Monday 29 December 2014

ஜமீன் தேவர்குளம் - திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...!

- 0 comments



பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார். 

இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், "திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக்களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் 'நைட் விக்ஷன்' கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம். எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம். அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.

இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், 'இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது' என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம். இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது.
ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறைகள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம்.

இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால்தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கோம். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிச்சிருக்கோம். சில நாட்களுக்கு முன்பு ஒரு செயின் காணாமப் போச்சு. ஆனால், அன்றைக்கு கேமராவை ஆன் செய்ய மறந்துட்டோம். செயினின் அடையாளங்களைத் தெளிவா மைக்கில் சொல்லி, 'செயினை எடுத்தவர் யாருன்னு கேமராவுல பாத்துட்டோம். மரியாதையா.. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்து விடவும்' என்று ஒரு பேச்சுக்குச் அறிவிப்பாக சொன்னோம். உண்மையிலேயே அன்னைக்கு ராத்திரியே செயினை நியூஸ் பேப்பர்ல பொட்டலமா மடிச்சு ஆபிஸுக்குள்ள போட்டுட்டாங்க, மறுநாள் உரியவரிடம் செயினைக் கொடுத்துட்டோம். சிசிடிவி கேமரா மாட்டியிருப்பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானாலும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்பதால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டம் போட்டுருக்கோம். கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம்.



ஜமீன் தேவர்குளத்திற்கு அருகில் வெங்கட்டா ஓடை என்ற நீரோடை உள்ளது. கயத்தாறு வீரபாண்டியகட்டபொம்மன் சிலைக்கு பின் பகுதியிலுள்ள நீரோடை தண்ணீரானது, வானரமுட்டி வழியாக ஜமீன்தேவர்குளம் வந்தடைகிறது. இந்த ஓடைக்கு நடுவே தடுப்புச்சுவர் கட்டி ஓடையைத் தூர்வாரி சுத்தப்படுத்தினால் சுமார் 20 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக ஒன்றியத்தில் தீர்மானம் போட்டு, நிதிக்காக காத்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இருக்கிறோம். " என்று முடித்தார். 

பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத்தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது. 

எல்லா கிராமமும் ஜமீன் தேவர்குளம் போல மாறிவிட்டால் நல்லதுதானே! 

- இ.கார்த்திகேயன்
தமிழ் மேட்ரிமோனி - சி
[Continue reading...]

Sunday 28 December 2014

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..!

- 0 comments

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்..!

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கு

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

[Continue reading...]

Tuesday 23 December 2014

Girls Facebook message ஃபேஸ்புக் பயன் படுத்தும் பெண்களுக்கு

- 0 comments

Girls Yarum unga photo podathinga  ++++ ஃபேஸ்புக் பயன் படுத்தும் பெண்களுக்கு +++++

பல ஆபாச பேஜ்கள் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. அவற்றில் சினிமா நடிகைகள் படங்கள் மட்டுமின்றி, அப்பாவி பெண்களின் ஃபோட்டோக்களும், ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களைப் பற்றி அவதூறாகவும் போஸ்ட்கள் செய்யப்படுகின்றன. உங்களைப் பற்றியும் ஒரு கீழ்த்தரமானவன் அந்த சைட்களில் அசிங்கமாக வர்ணித்திருக்கலாம்.
நீங்கள் நிணைத்தால் அந்த பேஜையே ஃபேஸ்புக்கில் இருந்து துரத்தலாம். உங்கள் எல்லா ஆண் நண்பர்கள் ப்ரொஃபைலுக்கு செல்லுங்கள், அங்கே LIKESஐ பார்வையிடவும். இந்த மாதிரி பேஜ், லைக் செய்யப்பட்டிருக்கலாம்.
அந்த பேஜுக்கு சென்று, கீழே உள்ளது போல் ரிப்போர்ட் செய்யுங்கள். இதனால் உங்கள் பிரைவசிக்கு எந்த பாதிப்பும் வராது.
அதிக அளவில் ரிப்போர்ட்கள் வந்தால் அந்த பேஜை ஃபேஸ்புக் ப்ளாக் செய்து விடும்.

நீங்கள் முகமறியா அப்பாவி பெண்களுக்கு செய்யும் இந்த சிறு உதவி, நாளை உங்களையோ, உங்கள் மகளையோ, சகோதரியையோ, தோழியையோ, மனைவியையோ காப்பாற்றலாம்.
இந்த போஸ்ட்டை ஷேர் செய்வதன் முலம் ஒன்றும் அறியா ஒரு சிறுமியை நீங்கள் காப்பாற்ற வாய்ப்புள்ளது. தயவுசெய்து மாற்றம் செய்ய வேண்டாம்.

[Continue reading...]

Sunday 21 December 2014

Superstar Rajinikanth's Adopted Father Palam Kalyanasundaram

- 0 comments

This Video will Make Every SUPERSTAR RAJINIKANTH Fan Proud & Cry. Watch in HD and Full Volume

World's Best Person : Superstar Rajinikanth's Adopted Father Palam Kalyanasundaram

The Whole World likes this Person and he loves SUPERTAR RAJINIKANTh not for the movies he did, not for the Money he has but for the Person he is !

Mr.Palam Kalayanasundaram worked as a Librarian for 30 years.

He was disappointed with his high pitched, female voice and was so depressed that he wanted to kill himself. As a young kid, he read 'Kalkandu' a tamil magazine and was especially fond of author/editor Tamilvaanan and his writings. He used to write letters to the author and the author would reply to his letters and one day invited Mr Kalyana Sundaram to meet him in Chennai. When they met Mr Kalyana Sundaram told him about his voice and how bad he felt about it. Innocent as he was, he even asked for suggestion from the author to give him ideas on how to kill himself.
Mr Tamilvaanan told him that his was not his disability because all that matters is what people say about you. He further added, for people who make fun of you, make them talk about your great deeds. He went back to his village with great motivation and decided he will start helping fellow human beings.

Every month in his 30 year experience(service), he donated his entire salary to help the needy. He worked as a server in a hotel to meet his needs. He donated even his pension amount of about TEN(10) Lakh rupees to the needy.

Floods ravaged South Tamil Nadu districts in 1992 and people lost everything. Donations started pouring in for the flood victims. Mr Kalyana Sundaram chose a demographic of kids who had lost their books, school uniforms and stationary. He traveled to several villages and donated books, school uniforms and stationaries to 10,000 children. The legendary carnatic singer M S Subbulakshmi was so moved by this extraordinary philanthropic deed she invited Mr Kalyana Sundaram to her house and felicitated him.

He is the first person in the world to spend the entire earnings for a social cause. In recognition to his service, (UNO) United Nations Organisation adjudged him as one of the Outstanding People of the 20th Century.. An American organisation honored him with the 'Man of the Millennium' award. He received a sum of Rs 30 cores as part of this award which he distributed entirely for the needy as usual.

Moved by his passion to help others, Super Star Rajinikanth adopted him as his father. He still stays as a bachelor and dedicated his entire life for serving the society.

LIKE YU SO MUCH SIR !!! ULAGATHLAE BEST NEENGA THAAN !!!

*நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

*மக்கள் வரிப் பணத்தில் அரசு தரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லாமல், வேறு பசையான தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பலர் வாழும் இந்த உலகில், அரசு தரும் ஓய்வூதியம் முழுவதையுமே பொது நலனுக்காக செலவிடுகிறார் என்பது தெரியுமா?

*35 ஆண்டுகள் பணி செய்த இவர் ஒரு நாள் ஊதியத்தை கூட தனக்காக இவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியுமா?

*மாதம் ரூ.20,000/- சம்பளம் வாங்கிய போதிலும், அனைத்தையும் பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவிட்டு தனது வாழ்விற்கு தேவையானதை திருநெல்வேலியில் ஓட்டல் ஆர்யாஸில் மாலை நேரத்தில் சர்வராக வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டவர் என்பது தெரியுமா? (ஓவராயிருக்கே…. என்று தானே நினைக்கிறீங்க ? இதுக்கு காரணத்தை அப்புறம் சொல்றேன்!)

*1969 இல் இவரது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்த போது இவருக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புடைய சொத்தை உடனடியாக தானம் செய்துவிட்டார். (1969ல் 5 லட்சம் என்றால் இப்போ அதன் மதிப்பு எத்தனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…!)

*இவரது கண்கள் உள்ளிட்ட அனைத்து உடலுறுப்புக்களையும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்துவிட்டார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே.

*பொதுவாழ்க்கைக்கு மண வாழ்க்கை இடையூறாக இருக்கக் கூடாதென்று திருமணமே செய்துகொள்ளவில்லை இவர்.

*சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் இவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர்.

*ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களை நேரடியாக அறிந்துகொள்ள அவர்களுடனே சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் நடை பாதை வாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.

*ஆந்திர புயல், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக திரட்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்தவர்.

*1963 ல் இந்தியா – சீனா யுத்த நிதிக்காக காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.

*தன் பெயருக்கு பின்னால் M.A. (Lit), M.S. (His)., M.A., (GT), B.Lib.Sc., D.G.T., D.R.T., D.M.T.I.F. & C.W.D.S. என பட்டங்களை பெற்றுள்ள இவர் அனைத்திலும் கோல்ட் மெடல் வாங்கிய முதல் மாணவர்.

*வாழ்நாள் முழுதும் தன பெயரில் ஒரு சென்ட் நிலமோ அல்லது ஒரு ஒலைக்குடியாசையோ அல்லது பணமோ இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர்.

*ஐந்தாவது ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை 14 ஆண்டுகள் முன் தேதியுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தையும் தனது 70 வது பிறந்த நாளில் மக்களுக்கு அளித்தார்.

*ஆறாவது ஊதியக் குழுவில் பயன்பெறும் ரூ.5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் குழந்தைக்காக எழுதி வைத்துவிட்டார்.

*கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ அல்லது உடையையோ இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.

*இவரது ஆடை சாதாரண கதராடை தான். செருப்பு ரப்பர் செருப்பு தான்.

*தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை பற்றி கூறுகையில் : "எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்." என்கிறார்.

*நூலகத் துறையில் இவரது சேவையை பாராட்டி நமது இந்திய அரசாங்கம் இவருக்கு "இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்" என்ற பட்டத்தை அளித்தது. "உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்" என்ற புகழ் பெற்றார்.

*உலக பயோகிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் – உலகத்தின் சிறந்த மனிதாபிமானி – என்று கெளரவித்தது.

*ஐக்கிய நாட்டுச் சபை "20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்று தேர்வு செய்து, பாராட்டியது.

*இவர் சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.

*சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கேள்விப்பட்டு ஒரு விழாவில் "இவரை தந்தையாக" தத்து எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு அவரால் சில மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. மூன்றடுக்கு பாதுகாப்பு மிகுந்த அந்த சூழல் தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் உதவி கோரி வருபவர்களுக்கும் கடினமாக இருக்கிறது என்றும் அவரது சுதந்திரமான குணத்திற்கும் எளிமைக்கும் அந்த சூழல் ஒத்துவரவில்லை என்றும் கூறி அதை அன்புடன் மறுத்து வெளியே வந்துவிட்டார்.

இவருடைய பொது சேவைகள்:

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரின் கொள்கைகள் என இவரது விசிட்டிங் கார்டின் பின்னால் காணப்படும் வாசகங்கள் :
என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம்!! தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!!!

பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.

இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்… ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம்.

[Continue reading...]

நீதிபதி வழக்கறிஞர் ஜொக்ஸ் court Tamil comedy stories

- 0 comments

  ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, "மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.

நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்" என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

"மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை.

அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்.

வக்கீல் எழுந்து, "எப்படி மைலார்ட்?" என்று கேட்டார்.தற்கு நீதிபதி சொன்னார், "அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை."

[Continue reading...]

Friday 19 December 2014

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!

- 0 comments

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.

ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm

[Continue reading...]

இளநரைக்கு குட் பாய் !! இதோ சில டிப்ஸ்...

- 0 comments

இளநரைக்கு குட் பாய் !! இதோ சில டிப்ஸ்...

சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும். சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.
------------------------------------------------------------------

[Continue reading...]

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள

- 0 comments

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்....

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும்
பொருட்களை புகைப்படம் எடுங்கள்....

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்....

இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்....

[Continue reading...]

Wednesday 17 December 2014

ஆதார் அட்டை வாட்ஸ் அப் ஜோக்ஸ் Adhaar Card whatsapp jokes

- 0 comments

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

 

(போன்) ஆப்பரேட்டர்: ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

 

கஸ்டமர்: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

 

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

 

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

 

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு, காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

 

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

 

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

 

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

 

கஸ்டமர்: வாட்..? எதுக்குங்க..?

 

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

 

கஸ்டமர்: வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

 

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

 

கஸ்டமர்: எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

 

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

 

கஸ்டமர்: மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

 

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

 

கஸ்டமர்: என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

 

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

 

கஸ்டமர்: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

 

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

 

கஸ்டமர: ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

 

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

 

கஸ்டமர்: வாட்..?

 

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

 

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

 

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

 

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

 

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

 

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

 

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

 

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

 

படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்.

 

இவ்வாறு முடிகிறது அந்த பகிர்வு!

 

[Continue reading...]

மோடியின் 6 மாத கால ஆட்சியின் சாதனை modi and subramanian swamy

- 0 comments

இது மோடியின் 6 மாத கால ஆட்சியின் சாதனை

முஸ்லிம்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டும் -சு சாமி

தமிழர்களின் படகை நான்தான் பிடித்துவைக்க ராஜபக்க்ஷேவிடம் சொன்னேன் சு.சாமி

பகவத்கீதையை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் -சுஷ்மா

பாஜக அல்லாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள்-சாத்வி நிரஞ்சன் ஜோதி

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேசியவாதி -

சாக்ஷி மகராஜ்

இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் -ராஜ்நாத் சிங்

பாபர் மசூதி இந்தியாவின் அவமான சின்னம் -ஆர்.எஸ்.எஸ்

தாஜ்மகாலை இடிக்க வேண்டும் -உபி ஆர்எஸ். எஸ்

மோடியை பற்றி பேசிவிட்டி வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது ஹெச். ராஜா

கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.

[Continue reading...]

Saturday 13 December 2014

இணையத்தில் மனதைத் தொட்ட வரிகள் Touching line's

- 0 comments

மனதைத் தொட்ட வரிகள்

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள
வேண்டாம். உழைத்தால் பணம்
நிறைய சம்பாதிக்கலாம்.

2. துன்பம் துன்பம்
என்று சலித்துக் கொண்டு என்ன
பயன்? உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும்
பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :
வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும்
கிடைக்கும்.

3. உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.

4. ஒரு தாய் தன்
மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண்
இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கி விடுகிறாள்.

5. பெண்களில்
இரண்டே பிரிவினர் தாம்
இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக் கொண்டிருப்பவர்க
ள்.

6. அழகான பெண்களுக்குப்
பிறக்கும்போதே நிச்சய தார்த்தம்
நடந்து விடுகிறது. (யாருங்க
அது

7. பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை!!!!!

8. ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.

9. நீங்கள் போருக்குச்
செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச்
செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக
ஏற்கும்
போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

10. தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

11.
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான்
செய்யும்

12. சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்

13. வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக
இருத்தல்.

14. பணம் இருந்தால்
உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத்
தெரியாது.

15. மது உள்ளே சென்றால்
அறிவு வெளி செல்கிறது.
நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும்
பேசாதே!

16. அதிர்ஷ்டத்திற்காகக்
காத்திருப்பதும் சாவுக்காக்
காத்திருப்பதும் ஒன்றே!

17. செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பது இல்லை!

18. நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்போதும் கட்டியே வை!

19. பறக்க விரும்புபவனால் படர
முடியாது.

20. மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும்
வாழக்கை.

21. ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்
கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.

[Continue reading...]

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள்

- 0 comments

  திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

[Continue reading...]

Friday 12 December 2014

லிங்கா படத்தின் கதை

- 0 comments

சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.

அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.

சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்து வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.

அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வலைக்கிறார்கள். இதிலிருந்து தப்பித்தற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.

அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

சூப்பர்ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார்.

மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. 

சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். 

குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்கு முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலத்திற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவை திறமையாக கையாண்டிருக்கிறார்.

பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே... பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் 'லிங்கா' ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா.

[Continue reading...]

தமிழன் பெருமை 12-12-2014

- 0 comments

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே
'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...
அது தமிழ் மொழியின் புலமை..

தமிழ் என்ற வார்த்தைக்கு
எல்லா மொழியிலும் 'தமிழ்' தான்
அது தமிழ் மொழியின் வலிமை..

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும்
அழகு தமிழில் அர்த்தம் உண்டு..
அது தமிழ் மொழியின் பெருமை..

[Continue reading...]

Wednesday 10 December 2014

அறிந்துகொள்வோம்...!

- 0 comments

 

* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.

*  இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

*  நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

*  பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

*  இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.

*  நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்

*  காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.

*  உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

*  ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

*  மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

[Continue reading...]

Monday 8 December 2014

டிசம்பர் 12ல் ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சி பெயர், கட்சிக் கொடி

- 0 comments


திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதற்கான இறுதிகட்ட பணிகள், 14 மாவட்டங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரஜினியை அரசியலுக்கு இழுக்க தேசியக் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் சூழலில், ரசிகர்களே அரசியல் கட்சி தொடங் குவது குறித்து விசாரித்த போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன.

செயற்குழு, பொதுக்குழு

திருப்பூரிலுள்ள தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் மற்றும் மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் என்பது தமிழக ரஜினி ரசிகர் மன்ற அளவில் குறிப்பிடத்தக்க பெயர்கள். தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் உள்ளார். இவரது தலைமையில், 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, செயற் குழு, பொதுக்குழுவைக் கூட்டி அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை, டிசம்பர் 12-ம் தேதி திருப்பூரில் வெளியிட உள்ளனர்.

நலத்திட்டங்களில் வித்தியாசம்

படையப்பா நகர், முத்து நகர், ரஜினிகாந்த் யாத்ரா நகர், எந்திரன் நகர் உள்ளிட்ட ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பெயர்களில் திருப்பூரில் நகர்கள் உண்டு. அதேபோல், தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில், 100-க்கும் மேற் பட்டோருக்கு வீடு கட்ட காலி இடம் வழங்கப்பட்டுள்ளது. ரஜினி காந்த் பிறந்தநாளையொட்டி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவது, முதியோர் களுக்கு உதவித்தொகை, அரிசி உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

கட்சி பெயர், சின்னம் அறிவிப்பு

இந்நிலையில், இளைஞர் அணி, தொழிற்சங்கம், மகளிர் அணி உட்பட 5 உட்பிரிவினரும், அரசியல் கட்சி அறிவிப்புக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 14 மாவட்ட ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர்கள், திருப்பூரில் கூடி கட்சி மற்றும் சின்னத்தை அறிவிக்க இருக்கின்றனர். இதுதொடர்பாக, தங்களின் விளக்கக் கடிதத்தையும் தலைமைக்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியது:

ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி பொதுத் தொழிலாளர் சங்கத்தை, கட்சியாக அறிவிக்க உள்ளோம்; இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரஜினிகாந்தின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளமாட்டோம். கட்சி ஆரம்பிப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படியான அனைத்து சான்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படத்தையும், பெயரையும் பயன் படுத்தமாட்டோம் என்றார்.

கடந்த 6 மாதமாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திதான் இந்த முடிவு எடுக்கப் பட்டது. கடந்த 30 ஆண்டு களாக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், 32 மாவட்டங் களிலும் கட்சியை விரிவுப்படுத்தும் முனைப்புதான், நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள முதல் பணி. அதை முடித்துவிட்டு, அடுத்த 3 மாதத்துக்குள் முதல் மாநாட்டை, மதுரை அல்லது கோவையில் நடத்தும் திட்டமும் உள்ளது. குறிப்பாக, ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென ஏங்கிக் கிடக்கும், ரசிகர்களுக்கு, அரசியல் இயக்கத்தில் தனி பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளது என எஸ்.எஸ்.முருகேஷுக்கு நெருக்கமான வர்கள் கூறுகின்றனர்.

Keywords: திருப்பூர் தலைமையிடம், ரஜினி ரசிகர்கள், அரசியல் கட்சி, டிசம்பர் 12ல் பெயர், கட்சிக் கொடி அறிவிப்பு

[Continue reading...]

நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு முற்றுகிறது

- 0 comments


திருச்சி நாடக நடிகர்கள் சங்க விழாவில் நடிகர் நாசர், விஷால் குறித்து விமர்சனம் செய்த பிரச்சினை முடிவதற்குள் மதுரையிலும் விஷால், மன்சூர் அலிகானுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை உட்பட 16 இடங்களில் நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. இவை தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களும் வாக்களிப் பார்கள். பதிலுக்கு செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பதவிகள் இவர்களுக்கு வழங் கப்படும். அடுத்த ஆண்டு ஜூலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

கடந்த தீபாவளியையொட்டி திருச்சியில் நடந்த நலிந்த கலைஞர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் நடிகர் நாசர், விஷால் ஆகியோரை மோசமாக விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷால், நாசர் ஆகியோர் தனித்தனியாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட இருவரும் சங்கத்தில் மன்னிப்பு கேட்ட பிறகும், இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத சூழலில், மதுரையில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சங்கரதாஸ் சுவாமி களின் குருபூஜை விழாவில், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கே.என்.காளை, செயற்குழு உறுப் பினர் பிரசாத் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ் நாடு நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பேசும்போது, "நாடக நடிகர்களுக்காக போராடி வருகிற சரத்குமார், ராதாரவி போன்றவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்தே ஒதுக்க விஷால் போன்ற இளைய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள். நாடக நடிகர்களை மன்சூர் அலிகான் இழிவாகப் பேசுகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதா ரவி. அவர் இல்லை என்றால், நமக்கு சங்கம் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்காது. சரத்குமார், ராதாரவி ஆகியோரது கரங் களை நாம் வலுப்படுத்த வேண் டும். சங்கத்துக்கு எதிராகப் பேசும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். நாடகக்காரர் களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும் என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர் வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Keywords: அடிக்கவும் தெரியும், விஷால், மன்சூர் அலிகான், நாடக நடிகர்கள் மிரட்டல், நாடக நடிகர்கள் சங்க விழா

[Continue reading...]

அவமானம் தமிழ் கதை -Tamil short story

- 0 comments
ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன்.

எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது.

'சே..' என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். "மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது" என்றார் கடைக்காரர்.

அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம் கழித்து, "அப்பா... சீட்டு வரல!" என்று சிணுங்கினாள்.

அவனும் தட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான். "சரி.. வா, போகலாம்..!" என்று அவன் மனைவி இழுத் தாள். "இரு.." என்று சொல்லிவிட்டு சுற்றிப் பார்த்தான். சாமான் பேக் செய்து வந்த அட்டைப் பெட்டி கிடந்தது.

பாக்கெட்டில் இருந்து பால்பாய்ன்ட் பேனாவை எடுத்து 'ரிப்பேர்' என்று கொட்டை எழுத்தில் எழுதினான். பக்கத்தில் கிடந்த சணல் கயிறை எடுத்து அட்டையை மெஷினில் சேர்த்துக் கட்டிவிட்டு கிளம்பினான். பார்த்துக் கொண்டிருந்த மாதவன் கொஞ்சம் அவமானமாக உணர்ந்தார்!

Keywords: ஒரு நிமிடக் கதை

[Continue reading...]

பத்து பைசா - தமிழ் கதைகள்

- 0 comments
"ஏம்மா, உன்னை சீக்கிரமா கிளம்பத் தானே சொன்னேன்?..."- என்று அம்மாவிடம் சிடுசிடுத்த ராகவன், மனைவியிடம் சென்று, "ஏய்...அம்மாவுக்கு சீக்கிரம் டிபன் வை. நான் ஆபிஸ் போகும்போது அவங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடறேன்" என்றான்.

"ஊருக்கு கிளம்பற அம்மாகிட்ட ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? நீங்க கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி படபடக்கறது அவங்களுக்கு சரிப்பட்டு வராது. நீங்க கிளம்புங்க. அவங்க வயசானவங்க. நிதானமா கிளம்பி ஆட்டோவுல போவாங்க. நான் அவங்களை வழி அனுப்பி வைக்கிறேன்!" ரமா சொன்னாள்.

ரமா மாமியாருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து ராகவன் ஆனந்தப்பட்டான்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று காலையில் தெரிந்ததுமே 'செலவுக்கு வச்சுக்கம்மா' என்று ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் என்றுதான் இந்த கரிசன நாடகம்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று காலையில் தெரிந்ததுமே 'செலவுக்கு வச்சுக்கம்மா' என்று ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் என்றுதான் இந்த கரிசன நாடகம்.

மாமியார் கிளம்பி ரமாவிடம் விடைபெறும் போது ரமா கேட்டாள், "அத்தே, உங்கப் பிள்ளை என் செலவுக்குன்னு பணமே தர்றது இல்லை. கேட்டா, 'எல்லாம் நான்தான் வாங்கி வந்து போட்டுடறேனே. அப்புறம் உனக்கு ஏன் தனியாப் பணம்? 'ன்னு கேட்கறார். வீட்ல கைக்குழந்தை இருக்கு. திடீர்னு அதுக்கு ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போகக்கூட அவசர செலவுக்குன்னு வீட்ல பத்து பைசா இல்லை. நீங்க தப்பா எடுத்துக்க லேன்னா உங்ககிட்ட பணம் ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போங்க அத்தே".

ரமாவின் பேச்சு மிக இயல்பாய் இருந்தது.

மகன் கொடுத்த பணத்துடன் ஆட்டோவுக் கென்று எடுத்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரமாவிடம் கொடுத்துவிட்டு, மூணு கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் ராகவனின் அம்மா.

"என்ன ராகவ்... காலையில இருந்து சந்தோஷமா இருக்கே? - ராகவனிடம் ஆபிஸ் நண்பன் குமார் கேட்டான்.

"என் மனைவி என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி, என் அம்மாகிட்ட அன்பா நடந்துக்க மாட்டாளான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேண்டா. அவ இவ்வளவு சீக்கிரம் மாறுவாள்னு நினைக்கவே இல்லை"

தாமதமாய் கிளம்பிய அம்மாவிடம் தான் கோபமாய் பேசியதையும், அதற்கு ரமா பரிந்து வந்ததையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான் ராகவன்.. உலகம் புரியாத அப்பாவியாய்!

Keywords: ஒரு நிமிட கதை, பரிவு, குடும்பம்
Topics: இலக்கியம்| கதை|
MORE IN: இலக்கியம் | பொது

[Continue reading...]

Saturday 6 December 2014

பைத்தியக்காரி - ஒரு நிமிடக் கதை Tamil short stories

- 0 comments


"நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!" சுதா கேட்கிறாள்.

அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக "நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!" என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான்.

"இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?" அருண், மனைவியிடம் கேட்டான்.

அதற்கு சுதா, "என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்குடித்தனம் பண்ண வாடகை வீடு பார்த்த பிறகு வரேன்..." என்று சொல்லியவாறு தன் உடைகளை சூட்கேஸில் அடைக்கிறாள்.

அதை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அருண், "சுதா, நீ இப்ப நிலமை புரியாம அவசரப்படறே. உங்க அம்மா வீடு ஒண்ணும் தூரத்துல இல்லை. ஜஸ்ட் இங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்துலதான். அதை நீ மனசுல வைச்சுக்க..." என்றான்.

"எங்க அம்மா வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் தூரம் அதிகமில்லை தான். ஆனா, உங்க குடும்பத்துக்கும், எனக்கும் தூரம் அதிகமாயிடுச்சு. அது தெரியுமா உங்களுக்கு?" வெடுக்கென்று கேட்டாள் சுதா.

அவளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தான். சுதா தன் உடமைகளை மூட்டைகட்ட ஆரம்பித்தாள். அது முடிந்ததும் தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரு வழியாக தன்னை அழகு படுத்திக்கொண்ட சுதா, "நான் கிளம்பறேன். எனக்கு டாக்ஸி ஏற்பாடு பண்ணுங்க!" என்றாள்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு. டாக்ஸி வந்துடும்!" அருண் சொல்கிறான்.

டாக்ஸி வந்தது.

"சுதா, டாக்ஸி வந்துடுச்சு. நீ வா" அருண் அழைக்க சுதா பெட்டி, படுக்கையுடன் வெளியே வருகிறாள்.

டாக்ஸி கதவை அவள் திறக்கப் போகும்போது கதவு தானாக திறக்கிறது. டாக்ஸியில் இருந்து சுதாவின் அம்மா ஒரு சூட்கேஸுடன் இறங்கிக்கொண்டிருந்தாள். "என்னம்மா நீ இங்க?"சுதா பதறிப்போய் கேட்கிறாள்.

"வயசானாலும் உன் அப்பன் தொல்லை தாங்கலைடி. எங்கிட்ட தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டே இருக்கார். அதான் என் கஷ்டத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளைக்கிட்ட போன்ல சொல்லிக்கிட்டு இருந்தேன். அவர்தான், 'நான் வீட்ல தான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...

மாமா நீங்க இல்லாத அருமையை உணர்ந்து, தானே வந்து உடனே உங்களை அழைச்சுட்டு போயிடுவாரு. நீங்க இல்லாம அவரால இருக்க முடியாது. டாக்ஸி அனுப்பறேன். வந்துடுங்க'ன்னு சொன்னாரு. அதான் வந்துட்டேன். பின்னாலயே உங்க அப்பா மாப்பிள்ளை சொன்ன மாதிரி ஓடி வரத்தான் போறாரு பாரு!"

அம்மா சொன்னதைக் கேட்ட சுதா, தன் கணவன் அருணைப் பார்க்க, "நீ இப்ப நிலைமை புரியாம அவசரப்படறே'ன்னு நான் முன்னாடியே சொன்னேன் இல்ல? நீ கேட்டியா?" அருண் சொல்ல, அவனை ஆசையுடன் வந்து கட்டிக்கொள்கிறாள் சுதா.

Keywords: ஒரு நிமிடக் கதை
[Continue reading...]

Wednesday 3 December 2014

ஐம்பதாயிரம்

- 0 comments
ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... "அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!"

அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, "யாரடி அந்த ரமேஷ்?" என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.

"அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..'' தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.

சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ''அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்!"

இது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ''சரி... இப்ப நான் என்ன செய்யணும்?'' என்றாள்.

"பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்!"

"என்ன சொல்ற..? முழுசா ஐம்பதாயிரமா? ராதிகாவுக்கா? எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா?"

"என்னங்க பெரிய ஐம்பதாயிரம்..? அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா..? மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு!"

எதுவும் பேசாமல் 'செக் புக்'கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர்.

Keywords: ஒரு நிமிட கதை, ஐம்பதாயிரம்

[Continue reading...]

Tuesday 2 December 2014

பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளுங்கள் மோடி!

- 0 comments
தனியார் நிறுவனங்களின் லாபத்துக்காக, இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விலையில் கடுமையாக அதிகரிக்கிறது என்பதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் கடந்த 97-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு 348 மருந்துகளை பட்டியலிட்டு அவை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த ஆணையம் அறிவித்தது. கடந்த மே 29-ம் தேதி 108 அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து இந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.

நாடு முழுவதும் ஆறு கோடி ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உள்ளனர். இதய நோயாளிகள் 5.7 கோடி, நீரிழிவு நோயாளிகள் 4.1 கோடி, எய்ட்ஸ் நோயாளிகள் 2.5 லட்சம், காசநோயாளிகள் 22 லட்சம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தது.

ஆனால், மருந்து விற்பனை நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. உள்நோக்கத்துடனும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கிறது. கோடிக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தச் சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பி.ராஜீவ் எழுப்பினார்.

அப்போது அவர் கூறும்போது, "எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்நோய்களால் அவதிப்படும் சாமானிய மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

சில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தவறான மருந்து கொள்கைகளை வகுத்திருப்பதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் இந்தக் கொள்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதய நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோய், காசநோய், புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்தியர்களின் எத்தனை பேர் பணக்காரர்கள், எவ்வளவு பேர் எழை, நடுத்தர மக்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே என்பது தெளிவாகத் தெரியவரும்.

புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளைக் காப்பாற்ற நன்கொடை வேண்டி கையேந்தி நிற்கும் ஏழைகளுக்கு இந்த அரசு செய்தது என்ன? 300 பேரிடம் கையேந்தியவர்கள் இனி 3000 பேரிடம் கையேந்தட்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?

பெட்ரோல் விலை உயர்ந்தாலோ, டீசல் விலையை அதிகரித்தாலோ அதன் தாக்கம் உடனடியாக நம் சமூகத்தில் வெளிப்படுகிறது. அரசின் மீது அதிருப்தி உடனடியாகவும் வலுவாகவும் பதிவு செய்யப்படுகிறது.

ஆனால், ஏழை - எளிய மக்களைக் கொல்லும் மருந்து விலை உயர்வு குறித்து நம் சமூகம் திரண்டு போராடாதது ஏன்? இந்தப் பாதிப்பின் தன்மை ஒட்டுமொத்த மக்களுக்கு எளிதில் புரியாது. அவர்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானால்தான் அதன் கொடூரம் தெரியும். கடும் நோயால் பாதிக்கப்பட்ட உறவுகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி வீதிக்கு வந்து போராட முடியும்?

மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் மோடி தலைமையிலான அரசு, பெரும்பாலான மக்களின் பார்வையிட படாத, அதேவேளையில் அவர்களைக் கடுமையாக பாதிக்கும் மருந்துகள் போன்றவற்றை விலையை உயர்த்த வழிவகுப்பது எந்த வகையில் நியாயம்?

"தயவுசெய்து பெட்ரோல் விலையையே நீங்கள் உயர்த்திக் கொள்ளுங்கள் மோடி!" என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger