Sunday 29 September 2013

முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது hema malini kuththattam tamil song

- 0 comments

சின்னப் பசங்களுடன் போய் எப்படி குத்தாட்டம் ஆடுவது! வெட்கப்படும் முன்னாள் கனவுக் கன்னி!
by abtamil

முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது குறித்த கேள்விக்கு வெட்கப் புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.

அது சரியாக இருக்குமா என்றும் அவர் கேட்டுள்ளார். முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி பாட்டி ஆன பிறகும் கூட படு ப்யூட்டியாகத்தான் இருக்கிறார். இன்றும் கூட அதே கம்பீர அழகுடன், ரசிகர்களின் விருப்ப நாயகிகள் வரிசையில்தான் இருக்கிறார்.

மும்பையில் நடந்த நீதா லல்லாவின் புதிய ஸ்டோர் திறப்பு விழாவுக்கு வந்த அவரிடம் குத்தாட்டம் குறித்து கேட்கப்பட்டது.

இப்போதெல்லாம் வயதில் சிறிய ஹீரோக்களுடன் முன்னாள் நாயகிகள் குத்தாட்டம் ஆடுகிறார்களே.. அதுகுறித்து என்ன சொல்றீங்க என்று கேட்டபோது ஹேமமாலினி முதல் வெட்கப் புன்னகையைச் சிந்தினார்.

மாதுரி தீட்சித் சமீபத்தில் ஒரு படத்தில் மிகவும் சிறிய வயது ஹீரோவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து மீண்டும் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்தார் ஹேமா.

பின்னர் அவர் பதிலளிக்கையில் இது வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கிறது. சின்ன வயது ஹீரோக்களுடன் ஆடினால் நல்லாவா இருக்கும் என்றார் ஹேமா.

ஆனால் தொடர்ந்து பேசிய ஹேமா, நாங்கள் கலைஞர்கள். தேவைப்பட்டால், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நானே கூட ஆட வேண்டியது வரலாம்.. யார் கண்டார்கள் என்று முடித்தார்.

 

Show commentsOpen link

[Continue reading...]

ஜிம்முக்கு போகணும்! கிளாமரா நடிக்கனும்! – லக்‌ஷ்மி மேனன்! Actress lakshmi menon sexy news

- 0 comments

ஜிம்முக்கு போகணும்! கிளாமரா நடிக்கனும்! – லக்‌ஷ்மி மேனன்!

by admin
TamilSpyToday,

நடிகை லக்‌ஷ்மி மேனன் தற்போதைய தமிழ்த்திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவர். இளைய தலைமுறையினரின் ஆதரவு பெற்றுவிட்ட லக்‌ஷ்மி மேனனுக்கு பட வாய்ப்புகளில் குறை ஏற்படவா போகிறது.

விமலுடன் மஞ்சா பை, கௌதம் கார்த்தியுடன் சிப்பாய், விஷாலுடன் பாண்டிய நாடு, சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என யூத்ஃபுல்லான பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் லக்‌ஷ்மி மேனன். இத்தனை படங்களை லையில் வைத்திருக்கும் லக்‌ஷ்மி மேனனைப் பார்த்து திரையுலகமே வியக்கும் ஒரே விஷயம, இதுவரை லக்‌ஷ்மி மேனன் கிளாமராக ஒரு சீனில் கூட நடிக்காதது தான்.

கிளாமராக நடிப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் "கிளாமராக நடிக்க நல்ல உடலமைப்பு தேவை. ஆனால் எனக்கு அந்த உடலமைப்பு இல்லை. நான் ஜிம்முக்கு சென்று என் உடலமைப்பை மாற்ற வேண்டும். அதன்பிறகு கிளாமராக நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Show commentsOpen link

[Continue reading...]

நடிகர் துனியா விஜய் விவாகரத்து : மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு அடம் actor duniya vijai divorce

- 0 comments

நடிகர் விஜய் விவாகரத்து : மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு அடம்

by abtamil
Tamil newsToday,

"என் மனைவிக்கு போதுமான அளவு பணம், சொத்துகளை கொடுத்துள்ளேன். இனிமேல் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாடகை வீட்டில் நான் குடியிருப்பதால், அவர் தான், எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என, நடிகர் துனியா விஜய் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் விஜய், தன் மனைவி, நாகரத்னாவிடமிருந்து விவாகரத்து கோரி, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதற்கு, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என, நாகரத்னா பதில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜீவனாம்சம் தர மறுத்துள்ள விஜய், குடும்பநல நீதிமன்றத்தில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் என் மனைவிக்கு, ஏற்கனவே, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொடுத்துள்ளேன். செங்கல் தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலை வாங்கி கொடுத்தேன்.

சமீபத்தில் திரைக்கு வந்த, ஜெயம்மன மகா திரைப்படம், என் மனைவி நாகரத்னா தயாரிப்பு என்பதால், அதன் மொத்த இலாபமும், அவரையே சேரும்.

நான், 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, எனக்கு தான், நாகரத்னா ஜீவனாம்சம் தர வேண்டும். அவருக்கு, நான் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என, குறிப்பிட்டுள்ளார்

 

Show commentsOpen link

[Continue reading...]

டாக்டர் சுப்பையா படுகொலை: கூலிப்படையினரை பிடிக்க நெல்லையில் வேட்டை doctor suppaiah murder investigation in Nellai

- 0 comments

டாக்டர் சுப்பையா படுகொலை: கூலிப்படையினரை பிடிக்க நெல்லையில் வேட்டை doctor suppaiah murder investigation in Nellai

Tamil NewsToday,

சென்னை, செப். 29–

துரைப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் சுப்பையா, கடந்த 14–ந்தேதி அபிராமபுரத்தில் வைத்து மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் 25–ந் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊரான குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான பொன்னுசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதில் ஏற்பட்ட தகராறில்தான் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பொன்னுசாமி, மற்றும் அவரது மனைவி மேரிபுஷ்பம், மகன்கள் வக்கீல் பெய்சில், என்ஜினீயர் போஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெய்சில், போஸ் இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் சரண் அடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து 2 பேரும் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் 2 பேரும் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலையில் பொன்னுசாமியும், மேரிபுஷ்பமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டுப்பட்ட காட்சி அப்பகுதியில் ஒரு வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கூலிப்படை கொலையாளிகள் நெல்லையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் பெங்களூரிலும் 2 தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger