Saturday 19 November 2011

புத்தியுள்ள நீத��பதி.....!!!

- 0 comments


பழைய காலத்துல நடந்த சம்பவம் எங்க அப்பா அழகா விவரிச்சு சொல்லும்போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் மனசுக்கு, ஊரில் பெரியவரை ஒருத்தன் ஜாதி விரோதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டான்...

கொலையாளியையும் சந்தேகத்தில் போலீஸ் பிடித்துவிட்டாலும் ஆதாரம் இல்லை, கேஸ் கோர்ட்டுக்கு போனாலும், கொலை செய்த அருவாள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது, கொலையாளியோ அந்த அருவாள் என்னுடையது அல்ல என்று அடித்து சொல்லிவிடவே கேஸ் விவகாரம் நீண்டுகொண்டே போனது...


போலீஸ் எவ்வளவோ விசாரிச்சும் அவன் கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவே இல்லை, கொலை செய்தது அவன்தான் என நன்றாக தெரிஞ்சும் கொலையாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆதாரம் இல்லையே...


எல்லாவற்றையும் பார்த்து, கணித்து, கவனித்து கொண்டிருந்தார் நீதிபதி, கடைசி வரையும் ஆதாரம் கிடைக்காததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சந்தேகப்பட்ட நபரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு சொன்னார்.



கொலையாளி மிகுந்த சந்தோசத்தோடு கிளம்பினான் பரிவாரத்தோடு, அப்போது திடீரென நீதிபதி சத்தமாக சொன்னார், அதான் கேஸ் முடிஞ்சி போச்சுல்ல அந்த அருவாள் யாருடையதோ அதை எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும், கொலையாளி ஓடிப்போயி அருவாளை எடுக்கவும், கொலையாளி வகையாக சிக்கிக்கொண்டான்.....!!!

அப்பா சொன்ன நீதி : தப்பு செய்தால் என்னதான் தகடுதத்தம் செய்தாலும், தண்டனை நிச்சயம் உண்டு...!!!

மனோ"தத்துவம் : சந்தனம் சுமக்கும் கழுதைக்கு சந்தனத்தின் மகிமை தெரியாது....!!!




http://dinasarinews.blogspot.com



  • http://tamilsmsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    நண்பனிடமும் சூத��மாக இரு....!!!

    - 0 comments


    எங்க அப்பா சொன்ன இன்னுமொரு கதை....

    ஒரு குளத்துல ஒரு முதலையும், கரையின் ஓரத்துல இருந்த மாமரத்துல குடியிருந்த ஒரு குரங்கும் இணைபிரியா நண்பர்கள், குரங்கை முதலை அதன் மேலே ஏற்றி குளத்தை எல்லாம் சுற்றி காட்டும், இப்படி ஓடியாடி விளையாடி வந்தனர்...


    ஒருநாள் மாமரத்தில் மாம்பழம் காய்த்து குளுங்கவே குரங்கு மாம்பழத்தை பறித்து சுவைத்து கொண்டிருப்பதை கண்ட முதலை எனக்கும் மாம்பழம் தருவாயா நண்பா என கேட்டது....

    குரங்கும் ஒ தாராளமாக எனக்கூறி மாம்பழங்களை பறித்து கொடுத்தது, சாப்பிட்ட முதலை ஆஹா நல்ல ருசியாக இருக்கிறதே என சொல்லி இன்னும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட்டது....


    இப்படி கொடுத்தும் வாங்கியும், விளையாடியும் இருந்த நண்பர்களின் வாழ்க்கையில் விதியும் விளையாடியது, முதலையின் மனதில் ஒரு குரூர எண்ணம் வெளிப்பட்டது......இந்த மாம்பழமே இம்புட்டு ருசியாக இருந்தால் அதை தினமும் திங்கும் குரங்கின் குடல் எம்புட்டு சுவையாக இருக்கும் என நினைத்து கொண்டு காத்து இருந்தது....!!


    ஒருநாள் வழக்கம் போல முதலை குரங்கை முதுகில் ஏற்றி வலம் வரும் போது, குரங்கின் குடல் நியாபகம் வரவே குரங்கை குளத்தின் நடுவில் கொண்டு போயி நின்று கொண்டு கேட்டது, குரங்கே குரங்கே நீ பறித்து தரும் மாம்பழங்களே எவ்வளவு சுவையாக இருக்கிறது, அப்போ அதை சாப்பிடும் உன் குடல் இன்னும் சுவையாக இருக்குமல்லவா...? என கேட்க.....


    இதை சற்றும் எதிர்பாராத குரங்கு சுற்றும் முற்றும் பார்க்க, தான் தப்பிக்க முடியாதபடி நடு குளத்தில் இருப்பதை உணர்ந்த குரங்கு சமாளித்துக்கொண்டு சொன்னது, அதற்கென்ன நண்பா நான் குடலை மரத்தில் அல்லவா வைத்து விட்டு வந்தேன் என்னை அங்கே கொண்டு போ எடுத்து தருகிறேன் என சொல்ல, முதலை வேகமாக குரங்கை கரையில் கொண்டு சேர்த்தது...


    கரையிறங்கிய குரங்கு வேகமாக ஓடிபோயி மரத்தில் ஏறிக்கொண்டு முதலையை பார்த்து சொன்னது "போடா ங்கொய்யால"


    [[எங்க அய்யா கதையை கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்கிறார்னு பின்னாட்களில் புத்தகங்களில்  வாசித்து தெரிந்து கொண்டேன்]]


    அப்பா சொன்ன நீதி : என்னதான் நண்பனா இருந்தாலும் நாம சூதானமா இருக்கணும்....!!!

    டிஸ்கி : உலக தமிழர்கள் யாவரும் அறிந்த, தமிழில் வெற்றிக்கொடி கட்டி நம் நெஞ்சில் வாழும்  மகா காமெடி நடிகரின் பேட்டி, பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக நாஞ்சில்மனோ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளி வருகிறது, 

    அவர் யாரென்று நாளை பதிவில் சொல்கிறேன், பேட்டி எடுத்தது நாஞ்சில்மனோ...!!! காத்திருங்கள் திங்கள் வரை....!!!







    http://dinasarinews.blogspot.com



  • http://tamilsmsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    2 ஜி புதிய வழக்கு: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்ட்!

    - 0 comments
     
     
     
    2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் புதிய வழக்கு ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது.
     
    பாஜகவின் மூத்த தலைவர் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
     
    இதைத் தொடர்ந்து, மகாஜன் காலத்தில் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
     
    முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ஷியாமல் கோஷ் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த இருவரும் பாஜக ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்தவர்கள்.
     
    இந்த சோதனை குறித்து பாரதி ஏர்டெல் கருத்து தெரிவிக்கையில், "அரசு கொள்கைகளுக்கு உட்பட்டுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றுள்ளோம். இது தொடர்பான எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க தயார்," என்று கூறியுள்ளது.


     


    [Continue reading...]

    காம்ப்ளியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக உள்ளது: முன்னாள் கேப்டன் அசாருதீன்

    - 0 comments
     
     
     
    1996 உலக கோப்பையின் அரையறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைய காரணம் மேட்ச் பிக்சிங் என்ற சந்தேகம் உள்ளதாக வினோத் காம்ப்ளி குற்றச்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மறுத்துள்ளார்.
     
    1996ம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையறுதி போட்டியில் இலங்கையிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் பின்னனியில் 'மேட்ச் பிக்சிக்' நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி, டிவி சேனல் பேட்டி ஒன்றில் கூறினார்.
     
    குற்றச்சாட்டப்பட்ட போட்டி நடந்த போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
     
    இது குறித்து சி.என்.என். ஐ.பி.என். டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அசாருதீன் கூறியதாவது,
     
    வினோத் காம்ப்ளி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு இந்திய அணியினருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அணி வீரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் குறிப்பிட்ட போட்டியில் முதலில் பீல்டிங் செய்ய அறிவித்தேன். இது ஒரு அணியின் ஒருங்கிணைந்த தீர்மானம். அந்த போட்டியில் எனது சொந்த விருப்பத்தில் செயல்படவில்லை என்பதை கூற நான் வெட்கப்படவில்லை.
     
    காம்ப்ளியின் குற்றச்சாட்டுகளை பார்த்தால், அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் காம்ப்ளி தூங்கி இருப்பார் என்று தோன்றுகிறது. காம்ப்ளி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அரையறுதிப் போட்டியில் முதலில் இலங்கையை பேட்டிங் செய்யவிட்டு, நாம் சேஸ் செய்துவிடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்ததால், அந்த முடிவை கேள்வி கேட்பது வேதனைக்குரியது. காம்ப்ளியின் பேச்சின் மூலம் அவரது தரம் தெரிகிறது.
     
    இந்திய அணியில் பல கேப்டன்களின் தலைமையில் காம்ப்ளி விளையாடியுள்ளார். அதில் எனது தலைமையில் விளையாடியது சிறப்பாக இருந்ததாக, காம்ப்ளி பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது காம்ப்ளி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு எரிச்சலை அளிக்கிறது.
     
    மேட்ச் பிக்சிங் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை விரைவில் தெரிய வரும். இந்த குற்றச்சாட்டால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள காம்ப்ளி, தன்னை தானே முட்டாளாக்கி கொண்டார், என்றார்.




    [Continue reading...]

    koodankulam anumin nilayam

    - 0 comments
     



    கூடன்குளம் அணு உலைக்கு எதிராக வைகோ-வுக்கும் ராஜீவ்காந்திக்கும் 1988-ல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் பற்றிய செய்தி.. வைகோ என்றைக்கும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர் என்பதர்க்கு சாட்சி..
    [Continue reading...]

    அங்கதன் காத்திர��ந்தான்!-

    - 0 comments


    அங்கதனால் நம்ப முடியவில்லை.

    தன் தந்தை கொல்லப் பட்டாரா?இது எப்படி நடக்க முடியும்?

    மாவீரனான தந்தையைக் கொல்ல அவரினும் பெரிய வீரன் வந்தானோ?

    அன்னையிடம் சென்றான்.

    "அம்மா என்ன நடந்தது?எப்படி இறந்தார் தந்தை?போரில் அவரை வென்று அவர் உயிர் கவர்ந்த அந்த வீரன் யார்?" கேட்டான்.

    தாரை சோகமாய்ச் சிரித்தாள்.

    "போரில் உன் தந்தை கொல்லப்படவில்லை அங்கதா!உன் தந்தைக்கும், சிறிய தந்தைக்கும் போர் நடக்கும் போது மறைந்திருந்து எய்யப்பட்ட பாணத்தினால் அவர் மரித்தார்" சொன்னாள் தாரை.

    அங்கதன் கண்கள் சிவந்தன.உடல் துடித்தது."மறைந்திருந்து எய்யப்பட்ட பாணமா?யார் செய்தது இந்த இழி செயல்?"

    "அயோத்தி மன்னன்,தசரதனின் புத்திரன் இராமன்.வனத்தில் அவன் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்.அவளைத்தேடி வரும்போது உன் சிறிய தந்தையிடம் நட்புக் கொண்டு அவருக்கு உதவுவதற்காக உன் தந்தையைக் கொன்றான் இராமன்". தாரை சொன்னாள்.

    "அவ்வாறெனில் தந்தையுடன் போர் செய்து அவரை வீழ்த்தியிருக்க வேண்டும்.கோழை போல் மறைந்திருந்து கொலவதென்ன வீரம்?என்ன நியாயம்?"

    "இதையேதான் உன் தந்தை இராமனிடம் கேட்டார்.

    /'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
    தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!/

    என இழித்துரைத்தார்.ஆனால் இராமன் நீதியை எடுத்துச் சொல்லவும் புரிந்து கொண்டார்.அவன் அவதாரம் என்பதை அறிந்து கொண்டார். அவனால் வீடு பேறு பெற்றார்" தாரை சொன்னாள்.

    அங்கதன் மனம் அதை ஏற்கவில்லை"என்ன சொல்லியிருந்தாலும், தந்தையே அதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் என்னால் அதை ஏற்க இயலவில்லை.என் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.அதற்கு முதலில் அந்த இராமனையும், பின் என் சிறியதந்தை சுக்கிரீவனையும் நான் பழி வாங்குவேன்" உறுமினான்.

    தாரை பயந்தாள்

    பின் சொன்னாள்"மகனே! நீ வயதில் சிறியவன்.அவசரப்பட்டு ஏதாவது செய்து அதனால் நான் உன்னையும் இழக்கும் நிலை வந்து விடக் கூடாது. உன் சிறிய தந்தை இப்போது அரசர்.அனுமான் துணையிருக்கிறான்.படை இருக்கிறது.இராமனும்,வில் வித்தையில் தேர்ந்தவன் மட்டுமல்ல. அவதாரம்.  உன் கோபத்தை அடக்கு.சாந்தமடை உன் சிறிய தந்தையிடமும் இராமனிடமும் சென்று ஆசி பெற்று வா""

    இவ்வாறு பலவிதமாய் அங்கதனுக்கு அறிவுரை சொன்னாள்.

    அங்கதன் யோசித்தான்.

    "அன்னையிடம் இது குறித்து மேலும் விவாதம் செய்வது பயனற்றது.எனவே இப்போதைக்கு அன்னை சொல்வதைக் கேட்போம்  "

    "அம்மா!உங்கள் கட்டளை" அடி பணிந்தான்.

    அவள் கட்டளைப்படி ஆசி பெறப் புறப்பட்டான்.

    ஆனால் அவன் மனம் பேசியது"காத்திருப்பேன் ,சரியான காலத்துக்காக. இந்த இராமனைக் கொன்று ஒரு நாள் பழி தீர்ப்பேன்அது வரை காத்திருப்பேன்"

    அங்கதன் காத்திருந்தான்.          

    ---------தொடரும்        




    http://cmk-mobilesms.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    அங்கதன் காத்திர��ந்தான்---(நிறைவுப��� பகுதி)

    - 0 comments




    அன்னை உரைத்தபடி சுக்ரீவனிடமும் இராமனிடமும் ஆசி பெற அங்கதன் சென்றான்.இருவரும் இணைந்தே காணப்பட்டனர்.சுக்ரீவனை முதலில் வணங்கினான்.அவனும் ஆசி கூறினான்.பின் இராமனை வணங்கினான். "நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வாய்" என வாழ்த்திய இராமன்,அவனை மார்புறத்தழுவினான்.அந்த நேரத்தில் அங்கதன் ஒரு புதிய அனுபவத்தை அடைந்தான்.எங்கோ மிதப்பது போன்ற அனுபவம்.மயிர்க் கூச்செரிந்தது.

    அணைப்பிலிருந்து விடுபட்ட அங்கதன் தன் கோபம் குறைந்தது போல் உணர்ந்தான்.

    "கூடாது.இவன் என் தந்தையைக் கொன்றவன் .காலம் கருதி நான் இப்போது நட்புடன் இருப்பேன்.காத்திருப்பேன் தகுந்த காலத்துக்காக"என மனதுள் உறுதி பூண்டான்.

    சிறிது காலத்துக்குப் பின் சீதையைத் தேடி பல திசைகளிலும் வானரர்கள் சென்றபோது அங்கதனும் அதில் ஒருவன்.

    பின் சீதையை அனுமன் கண்டு வந்து சேதி சொன்னபின்,இராமன் வானர சேனையோடு போருக்குப் புறப்பட்டான். போருக்கு முன் தூது அனுப்ப வேண்டும் என்று எண்ணியபோது இராமன் அங்கதனைத்  தேர்ந்தெடுத்தான்.

    அங்கதன் போய் இராவணனைச் சந்தித்தான்.அப்போது அவன் கேட்ட கேள்வி அங்கதனைக் கலங்கச் செய்தது.

    '"தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
    பேதையன் என்ன வாழ்ந்தாய்"" என்று அவன் கேட்ட போது, அங்கதன் தன் நிலைமைக்காக நொந்தான்.தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்,

     "காலம் வரும் அது வரை காத்திருப்பேன்." என்று.

    எல்லாம் முடிந்து கிஷ்கிந்தை திரும்பியதும் அங்கதன்  அன்னையைக் காண ஓடோடி வந்தான்.

    "அம்மா!நடந்ததைக் கேள்விப் பட்டீர்களா?"

    "எதைச் சொல்கிறாய் மகனே?இராமனின் வெற்றிதானே"

    "அதுவல்ல.அதற்குப் பின் நடந்தது.இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னானே அது.சே,தன் மனைவி மீதே நம்பிக்கை இல்லாத இவன் ஒரு ஆண்மகனா?"

    ""தவறு மகனே! இராமனுக்கு மனைவி மீது முழு நம்பிக்கை இருந்ததால் தான் துணிந்து தீக்குளிக்க செய்து அதன் மூலம் உலகத்தாருக்கு உணர்த்தச் செய்தான்.அவள் ஒரு கற்புக்கனல்.அக்கனலை தீ ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவன் அறிவான்!"

    அங்கதன் யோசனையுடன் அகன்றான்.

    இராமன் அயோத்தி திரும்பினான்.

    சில நாட்களுக்குப் பின் செய்தி வந்தது.இராமன்,யாரோ ஒருவனின் அவதூறுப் பேச்சைக் கேட்டுச்  சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று.

    அங்கதன் தாரையிடம் சொன்னான்.

    தாரை கலங்கிப்போனாள்.எப்படி, ஏன்,என்று ஆயிரம் கேள்விகள்.

    அங்கதன் சொன்னான்"அம்மா!அன்று சொன்னீர்கள்.இராமன் தன் மனைவியை நம்புகிறான் என்று.இப்போது என்னநடந்தது?எவனோ ஒருவன் சொன்ன சொல்லுக்காக மனைவியைக் காட்டுக்கனுப்பி விட்டான்.
    யாருமே செய்யத் துணியாத ஒரு கொடுஞ்செயல் செய்தான்"

    தாரை சொன்னாள்"மகனே! இராமன் அரசன்.அவன் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.எனவேதான் இந்த முடிவு எடுத்திருக்கிறான்.அவன் சீதையை எவ்வளவு நேசித்தான் என்பது யாவரும் அறிந்ததே.வனத்தில் சீதையைப் பிரிந்தபோது நிலை குலைந்து போனானே!"

    "தன் உயிரினும் மேலான சீதையை இன்று பிரிந்து தன்னைத்தானே தண்டித்து  கொண்டு ,உயிரற்ற உடல் போல் இருக்கும் அவனுக்கு வேறென்ன தண்டனை இனி நீ தரப்போகிறாய்? விட்டு விடு ."

    அங்கதன் சிந்தித்தான்." /ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை, பிரிந்த பின்னை,/ இராமன் ஒரு உயிரற்றவன்தான் அவனைக் கொல்லுதல் நமக்கு அழகன்று."

    ஆனால்...........

    இன்று அரச போகத்தில் தன்னை மறந்து ,நாட்டை மறந்து.குடி,பெண்டிர் எனப் போகத்தில் இருக்கும் அந்தத் துரோகி சிற்றப்பன்?இப்போதே நாட்டு மக்கள் என் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். அதிகம் படை வீரரும் நான் சொல்வதைக் கேட்கச் சித்தமாயிருக்கின்றனர். நாள் நெருங்கி விட்டது. அந்த சுக்ரீவனை நிச்சயம்  கொல்வேன்"

    அங்கதன் காத்திருந்தான்!


    டிஸ்கிஇது முழுவதும் கற்பனையே.இராமாயணத்தில் இதற்கான கிளைக் கதையோ,கருவோ கிடையாது.

    தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன்,தன் தந்தை வஞ்சகமாக் கொல்லப்பட்டார் என்றறியும்போது, என்ன மன நிலையை அடைவான்?அதைத்தான் நான் இங்கு கதையாக்கி விட்டேன்.இது முழுவதும் அங்கதன் பார்வையே!


    "மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
    இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
    செம்மை சேர் நாமம் தன்னை,"----போற்றுகிறேன்!.

    நன்றி.



    http://cmk-mobilesms.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger