Tuesday 27 August 2013

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்

- 0 comments

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது Samajwadi UP MLA arrested in Goa bar

பனாஜி, ஆக.28-

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர்.

பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த போலீசார், தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.

பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா போலீசார் தெரிவித்தனர்.

அவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[Continue reading...]

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

- 0 comments

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

பெங்களூர், ஆக. 27-

பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளை கடத்தும் அந்த ஆசாமி, வெகு தூரம் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் விடுவித்துள்ளான். இதனால் அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 31 கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளான்.

மேலும் பல்வேறு பைக், நகை திருட்டுக்கள் மற்றும் மோசடியிலும் அவன் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger