Showing posts with label Tamil Special News. Show all posts
Showing posts with label Tamil Special News. Show all posts

Sunday, 26 January 2014

விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள் tamil sex news

- 0 comments
விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்..! 

சுடுநீர் குளியல்: பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. 

உள்ளாடை: அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல்: பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

மன அழுத்தம்: மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். 

போதிய உடலுறவு இல்லாமை: உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும். 

ஆல்கஹால்: ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும். 

புகைப்பிடித்தல்: சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். 

சோயா பொருட்கள்: ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும். 

டிவி பார்த்தல்: பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும்ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது. 

லேப்டாப்: தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

[Continue reading...]

Friday, 24 January 2014

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க. தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

- 0 comments

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க.  தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

 

 

சென்னை, ஜன. 25–
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கட்சியில் இருந்து என்னை ஏன் என்று நீக்கினார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஹாங்காங் சென்றேன். அந்த தகவலை கட்சி தலைமைக்கு தெரிவிக்கவில்லை. அதனால்கூட என்னை நீக்கி இருக்கலாம். தி.மு.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.
மதுரையில் சிலர் மீது சாதியை சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒருவர் சாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது புகார்தான் செய்வார். உங்களை திட்டினால் சும்மா இருப்பீர்களா?.
என்னை கட்சியில் இருந்து நீக்கியபின் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள். என் நிலைப்பாடு குறித்து வருகிற 30–ந்தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து தொண்டர்களை சந்தித்து பேசுவேன். அதுவரை அமைதியாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
எனது ஆதரவாளர்கள் மீது மட்டும்தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.
இதுபற்றி நான் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவர் எனக்கு இது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நான் பேசி விட்டு சென்ற உடன் என்னை நீக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தப் பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம். முன்பை விட ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்யப்படும்.
தி.மு.க.வுக்காக உழைத்த தொண்டர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கியுள்ளனர். இது சரியானது தானா என்றுதான் நியாயம் கேட்டேன். நான் நியாயம் கேட்கக் கூடாதா? அதற்காக என்னையும் நீக்கி உள்ளனர்.
தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? நான் உரத்தக் குரலில் பேசவேக் கூடாதா? அப்படியானால் தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள்.
எனக்கு தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்பது இல்லை. என்னை கலந்து ஆலோசிக்காமலே தென் மாவட்ட தி.மு.க. பற்றி முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்?
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.
ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை. மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.
என்னை நீக்கியதால் தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற பழி துடைக்கப்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே போய் சேர்ந்து விடுவார்.
கருணாநிதி முதல்வரானதும் தி.மு.க.வை புகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றார். ஆதாயம் கிடைக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி, மாறி பேசுவார்.
கட்சியில் இருந்து நான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. அந்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்காக நான் என் தொண்டர்களை ஒரு போதும் கைவிட்டு விடமாட்டேன்.
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.
ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வது போல எனக்கு தோன்றுகிறது.
தி.மு.க. தலைவரை யாரோ ‘‘பிளாக்மெயில்’’ செய்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
நான் நியாயத்துக்காக போராடுவேன். 30–ந்தேதி என் ஆதரவாளர்கள் நடத்தும் விழாவில் பங்கேற்பேன். அப்போது நான் எல்லாவற்றையும் சொல்வேன்.
என்னை நீக்கிய பிறகு தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கூட்டணி ஏற்பட்டால் இரு கட்சிகளுக்குமே லாபம் ஏற்பட போவதில்லை. தே.மு.தி.க.வை நம்பி தி.மு.க. வெற்றி பெற முடியாது.
அ.தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே பணிகளை தொடங்கி விட்டனர். இதற்கான எல்லா முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
என் மீதான நடவடிக்கை எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் ஒப்புதல் இல்லாமல் கூட இது நடந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பங்களிப்பு எல்லோருக்கும் தெரியும். எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே’ என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.
தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

 

[Continue reading...]

Monday, 20 January 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது teacher qualifying exam verifying started working

- 0 comments
சென்னை, ஜன. 21-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளி
கல்வித்துறை முடிவு செய்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தனியாகவும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கு தனியாகவும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைத்தாள்கள்
மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த
மாவட்டங்களில் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அதற்கான சான்றிதழை படித்த
நிறுவனத்தில் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து ஒரு பட்டதாரி கூறுகையில், நான் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். பி.எட். படிப்பை தமிழில்
படித்தேன். அதற்கு மதிப்பெண் உண்டா, சலுகை உண்டா என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமாக
தெரிவிக்கவில்லை என்று புகார் கூறினார். 
[Continue reading...]

Saturday, 4 January 2014

மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து three drug addicts held for rape murder of ragpicker

- 0 comments

Three drug addicts held for rape murder of ragpicker மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற போதை இளைஞர்கள் கைது Three drug addicts held for rape murder of ragpicker

மும்பை, ஜன. 5-

மும்பை காட்கோபர் பகுதியின் ஒரு ஓரமாக கடந்த 1-ம் தேதி அன்று குப்பை பொறுக்கும் 55 வயது பெண்மணி  இறந்துகிடந்தார். முதலில் போலீசார் இதை தற்செயலான இறப்பு என்று எண்ணினர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர் கற்பழிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது.

இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்பகுதியிலுள்ள அனைத்து குப்பை பொறுக்குபவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஆரிப் ஷேக் என்ற ஒரு குப்பை பொறுக்கும் இளைருக்கும் அந்த பெண்மணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று ஆரிப் ஷேக் (21), தனது நண்பர்களான ராஜூ ஜெய்சுவால் (22), மிலிந்த் டாய்டே (22) ஆகியோருடன் காட்கோபர் பகுதியில் மது அருந்திகொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் நடந்த விசாரணையில் போலீசார் கூறியதாவது: -

போதைக்கு அடிமையான இந்த குப்பை பொறுக்கும் மூன்று இளைஞர்களும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மது அருந்தியுள்ளனர். பின்னர் அந்த 55 வயது குப்பை பொறுக்கும் பெண்மணி படுத்திருந்த இடத்திற்கு சென்று ஆரிப் ஷேக் முதலில் கட்டாயப்படுத்தியிருக்கிறான். இதைத்தொடர்ந்து மூவரும் பலவந்தமாக அந்த பெண்ணை கெடுத்து இருக்கிறார்கள்.

பின்னர் அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்து விடுவார் என்று பயந்த அவர்கள், அந்த பெண்ணின் தலையில் கல்லால் அடித்துக்கொன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இக்குற்றத்தை உறுதிபடுத்த டி.என்.ஏ. மற்றும் மருத்துவ அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். 
...

[Continue reading...]

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் Junior Asia Cup Cricket india win

- 0 comments

Img ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் Junior Asia Cup Cricket india win

சார்ஜா, ஜன. 4-

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்தது. இதில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. கேப்டன் விஜய் ஜோல், சஞ்ஜு சாம்சன் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். துவக்க வீரர் பெயின்ஸ் 47 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 315 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க வீரராக களமிறங்கிய சமி அஸ்லம் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். டாப் ஆர்டரில் மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், கம்ரான் குலாம் அணியின் ஸ்கோரை உயர்த்த கடும் முயற்சி மேற்கொண்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் பொறுப்புடன் ஆடிய கம்ரான் குலாம் சதம் அடித்தார்.

ஆனால் அவருடன் இணைந்த பின்கள வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களே சேர்த்தது. கம்ரான் குலாம் 89 பந்துகளில் 102 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

கடந்த ஆண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆனால் போட்டி டையில் முடிந்ததால் சாம்பியன் பட்டத்தை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன.
...

[Continue reading...]

Friday, 3 January 2014

அரசு பள்ளிகளில் 10 வது, பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Government schools in 10th plus two students 100 percent of graduate specialized training organized

- 0 comments
அரசு பள்ளிகளில் 10 வது, பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Government schools in 10th plus two students 100 percent of graduate specialized training organized

சென்னை, ஜன.4-

அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறியதாவது:-

கடந்த வருடம் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் எந்த அரசு பள்ளிகளில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ளதோ அப்படிப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டோம். அதன்படி நேற்று கோவையில் முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உள்பட அனைவரும் கலந்து கொண்டோம். 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி உடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும் என்று கூறி உள்ளோம்.

எந்த மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லை என்பதை கண்டுபிடித்து அந்த பாடத்தில் நன்றாக விளக்கி பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எப்படியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.

இது போன்ற கூட்டம் நெல்லையில் 6-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளோம்.

இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
...
 
[Continue reading...]

ஜனவரி 6ஆம் தேதி வேட்டி தினம் Dhoti Day on January 6

- 0 comments
வரும் ஜனவரி 6ஆம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆண் அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்தும், பெண் ஊழியர்கள் கைத்தறி புடவைகள் அணிந்தும் பணிக்கு வர வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


பொங்கல் திருநாளை முன்னிட்டு கைத்தறி தொழிலாளர்களை சிறப்பிக்கும் விதமாக வருகிற 6ஆம் தேதி 'வேட்டி தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 'வேட்டி' விற்பனை பிரிவை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழர்களின் கலாச்சார உடையான கைத்தறி வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும். வருகிற 6ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் விருப்பப்படி வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும். பெண் ஊழியர்கள் கைத்தறி சேலை அணிந்து வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உமா மகேஸ்வரி, நேர்முக உதவியாளர்கள் துரைராஜன், சுந்தரபாண்டியன், மக்கள் தொடர்பு அதிகாரி மாரியப்பன், மண்டல ஆய்வுக்குழு அதிகாரி தியாகராஜன், கோப்–ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் சண்முக சுந்தரம், மேலாளர் கணபதி, அலுவலக மேலாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். * * * அரசு ஊழியர்கள் வருகிற 6–ந்தேதியன்று வேட்டி தினம் கொண்டாடுகின்றனர். இதற்காக கோ–ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. அதில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வேட்டி வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். 
[Continue reading...]

உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் Theni district is first in the world 120 tons per hectare yield of banana

- 0 comments

Img உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் Theni district is first in the world 120 tons per hectare yield of banana

தேனி, ஜன.3–

தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் எக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஜி 9 திசு வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

சராசரியாக 1 எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும் குறைந்தபட்ச சாகுபடி அளவே 90 டன் என்ற நிலையில் உள்ளது.

இந்தியாவின் சராசரி வாழை சாகுபடி திறன் எக்டேருக்கு 50 டன்கள் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை 68 டன் விளைச்சல் எடுத்து இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. உலக அளவில் பிரேசில், ஈக்வடார், போஸ்டாரிகா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்திருந்தன. தேனி மாவட்ட விவசாயிகள் சராசரியாக எக்டேருக்கு 120 டன் விளைவித்து உலக நாடுகளின் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணைஇயக்குனர் முருகன் கூறியதாவது,

தேனி மாவட்டத்தில் காமையகவுண்டன்பட்டியில் ஏராளமான விவசாயிகள் 120 டன் மேல் வாழை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் உலகளவில் வாழை விளைச்சலில் தேனி மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதில் ஒரு விவசாயி 150 டன்–க்கு மேல் விளைச்சல் எடுத்துள்ளார். இது உலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத சாதனை. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அந்த விவசாயி தோட்டத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

...

[Continue reading...]

Thursday, 2 January 2014

நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய விராட் கோலி !!

- 0 comments
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், அணியின் துணை கேப்டனுமான விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார். அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக "கிசுகிசு" பரவி வரும் நிலையில் அவர், தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு, சக வீரர்களுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்த பின் நேராக அனுஷ்காவின் வெர்சோவா அபார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலியை தனது வீட்டிற்கு அழைத்து வர பி.எம்.டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய தனது சொகுசு கார்களை விமான நிலையத்திற்கு அனுஷ்கா அனுப்பி வைத்திருந்தார். பி.எம்.டபிள்யூ காரில் கோலி வந்தபோது அவரது உடைமைகள் ரேஞ்ச் ரோவரில் வெர்சோவா அபார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தன. அனுஷ்கா கொடுத்த நள்ளிரவு விருந்தில், கோலி மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

விருந்து அதிகாலை வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்த இவ்விருவருக்கம் காதல் மலர்ந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 
[Continue reading...]

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 11 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் Pasupathi pandiyan murder subash pandian with 11 members surrendered

- 0 comments

Img பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 11 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் Pasupathi pandiyan murder subash pandian with 11 members surrendered

திண்டுக்கல், ஜன.2–

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்து வந்தவர் பசுபதிபாண்டியன். இவர் கடந்த 10.1.2011–ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்கு தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் நிர்மலா, முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தலைமறைவாக இருந்து வந்த சுபாஷ் பண்ணையார் கடந்த மாதம் 3–ந்தேதி திண்டுக்கல் 2–வது மாஜுஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

இன்று காலை இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி சையதுசுலைமான் தலைமையில் வந்தது.

அப்போது சுபாஷ் பண்ணையார், ஆறுமுகம், சண்முகசுந்தரம், அருளானந்தம், நடராஜன், மாடசாமி, ஆனந்தராஜ், தாராசிங், சன்னாசி, ரமேஷ், அருள்மணி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதி சுலைமான் மீண்டும் வழக்குவிசாரணையை வருகிற 18.2.2014 அன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக கோர்ட்டில் ஆஜராவதற்காக வந்த சுபாஷ்பண்ணையாரை மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரத்தில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

நீதிபதி முன்பு ஆஜரான அவர் கோர்ட்டை விட்டு வெளியே வரும்போது புகைப்படக்காரர்கள் படம் எடுத்துவிடக்கூடாத வகையில் முகத்தை கையால் மறைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிச்சென்றார்.

சுபாஷ் பண்ணையார் கோர்ட்டில் ஆஜரானதையடுத்து கோர்ட்டு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் இன்று காலை கோர்ட்டு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

...

[Continue reading...]

Wednesday, 1 January 2014

சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு தள்ளி பிறந்த இரட்டை குழந்தைகள் American Twin Babies born in seperate years

- 0 comments

Img சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு தள்ளி பிறந்த இரட்டை குழந்தைகள் American Twin Babies born in seperate years

நியூயார்க், ஜன.2-

அமெரிக்காவில் 2 பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற வெவ்வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் ஆஸ்பத்திரியில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 11.58 மணிக்கு லொர்ரெய்ன் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்கு நடைபெற்ற தலைப் பிரசவத்தில் 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில் (அதாவது) 2014 ஜனவரி மாதம் 1-ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு இரண்டாவதாக 5 பவுண்ட் எடையுடன் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பில் உள்ள கால இடைவெளி வெறும் 3 நிமிடங்கள் மட்டும்தான் என்றபோதிலும், முன்னதாக பிறந்த பெண் குழந்தையின் பிறந்த தேதி 31-12-2013 என்றும், அடுத்ததாக பிறந்த ஆண் குழந்தையின் பிறந்த தேதி 1-1-2014 எனவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், டொரொண்டோ நகரில் உள்ள கிரெடிட் வேல்லி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட லிண்ட்ஸே ஸல்குவெரியோ என்ற பெண்ணுக்கு 31-12-2013 பின்னிரவு 11.52 மணிக்கு 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்த 8 நிமிடங்களில் (அதாவது) 1-1-2014 அதிகாலை 12 மணி 38 விணாடிக்கு மற்றொரு பெண் குழந்தையையும் அவர் பிரசவித்தார்.

ஒரே பிரசவத்தில், வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 2 தாய்களும், அவர்களின் 4 குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
...

[Continue reading...]

அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Delhi based girl gang molested by eight persons in Haryana

- 0 comments

Img அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Delhi based girl gang molested by eight persons in Haryana

சண்டிகர், ஜன. 2-

டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் தோழியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக பல்லப்கர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 5 பேர் அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தூக்கிப் போட்டு கடத்தி சென்றனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் காரை நிறுத்தினர். அந்த இடத்தில் ஏற்கனவே 3 பேர் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். காரை விட்டு அந்த பெண்ணை கீழே இறக்கி அவரை 8 பேரும் கதறக் கதற கற்பழித்தனர்.

அவர்களின் வெறிக்கு ஈடு கொடுக்க முடியாமல் மயக்கமடைந்து கிடந்த அந்த பெண்ணை மீண்டும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த அவர்கள், பழையபடி பல்லப்கர் பஸ் நிலையம் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த காமக்கொடூரர்களில் 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட 7 பேரும் தேடப்படும் நபரும் பல்வால் அருகேயுள்ள ஹசன்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
...

[Continue reading...]

Two Women Talking about to avoid pregnancy Tamil sex Joke

- 0 comments
Two Women Talking about to avoid pregnancy Tamil sex Joke

The two women talked. I have to be very careful. Relationship to avoid pregnancy. Brent told her where to go for care enti patare. You got through the operation purucantan Family Planning. She told me: crazy because of Prodi's scared

இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்.

நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பம் தரிக்காமல் உறவு கொள்ள வேண்டும்.

அவ பிரென்ட் சொன்னா; இதுக்கு போய் ஏண்டி கவலை படறே. உன் புருசன்தான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணிக்கொண்டு இருக்கிறாரே.

அவ சொன்னா: போடி பைத்தியம் அதுனால் தான்  பயமா இருக்கு
[Continue reading...]

Tuesday, 31 December 2013

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா? Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

- 0 comments

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பல தருணங்களில், மீண்டும் பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை. பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்றால் அவருக்கு வழி காட்ட தயராக இருக்கிறேன் என்று மன்மோகன்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இதை தெரிவித்து விட்டார்.

ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் என்று வரும் 17–ந்தேதி நடைபெறும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கென தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 3–ந்தேதி பகல் 11 மணிக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார். அன்றைய தினம் எதிர்கால திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த தகவலை மையமாக வைத்து பத்திரிகையாளர்களுடனான அன்றைய சந்திப்பின் போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மன்மோகன் சிங் அறிவிப்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.

மேற்கண்ட யூகத்திற்கும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுடெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, பிரதமர் ராஜினாமா செய்கிறார் என்று வெளியாகும் யூகங்கள் தவறானவை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை என ஊடகங்கள் குறை கூறி வந்தன. சரி, 2014-ம் ஆண்டு பிறக்கும் வேளையில் அவர்களை சந்திக்கலாமே என்று கருதிய பிரதமர், 3-ம் தேதி பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம் பதவி விலகப் போவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என சில ஊடகங்கள் புரளியை கிளப்பி வருகின்றன. என்னைப் பொருத்த வரையில், இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலை என்றே கருதுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
...

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

[Continue reading...]

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

- 0 comments

Img 2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

ஆக்லாந்து, டிச. 31-

உலகம் முழுவதும் நாளை தொடங்கவுள்ள 2014 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டு வாணவேடிக்கைகள் தொடங்கின. கிரீன்விச் நேரப்படி இன்று 11 மணியளவிலேயே அவர்களுக்குப் புத்தாண்டு பிறந்துவிடுவதால் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடியது ஆஸ்திரேலியாவில்தான். இதையொட்டி சிட்னி நகரத்தில் பிரமாண்ட வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இங்கு பிரபலமாக நடைபெறும் வாணவேடிக்கைகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். ஜப்பானில் உள்ள ஷிண்டோ மதகுருமார்கள் புதிய ஆண்டை வரவேற்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துபாய் நகரம் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளது. கடற்கரைக்கு முன்னால் 30 மைல் தொலைவிற்கு நீண்டு செல்லும் இந்த வாணவேடிக்கைகள் ஒரு கி.மீ உயரம் வரை செல்லுமென்று கூறப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்கள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

சீனாவின் பல நகரங்களிலும் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்படும்போது மோசமான பனிமூட்டம் காரணமாக வுஹான் நகரம் மட்டும் இந்தக் கொண்டாட்டங்களைக் கைவிட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களான மாஸ்கோ, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களிலும் பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெறும். தென் அமெரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 5 ஆம் தேதி மறைந்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லேசர் காட்சிகள், வாணவேடிக்கைகள் அடங்கிய ஒரு முப்பரிமாண சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் எப்போதும்போல் பாரம்பரிய முறையிலான புத்தாண்டுத் துவக்கத்தினைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வண்ணமயமான திருவிழாக்களுக்குப் பெயர்போன பிரேசில் இந்த ஆண்டும் கோபகபானா கடற்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை வரவேற்க 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
...

[Continue reading...]

Monday, 30 December 2013

தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

- 0 comments

Img தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

கொழும்பு, டிச.30-

இலங்கையின் திருக்கேத்தீஸ்வரம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கிடைத்தன. இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.

இலங்கை அரசு இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மண்டை ஓடுகளை தொடர்ந்து தோண்டி எடுக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதிர்ச்சி திருப்பமாக மண்டை ஓடுகளை தோண்டும் பணியை நேற்று அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி திருப்பமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண்டை ஒடுகளை தடவியல் துறை ஆய்வுக்காக சீனாவிற்கு அனுப்பியுள்ளது ராஜபக்சே அரசு. இது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது இறந்த தமிழர்களின் உடலை புதைப்பதற்கு ஏதுவாக சீனா பல ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. போரின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை சீனா உதவியுடன் இலங்கை அழித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளும் சீனாவிற்கு அனுப்பப்படுவது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி என குற்றம்டசாட்டப்படுகிறது.

எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
...

[Continue reading...]

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

- 0 comments

gang attacks on Indian students in Melbourne went into a coma ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

புதுடெல்லி, டிச.30-

ஆஸ்திரோலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை, பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்வீந்தர் சிங் என்ற அந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

சிங்கின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
...

[Continue reading...]

Sunday, 29 December 2013

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

- 0 comments

UK Government website publishes advertisement for call girls job

விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை : இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு UK Government website publishes advertisement for call girls job

லண்டன், டிச. 30-

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தனியாக வரும் ஆணுக்கு துணையாக அழகான பெண்களையும், பெண்ணுக்கு துணையாக இளமையும், நல்ல உடல்கட்டும் கொண்ட ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ..? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் இ-மெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் அவர்களை விமான நிலையத்திற்கே வந்து அந்த நபர்கள் அழைத்து செல்வார்கள்.

அந்த நேரம் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்து தூங்குவார்கள்.

எஸ்கார்ட் சர்வீஸ் என்றழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் ஹார்னி எஸ்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில், தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 1020 ரூபாய்) வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.
...

UK Government website publishes advertisement for call girls job

[Continue reading...]

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

- 0 comments

Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student லிஃப்ட் தருவதாக கூறி தலித் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த மூவருக்கு போலீஸ் வலை Police hunt to nab 3 Persons for molesting Class XI Dalit student

லக்னோ, டிச. 30-

உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா அருகே உள்ள நாக்லா ஹன்சி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் தலித் மணவி கடந்த 26-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரை சேர்ந்த 3 பேர் காரில் வந்து அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறினர்.

இதற்கு சம்மதிக்காத அந்த இளம் பெண்ணை பலவந்தமாக காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆள்நடமாட்டமில்லாத ஓரிடத்தில் காரை நிறுத்தி, காரினுள் வைத்தே அந்த பெண்ணை கதறக் கதற மூவரும் கற்பழித்தனர். அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த அண்ணு, ராஜேஷ், லலித் ஆகியோர் தனது மகளை கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக மாணவியின் தந்தை அருகில் உள்ள ரயா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை வாங்கிக்கொள்ள மறுத்த போலீசார், குற்றவாளிகளுடன் சமரசமாக போகும்படியும் புகார்தாரரை வற்புறுத்தினர்.

பாதிக்கப்பட்ட தலித் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும் போலீசார் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்துக் கொண்ட தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து நடந்த கொடுமைகளை எல்லாம் விபரமாக கூறினார்.

சூப்பிரண்ட்டின் உத்தரவையடுத்து, தற்போது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.
...

[Continue reading...]

பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

- 0 comments

Img பா.ஜனதாவுடன் தே.மு.தி.க. சேர வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி bjp party DMDK Chance to join Bon Radhakrishnan interview

மேல்புறம், டிச.29–

பாரதீய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரத்தினமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:––

தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து ஆகியோர் பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர்களை சந்தித்து பேசி விட்டனர். பா.ம.க.வுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி. அந்த கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என நம்புகிறோம். அப்படி கூட்டணி ஏற்படும் பட்சத்தில் பாரதீய ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இன்று தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. நாளை திடீரென கூட்டணி என்று பேசுவார்கள். அவர்களது முடிவுகளை புரிந்து கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் 1½ லட்சம் தமிழகர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து விதவைகள் ஆனார்கள். 50 ஆயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆனது. அங்குள்ள தமிழர்களின் உடமைகள், நிலங்கள், வீடுகள் இலங்கை அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தமிழர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். இவ்வாறு இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழக மீனவர்களை நிம்மதியாக கடலுக்கு போய் மீன் பிடிக்க விடாமல் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கடலோர கிராமங்களில் ஒரு ஓட்டு கூட விழாது.

ப.சிதம்பரம் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியாக பதவி வகித்துள்ளார். ஆனால் அவரால் தமிழகத்துக்கோ, அவரது தொகுதிக்கோ ஒரு நன்மையும் கிடைக்க வில்லை. தமிழகத்தில் ஒரு வளர்ச்சித்திட்ட பணிகள் கூட அவரால் செய்யப்படவில்லை.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடினார். தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளார். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரே வெளியே வருவார்.

குளச்சல் வர்த்தக துறைமுகம் குறித்து மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறுகையில் சிறிய துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி உள்ளார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குளச்சல் பெரிய வர்த்தக துறைமுகமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger