Tuesday 30 July 2013

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விடைகள்- இணையதளத்தில் வெளியீடு

- 0 comments
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்  http://www.trb.tn.nic.in/ வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
[Continue reading...]

ஐ.பி.எல். சூதாட்டம் விசாரணை குழு சட்ட விரோதமானது

- 0 comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட்– பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.

[Continue reading...]

Monday 29 July 2013

தெலுங்கானா அறிவிப்பு இன்று மாலை துணை ராணுவம் ஆந்திரா விரைந்தது

- 0 comments
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெறப்படும்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, துணை முதல்– மந்திரி தாமோதர் ராஜா நரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்திய நாராயணா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா பற்றிய அனைத்து அம்சங்களும் விவாக்கப்பட உள்ளது. பிறகு தெலுங்கானா மாநிலம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்படும். இதை யடுத்து தெலுங்கானா மாநிலம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதால் ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலோ ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்றே பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கிவிட்டது. மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடு முன்பு பொதுமக்களும், மாணவர்களும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி வீடு முன்பும், எலுருவில் மத்திய மந்திரி கே.எஸ்.ராவ் வீடு முன்பும், விஜயவாடாவில் மத்திய மந்திரி ராஜகோபால் வீடு முன்பும் மாணவர்கள் இன்று ஆயிரக்கணக்கில் திரண்டு ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் ஐதராபாத்திலும் இன்று ஆந்திரா பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் அறிவிப்பு வெளியான பிறகு ஆந்திராவில் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறலாம். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை நேரடியாக தலையிட்டு ஆந்திராவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஆந்திரா தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யை இன்று காலை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க ஏற்பாடுள் நடந்து வருகிறது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர ஆந்திராவின் பல பகுதிகளிலும் சுமார் 1200 துணை நிலை ராணுவ வீரர்களை மத்திய அரசு நிறுத்தி இருந்தது. நேற்று கூடுதலாக 1000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர்.
கடலோர ஆந்திரா மாவட்டங்களில் போராட்டம் வலுப்பதால் மேலும் 20 கம்பெனி ராணுவப்படை வீரர்கள் ஆந்திராவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த 20 கம்பெனி படையில் திபெத் எல்லைப் படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதிகளில் முக்கிய நகரங்களில் நிறுத்தப்படுவார்கள்.
ஐதராபாத் நகரில் கர்நாடகா ஆயுதப்படை போலீசார் 200 பேரும், தமிழக ஆயுதப்படை போலீசார் 100 பேரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய நிலை களை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர அதிரடிப்படையும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம், விஜி நகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமந்திரா மண்டலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[Continue reading...]

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சீமான் உண்ணாவிரதம்

- 0 comments
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 
கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடை முறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைகள் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதாரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதனாலேயே அதனை எதிர்த்து இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் அறவழியில் கடந்த 700 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அப்படிப்பட்ட மக்களின் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது என்பது போன்ற மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
[Continue reading...]

சென்னை யில் வேலை செய்யும் பெண்களின் நிலமை ? - கற்பழித்த கொல்லப்பட்ட பெண்

- 0 comments
தயவுசெய்து இதனை பகிருங்கள்
உண்மை சம்பவம் ... முழுவதும்
படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும்
ஜெயசந்திரன் குழுமங்களில்
வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில்
தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும்
பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும்
நடத்தபடுகின்றனர
பெரும்பாலான பெண்கள்
[Continue reading...]

2015 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் அட்டவணை

- 0 comments

11-வது உலக கோப்பை ஒருநாள்
போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
(ஐ.சி.சி) அனுமதியுடன்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015-
ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்
நடைபெறுகிறது.
14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக்
மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான
எண்ணிக்கையில் நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்
இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல்
அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம்
ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
கலந்து ஆலோசித்து முடிவு செய்து இருக்கின்றன.
போட்டி அட்டவணை வெளியிடும்
நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை)
ஒரே நேரத்தில் மெல்போர்ன் (ஆஸ்திரேலியா),
வெலிங்டன் (நியூசிலாந்து) ஆகிய இடங்களில்
நடைபெறுகிறது. இந்திய
நேரப்படி அதிகாலை 5.30
மணிக்கு அட்டவணை வெளியாகிறது.
அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட்
வாரிய நிர்வாகிகள், இன்னாள் மற்றும்
முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மெல்போர்னில் நடைபெறும்
அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி.
துணைத்தலைவர் முஸ்தபா கமால்,
தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்,
உள்ளூர் போட்டி அமைப்பு குழு சேர்மன்
ரால்ப் வாட்டர்ஸ், தலைமை செயல்
அதிகாரி ஜான் ஹார்டென் ஆகியோரும்,
வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில்
ஐ.சி.சி.தலைவர் ஆலன் ஐசக்,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர்
தெரஸ் வால்ஷ் ஆகியோர் பங்கேற்பார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[Continue reading...]

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு ரூ.21 ஆயிரத்தை தாண்டியது gold rate again increased 21 thousands

- 0 comments
சில மாதங்களாக ஜெட் வேகத்தில் விர்ரென உயர்ந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது.


பிறகு படிப்படியாக அதிகரித்து கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 984 ஆனது. இந்த நிலையில் இன்று பவுனுக்கு மேலும் ரூ.96 உயர்ந்தது.
அதன் மூலம் பவுன் மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 80 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.2635–க்கு விற்கிறது.


தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதே முக்கிய காரணமாக கருதப் படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.650 அதிகரித் துள்ளது. ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 710 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.60 ஆகவும் உள்ளது.

[Continue reading...]

Sunday 28 July 2013

வேலை செய்யும் இடங்களில்பெண்களுக்கு செக்ஸ்தொல்லை கொடுக்கும் ஆண்கள்

- 0 comments
வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ்
தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய
சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான
விதிமுறைகளைக் கொண்ட
வரைவு மசோதாவை, மத்திய அரசின்
பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.
அதில், வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த
புகார் நிரூபிக்கப்பட்டால்
குற்றவாளி பணி நீக்கம் செய்வது,
பதவி உயர்வு மற்றும் ஊதிய
உயர்வை நிறுத்தி வைப்பது,
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான
இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள்
இடம் பெற்றுள்ளன.
அதேபோல் செக்ஸ்
தொல்லை என்று கொடுக்கப்பட்ட புகார்
பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால், புகார்
கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும்
பணி நீக்கம் உள்ளிட்ட மேற்கண்ட
அதே தண்டனைகளை வழங்கவும்
வரைவு மசோதாவில்
பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய
அம்சங்கள் வருமாறு-
இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக
அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில்,
தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில்
அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5
ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர்
ஒருவர் இடம் பெற வேண்டும்.
மாவட்ட அளவில் குழந்தைகள்
பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க
வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான
பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று,
விசாரணை கமிட்டிக்கு தேவையான
உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.
புகார் கொடுத்தவரையும், குற்றம்
சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர்
வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது.
விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும்
இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும்
ஆஜராக அனுமதி இல்லை.
மேற்கண்ட விதிமுறைகள் அதில் இடம்
பெற்றுள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த
புதிய சட்டம் அமலுக்கு வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[Continue reading...]

Saturday 27 July 2013

16 வயது இளம்பெண் விபச்சாரத்தில்

- 0 comments

16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில்
தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார்
கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த
16 வயது இளம்பெண் உடல்நலக்
குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
ஆஸ்பத்திரியில்
தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற
பெண்ணுடன்
நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார்.

அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன்
என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20
ஆயிரத்துக்கு பேரம்
பேசி டோலி விற்று விட்டார்.

விலைக்கு வாங்கிய அந்த
பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும்
மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்
ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில்
ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர்.

அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த
அந்த பெண் போலீசில் புகார்
அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன்,
அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3
பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும்
டோலியை கைது செய்ய தேடுதல்
வேட்டை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்

- 0 comments

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற
இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம்
செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன்,
அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற
இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த
அந்த பெண்ணை உள்ளூர் மக்கள்
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய
முதல்வர் மம்தா பானர்ஜி, தேவையான
மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஓடும் ரெயிலில்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில்,
உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் (36)
என்பவரை கொல்கத்தா போலீசார்
நேற்று கைது செய்துள்ளனர்.

[Continue reading...]

Friday 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள
ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர்
சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.

ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில்
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான
முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது மர்ம உறுப்பையும்
கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த
கொலையின் பின்னணி பற்றி போலீசார்
பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின்
மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’ மூலம்
அனுப்பட்டது.

அந்த பார்சலில் இருந்து ரத்தம் வடிந்ததால்
சந்தேகப்பட்ட கொரியர் நிறுவன ஊழியர்கள்
போலீசில் புகார் அளித்தனர்.
பார்சலை பிரித்து பார்த்த போலீசார்
திகைப்படைந்தனர்.
கொரியர் நிறுவன ஊழியர்கள் கூறிய
அடையாளங்களை அடிப்படையாக
வைத்து போலீசார்
ஒரு பெண்ணை கைது செய்தனர்.
டாக்டரை கொன்றது ஏன் ? என்பது தொடர்பாக
போலீசாரிடம் வாக்குமூலம்
அளித்த அந்த

பெண் கூறியதாவது:-
சுமார் 13 வருடங்களாக
எனக்கு போதை ஊசி போட்டு டாக்டர்
என்னை தொடர்ந்து கற்பழித்து வந்தார்.

இதேபோல் கடந்த 16-ம் தேதி எனக்கு போன்
செய்து ரணியாவில் உள்ள
லாட்ஜுக்கு வரவழைத்தார்.
சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லாட்ஜ்
அறையில் ஒன்றாக மது குடித்தோம்.

போதையில் இருந்த டாக்டரின்
கழுத்தை அறுத்துக் கொன்றேன். மர்ம
உறுப்பையும்
வெட்டி எடுத்து அவரது மனைவிக்கு கொரியர்
மூலம் பார்சலாக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்
இருப்பதாகவும், இதற்காக
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.

[Continue reading...]

பிளாஸ்டிக் கழிவு குப்பைக்கு தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா ?

- 0 comments
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும்  தற்போது தேவைப்படும் கூடுதல்
[Continue reading...]

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

- 0 comments

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்


உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் மகன்கள் 4 பேரையும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சுடுகாட்டில் தங்க வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிறுவர்கள் 4 பேரும் அவர்களின் பெற்றோரின் கல்லறை அருகில் கூடாரம் அமைத்து 2 மாதமாக வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டு வேதனையுடன் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

இது தொடர்பாக அந்த சிறுவர்களில், 17 வயதான மூத்த சிறுவன் நிருபர்களிடம் கூறுகையில், "என் தந்தை எய்ட்ஸ் நோயால் இறந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயும் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார். அதன்பின்னர் நான், எனது உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க விரும்பினேன். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என பயந்து வெளியேற்றிவிட்டனர்" என்றான்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநில சுகாதாரக் குழுவினர் அங்கு சென்று சிறுவர்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. எய்ட்ஸ் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்களை மீண்டும் ஊருக்குள் அழைத்து வருவோம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பசி பட்டினியால் சுடுகாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கு, அரசு இப்போது இலவச வீடு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கான ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மற்ற நலத்திட்ட பயன்களையும் பெற முடியும். ஆனால் உறவினர்கள், கிராம மக்களின் ஆதரவு இல்லாமல், அரசின் இத்தகைய உதவிகள் மட்டுமே அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்களை சுடுகாட்டில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு உடனடியாக மாற்றும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
[Continue reading...]

Thursday 25 July 2013

பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு 2 days 3 women torture in bihar

- 0 comments
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.

இரவு 7 மணி ஆகி விட்டதால் வீடு திரும்புவதற்காக காத்து இருந்தார். அப்போது ஒரு மினி பஸ் வந்தது. அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக ஏமாற்றி ஏற்றிச் சென்று ஓடும் பஸ்சில் ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர்.
[Continue reading...]

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

- 0 comments
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.

சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

ஜூலை 25,2013 தினமலர்
[Continue reading...]

Wednesday 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.
[Continue reading...]

வேலை வாங்கி தருவதாக இளம்பெண்கள் விபச்சாரம்

- 0 comments
பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக
கூறி வெளிமாநில
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 9 பேர்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்
இருந்து ரொக்க பணம்,
செல்போன்களை போலீசார் பறிமுதல்
செய்தார்கள்.
பெங்களூர் கெங்கேரி உபநகர்
விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் உள்ள
வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசார
தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார்,
வீட்டிற்குள்
புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும் அங்கிருந்த 4
பேரை பிடித்து விசாரித்தார்கள்.
விசாரணையில் சந்திரசேகர் (வயது 33),
சிவு(25), கணேஷ்(25), மகேஷ்(23) ஆகியோர்
என்பதும், ஆந்திரா, மேற்கு வங்காள
மாநிலத்தை சேர்ந்த
இளம்பெண்களை பெங்களூரில்
வேலை வாங்கி தருவதாக
அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியதும்
தெரியவந்தது.
மேலும் ஹைடெக் அளவில் விபசார தொழில்
நடத்தி லட்சக்கணக்கில் பணம்
சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சந்திரசேகர் உள்பட 4
பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து ரூ.10,500 ரொக்கப்
பணம், 4 செல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. 4 பேர் மீதும்
கெங்கேரி போலீசார்
வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதுபோல, இந்திராநகர் 4-வது பிளாக்,
சி.எம்.எச் ரோட்டில் விபசார தொழில்
நடத்தி வந்த ராஜூவ்(22), ராஜேஷ்(23),
சுவாமி(22), கார்த்திக்(30), சாகர்(49) ஆகிய 5
பேரையும் குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தார்கள். இந்திராநகர் போலீசார் 5
பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 8
செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
[Continue reading...]

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் நடிகைகள் அஞ்சலி Actress Manjula body cremated

- 0 comments
நடிகை மஞ்சுளா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, ராதாரவி, சந்திரசேகர், அதர்வா, மன்சூர் அலிகான், சிங்கமுத்து, ராஜா, நடிகைகள் ஜோதிகா, ஸ்ரேயா ரெட்டி, டைரக்டர்கள் சேரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சுளா உடல் பிற்பகல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அப்போது அவரது கணவரும், நடிகருமான விஜயகுமார், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர் கதறி அழுதனர்.
பின்னர் மஞ்சுளா உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கணவரும் நடிகருமான விஜயகுமார் தீ மூட்டினார்.
மஞ்சுளா மறைவுக்கு நடிகர், நடிகைள் டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா இல்லாமல் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. அவர் அழகான பெண் ரொம்ப நேசிக்கிறேன். எனது குழந்தைகள் அன்பான பாட்டியை இழந்துள்ளனர். எனக்கும் சுந்தர்சிக்கும் திருமணம் நடக்க காரணமாக இருந்தவர், என் சந்தோஷத்துக்கு காரணம் அவர்தான்.

நடிகை ராதிகா கூறி இருப்பதாவது:–
மஞ்சுளா அக்கா அன்பானவர். அவருடன் இருந்த இனிய நாட்களை நினைத்து பார்க்கிறேன். என் மேல் நிறைய அன்பு காட்டினார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சொல்கிறார், மஞ்சுளா எல்லோரிடமும் பாசமாக இருப்பார். நல்ல அம்மா சிறந்த தோழி.

நடிகை திரிஷா கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா எப்போதுமே என் நலன் விசாரிப்பார். என்னை வாழ்த்தவும் செய்வார். அவரை இழந்தது பெரிய வலி ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா குடும்பத்தினர் இந்த இழப்பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன். என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
[Continue reading...]

Tuesday 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

முத்துநகரில் ஒரு முத்துக்குமார்

- 0 comments

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர்
எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திங்கள்(22-07-2013)
காலை 7.30 மணிக்கு வந்தது. பயணிகள்
அனைவரும் இறங்கி சென்ற பின்னர்,
ஒரே ஒரு சிறுவன் மட்டும்
தனியே நின்று கொண்டிருந்தான். இதனைப்
பார்த்த ரயில்வே போலீஸ் ஏட்டுகள்
அசோக்குமார், சித்திரையப்பன் ஆகியோர்
சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணான
தகவல்களை தெரிவித்தான். இதையடுத்து சப்
இன்ஸ்பெக்டர் ஜாண் பீட்டர் மேத்யூவிடம்
சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அந்த
சிறுவனின் பெயர் முத்துக்குமார் (எ)
முத்து சாமி (8), தகப்பனார் பெயர்
உண்ணிகிருஷ்ணன், தாயார் பெயர்
சரஸ்வதி என்றும், தனக்கு 2 தங்கைகள்
உள்ளதாகவும் கூறியுள்ளான்.
மேலும், தனது தயார் வீட்டில்
வைத்து தன்னை சூடுபோட வந்தபோது,
வீட்டிலிருந்து 100 ருபாய்
பணத்தை எடுத்துக்கொண்டு அவரிடம்
இருந்து தப்பித்து பஸ்
ஏறி திருநெல்வேலி சென்றேன்.
அங்கிருந்து ரயிலில் மதுரை சென்றேன்.
மதுரையில் பணம் முழுவதும் காலியானதும்
ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தேன்.
அப்போது அங்கு ஒருவர்
எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து முத்துநகர்
ரயிலில் ஏற்றிவிட்டார் என்று கூறியுள்ளான்.
ஆனால், இவ்வளவு விவரங்கள் கூறும் அந்த
சிறுவனால் தனது முகவரியை மட்டும்
கூறத்தெரியவிலலை.
தனது வீடு தூத்துக்குடியில் தான்
உள்ளது எனவும், வீட்டருகே நிறைய லாரிகள்
நிற்கும் என்று கூறியுள்ளான். அந்த சிறுவன்
சைல்டு லைன் பாதுகாவலர் காசிராஜனிடம்
ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனை முத்துக்குவியல் காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார். # நண்பர்கள்
இதை ஷேர் செய்து சிறுவன்
பெற்றோரை சென்றடைய செய்ய உதவலாமே!

[Continue reading...]

திருமணம் 4 முறை தடை ஏற்பட்டதால் தூக்கில் தொங்கிய வாலிபர்

- 0 comments
4 முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியை சேர்ந்தவர் அதீக் அகமது (22). வாலிபத்தின் வசந்த காலத்தில் நிற்கும் மகனுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் பெண் தேட தொடங்கினர்.

கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தும், 3 தடவையும் கடைசி நேரத்தில் அவரது திருமணம் தடைபட்டு நின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் அதீக் அகமதுவுக்கு மற்றொரு பெண் பார்த்தனர். இந்த முறையும் திருமண தேதி முடிவாகாமல், புதுமண முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால், மனம் உடைந்த அதீக் அகமது நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு பிணமாக தொங்கினார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார், அந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கிடைக்காததால் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர்.
[Continue reading...]

நடிகை மஞ்சுளா திடீர் மரணம் Cini actress Manjula death

- 0 comments
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).
[Continue reading...]

Monday 22 July 2013

தமிழகத்தில் பா.ஜனதா–இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு

- 0 comments
சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
யாரிடம் இருந்தும், எந்த வித அச்சுறுத்தலையும் இது வரை எதிர்கொள்ளாத அவர் மிக, மிக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதில் உண்மையை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த 1980களில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவதாகவும், இதில் தீவிராத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் முழு அடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
[Continue reading...]

கங்கா தேவி சொகுசு ஓட்டலில் கள்ளக்காதலுடன் கைது

- 0 comments
திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர்
சரவணன். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி கங்கா தேவி.
இவர்களுக்கு திருமணமாகி 10
ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை.
கங்கா தேவி சரவணனுக்கு முறைப் பெண்
ஆவார்.
சரவணன் பார்த்து வந்த வேலை பறிபோனதால்
கங்கா தேவி திருநின்றவூரில் உள்ள தாய்
வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம்
வாங்கி குடும்ப செலவை கவனித்தார்.
[Continue reading...]

Sunday 21 July 2013

செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப் பட்டு கொண்டு இருக்கும் திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?

- 0 comments

ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக
வேலை செய்து வருபவன்
ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும்
சென்னை,கே.கே.நகர் கிளையில்
எட்டு மணிக்கு பசி எடுக்க
ரெண்டு தோசையை தின்று விட்டான்.
கேமராவில் பார்த்த நிர்வாகம்
அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில்
ஒப்படைத்து விட்டது.
நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான்
வைக்கப் பட்டுள்ளான்.
'செம அடி'என்கிறார் ஒருவர்.
எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை.
செத்தவன் பின்னால் அலையும்
பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப்
பட்டு கொண்டு இருக்கும்
திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?
சென்னை முகநூல் போராளிகள் வேகமாய்
இயங்கி அவனை காப்பாறுங்கள்.
தகவல் - subraja sridaran
படம் - வைகரை

[Continue reading...]

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்

- 0 comments
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22
வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2
ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில்
வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின்
கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும்,
விடுதியில் தங்கியிருந்ததும்
அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, பெற்றோர் அந்த
சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22
வயது ‘ஆசை நாயகி’யுடன்
கஞ்சா போதையில் ஓட்டலில்
தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண்ணுடன்
[Continue reading...]

சத்தீஸ்கர் மாநில முதல்வர் 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி ஆதாரம்

- 0 comments

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க.
ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1
கோடி லஞ்சம் வாங்கிய சி.டி.
ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ்
கட்சி வெளியிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு பொதுமக்களின்
பணத்தை மோசடி செய்த
இந்திரா பிரியதர்ஷினி மகளிர்
கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய
ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது.
போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம்,
பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும்,
தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின்
மீது கடன் வழங்கியும் மக்களின் பணம் ரூ. 54
கோடியை மோசடி செய்ததாக அந்த வங்கியின்
மேனேஜர் மற்றும் இயக்குனர்கள்
ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில்
இருந்து தங்களை விடுவிக்கும்படி
கைதானவர்கள் சத்தீஸ்கர் முதல்
மந்திரியை அனுகியுள்ளனர்.
இந்த சிக்கலில் இருந்து அவர்களை காப்பாற்ற
முதல் மந்திரி ரமண் சிங்,
அவரது அமைச்சரவையை சேர்ந்த 2 மந்திரிகள்
மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தலா ரூ.
1 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்
சாட்டப்பட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்த
‘ஆடியோ சி.டி.’ ஆதாரத்தை சத்தீஸ்கர் மாநில
காங்கிரஸ் நிர்வாகிகள் பூபேஷ் பாகல்,
ஷைலேஷ் நிதின் திவேதி ஆகியோர்
நேற்று பத்திரிகையாளர் சத்திப்பின்
போது வெளியிட்டனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரமண் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையின் மந்திரிகள்
மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்தினர்

[Continue reading...]

Saturday 20 July 2013

பட்டதாரி ஆசிரியர்கள் போட்டி தேர்வு

- 0 comments
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை–1 பதவிகளுக்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டன. மீது முள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 57,134 ஆண்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 526 பெண்களும் அடங்குவர்.
பார்வைத் திறன் குறைவுடையோர் 971 பேரும், மாற்றுத் திறனாளிகள் 7535 பேரும் இத்தேர்வை எழுதுகிறார்கள்.
இதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 32 மாவட்டங்களில் 421 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 8383 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள்.
[Continue reading...]

விமான பைலட் அறைக்குள் நடிகை நித்யாமேனன்

- 0 comments
தமிழில் சித்தார்த்துடன் ‘180’ என்ற படத்தில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22, பாளையங்கோட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.

நித்யாமேனன் விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்து பயணித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பாதுகாப்பு ரீதியில் விமான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அதன்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. ஆனால் பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நித்யாமேனன்
[Continue reading...]

Friday 19 July 2013

கட்டிலில் தூக்கி வந்த பெண்ணுக்கு நடு ஆற்றில் இரட்டை குழந்தை பிறந்தது

- 0 comments
ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஆதிலாபாத் மாவட்டத்தில் ஆதிவாசிகள் நிறைந்த லக்னாபூர் கிராமத்தில் சாலை வசதி கிடையாது. பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள வாகு ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த மீராபாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டது. வேதனையில் அவர் துடித்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உயிருக்கே ஆபத்தான நிலையில் துடித்த அந்த பெண்ணின் நிலைமையை கண்ட இளைஞர்கள் பரிதாபப்பட்டனர். அந்த பெண்ணை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல நினைத்தனர்.
கொட்டும் மழையில் அந்த பெண்ணை கட்டிலில் கிடத்தினர். பின்னர் இளைஞர்கள் கட்டிலை தோளில் சுமந்து கழுத்தளவு ஆற்று தண்ணீரில் நீந்தினர்.
[Continue reading...]

ஆம்னி பஸ்சில் பெண் டாக்டரிடம் செக்ஸ் தொல்லை

- 0 comments
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் டாக்டர் சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர் தஞ்சையிலேயே வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி உள்ளார்.
டாக்டர் சுஜா ஆவடியில் கேந்திர வித்யாலயாவில் நடந்த இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக கடந்த 17–ந் தேதி இரவு 9.30 மணிக்கு எஸ்.ஆர்.எம். ஆம்னி பஸ்சில் தஞ்சையில் இருந்து சென்னை புறப்பட்டார்.
[Continue reading...]

நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய்

- 0 comments
நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய் ..ஒரு தாயின் கொடூர செயல் !
திருமணத்துக்கு மறுத்த 8ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில் வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் அஞ்சலி (13) அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர் லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார்.
[Continue reading...]

Thursday 18 July 2013

காவியக் கவிஞர் வாலி எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்

- 0 comments
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

மறைந்தார் காவியக் கவிஞர் வாலி... திரையுலகம் கண்ணீர்
[Continue reading...]

நாகர்கோவில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

- 0 comments
நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின் மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் சிலர் பால் வாங்கவும், டீ குடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடியிருப்பின் மையப்பகுதி வழியாக சென்ற போது செல்போன் கோபுர உச்சியிலிருந்து ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்ட ஊழியர்கள் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் ‘மழைக்கோட்டு’, தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கையில் தண்ணீர் பாட்டிலுடன் நிற்பதை கண்டனர்.
[Continue reading...]

Wednesday 17 July 2013

ஏற்காடு எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

- 0 comments
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தவர் பெருமாள் (வயது63). நேற்று இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சேலத்தில் உள்ள தனது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்தார். பின்னர் அவர் வாழப்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை காரில் சேலம் கோகுலம் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
[Continue reading...]

சென்னை கல்லூரி மாணவி லண்டனில் மர்மமான முறையில் கொலை

- 0 comments
சென்னையை சேர்ந்த மாணவி லண்டனில்
மர்மமான முறையில் இறந்தார்.
அவரது உடலை, தந்தை அனுமதி பெறாமல்
லண்டன் போலீசார் பிரேத
பரிசோதனை நடத்தி முடித்து விட்டனர்.
மேலும் சரியான தகவல் தெரிவிக்க
மறுப்பதாகவும் உறவினர்கள் புகார்
தெரிவித்தனர்.
சென்னை அண்ணாநகர்
மேற்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் தாம்சன்
(வயது 48). இவர், தற்போது முகப்பேர்
கிழக்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில்
சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக
பணியாற்றி வருகிறார். இவருடைய
மனைவி சாயிஸ். இவர், கடந்த 1 1/2
ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல்
இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஜியார்ஜியன்னா(18) என்ற
மகளும், நோர்வெல்(12) என்ற மகனும்
உள்ளனர். இவர்களில் நோர்வெல்,
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார்
பள்ளிக்கூடத்தில் 7-ம்
வகுப்பு படித்து வருகிறான்.
ஜியார்ஜியன்னா, லண்டனில் உள்ள லிவர்புல்
பல்கலைக்கழகத்தில் ஏரோனாட்டிக்கல்
சயின்ஸ் மற்றும் ஸ்பேஸ் சயின்ஸ் எனப்படும்
விண்வெளி அறிவியல் முதலாம்
ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர்,
பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான
விடுதியில் தங்கி, படித்து வந்தார். அந்த
விடுதியில் ஒவ்வொரு மாணவிகளுக்கும்
தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு அதில்
தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி லிவர்புல்
பல்கலைக்கழகத்தில்
இருந்து தாம்சனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய பல்கலைக்கழக நிர்வாகம்,
உங்கள் மகள் விடுதி அறையில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாம்சன், மறுநாள்
14-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
உறவினர்கள் சிலரும் அவருடன் சென்றனர்.
ஆனால், அவர் லண்டன் போய் சேர்வதற்குள்
ஜியார்ஜியன்னாவின் உடலை லண்டன்
போலீசார் பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
பிரேத பரிசோதனைகள் முடிந்து மகளின்
முகத்தை மட்டும் தாம்சன் பார்க்க முடிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், லண்டன்
போலீசாரிடம், எனது மகளின்
உடலை எனது அனுமதி பெறாமல்
எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம்.
என்னிடம் கையெழுத்து வாங்காமல் பிரேத
பரிசோதனைக்கு எப்படி அனுப்பலாம்?
என்று கேட்டார்.
அதற்கு லண்டன் போலீசார், அது உங்கள்
நாட்டு சட்டம். ஆனால் எங்கள் நாட்டில்
அது கிடையாது. இன்னும் நிறைய
நடைமுறைகள் உள்ளன. நீங்கள் அடுத்த கட்ட
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால்தான்
உங்கள் மகள் உடலை விரைவாக நீங்கள்
இந்தியா கொண்டு செல்ல முடியும்.
இல்லை என்றால் மேலும் கால தாமதம் ஆகும்
என்றனர்.
தாம்சன், தனது மகள் எப்படி இறந்தாள்,
தூக்குப்போட்டு தற்கொலையா? விஷம்
குடித்தாளா? என்று தெரிவிக்கும்படி கேட்டார்.
ஆனால் அதற்கு லண்டன் போலீசாரும்,
பல்கலைக்கழக நிர்வாகமும் எந்த பதிலும்
கூறாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி லண்டனுக்கு சென்று உள்ள
ஜியார்ஜியன்னாவின் உறவினரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்,
கூறியதாவது:-
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொண்டதாக
கூறும் விடுதி அறை மிகவும் குறுகலாக
உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள
அங்கு எந்த வசதியும் இல்லை. அவர்
உண்மையில் தூக்குப்போட்டு கொண்டாரா?
விஷம் குடித்தாரா?
அல்லது யாராவது அவரை அடித்துக்
கொன்றனரா?
என்று எங்களுக்கு தெரியவில்லை.
இதுபற்றி லண்டன் போலீசார் எங்களிடம் எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்கள்
ஜியார்ஜியன்னா உடலுடன்
எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதிலேயே குறியாக
உள்ளனர்.
ஜியார்ஜியன்னாவின் சாவில் மர்மம் உள்ளது.
லண்டன் போலீசார் கூறும் பதிலில்
எங்களுக்கு திருப்தி இல்லை.
ஜியார்ஜியன்னா தற்கொலை செய்து கொள்ள
வேண்டிய அவசியமும் இல்லை.
அடிக்கடி எங்களிடம் போனில்
தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
எங்கள் குடும்பத்தாரிடம் மட்டுமல்லாமல்
லண்டன் பல்கலைக்கழகத்தில் தன்னுடன்
பயிலும் சக மாணவ-மாணவிகளுடனும்
நன்றாகவே பழகி வந்து உள்ளார். இந்தியாவில்
இருந்து சென்றதால்
யாராவது உன்னை கேலி செய்கிறார்களா?
என்று நாங்கள் கேட்ட போது, அப்படி எதுவும்
நடைபெறவில்லை என்றுதான் எங்களிடம்
கூறினார்.
ஜியார்ஜியன்னா திடீர் மரணம்
எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை முடிந்து விட்டாலும்
இன்னும் சில நடைமுறைகள் உள்ளதால்
ஜியார்ஜியன்னா உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல
இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இது எங்களுக்கு கூடுதல்
வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ஜியார்ஜியன்னாவின்
உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கும்,
அவளின் மர்ம சாவு குறித்து லண்டன்
போலீசார் விசாரணை நடத்தவும் மத்திய
அரசு எங்களுக்கு உதவி வழங்க வேண்டும்.
லண்டன் போலீசார் எங்களிடம் எந்த தகவலும்
கொடுக்காமல் கிடுக்கிப்பிடியாக
நடந்து கொள்வதால், தாம்சன் போலீஸ்காரராக
இருந்தும் நாங்கள் ஆதரவின்றி தனியாக
தவித்து வருகிறோம். இதில் மத்திய
அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
[Continue reading...]

மிஸ்டுகாலில் தொடங்கி மரணத்தில் முடிந்த இளவரசனின் காதல் கதை

- 0 comments
சில ஆண்டுகளுக்கு முன்பு

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன் இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இளவரசனின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. தொடர்ச்சியாக 4, 5 நாட்கள் தொடர்ந்து அஎதே மிஸ்டுகால் . இதையடுத்து இளவசரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தனது பெயர் திவ்யா என்று அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி போனில் பேசி கொண்டனர். போனில் பேசி பழக்கம் ஏற்பட. ஒரு நாள் ஜூஸ் கடையில் வைத்து அவர்கள் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களிடையே காதலை வளர்த்தது.
[Continue reading...]

‘பாக் மில்கா பாக்‘ அமெரிக்காவில் வசூல் மழை

- 0 comments
இந்தியாவின் பிரபல தடகள வீரர் மில்கா சிங். 1935-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவர், இந்தியாவுக்காக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டோக்கியோ, மெல்பர்ன், ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். காமன்வெல்த் விளையாட்டுகளில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர். இவர் தற்போது சண்டிகரில் வசித்து வருகிறார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger