Sunday 4 September 2011

கருணை இல்லா காங்���ிரஸ் தலைமை.....!!!

- 0 comments



சென்னை, ஆக.26,2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இம்மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து வேலூர் சிறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இம்மூவரையும் தூக்கிலிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏற்க மறுத்து, அண்மையில் தள்ளுபடி செய்து விட்டார்.  இதனால், அவர்கள் 3 பேரும் தூக்கில் இடப்படுவது உறுதியானது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த ஜனாதிபதியின் முடிவு பற்றிய தகவலை, தமிழக அரசு மூலம் வேலூர் மத்தியச் சிறை சிறைக்கு மத்திய உள்துறை வியாழக்கிழமை இரவு அனுப்பியுள்ளது.

இன்று காலை கிடைக்கப்பெற்ற அந்த அவசர கடிதத்தில் (ஸ்பீட் போஸ்ட்) மத்திய அரசின் கடிதத்தை இதனுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது என உறுதியான தகவல்கள் வெளியாகின.

தூக்கு தண்டனை விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவு தெரிவிக்கப்பட்ட 7-வது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மரபு.

உயர் நீதிமன்றத்தில் அணுக முடிவு...

மூவரையும் தூக்கிலிட உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகுவது என முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு ஜனாதிபதிகளும் நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.

மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் ஆஜராவார் எனத் தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

நன்றி : விகடன்.


http://mobilesexpicture.blogspot.com

http://tamil-cininews.blogspot.com

http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    அறிவியல் நாங்கள��ம் சொல்வோமுல்ல...!!!

    - 0 comments



    விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
    இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables)  அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
    மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் 'கால அளவு' என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
    சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
    வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை 'மறைக்கும் மாறிகள்' (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
    ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த 'மறைக்கும் மாறிகளை' நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
    விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
    முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி  மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.

    நன்றி : அறிவியல் செய்திகள்.

    டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!


    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    சினி மாலா......!!!

    - 0 comments


    குடும்ப உறவுகளையும் பாசத்தையும் தூக்கி நிறுத்தி வெற்றி கண்ட படம், , மாயாண்டி குடும்பத்தார், இந்த படத்தை தயாரித்த சாமு சிவராஜ் தனது நண்பர் கல்கியுடன் இணைந்து, கண்டுபிடி கண்டுபிடி என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

    இதில் கதை நாயகனாக சீமான் நடிக்கிறார், இவருடன் கேரளா அழகி ஐஸ்வர்யா தேவன், டிவி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்நாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

    படத்தைப்பற்றி டைரக்டர் ராம் சுபராமன் கூறியதாவது -
    முழுக்க முழுக்க கிராமத்தில நடந்த நகைச்சுவை கலந்த திகில் படமாகும், கதை இப்படித்தான் நகரும் என்று யாரும் ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாதவாறு இருக்கும்.....


    தமிழ் பட உலக பிரபலங்களில், மிகவும் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் மூன்றே மூன்று பேர், ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் வைத்திருக்கும் காரின் பெயர் "ஹம்மர்"!


    கதாநாயர்களையும், டைரக்டர்களையும் கைக்குள் போட்டுக்கொள்கிற கதாநாயகிகள் பட்டியலில் இப்போது புதுசாக இணைந்திருப்பவர், அமலா பால் [[சிபி'யின் கவனத்திற்கு]] இவருடைய வலையில் ஒரு தெலுங்கு டைரக்டரும் சிக்கி இருக்கிறார்....




    சுரேந்தர் என்ற அந்த தெலுங்கு டைரக்டர் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து, ஒரு புதிய தெலுங்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்க்காகவே, ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் "3" படத்தை தியாகம் செய்திருக்கிறார் அமலா பால்...!!!


    சினேகா இது வரை ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார், முதன் முதலாக அவர் அழகு சாதன பொருட்களின் விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்...




    இந்த விளம்பர படத்தை டைரக்ட் செய்தவர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண்..!!! இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், அந்த அனுபவத்தை வைத்து விளம்பர படத்தை இயக்கினாராம்...!!!


    களவாணி படத்தை இயக்கிய சற்குணம், நல்ல குரல் வளம் கொண்டவர், பிடித்த பாடல்களை சத்தம் போட்டு பாடுவார், இப்போது இவர் டைரக்ட் செய்துள்ள "வாகை சூடவா" படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன, 




    இந்த ஐந்து பாடல்களையும் மனப்பாடமாக வைத்து இருக்கிறார் சற்குணம், அவரை தேடி செல்பவர்களை உட்கார வைத்து ஐந்து பாடல்களையும் பாடி காட்டுகிறார் சற்குணம்...!!!







    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    ரெண்டெழுத்து நட��கரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் ���ுடைச்சல்!

    - 0 comments



    ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… 'பசு' நடிகராலும் குடைச்சல்!

    நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் கமலிடம் அவரது பேரப்பிள்ளை கேட்குமே, அப்படிதான் கேட்க வேண்டியிருக்கிறது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை! ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ் சினிமா இப்போ நல்லாயிருக்கா, இல்லையா?

    ஆமாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க, பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதிலும் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் பாடு சர்வ பேதி!

    கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த கைதுகளால் பைனான்ஸ் கிடைப்பதில்லையாம் முன்பு போல. அதுவும் பிரதர்ஸ் இருவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் பணம் வரும் வழிகளில் எல்லாம் அடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். மதுரை ஏரியாவில் வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள்தான் வாங்கி வெளியிடுவார்கள். இந்த ஒரு பெரிய ஏரியாவின் வியாபாரமும் முடக்கம் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள் இப்போது.

    அரவத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்த இரண்டெழுத்து ஹீரோ திடீரென்று சம்பளத்தை எண்ணி வைச்சாதான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடிக்கிறார். இவரை பார்த்து பசுவான இன்னொரு ஹீரோவும் முரண்டு பிடிக்க, செய்வதறியாது தவிக்கிறதாம் படக்குழு.

    ஒருபுறம் பல பைனான்சியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நல்லவேளையாக யூடிவி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட முன் வந்திருப்பதால் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறது திரையுலகம்.

    ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…


    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    புயல் கிளம்புது��ேய்.....!!!

    - 0 comments



    எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை, அதுக்காக பிஞ்ச தக்காளி [[விக்கி இல்லை ஹி ஹி]] கல்லு, அழுகின முட்டை, கூமுட்டை, அருவா, கடப்பாரை, சுத்தியல், உளி'ன்னு கொண்டு வந்துராதீக.....!!!

    அடுத்து தயவு செய்து எனக்கு பிளக்ஸ் பேனர், கொடி, கம்பு, இத்யாதிகள் வைத்து பஹ்ரைன் அரபிகளை ஓட வைத்து விடாதீர்கள், ஏர்போர்ட்டை நாற வைத்து விடாதீர்கள், பன்னிகுட்டி சவுதியில இருந்து என்னவெல்லாமோ அனுப்பபோறார்னு எனக்கு அப்பவே தகவல் வந்தாச்சு....!!!

    கக்கு மாணிக்கம் வேற மிரட்டிட்டே இருக்காரு, ஷார்ஜா தாதா ஒருத்தர் என்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்னு மிரட்டுறார், சிபி சனியன் ஒளிஞ்சதுன்னு சந்தோசப்பட்டு குப்புற கவுந்துட்டானாம்.....

    இருங்கடி உங்களுக்கு அங்கே வந்து வேட்டு வைக்கிறேன்....!!


    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    கமல்நாத் தான் மி���ப்பெரிய பணக்கார அமைச்சர்: ஏ.கே., அ��்தோணி பரம ஏழையாக இருக்கிறார்

    - 0 comments


    புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 18 அமைச்சர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை பிரதமரின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் நகர்ப்புற அமைச்சர் கமல்நாத் பெரிய பணக்கார அமைச்சராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 263 கோடி ஆகும். பாதுகாப்பு துறை ஏ.கே., அந்தோணியின் சொத்து 1. 8 லட்சம் மட்டுமே ஆகும். இந்த தொகைக்கு ஒரு வீட்டை ஒத்திக்கு கூட வாங்க முடியாது என்பது கூடுதல் விஷயம்.

    தமது அமைச்சரவை சகாக்கள் தங்களுடைய சொத்து விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுகொண்டதற்கிணங்க மத்திய அமைச்சர்கள் 18 பேர் தங்களுடைய சொத்துக்கள் மதிப்பை வெளியிட்டுள்ளனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:

    பிரதமர் மன்மோகன்சிங்: மொத்தம் 5 கோடி ரூபாய். இதில் சொத்துக்கள் 1 கோடியே 80 லட்சம், வங்கி கணக்கில் 3 கோடியே 20 லட்சம் உள்ளது.

    நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி: ஒரு கோடியே 80 லட்சம்.

    உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்: இவருக்கு மட்டும் 11 கோடி. இவரது மனைவி பெயரில் ரூ. 12 கோடியே 80 லட்சம்.

    வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்: மொத்தம் ரூ. 12 கோடி .

    வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா: ரூ.22 லட்சம், இவரது மனைவி பெயரில் ரூ. 21 லட்சம்.

    பாதுகாப்பு துறை அமைசச்ர் ஏ.கே., அந்தோணி: இவரது பெயரில் ரூ. 1 லட்சம் 80 ஆயிரம். இவரது மனைவி பெயரில் 30 லட்சம் சொத்து உள்ளது. இவர்தான் குறைந்த சொத்து உள்ளவர் என்ற பெயரை பிடித்திருக்கிறார்.

    நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத்: ரூ, 263 கோடி மட்டும் தான். இவர் இதற்கு முன்னதாக கம்பெனி விவகாரத்துறையை கவனித்து வந்தார். பிரதமரின் அமைச்சரவையில் இவர்தான் பணக்கார அமைச்சர் என்ற பெயரை தட்டிப்பறித்திருக்கிறார்.

    தமிழகத்தை சேர்ந்த உரத்துறை அமைச்சர் மு.க., அழகிரி : ரூ. 30 கோடி.

    சமீபத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த முரளிதியோரா: ரூ. 15 கோடியே 20 லட்சம்......!!!

    நன்றி : தினமலர்



    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    கண்ணீர் குடித்த�� தாகம் தீர்.....!

    - 0 comments


    கடல் தாண்டி வந்தியா
    ஆசாபாசங்களை
    பெட்டியில் வைத்துப் பூட்டு....
    பிரிவின் மனவலியை
    மறைத்து வைத்து
    இன்முகம் காட்டு...
    கண்ணில் சுரக்கும்
    கண்ணீரை அடிக்கடி
    பாத்ரூம் போயி கழுவு...
    கைபேசியில் ஒப்பாரி வைக்கும்
    மனைவிக்கும் குழந்தைக்கும்
    பயந்து ஒளியும் கைபேசி...
    நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
    இன்னும் கூடுதலாக
    மனம் அழுகிறது...
    காலம் கோலம்
    எது மாறினாலும்
    முதலாளிகள் மாறப்போவதில்லை...
    கண்ணீரை நெகிழ்ந்து
    கதறலை அமிழ்ந்து
    மனதை ஒளித்து வைத்துக்கொள்...
    இந்த கண்ணீருக்கு
    மட்டும் ஒரு
    சங்கம் இல்லை....
    இருந்தால் உலகம்
    தாங்காது எனவேதான்
    ஞானிகள் யாரும் யோசிக்கவில்லை...
    ஏ சமுத்திரமே
    எத்தனை முறைதான் உன்னை
    கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
    கண்ணீர் பழகிவிட்டது
    பிரிவுகள் வழக்கமாகி விட்டது
    எல்லாமே மாயையாகவே தெரிகிறது....


    பாஸ்போர்ட், விசா இல்லாத
    உலகம் வேண்டும்
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!


    டிஸ்கி : படங்கள் யாவும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மேலிருந்து எடுத்தது.




    http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

    http://tamil-cininews.blogspot.com

    http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger