Friday 9 August 2013

Thalaivaa Movie Review - தலைவா விமர்சனம்

- 0 comments
ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வரும் விஷ்வா (விஜய்), அதை கடை கடையாக வினியோகம் செய்து வரும் லோகு (சந்தானம்).இவர்கள் இருவரும் சேர்ந்து சிட்னியில் அடிக்கும் லூட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘தலைவா' என்ற டைட்டிலே மறந்து விடுகிறது. ஹீரோயின் தேர்வு செய்யும் போது, கூடவே ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியாக சந்தானத்தை புக் செய்வது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது.
[Continue reading...]

மனநிலை பாதிக்கப்பட்ட கணவரோடு செக்ஸ் Affected the mood to have sex with her husband

- 0 comments

Affected the mood to have sex with her husband

லண்டன்: மனநிலை பதிக்கப்பட்ட கணவரின்
அருகில்
படுத்து உறங்கினாலோ அல்லது அவருடன்
உடலுறவில் ஈடுபட்டாலோ ஆயுள்
தண்டனை என இங்கிலாந்தில் சீக்கியப்
பெண்ணொருவருக்கு விநோதத்
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
செக்ஸ் வைத்துக்
கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்த
விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தும்
நபர்களும் குற்றவாளிகளே.
சட்டப்படி அவர்களது திருமணம் செல்லாது.
சட்டத்தை மீறி ரகசியமாகத் திருமணம்
செய்து கொள்பவர்களின் திருமணமும்
ரத்து செய்யப்படும்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியப்
பெண்ணொருவர், இங்கிலாந்தில் விநோத
வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில்,
‘இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச்
சேர்ந்த தன்னை இங்கிலாந்தில் வாழும் சீக்கிய
குடுமப்த்தைச் சேர்ந்த ஆண்
ஒருவருக்கு கடந்த 2009ம் ஆண்டு பஞ்சாபில்
வைத்து திருமணம் செய்து வைத்ததாகவும்,
ஆனால் அவர் மனநிலை சரி இல்லாதவர்
என்பது திருமணத்துக்குப்
பிறகே தனக்கு தெரிய வந்ததாகவும்
தெரிவித்திருந்தார்.
மேலும், தாங்கள் இப்போது இங்கிலாந்தில்
வசித்து வருவதாகவும், எனவே, தங்கள்
திருமண பந்தத்தை ரத்து செய்யக்
கூடாது எனவும் கூறியிருந்தார். ஏற்கனவே,
இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில்
இதற்கென உள்ள விசேஷ கோர்ட்டில்
அரசுத்தரப்பு முறையிட்டதையும்,
பிறகு அந்த வாலிபரை, மனநல மையத்தின்
பராமரிப்புக்கு அனுப்பி வைத்ததையும்
விவரமாக அதில் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,
‘மனநிலை பாதிக்கப்பட்ட அந்நபருடன்
அவருடைய
மனைவி எந்தவகையிலாவது பாலியல்
ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால்,
அந்த வாலிபர் குற்றச்செயலில்
பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன்
அடிப்படையில் அவருடைய
மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்'
என தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட
கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பம்
தெரிவித்துள்ள அப்பெண்ணின் மன
வலிமையை பாராட்டிய நீதிபதி,
அவர்களது திருமணத்தை ரத்து செய்ய
மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

வியட்நாமில் 40 வருடங்களுக்கு முன் காட்டிற்குள் பதுங்கிய தந்தை மகன் மீட்பு vietnam pair coaxed out of jungle

- 0 comments


வியட்நாமில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஹோவான் லங் என்பவர் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது நடைபெற்ற போரில் ஏற்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அவரது மனைவியும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் தப்பித்த ஹோவும், அவரது தந்தையும் மத்திய குவாங் நிகாய் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளிடையே பதுங்கிவிட்டனர். அதன்பின் அவர்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காட்டிற்குள் மரத்தின் மீது பூமியில் இருந்து ஐந்தடி உயரத்தில் அமைத்துக் கொண்ட மரவீடு ஒன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். விலங்குகளை வேட்டையாட அம்புகளையும், கொல்வதற்கு கத்திகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.

மரங்களை வெட்டுவதற்காக சிறிய கோடரி ஒன்றையும் செய்து வைத்திருந்தனர். இடுப்பில் அரையாடை மட்டுமே அவர்கள் அணிந்திருந்தனர். சோளம், பழங்கள் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் வேர்களையே உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னால் ஹோவின் சகோதரர் அவர்களைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆனால், அவர்கள் இருவரும் காட்டைவிட்டு வர மறுத்துவிட்டனர். ஒரு நாள் அவர்களைப் பார்க்க நேரிட்ட உள்ளூர் மக்களுக்கு அவர்களின் காட்டுத்தனமான தோற்றமும், வித்தியாசமான சைகைகளும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இவர்களைப் பற்றி அம்மக்கள் உள்ளூர் சமூகத் தலைவர்களிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் கடந்த வியாழன் அன்று, அவர்களைத் தேடி ஒரு குழு காட்டிற்குள் சென்றது. ஐந்து மணி நேரத் தேடுதலுக்குப்பின் மரவீட்டில் அவர்களைக் கண்டுபிடித்த குழு, அவர்களை காட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளது.

அந்த வீட்டில் ஹோவின் தந்தை தனது மிலிட்டரி ஆடைகளையும், தனது மகன் சிறுவயதில் அணிந்திருந்த சிவப்பு கோட் ஒன்றையும் பத்திரமாக வைத்திருந்தார்.

ஹோவிற்கு ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்தது என்று கூறும் அதிகாரிகள், சமூகத்தில் அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் முதல் கட்டமாக, அவர்களுக்கு வேண்டிய மருத்துவ சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

[Continue reading...]

‘தலைவா’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு இல்லை: அரசு உத்தரவு No tax exemption to thalaiva movie government order

- 0 comments

விஜய், அமலாபால் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே, 'தலைவா' படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 'தலைவா' திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளனர். படத்தைப் பார்த்த  குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி 'தலைவா' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.

[Continue reading...]

இந்திய ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாடிய ஒபாமா Obamas chose Indian restaurant for birthday

- 0 comments



வாஷிங்டன், ஆக. 9-

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கேம்ப் டேவிட்டில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார்.

இதற்காக இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஒரு ரசிகா என்ற ஓட்டலை ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலும் தேர்வு செய்தனர். ஒபாமா தனது பிறந்தநாளையொட்டி, மனைவி மிச்செலுடன் ரசிகா ஓட்டலில் உணவு அருந்த சென்றதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவும், மிச்செலும் ஓட்டலுக்கு வருவதைப் பார்க்க தெருவில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அந்த ஓட்டலின் உரிமையாளர் பெயர் அசோக் பஜாஜ். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த ஓட்டலை திறந்தது குறிப்பிடத்தக்கது. 

[Continue reading...]

குடித்துவிட்டு சக தோழியை கதறக் கதற கற்பழித்த நான்கு கல்லூரி மாணவிகள்

- 0 comments
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, கல்லூரி விடுதியில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.


சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.
[Continue reading...]

IAS suspension: Govt. mulls amending rules

- 0 comments

In the backdrop of controversial suspension of Durga Sakthi Nagpal, the Centre is considering amending rules to ensure an IAS officer is not suspended or transferred due to vested interest.
The Department of Personnel and Training (DoPT) -- which acts as nodal body for administrative matters related to Indian Administrative Service (IAS) -- may revisit rules that outlines procedure for disciplinary action against an officer of the service.
"We are considering to make changes the All India Services (Discipline and Appeal) Rules, 1969 to ensure that an officer of such services is not suspended due to political vendetta or any other vested interest. The move is aimed at ensuring hassle-free working of the officers," a senior DoPT official said.
He said that no decision has been taken as of now on how to go about it.
If changes in rules are made applicable, they will also have bearing on two other All India Services -- Indian Police Service (IPS) and Indian Forest Service (IFoS) -- besides IAS.
"The Centre will seek opinions from concerned cadre controlling authorities like Ministry of Home Affairs (for IPS) and Ministry of Environment and Forests (for IFoS) before going ahead with the change in rules. The matter is under discussion within DoPT," the official said.
The move comes in the backdrop of suspension of Nagpal, a 2010 batch IAS officer of Uttar Pradesh cadre, who had taken o sand mining mafia active in Gautam Budh Nagar district of the state.
The 28-year-old officer was suspended ostensibly for ordering demolition of a wall of an under-construction mosque without following the due process.
Political parties including BJP and BSP, besides central and IAS associations of various states have demanded immediate reinstatement of the Ms. Nagpal.
The over 4,700-member IAS Officers' Association has recently also suggested changes in rules including prior sanction of the Centre before any officer of the service is suspended by a state government among others.
"Revisit all rules regarding All India Services, in particular 'All India Services (Disciplinary and Appeals Rules, 1969, wherein a provision for seeking prior approval of central government should be made before suspending any IAS officer working under control of state governments," the association's Secretary Sanjay R Bhoos Reddy had told PTI here.
He had recommended provision for serving of a "mandatory show cause notice" to an officer seeking his or her explanation within a specified time period before suspension.
"Only after perusal of that particular IAS officer's reply to the show cause notice, suspension should be decided," he had suggested.
The Association has met Minister of State for Personnel V Narayanasamy in this regard.

[Continue reading...]

Delhi bharatiya janata party banner narendera modi poster

- 0 comments
delhi bharatiya janata party banner narendera modi poster 




Gujarat first - Minister Narendra Modi, Bharatiya Janata party has decided to stand as a candidate for prime minister. The chairman of the committee appointed to his election campaign.
At the end of this year, the Delhi state assembly elections next year's parliamentary elections, including the 5 am. BJP is preparing to meet the election. I was recently in Mumbai, India, with a text message that I have with the Indian Modi held banners with the image. This caused a stir.
Modi in Delhi banners are new in this position. New thinking on the banners, text contains a new belief in Hindi. Lately everyone's point of view, these banners are 2 places in Delhi.
Delhi assembly elections and parliamentary elections, the BJP is ready to meet. Bharatiya Janata Party banners before the leaders of the All India Vajpayee, Advani, usually within rajnatcin such films.
Modi is currently the only picture. This can cause any of the popular uprising that is closely Bharatiya Janata executives.
In Mumbai, I am a Hindu, I was the controversy caused by the Indian texts that present new ideas to attract young people, has been shifted to the new faith. Narendra Modi's prime ministerial candidate before the election, declared that the information is released.
 



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger