Tuesday 27 September 2011

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்

- 0 comments
 
 
 
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கும், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மரிய தீபக் என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தனது மனைவி வித்யாராணியை அவரது தாயார் முத்துலட்சுமி என்னுடன் வாழ விடாமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறி மரிய தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவர்தான் வித்யாராணி. இவருக்கு 21 வயதாகிறது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவரும் 23 வயதான மரியதீபக்கும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து குடும்பமும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில்தான் வித்யாராணியை அவரது தாயார் முத்துலட்சுமி தனது வீட்டோடு அடைத்து வைத்து விட்டதாக மரிய தீபக் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருப்பதாவது:
 
நான், சென்னை லயோலா கல்லூரியில் படித்தேன். வீரப்பனின் மகள் வித்யாராணி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம்.
 
அதைத் தொடர்ந்து 30.3.11 அன்று இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 26.4.11 அன்று பதிவு செய்தோம். திருமண வாழ்க்கை சந்தோஷமாக நடந்தது.
 
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரியில் வீரப்பனின் சமாதி நிகழ்ச்சிக்காக 25.8.11 அன்று வித்யாராணியை அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவர் வித்யாராணியை அனுப்பவில்லை.
 
எங்களது கலப்புத் திருமணத்தை உடைப்பதற்கு முத்துலட்சுமி விரும்புகிறார். எனவே சட்டவிரோதமாக அவரை முத்துலட்சுமி அடைத்து வைத்துள்ளார். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு 29.8.11 அன்று தந்தி கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
எனவே முத்துலட்சுமியிடம் இருந்து வித்யாராணியை மீட்டு என்னிடம் ஒப்படைக்க செம்பியம் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
 
2 வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வித்யாராணியை நேரில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அந்த சமயத்தில் வித்யாராணி, வீரப்பனின் மகள் என்று யாருக்கும் தெரியாது.
 
போலீஸார் கோர்ட் உத்தரவை செயல்படுத்த முனைந்தபோதுதான் வித்யாராணி வீரப்பனின் மகள் என்று தெரிய வந்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் நேற்று பலத்த பாதுகாப்புடன் வித்யாராணி உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
 
ஆனால் அவர் வரத் தாமதமானதால் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து விசாரணைக்காக வந்திருந்த மரிய தீபக்கை தனியாக சந்தித்து அவர் பேசினார்.
 
பின்னர் கூடுதல் அரசு வக்கீல் மகாராஜன் கூறுகையில், வித்யாராணி தாமதமாக கொண்டு வரப்பட்டதால் அவரை நீதிபதிகள் முன்பு நிறுத்த முடியவில்லை. புதன்கிழமை அவர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
 
வித்யாராணி 18 வயதைக் கடந்தவர் என்பதாலும், அவரும், மரிய தீபக்கும் முறைப்படி திருமணம் செய்து, அதைப் பதிவு செய்துள்ளதாலும் இருவரும் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



[Continue reading...]

ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர் 'அந்தர் பல்டி'!

- 0 comments
 
 
 
2ஜி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா திடீர் பல்டி அடித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்துக்கும் எல்லாம் தெரியும் என்றும், இதனால் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வந்த ராசா இன்று உச்ச நீதிமன்றத்தில் பல்டி அடித்துவிட்டார்.

இன்று நடந்த 2ஜி வழக்கு விசாரணையின்போது ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார் வாதாடுகையில்,

இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது. அவரை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தால் இந்த வழக்கின் முழு விசாரணையும் மேலும் தாமதமாகும், வழக்கு மேலும் இழுத்துக் கொண்டே போகும். இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிறருக்கு ஜாமீன் கிடைப்பது கூட பிரச்சனையாகும். எனவே அவரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்றார்.



[Continue reading...]

ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட்டவட்டம்

- 0 comments
 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
 
2ஜி ஊழலைத் தடுக்க முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் தவறிவிட்டதாகவும், இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
 
அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் சிபிஐக்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும், சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு, தன்னிச்சையான அமைப்பு.
 
இந்த விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் எந்த புதிய விஷயமும் இல்லை.
 
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதன்முறையாக புதிய ஆவணங்கள் (சாமி தாக்கல் செய்த ஆவணங்கள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிபிஐ ஆய்வு செய்து பரிசீலிக்கும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறான நடைமுறையாகும்.
 
சிபிஐயின் சார்பில் மத்திய அரசு எந்தக் கருத்தையும் எங்கும் தெரிவிக்க முடியாது. புதிய ஆவணங்கள் எதையும் சிபிஐ பரிசீலிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்றார்.



[Continue reading...]

இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?

- 0 comments
 
 
 
நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ. எல். விஜய்யும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை அமலா பால் மறுத்துள்ளார்.
 
தெய்வத் திருமகள் படம் தொடங்கியதிலிருந்தே நடிகை அமலா பாலுக்கும் விஜய்க்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது. எங்கே சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுவந்தனர். விழாக்களில் ஜோடியாக ஒரே காரில் வந்தனர்.
 
ஷூட்டிங்கிலிருந்து ஒன்றாக வருகிறோம் என்று அப்போது விளக்கம் கூறினர். ஆனால் படம் வெளியாகிய பின்னும் இந்த நெருக்கம் தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இப்போதும் ஜோடியாகத்தான் செல்கிறார்களாம்.
 
இது வெறும் நட்பாக மட்டும் இருக்க வாய்ப்பு குறைவு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
இதில் இருவீட்டு பெரியவர்களுக்கும் கூட சம்மதம் என்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் குடும்ப விழாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார் அமலா பால்.
 
கடந்த சனிக்கிழமை விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ எல் அழகப்பன் மணிவிழா நடந்தது. அதில் அமலா பால் கலந்து கொண்டு இயக்குநர் விஜய்யின் பெற்றோரிடம் ஆசி பெற்றார். உடன் விஜய்யும் நின்று கொண்டிருந்தார், முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்!
 
இந்த விழாவுக்கு அமலா பாலின் பெற்றோரும் வந்திருந்தார்கள். விழாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைவரும் உடனிருந்ததற்கு புதிய அர்த்தம் கற்பிக்கிறார்கள் திரையுலகில்.
 
இது நட்புதான் - அமலா
 
இதுகுறித்து அமலா பாலிடம் கேட்டபோது, "நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. காதல் திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்க உகந்த நேரம் இது வல்ல. நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறேன். திருமணத்துக்கு முன் 100 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன்," என்றார்.
 
நம்பிட்டோம்!



[Continue reading...]

மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்- தேமுதிக ஒதுக்கியது

- 0 comments
 
 
 
கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேமுதிக ஒதுக்கியுள்ளது.
 
இன்று நிருபர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இதைத் தெரிவித்தனர்.
 
அதே போல 21 நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மற்றும் 63 பேரூராட்சித் தலைவர் பதவிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து மாவட்டத் தலைவர்கள் பேசி முடிவு செய்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக புதிதாக உருவான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே உருவான கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டது.
 
தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று புதிய கூட்டணியை அறிவித்தன. இந்தக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மார்க்சிஸ்ட் அழைத்து வருகிறது.
 
இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் நேற்றிரவு தேமுதிக சென்னை மாநகராட்சிக்கான 200 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
 
இதனால் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் அதிர்ச்சி நிலவியது. இந் நிலையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது.



[Continue reading...]

இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர் விலகல்

- 0 comments
 
 
நடிகை குத்து ரம்யா சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் அக்கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். பின்னர் காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். ரம்யாவுக்கு கர்நாடக காங்கிரசில் தனி கோஷ்டி உருவானது.
 
இது அங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கட்சியில் திடீரென சேர்ந்த அவர் முன்னணி தலைவர்களுக்கு இணையாக செயல்படுவதாக ஆதங்கப்பட்டனர்.
 
இதற்கிடையில் அக்டோபர் 12-ந் தேதி நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தலைவர் பதவிக்கு ரம்யா போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ரம்யாவும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் காந்தி நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்குச் சாவடி அளவில் நடந்த கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
ரம்யா இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. மேலிட தேர்தல் பார்வையாள ரிடமும் புகார்கள் குவிந்தன. கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடாது என விமர்சித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து ரம்யா போட்டியில் இருந்து விலகினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை.



[Continue reading...]

அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் விவகாரம்!

- 0 comments
 
 
 
 
நடிகை சோனா கொடுத்த பாலியல் பலாத்கார புகார் விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ஆகும் நிலை உருவாகியுள்ளது.
 
மங்காத்தா பார்ட்டியில் பங்கேற்றதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் பார்த்தவர்களில் ஒருவரான, பெயர் சொல்ல விரும்பாத, ஒரு நடிகர் நம்மிடம் இப்படிச் சொன்னார்:
 
"எஸ்பிபி சரண் மீது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அவரை கைது செய்யவில்லை போலீசார். குறைந்தபட்சம், கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. மாறாக அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளித்தனர்.
 
திமுகவினர் படாதபாடு பட்டாலும் கிடைக்காத முன்ஜாமீன், எஸ்பிபி மகன் கேட்டவுடன் கிடைத்துவிட்டது. அதுவும் பாலியல் பலாத்கார வழக்கில். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக சோனாவும் சில மகளிர் அமைப்புகளும் அறிவித்தன.
 
ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி தராத போலீசார், எஸ்பிபி வீட்டுக்கு எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்பு போட்டனர். சோனாவை நேரடியாக அழைத்து, போராட்டம் நடத்தினால் உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இது என்ன வகை நியாயம்... இதுதான் போலீஸார் சட்டத்தைக் காப்பாற்றும் லட்சணமா...
 
புகார் கொடுத்தவர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? அவர் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்றுதானே பார்க்க வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார்.
 
இந்த நிலையில், சோனா வழக்கை அரசியல் காமெடியாக மாற்ற வெளிப்படையாகவே முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
 
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அருள்துமிலன் என்ற வழக்கறிஞர், ஆண்கள் மீது பொய்யான புகார்கள் தரும் நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
 
போராட்டம் நடத்தக்கூடாது என சோனாவை எச்சரித்த போலீஸ், இந்த நபரை மட்டும் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்? எந்த தைரியத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 
இதில் எஸ்பிபி சரணின் விளையாட்டு இருக்கலாம் என சோனா தரப்பில் சந்தேகிக்கிறார்கள்.
 
"பாதிக்கப்பட்ட சோனா பணம் பறிக்கவோ, வேறு வகையில் பேரம் பேசவோ முயற்சிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்த சரணுக்கு தண்டனை தரவேண்டும் என விரும்பினார். குறைந்தபட்சம் அவர் தனது செயலுக்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்றுதானே போராடி வருகிறார். ஆனால் எஸ்பிபி மகன் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சோனாவை கேவலப்படுத்துவதில் குறியாக உள்ளார். அதன் எதிரொலிதான் இதுபோன்ற காமெடி அறிவிப்புகள்," என்றார் அந்த நடிகர்.
 
திருந்துங்கப்பா!



[Continue reading...]

வயோதிகம்... ஓய்வு��்கான காலமல்ல! - எழுபது வயதில் ஒரு புதுமுக நாவல் ஆசி���ியை!

- 0 comments



"அவர் பிரிஞ்ச நொடியில, நான் உடைஞ்சு நொறுங்கினப்ப... நரம்பும், சதையுமா இருந்த எனக்கு உயிர் கொடுத்தாங்க என் உறவுகள். அதுக்குப் பிறகுதான் எனக்குள்ளேயிருந்த இன்னொரு மனுஷியை தேடிக் கண்டுபிடிச்சேன். பொதுவா எல்லாரும் உடல் நலம் விசாரிக்க வர்ற வயசு... இந்த எழுபத்தி ரெண்டு. ஆனா, இப்போ எல்லாரும் உற்சாகப் பாராட்டு கொடுக்கத்தான் என்னைப் பார்க்க வர்றாங்க. காரணம், 'ஏன் முடங்கணும்?'னு எழுந்து வந்திருக்கற என் மனசுதான்!"

- வார்த்தைகள் அழகாக அணிவகுக்கின்றன சகுந்தலாவிடமிருந்து. எழுத்துலகில் கணிசமான கவனத்தை ஈர்த்து வரும் புத்தம் புது நாவலாசிரியர் இந்த முதியவர்!


வாழ்க்கை முழுக்க கைகோத்து வந்த கணவர் திடீரென்று 'கடந்து' சென்ற பின், தொடரும் நாட்களை விரக்தியில் கரைப்பதுதான் வயதான பெண்களின் வழக்கம். ஆனால், இந்த அர்த்தமில்லா, அவசியமில்லா நியதியை அடித்து நொறுக்கிஇருக்கிறார் கோவையைச் சேர்ந்த இந்த சகுந்தலா.


எழுபதாவது வயதில் நாவல்கள் எழுத ஆரம்பித்து, இரண்டே ஆண்டுகளில் இதுவரை ஐந்து நாவல்களை எழுதி முடித்திருக்கிறார்! ஆன் லைன் பத்திரிகையில் அனல் பறக்க விமர்சனக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்! முறைப்படி டிரைவிங் கற்று
 லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்! இன்னும் பட்டாம்பூச்சி போல தன்னை பரபரபாக்கிக் கொள்ள உடலையும் மனதையும் இயக்கத்திலேயே வைத்திருக்கிறார்!

கோவையிலுள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றபோது... 'ஹலோ' என்று வரவேற்றவர், "ரெண்டே நிமிஷம்... ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு வந்துடறேன்!' என்று சில நொடிகளில் லேப்டாப்பை அணைத்து, நம் முன் வந்தமர்ந்தார்.

"சொந்த ஊர் சென்னை. காதல் திருமணம்தான். கணவர் சீனிவாசன் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ். எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்ததும்... 'பி.யூ.சி-க்கு மேல படிக்க முடியாம போச்சுனு வருத்தப்பட்டே இல்ல. நான் உன்னை படிக்க வைக்கறேன். விரும்பினதைப் படி'னு என்னவர் சொல்ல... மகளை வளர்த்துகிட்டே, தொலை தூரக் கல்வி மூலமா பி.காம்., எம்.ஏ., ஆங்கில இலக்கியம்னு படிப்பையும் வளர்த்துக்கிட்டேன்.
 நான் கடந்து வந்த ஷேக்ஸ்பியர், பைரன், வேர்ட்ஸ்வொர்த் இவங்கள்லாம் வாழ்க்கையைப் பத்தி நிறையவே சொல்லிக் கொடுத்தாங்க.

மகளுக்கு கல்யாணம், அவளோட வாழ்க்கைனு மகிழ்ச்சி ஒரு பக்கம் தோரணம் கட்டிக்கிட்டே இருக்க... கூடவே, சோதனைகளும் தொடர்ந்ததுதான் சோகம். அவருக்கு ஹார்ட் பிராப்ளம் வந்து போராடிக்கிட்டே இருந்தார். வாழ்க்கையை அழகா எதிர்கொள்ள கற்றுத்தந்த மனுஷன், ரெண்டு வருஷத்துக்கு முன்ன என்னோட கைகள்லயே இறந்துபோன நொடியில என்னோட உலகம் நின்னுடுச்சு"

- வார்த்தைகளுக்கு நடுவில் மௌனம் நிரப்பினார் சகுந்தலா.

"நடைபிணமா இருந்த என்னை மகள், மருமகன், பேத்தினு என்னோட உறவுகள்தான் தேத்தினாங்க. ஒரு கட்டத்துல, 'அவர் எனக்குத் தந்த இந்த துயரத்தை, நான் உயிரோட இருக்கும்போதே என்னைத் சுத்தி இருக்கறவங்களுக்கு கொடுத்துடக் கூடாது'னு மனசு தெளிஞ்சுச்சு. அழுது வடிஞ்ச கண்களை அழுந்தத் துடைச்சுட்டு, எல்லாரோடயும் பேச, சிரிக்க, பகிர்ந்துக்க, ஆலோசிக்கனு என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன்.

'நீ காரோட்ட கத்துகிட்டு லைசென்ஸ் வாங்கிட்டா, ஆத்திர அவசரத்துக்கு ஹாஸ்பிட்டலுக்கு நீயே என்னை கூட்டிட்டு போயிடலாமே?'னு அடிக்கடி சொல்வார். அவர் போன பிறகாவது அதை நிறைவேற்றுவோமேனு அறுபத்தியேழா வது வயசுல டிரைவிங் லைசென்ஸை வாங்கினேன்" என்று நெகிழ்பவர், தான் நாவலாசிரியர் ஆன அந்த முக்கிய அத்தியாயம் பற்றித் தொடர்ந்தார்.



"அப்பப்போ கவிதை எழுதுவேன். ஆனா, யார்கிட்டேயும் காண்பிக்க மாட்டேன். அப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்ன நான் எழுதி வெச்ச கவிதையை யதேச்சையா எடுத்து வாசிச்ச பேத்தி ஐஸ்வர்யா, 'சூப்பர் பாட்டி!'னு புகழ்ந்ததோட மறுநாளே ஒரு பெரிய நோட்டும், பேனாவும் வாங்கிக் கொடுத்து 'கவிதை, கதைனு ஜமாய்ங்க பாட்டி. உங்களால நிச்சயமா முடியும்'னு சொன்னா.

அவளோட பேச்சே ஒரு உத்வேகம் தர, நாவல் எழுத முடிவு பண்ணினேன். என்னைச் சுத்தி நடந்த, நடக்கற விஷயங்களையும், மனிதர்களையுமே களமாகவும், கேரக்டர்களாகவும் வெச்சுக்கிட்டு எழுதத் துவக்கினேன். 'உறவும் உரிமையும்'ங்கிற தலைப்புல முதல்ல ஒரு நாவல் எழுதினேன்.

குடிகார கணவனால பாதிக்கப்பட்ட, எனக்குத் தெரிஞ்ச ஒரு இளம் பெண்தான் நாயகி. 'அக்கினிப் பூக்கள்', 'பாலைவன சோலை'னு அடுத்தடுத்த படைப்புகள் வந்திறங்க ஆரம்பிச்சிடுச்சு. நாலு நாவல்களை எழுதி முடிச்சுட்டு வீட்டுலயே வெச்சிருந்தேன். சின்ன தயக்கத்தோட ஒரு பதிப்பகத்துக்கு அனுப்பி வெச்சேன். ரெண்டு மாசமா எந்த பதிலுமில்லை" என்பவருக்கு, நிகழ்ந்திருக்கிறது அந்த சுவாரஸ்ய திருப்பம்!

"ஒருநாள் காலையில ஒரு போன். பப்ளிகேஷன் உரிமையாளர் அருணன், 'சகுந்தலாம்மா... உங்க நாலு நாவல்களும் பிரின்டாகிடுச்சு. கூடிய சீக்கிரமே விற்பனைக்கு விட்டுடலாம்'னு சொன்னார். அந்த சந்தோஷத்துல துள்ளியே குதிச்சிடலாம்னு தோணுச்சு. இப்போ பல கடைகள், 'புக் எக்ஸ்போ'னு என்னோட புக்ஸை வாங்கி படிச்சவங்க போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க. இதெல்லாம் மிகப்பெரிய உற்சாகத்தை எனக்குத் தர, ஐந்தாவது நாவல் ரெடியாகிட்டிருக்குது!

'சென்னை லைவ்நியூஸ்.காம்'ங்கிற ஆன்லைன் பத்திரிகையிலயும் கட்டுரைகள் எழுதறேன். சீக்கிரமே தனியா ஒரு வெப்சைட் ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு. இப்படி துறுதுறுனு இயங்கறது மூலமா மனசுக்கு நிம்மதி மட்டுமில்லாம, பண வரவும் சாத்தியமாகுதே!" என்கிறார் லேப்டாப்பை வருடியபடி.

ஸ்ரீரங்கநாதரின் நட்சத்திரத்தையே தனது 'பென் நேமாக' வைத்து 'ரேவதி' என்ற பெயரிலேயே நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் சகுந்தலா, "வயோதிகம்ங்கிறது ஓய்வெடுக்கற காலம்ங்கறதோ, ஒடுங்கி கிடக்க வேண்டிய காலம்ங்கறதோ கட்டாயமில்ல.

அந்த அசட்டுக் கற்பிதங்கள்ல இருந்து வெளிய வந்து, பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்றதுல இருந்து புதுசா ஒரு முயற்சியை எடுக்கறது வரைக்கும் எதைச் செஞ்சாலும் பூரண ஈடுபாட்டோட, உற்சாகத்தோட, சந்தோஷத்தோட செஞ்சா... அதுக்கான பலன் இந்த அந்திம நாட்களை இன்னும் அழகாக்கும்!" என்றார் கண்கள் கனிந்து!

நன்றி : அவள் விகடன்.



http://girls-tamil-actress.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    மகனுக்கு, அப்பாவ���ன் பிறந்தநாள் வ��ழ்த்துக்கள்....

    - 0 comments


    குலமகனாய் திருமகனாய்
    ஊருக்கு உழைக்கும் உத்தமனாய் 
    நீ வளர வேண்டும்.....

    நாட்டில் நடக்கும் 
    அக்கிரமங்களை தட்டிகேட்கும் 
    வீரனாக வளர வேண்டும்....

    தைரியத்தை 
    அரணாக நீ பூண்டு
    வெற்றி வாகை சூடவேண்டும்...

    அன்பால் பாசத்தை
    பேணிகாத்து அனைவருக்கும்
    உரியவனாக நீ வாழவேண்டும்....

    தெய்வத்திற்கு பயந்து
    நியாயம் செய்
    நன்மையை பெற்றுக்கொள்....

    அன்புக்கு அடிமையாய்,
    அதிகாரத்துக்கு
    நெஞ்சை நிமிர்த்து...

    மும்பை என்பது 
    நமக்கு போர் பூமி, மறந்து விடாதே
    "கொஞ்சம்" ரௌத்திரம் பழகு....


    என் அன்பு மகன் மோசஸ் ராஜ்'க்கு இன்று பிறந்தநாள்....!!!!


    நெஞ்சார உன்னை வாழ்த்தி மகிழுகிறேன்.......வாழ்க வளமுடன் சுகமுடன்....




    http://girls-tamil-actress.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    பரல்கள்

    - 0 comments


    ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலைச் சந்திக்கப் போனாராம் .அவர் சென்றபோது சர்ச்சில் குளியலறையில் இருந்தாராம்.அவர் குளித்துவிட்டு வருவதற்காக ரூஸ்வெல்ட் காத்துக் கொண்டிருந்தாராம். அவர் வெளியே இருப்பது தெரியாத சர்ச்சில்,குளித்துவிட்டு ஆடை ஏதுமின்றி வெளியே வந்தாராம்.ரூஸ்வெல்ட்டைப் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்ட சர்ச்சில் சொன்னாராம்--"இங்கிலாந்து பிரதமருக்கு,அமெரிக்க ஜனாதிபதியிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை!"
    ....................................

    அமெரிக்க ஜெனரல் ஒருவரிடம் பேட்டியில் கேட்டார்களாம் "9/11 தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மன்னிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று.
    அவர் சொன்னாராம்"மன்னிப்பது கடவுளின் வேலை.அதற்காகக் கடவுளிடம் அவர்களை அனுப்புவது மட்டுமே நம் வேலை!"
    ......................................


    வாழ்க்கையென்பது சுகமாக ,பிரச்சினை இன்றி இருக்கும்,அதற்குத் தொலைதூர இயக்கி போல் சில பொத்தான்கள் இருந்தால்--கோபத்துக்கு மௌனமாக்கும் பொத்தானும்,தவறுக்குப் பின்னே போகும் பொத்தானும், கஷ்டத்துக்கு விரைந்து முன் செல்லும் பொத்தானும்,மகிழ்ச்சியான நேரங்களுக்கு,இடைநிறுத்தும் பொத்தானும் இருந்தால்!

    .......................................
    திருமணம் என்பது
    ஒரு புல்லாங்குழல்!
    பல ஓட்டைகள்,
    உள்ளே வெற்றிடம்!
    ஆனால்
    அதே ஓட்டைகளும்
    அதே வெற்றிடமும்
    இனிய நாதம் எழுப்பும்
    நன்கு வாசிக்கத்தெரிந்தால்!

    ...................................................



    http://mobilesexpicture.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்டியன்!

    - 0 comments
     
     
     
    அதிமுகவில் கேட்ட இடமும் மரியாதையும் கிடைக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அந்தக் கட்சியின் முக்கியமான இணைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அதிமுகவிடம் தொடர்நது சீட் கேட்டு பேச்சு நடத்திக் கொண்டுள்ளார்.
     
    முன்னாள் எம்.எல்.. பழனிச்சாமி தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் குழு அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் உடன்பாடு தான் ஏற்பட்டவில்லை. காரணம், சிபிஐ கேட்கும் இடங்களில் 3ல் 1 பங்கு கூட தர அதிமுக தயாராக இல்லை.
     
    மேலும் 2006 உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களை ஒதுக்கக்கூட அதிமுக தலைமை மறுத்துவிட்டது. ஆனாலும் அதிமுகவுடன் பேசிக் கொண்டே இருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்.
     
    இத்தனைக்கும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்கள் பத்திரிக்கைகள் மூலம் அழைப்பும் விடுத்துப் பார்த்துவிட்டனர்.
     
    முன்னதாக தனிப்பட்ட முறையில் இந்திய கம்யூனிஸ்டிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள், தேமுதிக கூட்டணிக்குப் போகலாம் என்று கூறியும் கூட தா.பாண்டியன் அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.
     
    இதையடுத்தே, ''எங்கள் அணியில் சேருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் .தி.மு.. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் .தி.மு.. தலைமையின் தவறான அணுகுமுறைதான்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிக்கைள் மூலம் தா.பாண்டியனுக்கு அழைப்பு விடுக்க நேர்ந்தது என்கிறார்கள்.
     
    உங்கள் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்து பேசினோம். எங்கள் கூட்டணிக்கு அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் ராமகிருஷ்ணன்.
     
    இந் நிலையில் இன்று காலை சென்னையில் தா.பாண்டியன் கட்சியின் மாநிலக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

     


    [Continue reading...]

    கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்

    - 0 comments
     
     
     
    கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.. கூறியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
     
    சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் .சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கனிமொழி ராசா மீது தொடரப்பட்டுள்ள புதிய வழக்கு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி அளித்த பதில் வருமாறு:
     
    சிதம்பரம் மீது தவறில்லை என்று பிரதமரே சொல்கிறார்
     
    கேள்வி: .சிதம்பரம் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
     
    பதில்: இது அவர்களுடைய கருத்து. இந்த வழக்கில் அரசியல் தலையிடக்கூடாது என்பது என் கருத்து. இந்த வழக்கில் முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார்கள், பிறகு 30 ஆயிரம் கோடி இழப்பு என்றார்கள். அதன் பிறகு நஷ்டமே இல்லை என்று அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்கள். இதற்கிடையில் நான் எதையும் சொல்வது முறையாக இருக்காது.
     
    கேள்வி: ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கில் . சிதம்பரத்திற்கு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
     
    பதில்: சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.
     
    கேள்வி: ராசா மீது இதே குற்றத்தை முதலில் சொல்லி, அவர் பதவி விலக வேண்டுமென்றார்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் மீதும் இதே புகாரைச் சொன்னார்கள். தற்போது சிதம்பரம் மீதும் அதே புகாரைத் தானே சொல்கிறார்கள்?
     
    பதில்: ஒருவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே புகாரை அள்ளி வீசுவதை நான் ஏற்பதற்கில்லை. தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்? விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது என் கருத்து.
     
    கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிதம்பரத்தை பாதுகாக்கின்ற அளவிற்கு, ராசாவையோ, தயாநிதி மாறனையோ பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?
     
    பதில்: அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ இது போன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
     
    கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும்
     
    கேள்வி: டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மீதும், கனிமொழி மீதும் ஒரு புதிய குற்றச்சாட்டினை 409-வது பிரிவின்படி சாற்றியிருக்கிறார்களே?
     
    பதில்: அதே நீதிமன்றத்தில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும், ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபணை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்களே, அதைப்பற்றி கேட்கவில்லையே?
     
    கேள்வி: சி.பி.. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க ஏதாவது காரணம் இருக்கிறதா?
     
    பதில்: இது நீதிமன்ற விவகாரம். எனவே அதற்கான விளக்கங்கள் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை.
     
    கேள்வி: சி.பி..யின் நடவடிக்கைக்குப் பிறகு கனிமொழிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
     
    பதில்: கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.
     
    கேள்வி: சோனியா காந்தியை டி.ஆர். பாலு சந்தித்தது பற்றி?
     
    பதில்: அந்த அம்மையார் அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வுக்குப் பின்னர் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போய் மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றி வியூகங்களுக்கு இடமில்லை.
     
    சோனியாவை நிச்சயம் சந்திப்பேன்
     
    கேள்வி: நீங்கள் டெல்லி சென்று சோனியாவைச் சந்திப்பீர்களா?
     
    பதில்: நான் இந்த வழக்குக்காகவே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள். உங்களுடைய கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான் இந்த வழக்கு முடிந்த பிறகு நான் டெல்லி சென்று சோனியா காந்தியை நிச்சயமாகச் சந்திப்பேன்.
     
    ஏனென்றால் நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.
     
    கேள்வி: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய இடதுசாரி கட்சிகளை திமுக கூட்டணிக்கு அழைப்பீர்களா?
     
    பதில்: இந்தக் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. அந்தக் கூட்டணியை உருவாக்கும்போதே யார் யாருக்கு அங்கே இடம் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் நான் அறிவேன்.
     
    உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக, ஜனநாயக முறையில் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அதிமுகவின் கூட்டணி கட்சிகளும், கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றார்.
     
    தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதுபோல தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     


    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger