தினம் சட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பிரித்தானியாவில் கம்ப நடனம்
பிரி� �்தானியாவில் மே முதல் நாள் கம்ப நடனநாளாகக் கொண்டாடப் படுவதுண்டு. மே முதல் நாள் விடுமுறை இல்லை. மே மாதத்து முதல் திங்கட் கிழமை விடுமுறை நாளாகும்.

மேதினம் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பமாகும் தினம் என்று சிலர் கொண்டாடுகிறார்கள்.

சிலர் மேதினத்தை கருத்தரிக்க உகந்த தினம் என்று அதுவும் மரங்களுக்கு அடியில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் என்று கருதுகிற� �ர்கள்.

பொதுவுடமை(கம்யூனிசம்) நாடுகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் அரச முதலாளித்துவ நாடுகளில் மேதினத்தன்று படை அணிவகுப்புக்கள் பெரிய அளவில் நடக்கும். இரசியாவும் சீனாவும் இலங்கை இன அழிப்புக்கு இந்தியாவுடன் இணைந்து துணை போனதையும் உலக அரங்கில் இலங்கை அரசு தண்டிக்கப்படுவதை தடுப்பதையும் நாம் அறிவோம்.



அமெரிக்காவில் தொலைக்காட்சியை நீ பார்ப்பாய். சீனாவில் தொலைக்காட்சி உன்னைப் பார்க்கும்.

அமெரிக்காவில் பார்ட்டிக்கு(கேளிக்கை) நீ அடிமையாகிவிடுவய். சீனாவிலும் பார்ட்டிக்கு(கம்யூனிஸ் கட்சி) நீ அடிமையாகிவிடுவாய்.

God give me work, till my life shall end
And life, till my work is done.
Happy May Day

http://naamnanbargal.blogspot.com





[Continue reading...]

யாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா?

- 0 comments


நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக� ��களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட  நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்ட� �்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.

பசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த 
போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை � ��ட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை
 எப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட� �டங்கள் வெறும் கண்துடைப்பே.

நடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர ்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா? எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன? மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த க� ��ண்டாட்டங்கள் தீணி போடுமா? அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா? இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உல கத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.

மண்முட்டைகளால் அம ைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம். 

எல்லாமே ஓய்ந்து விட்ட ன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது   மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும்  கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.

மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது 
மரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிம� �ல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள். 
கடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற்றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண் கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள். 

கழகங்க� ��ும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
எவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழிய� ��த நினைவுகள். 
மீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.

மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா ? பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.
மக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும். 


http://tamil-cininews.blogspot.com





[Continue reading...]

கதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்

- 0 comments


மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட� ��டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.
தோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும ் தினக் கொண்டாட்டம் தான். 
கிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள் மாலை நேரம் தோட்டத்து வெளியில் ஊர் முழுதும் ஒன்று திரண்டிருக்கும். தோட்டத்து வெளியில் இளவட்டம் விளையாடும் விளையாட்டினை பார்க்க கிளடுகள் முதல் குஞ்சு குருமன் வரை ஒன்று கூடியிருக்கும். 

 அருவி வெட்டிய வயல்வெளியில் வரம்பு நேருக்கு பெட்டியடித்து கிளித்தட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேரும் விளையாடல்லாம் ஊர் இளவட்டம் எல்லாம் இரண்டு கன்னையாய் பிரித்து களத்தில இறங்குவார்கள். அதற்கு ஏற்ப பெட்டிகள் அமைக்கப்படும். இந்த கிளித்தட்டு விளையாட்டு யாழ்ப்பாணத்தில் 1990 முன்னரே பிரபல்யமாகப் பேசப்பட்டது. இளவட்டத்தி� ��ர் கூட்டம் ஊர்களில் நிரம்பியிருந்தது இந்த காலத்தில் தான். பகல் முழுதும் இளவட்டத்தை ஊரில் காண முடியாது. ஆனால் மாலை நேரம் வயல் வெளியின் கதாநாயகர்கள் இவர்கள் தான். 

காலை முழுதும் வீட்டில வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில்; பெண்களும் இந்த இடத்துக்கு வருவார்கள். வுந்தவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த வீட்டுக்கதை இந்த வீட்டுக்கதை என்று த� ��்கள் சோகங்களை பகிர்ந்து கொள்வார்கள் . இதுவே சில வேளை அடிபாடாகவும் வந்து விடும் ஆண்களும் பெண்களும் இணைந்தே கிளித்தட்டு விளையாடுவார்கள். அவளவு ஒற்றுமை இருந்தது அந்த காலத்தில. 

 தோட்டத்து வெளிகளில் உணவிற்காக வரும் கிளிகளை தோட்டத்துக்காரர்கள் வரம்புகளில் நின்று தம் இரு கைகளையும் நீட்டிக் கலைப்பார்கள.; இந்த வழக்கமே பின் விளையாட்ட� �க தோற்றம் பெற்றது. 

மதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேர நித்திரைக்கு பின் வயதான பாட்டன் பாட்டிகள் பொல்லுகளை ஊன்றியபடி வயல் வெளி நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். ஏதோ அவர்களும் விளையாடுறவர்களை � ��ோல. ஆங்க விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தம் பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டுப்பார்கள். களத்தில நிற்கின்ற இளவட்டத்திடம்  ஏய் அடிடா ? ஏன்டா விட்டாய் நான் என்டா  எட்டி அடிச்சிப்புடுவன் என்று வெறுப்பேத்திரது மட்டும் தான் இவங்க வேலை  

மாலை  நேரத் தென்றலும் வயலுக்கு வரும் பறவைகளின் சந்தமும் கிளித்தட்டு விளையாடுபர்களை விட பார்ப்பவர்களின் சந்தமும் ஊரைத் தாண்டியும் கேட்கும். வயலுக்கு நீர் இ;றைக்கும் தோட்டக்காரனுக்கும் கண் இங்க தான் இருக்கும். ஒழுங்கா நீர் இறைக்கிறானோ இல்லையா கிளித்தட்டு மட்டும் ஒழுங்காப் பார்ப்பான். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு மாலை நேரப்பொழுது இங்க தான் போகும். பள்ளிக்கூடம் முடிந்ததும் மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு நாழு மணிக்கெல்லாம் தோட்டத்து வெளி க்கு ஆயராகி விடுவார்கள். தோட்டத்து வரம்பு வெளிகளில் புத்தக்கப் பைகளை போட்டுவிட்டு அமர்ந்திருந்து விளையாட்டை பார்ப்பார்கள். பெரிய அண்ணமார் வர முன்னர் இந்த சின்னஞ் சிறுசுகளின் அணி கிளித்தட்டு விளையாட களத்தில இறங்கிடும். அதுக்காகவே  வேளைக்கு வந்திடுவாங்க. அண்ணமார் வந்ததும் கவலை  தோய்ந்த முகத்துடன் வந்து உற்காருவார்கள். சில வேளை ஆட்கானாது போனால் ஒருவரை விளையா ட்டில சேர்ப்பாங்க அவன் பொது. இரண்டு கண்னைக்கும் விளையாடுவான். ஆவன ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனா தானும் விளையாடுறதா நினைச்சு விளையாடுவான் சிறுகளின் மனங்களை தேத்துவது தான் பாட்டன் பாட்டி வேலையாக இருக்கும். அப்பு தங்கம் அடுத்த வருசம் நீ விளையாடலாம் என்று ஏமாத்துவாங்க. 

இந்த விளையாட்ட பார்க்க வறவங்க சும்மா வர மாட்டாங்க. புலுக்கொடியல் மாங்காய் சீவல் பலகாரம் என்று வீட்டில இருக்கிறதை எல்லாம் கொண்டு வருவாங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் குடுத்து சாப்பிடுவாங்க இதை விடவிளையாடுற ரீமுக்கு தண்ணி எல்லாம் பார்வையாளர்கள் எடுத்து வருவாங்க. இந்த களம ் தான் சிலரது காதலுக்கு அத்திவாரம் போட்ட இடம். கிளித்தட்டு விளையாடும் இளவட்டத்தினர் தான்  கதாநாயகர்கள். கிளித்தட்டு விளையாடும் சாட்டில் தம் காதல் கதைகளையும் பேசி விடுவார்கள். பின்னர் கதை வெளியில் வரும் போது வயல் வெளி போர்க்களமாய் மாறி வரும். சில நேரம் மறுநாள் விளையாட்டு நடை பெறாது. ஆனாலும் எல்லாரும் வயல் வெளிக்கு வந்துவிடுவார்கள்;. நம் கதைகளை பேசி விட்டுசெல்வா� �்கள். எப்படியும் திரும்பவும் விளையாட்டு நடைபெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஒருவளியாக காதலுக்கு ஒளியேற்றி வைத்து விடுவார்கள் பாட்டன் பாட்டிகள். அப்புறம் என்ன மறுநாளே வயல் வெளி களை கட்ட ஆரம்பித்து விடும். 
.
இப்படி எல்லாம் கதைகளையும் சந்தோஸங்களையும் தந்த இந்த வயல் வெளி விளையாட்டு பின் வந்த கால இடப் பெயர்வுகளில் கா னாமல் போய்விட்டது. துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாததே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களையும் வடுக்களையும் பற்றிப் பேசச் சொல்லும். தொடர் காயங்களை சுமந்து வந்ததால் சந்தோஸங்களை நினைத்துப்பார்கவோ அனுபவிக்கவோ முடியவில்லை. தொடர் இடப்பெயர்வுகளும் உயிர்ப்பலிகளும் காணாமல் போதலும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டது. 

ஒன்றாய் திரிந்து ஒன்றாய் விளையாடிய நன்பனின் உயிற்ற  உடல் திடீர் திடீர் என காணமல் போனவர்கள் பெற்றோர்களின் தவிப்புகள் இளவட்டத்தினரை இரவில் கூட காண முடியாதிருக்கும். பொழதுகள் எல்லாம் மரண பயத்துடனே கழிய ஆரம்பித்தன. வயதான பாட்டன் பாட்டிகள் இந்த நிலையை பபார்த்து ஏங்கியே சிலர் இல்லாமலே போய்விட்டனர். இருந்தவர்களும் மனம் விட்டு சந்தோஸமாய் பேசியதில்லை தம் உறவுகளை எப ்படி பாதுகாப்பது என்றே நாட்கள் கடந்தன. 




சோகங்களுக்கும் வலிகளுக்கும் பின்னர் பழக்கப்பட்டு விட்டனர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அறிவியல் எழிச்சியும்  போட்டிகளையும் தேடல்களையும்  அதிகரித்தன . தொலைந்து போன சொந்தங்களும் உறவுகளின் இழப்புக்களும் இறுக்கமான மனம் கொண்ட சமுதாயமாக மாற்றியது. ஓய்வற்ற வேலை படிப்பு என்று இளவட்டத்தினர் பின்னர் சந்தோச உலகத்தை மறந்து விட்டனர். மேலைத்தேய விளையாட்டு அறிமுகமும் பாடசாலையில் போட்டிமுறை விளையாட்டுக்களும் எம்மில் தோற்றம் பெற்ற விளையாட்டு பின்வந்தவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. கிரிக்கெட் வொலிபோல் போன்றன பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. ஊர்களை கிரிக்கெட் மைதானமும் வொலிபோல் மைதானமும் இருக்கும். பக்கத்து ஊர் காரனும் நன்பர்களும் ஒன்றாய் விளையாடுவார்கள் யார் விளையாடுறார்கள் என்று அடையாளம் தெரியாததாலும் விளையாட்டு பற்றி தெரியாதாலும் வயதானர்கள் கூட இதை பார்ப்பதில்லை. உற்சாகப்படுத்த கூடயாரும் இல்லாமல் இந்த விளையாட்டு நடைபெறும். 


கிழமைக்கு கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெறுது. போட்டியில வெல்லனும் என்று நினைத்து விளையாடுவாங்க. சந்தோசமோ பன்பலோ எதுவுமே இல்லப்பா ஆனா அன்னைக்கு நாங்க விளையாடின கிளித்தட்டில இருந்த சந்தோசம் தெரியுமா.? வயல் வெளிய விட்டு வீட்டுக்கு பொறது என்டாலே விருப்பம் இருக்காது. என்று வயதானவர் கூறும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்க்கின்றது. அவளவு சந்தோசமா அந்த விளையாட� ��டில என்று நினைக்க தோன்றுகின்றது.

பொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்தட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இர ுந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் 

விஞ்ஞானம் வள்ர்� ��்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.  



http://tamil-cininews.blogspot.com





[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger