Saturday 10 September 2011

நல்லோரைப் பற்றி ���ேசுதல் நன்று- பத���வர் சிவகுமார்

- 0 comments


 அந்த காலத்தில் கிரேக்க  நாட்டில், ஒரு பிரமாண்டமான , அழகிய , காலகாலமாக பெயர் சொல்லும் கட்டடம் ஒன்று கட்ட முடிவெடுத்து கட்டினார்கள்.
மாபெரும் பொருட்செலவு... மனித உழைப்பு... பலரின் தியாகம்...

ஆனால் , காலம் காலமாக நின்று பெயர் சொல்ல போகிறதே... அதன் பொருட்டு, இந்த விலையை கொடுக்க தய்ராக இருந்தார்கள்..

அடுத்த நாள் திறப்பு விழா...

உழைத்த களைப்பு தீர , அனைவரும் உறங்கினர்...

ஃபிரெஷாக குளித்தி விட்டு, திறப்பு விழாவுக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது..
ஆம்.. அவர்களது கனவு மாளிகை தரை மட்டம் ஆக்கப்ப்ட்டு இருந்தது,,

நாடே சேர்ந்து கட்டிய கட்டடம்..எனவே இதற்கு ஆபத்து வரும் என யாரும் எண்ணிப்பார்க்கவில்லை... எனவே பாதுகாப்பு போடப்படவில்லை..
யார் இடித்தது? ஏன் இடித்தார்கள்?

துப்பறியும் நிபுணர்களுக்கு வேலை வைக்காமல் , குற்றவாளி சரண் அடைந்தான்..

" நான் தான் இடித்தேன் .. எனக்கு மரண தண்டனை விதிப்பீர்கள் என தெரியும்..பரவாயில்லை... என் பெயர் சரிதிரத்தில் இடம் பெற்று விட்டது. அது போதும் " என்றான்..

யார் யார் அந்த கட்ட்டம் கட்ட உழைத்தார்கள் என்பது மறந்து விடும்..இடித்தவன் பெயர் நின்று விடும் என்பது அவன் கணக்கு....

மனித மனம் என்றும் இப்படித்தான் செயல்படுகிறது/// நமக்கு கெட்டது செய்பவர்களை திட்டும் நான், நல்லது செய்பவர்களை பாராட்டுவதில்லை
( மேற்கண்ட சம்பவத்தில், குற்றவாளியின் பெயரை வேண்டும் என்றே மறைத்து இருக்கிறேன் )

ஒரு துரோகியை பற்றி சில நாட்களாக எழுதி வரும் நான், ஒரு நல்லவரைப்ப்ற்றி எழுதாமல் போய் விட்டேனே என்ற வேதனையில், இதை எழுதுகிறேன்..

பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் நான் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்,,
தரமான எழுத்து அவர் பாணி.

அவர் புத்தக காதலர் என சொல்ல முடியாது... அவரது முதல் காதல் உலக சினிமாதான்.. புத்தகங்களும் படித்தாலும், தன் அறிவுக்கு பசிக்கு புத்தகங்களை மட்டும் அவர் நம்பி இருப்பதில்லை...

ஆனால் , புத்தக கண்காட்சி நடந்தால் , அதைப்பற்றி உடனே பதிவிட்டு விடுவார்.... எனக்கு தனிப்பட்ட முறையில் போன் மூலம் தெரிவிப்பார்...

இது போல சமீபத்தில் , ஒரு புத்தக கண்காட்சி அவர் மூலம் கேள்விப்பட்டு சென்றேன்.. அவரைப்பார்த்து  நாளாகி விட்டதால், அவரையும் வர சொல்லி இருந்தேன்.

அவரும் குறிப்பிட நேரத்துக்கு வந்தார்..
அவருடன் உரையாடுவது தனி அனுபவம்... தரம் குறையாமல் , அதே நேரத்தில் உறுதியாக தன் கருதுக்களை சொல்வதிலும் , வாதம் புரிவதிலும் திறமைசாலி அவர்..

இருவரும் புத்தகங்கள் எடுக்க ஆரம்பித்தோம்.... அவர் பரபரப்பாக புத்தங்கள் செலக்ட் செய்வது பார்த்து ஆச்சரியமாக இருந்தது....

பிறகு தெரிந்தது... அவர் எடுத்த புத்தகங்கள் அவருக்கு அல்ல ( அவருக்கு தேவையானதை முன்பே வாங்கி விட்டார்) இப்போது வாங்குவது அவரது அன்னைக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்க...

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

அதன் பின் பில் போடும் இடத்தில், இன்னொரு சர்ப்ரைஸ்...

" நீங்கள் வாங்கிய அனைத்து புத்தகங்களும் என் பரிசாக வைத்து கொள்ளுங்கள் " என சொல்லி விட்டு தானே பில் கொடுத்து விட்டார் அவர்...

ஒரு சகோதரன் போல அவர் காட்டிய அன்பு மகிழ வைத்தது என்றால், அதன் பின் அவர் இல்லம் சென்ற போது, அவர் அன்னை , என்னையும் ஒரு மகனாக நினைத்து அன்புடன் பேசியது நெகிழ வைத்து விட்டது...

விடை பெற மன்ம் இல்லாமல் , கிளம்பி வந்தேன்,,,

இது போன்ற நல்லவர்களை பற்றி பேசினால்தான், நல்லது பரவும்..மீண்டும் மீண்டும் சில துரோகிகளை பற்றி பேசினால், கசப்புதான் பரவும் என்பதால் இந்த பதிவு.



http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    தவற விடக்கூடாத ச���ரு நிவேதிதாவின் கட்டுரை

    - 0 comments


      நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷ்யம். எனவே தான் நண்பர்களை சந்திக்க கூடுதல் கவனம் எடுத்து கொள்வது என் இயல்பு..

    சென்ற வாரம் ஒரு நாள் , நண்பர் சந்திப்புக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன்.. 3 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றால் , இரண்டரை மணிக்கே அந்த இடததை அடைய பிளான் செய்வது என் வழக்கம்... சென்னை டிராபிக் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு..

    ஆவலுடன் சொன்ன இடத்தில் காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால், சென்னை நகரின் டிராபிக் வேலையை காட்டிவிட்டது... நண்பரால், சொன்ன நேரத்துக்கு அந்த இடத்துக்கு வர இயலவில்லை...

    அதற்கு பிறகு அரைமணி நேரம் காத்து இருந்தும் அவரால் வர இயலவில்லை....- டிராபிக்...

    வேறு சில வேலைகள் இருந்ததால், அவரை சந்திக்காமலேயெ கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்... கனத்த மனத்துடன் அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்...


    சென்னையில் சாலைகள் அமைக்கிறோம் , நகரத்தை விரிவாக்குகிறோம் என சொல்லி , மரங்களை அழிக்கிறார்கள் .. ஆனாலும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை... சரியான திட்டமிடுதல் இல்லாததால், தேவையின்றி மரங்கள் அழிக்கப்படுகின்றன, எந்த பயனும் இல்லாமல்..

    இந்த சிந்தனையோடு நான் இருந்த போது, தினமலரில் சாரு எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..

    அட... என ஆவலுடன் படித்தேன்...  மிகவும் தேவையான ஒரு விஷயத்தை , அழகாக சொல்லி இருந்தார்..
    அவர் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுத்தி விட்டார் அவர்.. விரைவில் படிக்க வேண்டும்..

    எழுத்தாளர் என்பதை தாண்டி , ஒரு ஜென் குரு போல அவர் மாறிக்கொண்டு இருப்பது கட்டுரையின் பல இடங்களில் தெரிகிறது..

    மரம் பற்றிய கட்டுரையில், கோமியம் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என பல இடங்களை அவர் தொட்டாலும், என்னை கவர்ந்த இடம் இன்னொன்று...

    ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.


    இப்படி அவர் முழங்கும்போது, எல்லோரும்  உயர் நிலை அடையும்  நன்முறையை , இந்தியா உலகுக்கு அளிக்கும் என பாரதியார் வரிகள் நினைவுக்கு வந்தன..
    பொருத்தமான வரிகளை , கடைசியில் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு..

    அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது...படித்து பாருங்கள்.. பிரிண்ட் எடுத்து நண்பர்களுக்கு கொடுங்கள்

    ****************************************************************************


    மனிதர் வாழ மரம் வாழட்டும்
    - அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. 





    வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.
    சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

    ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
    கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
    விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.

    நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

    "மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

    மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?
    "மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

    இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.
    அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

    மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

    "இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.
    இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

    மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.

    ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.
    "பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

    நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.
    ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.
    இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:

    ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?

    -  நன்றி , தினமலர்


    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர்களுக்கு ப��டிக்காத டாப் ஃபைவ் வார்த்தைகள்

    - 0 comments


    மற்ற மொழியினரை விட , அன்றாட வாழ்வில் அதிக வார்த்தைகள் பயன்படுத்துவது தமிழர்கள்தான்.. காரணம் மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள்.. நம்மவர்கள் தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் -அரைகுறையிலாவது -பேசுவார்கள்.

    இப்படி பேசினாலும் இவர்கள் ஐந்து வார்த்தைகளை பயன் படுத்துவதே இல்லை என்பது வியப்பூட்டும் ஒன்று.. இதை பலர் உற்று கவனித்து இருக்க வாய்ப்பில்லை..எனவே பொது நலன் கருதி , தமிழர்களுக்கு பிடிக்காத ஐந்து வார்த்தைகளை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது....


    1 ஆச்சர்யப்படுத்திய வார்த்தை

    சில ஆண்டுகளுக்கு , என் வாழ்வில் முதன் முதலாக  ஒரு வெளினாட்டு தூது குழுவினருடன் அலுவலக பணிக்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரிய வந்தது..

    ஆனால் ஏன் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.. இதன் அர்த்தம் என சரியாக புரியவில்லை.. பிறகு ஒருவரிடன் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டேன்...

    sorry என்றால் வருந்துகிறேன் என அர்த்தமாம்.. அவர்கள் எதற்கெடுத்தாலும் வருத்தப்ப்டுவது புதுமையாக இருந்தது...  தெரியாமல் மேலே உரசிவிட்டால்., பேச்சின் போது இடையூறு ஏற்படும் நிலை உருவாக்கினால், சொன்ன நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தால் என அவர்கள் வருத்தம் தெரிவிப்பது , ஆச்சரியமாக இருந்தது.. நம் ஊரில் , கூட்ட்டதில் நடக்கும்போது யார் மீதாவது மோதினால் , எருமை மாடு போல செல்வோமே தவிர வருதம் தெரிவிக்க மாட்டோம்...

    நாம் பயன்படுத்தாத வார்த்தை - சாரி, வருந்துகிறேன்

    டிப்ஸ் - இந்த வார்த்தையை அவ்வபோது பயன்படுத்தி பாருங்கள்...  மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்..

    எசாரிக்கை - அதிகமாக இதை பயன்படுத்தாதீர்கள்.. உங்களை பலவீனமானவராக நினைத்துக்கொள்வார்கள்

    2 . நன்றி மறந்த தமிழன்
     இந்த வார்த்தையை , சென்ற தலை முறையினர் பயன்படுதுவதில்லை.. இப்போது பரவாயில்லை... இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள்.. தேங்க்ஸ் - நன்றி என்பதே அந்த வார்த்தை...  முன் பின் தெரியாதவருக்கு , ஒரு சிறிய உதவி செய்திருப்பீர்கள்... அவர் அதை அலட்சியமாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வார்... நன்றி சொல்ல மாட்டார்..

    பெரிய உதவிக்கும் நன்றி கிடைக்காது..  ஆனால் இளைஞர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் தேங்க்ஸ் சொல்கிறார்கள்... நல்லது...

    டிப்ஸ் - இந்த வார்த்தையை பயன்படுத்தினால் , உங்களுக்கு உதவியருக்கு மகிழ்ச்சி ஏற்படும். அடுத்து உதவி கேட்டால் செய்ய வாய்ப்பு இருக்கிறது

    எச்சரிக்கை - டிக்கட் தரும் கண்டக்டருக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாதீர்கள்... அவர் அதிர்ச்சி அடையக் கூடும்.. நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை

    3 வாழ்க ஆங்கிலம்

    இந்த வார்த்தையும் சென்ற தலைமுறையில் புழக்கத்தில் இல்லை... ஆங்கில வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த வார்த்தை இது..

    யாரிடமாவது உதவி கேட்கும்போது, அல்லது ஒன்றை செய்ய சொல்லும்போது, ப்ளீஸ் என்று ஆரம்பித்து சொல்வது இப்போது நடைமுறைக்கு வந்து இருக்கிறது,,,,  ஆனால் தயவு செய்து என்ற வார்த்தை ஒழிந்தே போய் விட்டது...

    டிப்ஸ் - அலுவலக பயன்பாட்டில் கூட , சென்ற தலைமுரையினர் , ப்ளீஸ் என்பதை பயன்படுத்துவதில்லை. இது தவறு...

    எச்சரிக்கை - அப்படிப்பட்டவர்களிடன் இந்த வார்த்தையை பயன்படுத்தீர்கள்..எதிர் விளைவே ஏற்படும்...


    4 எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

        இது மிகவும் முக்கியமான வார்த்தை... அலுவலகம், குடும்பம், சாலையில் வழி கேட்பது போன்ற பல சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை பயன்பாடு இல்லாமையால் பெரும் தொல்லைகள் ஏற்படும்... ஒரு விஷயம் தெரியாது என நம் மக்கள் சொல்லவே மாட்டார்கள்...

                தெரியாத ஒன்றைக்கூட தெரியும் என்பது போல காட்டிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் பிரச்சினைகள் பல... ஒருவரிடம் வழி கேட்கிறீர்கள்.. அவருக்கு தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலை சொல்லி உங்களை அனுப்புவார்.. ஆனால் தெரியாது என மட்டும் சொல்ல மாட்டார்..

    சில அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்துக்காக  சென்று இருப்பீர்கள்.. சம்பந்தப்ப்ட்டவர் தனக்கு அது தெரியாது என சொல்ல மாட்டார்.. ஆனல் தன் அறியாமையை மறைக்கும் பொருட்டு , உங்கள் விண்ணப்பத்தில் தவறு இருக்கிறது என்பது போல எதையாவது பேசி அனுப்புவார்..

    டிப்ஸ்- ஒருவருக்கு ஒன்று தெரியாது என்பதை அவர் பேசுவதை வைத்து முடிவெடுத்து, சீக்கிரம் அவரிடம் இருந்து தப்பிக்க பாருங்கள்..

    எச்சரிக்கை- உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களை சந்தேகப்பட்டு விடாதீர்கள்

    5 முடியாதது எதுவும் இல்லை..

    தன்னம்பிக்கை நூல்களை படித்து படித்து, எல்லாம் தன்னால் முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டது தமிழகம்.. தன்னால் செய்ய முடியாத வேலையை ஏற்று கொள்வார்கள் சிலர்...

    உதாரணமாக ஒரு சட்டை தைக்க நினைக்கிறீர்கள்.. இந்த தேதிக்குள் தர  முடியாது என சொல்ல மாட்டார் டெய்லர்.. முடியும் என சொல்லி விடுவார் ... ஆனால் சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடிப்பார்,,,  அவர் முடியாது என சொல்லி இருந்தால் நாம் வேறு யாரிடமாவது வேலையை கொடுத்து இருக்கலாம்

    டிப்ஸ் - பத்து நிமிடம் என்பது ஆபத்தான வார்த்தை... பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்.. பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் என யாராவது சொன்னால், அந்த வேலை முடியாத ஒன்று என்ப்தை உணர்ந்து கொள்ளுங்கள்

    எச்சரிக்கை - இந்த விஷயத்தில் யாரும் திட்டமிட்டு தவறு செய்வதில்லை... தமிழர்களின் டைம் கான்ஷியஸ் குறைபாடே இது.. எனவே தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீர்கள்



    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    உண்ணாவிரத கலைஞன�� - உலக புகழ்பெற்ற சிறுகதை

    - 0 comments


    காப்காவின் இந்த கதை உலக புகழ் பெற்ற ஒரு கதை... மிகவும் யோசிக்க வைத்து , என் நினைவில் நீங்கா இடம் பெற்ற இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


    ************************************************************************
                        கடந்த சில வருடங்களில் பட்டினி கலைஞர்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பட்டினி கிடக்கும் இந்த அரிய கலையை பயன்படுத்தி , சுய தொழில் செய்ய முடிந்தது. வெகுவாக பணமீட்டவும் முடிந்தது.
                        இப்போது இது சாத்தியமில்லை.
                            அதெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் ஒரு பட்டினி கலைஞன் , ஒட்டு மொத்த ஊரின் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பான். உண்ணாவிரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை , நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருப்பார்கள். உண்ணாவிரத கலைஞனை , ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் பார்த்து விடுவார்கள்.நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை மொத்தமாக வாங்கி கொண்டு நாள் முழுதும் , அந்த உண்ணா விரத கலைஞன் அமர்ந்து இருக்கும் சிறிய கூண்டின் முன் அமர்ந்து ஆவலாக கவனிப்பவர்களும் உண்டு. இரவில் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்பவர்களும் உண்டு. இரவை பகலாக்கும் ஒளி வசதி , இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

                         சில பிரத்தியேக நாட்களில் அந்த கூண்டு திறந்த வெளிக்கு எடுத்து வரப்பட்டு , பட்டினி கலைஞன் மக்கள் பார்வைக்கு - குறிப்பாக சிறுவர்களின் பார்வைக்கு - வைக்கப்படுவான்.பெரியவர்களை பொருத்தவரை இந்த கலை நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாகத்தான் நினைத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நாகரிகம் என கருதப்பட்டதால் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் சிறுவர்கள் , இதை வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்தார்கள். ஒருவர் கரத்தை ஒருவர் பாதுகாப்பாக பற்றியவண்ணம் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.

                    அந்த கலைஞன் கூண்டில் அமர்ந்து இருப்பான். சில சமயம் மென்மையாக தலையசைப்பான். வலுக்கட்டயமாக வரவழைக்கப்ப்ட்ட புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ,
                          சமயங்களில் தன் கைகளை வெளியே நீட்டி , சாப்பிடாமல் தான் மெலிந்து போயிருப்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவான்.ஆனால் இது கொஞ்ச நேரம்தான். அதன்பின் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுள் ஆழ்ந்து விடுவான். அந்த கூண்டில் இருக்கும் கடிகாரம் உட்பட எதையும் கவனிக்க மாட்டான். கண்கள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் தன் முன்புறமாக பார்வையை செலுத்திகொண்டு இருப்பான். அவ்வப்போது சிறிய குடிவையில் இருக்கும் தண்ணீரை சற்று உறிஞ்சி , தன் உதடுகளை ஈரமாக்கிக் கொள்வான்.

                          அவ்வப்போது பார்த்து செல்லும் பார்வையாளர்களைத்தவிர சில நிரந்தரமான பார்வையாளர்களையும் பொதுமக்கள் நியமித்து இருந்தனர். இதில் வினோதம் என்னவெனில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் , கசாப்புக்கடைக்காரர்கள். எந்த நேரத்திலும் மூன்று பேர் கொண்ட அந்த குழு இரவும் பகலுமாக அந்த கலைஞனை கண்காணிக்கும். ரகசியமாக அவன் உணவு அருந்த வில்லை என்ப்தை உறுதி செய்வது இந்த குழுவின் வேலை.
                           ஆனால் இது சம்பிரதாயமான ஒன்று. இந்த கண்காணிப்புக்கு அவசியமே இல்லை. எந்த ஒரு நிலையிலும், வற்புறுத்தப்பட்டால் கூட , அந்த கலைஞன் ஒரு துளி உணவைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அனைவரும் அறிவர். அந்த கலையின் கவுரவம் அதை ஏற்காது.

                      அந்த கண்காணிப்போர் குழுவுக்கு இது புரியவில்லை. வேண்டுமென்றே சற்று தொலைவில் அமர்ந்து தீவிரமாக சீட்டாடுவார்கள். தம் கவனம் முழுதும் ஆட்டத்தில் இருக்கும்ப்போது அந்த கலைஞன் ரகசியமாக சாப்பிடக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
                       இது போன்ற கண்காணிப்பை போல வேதனை தருவது வேறு ஒன்றும் அந்த கலைஞனுக்கு இல்லை. அவனை அவர்கள் நோகடித்தார்கள். அந்த கலையை கடினமாக்கினார்கள். இதை சமாளிப்பதற்காக, அவர்கள் பார்க்கும்போது பாடுவது அவன் வழக்கம். அவர்கள் சந்தேகம் எவ்வளவு தவறானது என இப்படி உணர்த்த முயற்சிப்பான். ஆனால் அதில் பயன் அதிகம் இல்லை. பாடிக்கொண்டே எப்படியோ சாப்பிட்டு விடுகிறானே என அவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் அவர்கள்.

                 அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் திருப்தி அடியாத நிகழ்ச்சி நிர்வாகி மின் ஒளி விளக்குகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஒளி வெள்ளம் அந்த கலைஞனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பொதுவாக அவனால் தூங்க முடிந்ததே இல்லை. எந்த வெளிச்சத்திலும், எந்த சத்தத்திலும் , கூட்டத்திலும், எந்த நேரமாக இருந்தாலும் சற்று கண் அயர்வான் . அவ்வளவுதான்.
                    தன்னை கண்காணிக்க பார்வையாளர்கள் இருப்பது இந்த கலைஞனுக்கு மகிழ்சி ஏற்படுத்தும். அவர்களுக்காக இரவு முழுதும் தூங்காமல் இருப்பான். அவர்களுடன் கலகலப்பாக பேசியும், பழங்கதைகள் பேசியும் , அவர்கள் கதையை சொல்ல சொல்லியும், அவர்களை தூங்காமல் பார்த்து கொள்வான். தான் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதை இப்படி நிரூபிப்பான். ஆனால் காலையில் தன செலவிலயே அவர்களுக்கு காலை உணவு வழன்கி மகிழ்வான். இரவு முழுதும் விழித்து இருந்து கடுமையாக பணியாற்றிய அவர்கள் ஆவலாக உணவை எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் இதுவும் ஒரு சாராரிடையே சந்தேகத்தை கிளப்பியது. காலை உணவு வாங்கி கொடுத்து , கண்காணிப்பாளர்களை பொய் சாட்சி சொல்ல வைக்கிறான் என குற்றம் சாட்டினர் சிலர்.. சரி, உணவு வாங்கி தரவில்லை.. நீங்கள் வந்து கண்காணியுங்கள் என அழைப்பு விடுத்தால், சாக்கு போக்கு சொல்லி நழுவினர். ஆனாலும் அவர்கள் சந்தேகம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது                     

    ஆனால் இந்த சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்று . ஏனென்றால் இரவு பகலாக , அவன் அருகேயே அமர்ந்து அவனை கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தன அனுபவத்தை மட்டும் வைத்து ,அவன் சாப்பிடாமல் ஏமாற்றாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறான் என யாரும் சொல்லும் நிலையில் இல்லை.. அந்த கலைஞனுக்கு மட்டுமே உண்மை தெரியும்,. அதே சமயம்&கலைஞனின்;;உண்ணாவிரத செயல் திறமை மீது முழு திருப்தி கொண்ட ஒரே பார்வையாளனும் அந்த கலைஞன் மட்டும்தான்.

    ஆனால் அவன் திருப்திக்கு காரணம் வேறு. இந்த நிறைவுக்கு காரணம் , அவனை எழும்பும் தோலுமாக ஆக்கி , சிலர் பார்க்க விரும்பாத பரிதாப தோற்றத்தை தந்த , இந்த உண்ணாவிரதம் அன்று. இந்த உண்ணாவிரதம் எவ்வளவு சுலபமான ஒன்று என அவைக்கு தெரியும். அதை சொல்லியும் இருக்கிறான்., ஆனால் யாரும் இதை நம்ப தயாராக இல்லை..சிலர் தன்னடக்கம் என நினைத்தனர் அவனை ஏமாற்றுக்காரன், விளம்பர மோகம் படித்தவன் என நினைத்தனர் . .
    (தொடரும் )


    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -1

    - 0 comments


    இலக்கிய சந்திப்பு என்றால் டிரையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, ஈசிஆரில் அல்ட்டி மேட் ரைட்டர் பங்கு பெறும் இலக்கிய சந்திப்பு என்ற போதே சற்று ஆச்சரியமாக இருந்தது...ஆனால் அடுத்தடுத்து பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என முதலில் தெரியவில்லை..

     நான் செல்வதற்குள், துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடுகளை முடித்து இருந்தார்கள்.. சிலரை முதன்முறையாக சந்த்திக்கிறேன்.. ஆனாலும் பல நாள் பழகியவர்களை சந்திப்பது போலவே இருந்தது... சுரேஷ், மணிவண்ணன், ஞானசேகரன், பாலா, பிரபாகரன், சிவம் , சிபி, செல்வம் மாணிக்கம், மணிகண்டன், சதீஷ், பிரபு ராமகிருஷ்ணன், பார்த்திபன்,கிருபா சங்கர் கார்த்திகேயன், வெற்றி, சிவம், ஜான், வில்லன் வில்லன், சரவண குமார் என ஒவ்வொருவரையும் பற்றியும் நிறைய சொல்லலாம்.. சாருவிடம் இப்படி ஒரு சக்தி வாய்ந்த இளம் படை இருப்பது பெருமையாக இருந்தது..
    சாரு வருவ்தற்கு முன் இலக்கியம், அரசியல் , சினிமா என பல விஷ்யங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென பரபரப்பு..

    ஒரு ஜென் குரு காரில் இருந்து இறங்கினார்... அட.. நம்ம சாரு... வித்தியாசமான தோற்றம்...பேச்சிலும் நிறைய வித்தியாசங்கள்...
    பாஸ்கரும், பாத்திபனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..சற்று நேரத்துக்கு பின் உரையாடல் தொடங்கியது... கேள்வி கணைகள் பாய்ந்தன.. பதில்களும் கருத்து செறிவுடன் வந்தன...

    *************************************************

    திடீரென அய்யப்பனை தரிசிக்க சென்றீர்களே .. இந்த எண்ணம் எப்படி வந்தது?

    பல காரணங்கள்..
    என் நண்பர் ஒருவரை அடிக்கடி சந்திப்பது வழ்க்கம்..அவரது அய்யப்பன் அனுபவங்கள் ஆச்சர்யமாக இருந்தன,, நேர்மையாக , ய்தார்த்தமாக இருந்தன... அவர் இப்படி சொல்வதே எனக்கு ஓர் அழைப்பாக தோன்றியது..

    வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அம்சமும் ஒரு காரணம்..அமெரிக்காவில் ஒரு மில்லியனர் சற்றும் எதிர்பாராத வகையில் சிறை செல்ல வேண்டியதாகி விட்டது...அவசரத்தில் ஷேவிங் செட் பைக்கு பதில் , ரிவால்வர் பையை எடுத்து வந்ததுதான் அவர் செய்த பிழை.. வாழ்வின் இந்த எதிர்பாராத த்ன்மை, அபத்தம் போன்றவை அச்சமூட்டக்கூடியவை... இதை சமாளிக்கும் வலிமையை பெறுவதன் ஆலயம் சென்றதற்கு ஒரு காரனம்..

    அரசன் போல இருக்கும் ஒருவனை, நிர்வாணப்படுத்தி, கழுதை ஊர்வலம் நடத்தி அசிங்கப்படுத்வது போல சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்... அவர்கள் மேல் எனக்கு இப்போது எந்த கோபமும் இல்லை..மன உளைச்சலும் இல்லை.... அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு  மீண்டெழ ஆலய பயணம் தேவைப்பட்டது..எனவே அவர்களும் ஒரு காரணம்...

    சில நாடுகளில் எழுத்தாளனை சிறையில் தள்ளி அவன் வாயை அடைப்பார்கள்.. நம் நாட்டில் போலியான அவதூறுகளால் அவனை அடக்க நினைப்பார்கள்... இதை சமாளிக்க்கும் மனோ வலிமை தேவை

    நீங்கள் எதிர்பார்த்தது சபரிமலையில் கிடைத்ததா?

    வாழ்க்கை என்பதே எதிர்பாராமல் கிடைத்த ஒன்று...  எதிர்பார்ப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அய்யப்பன் தரிசனம்... கடவுள் இருக்கிறார் இல்லை. என்பதற்கு அப்பாற்பட்டு, ஒருவர் சபரி மலை செல்லவில்லை என்றால் அவர் வாழ்வில் ஒரு முக்கிய விஷ்யத்தை தவற விடுகிறார் என பொருள்.. அது ஓர் அற்புதம்... அந்த அனுபவத்தை பெறாமல் ஒருவர் இழந்து விட்டால், மிகப்பெரிய ஒன்றை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்..

    ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கோயிலில் முதல் மரியாதை... சுலப்மாக சாமி தரிசனம் செய்யலாம்.. ஏழை கியூவில் நிற்க வேண்டும்... இப்படி ஏற்ற தாழ்வு இருக்கும் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

    இந்த ஏற்ற தாழ்வைத்தான் சீரோ டிகிரி பேசுகிறது..பிச்சாவரம் சந்திப்பில் ஓர் ஆட்டின் கழுத்தை அறுத்து, சமைத்து உண்டு மகிழ்ந்தோம்... ஓர் ஆட்டின் வலி எங்களுக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? என கேட்டு கொண்டேன்..அந்த வலியை என்னால் என்றும் மறக்க முடியாது... புணர்ச்சி முடிந்ததும் இறந்து விடும் பூச்சி பற்றி சீரோ டிகிரியில் எழுதி இருக்கிறேன்... பெண் பூச்சியின் அழைப்பு ஒலி , ஆண் பூச்சிக்கு மரணமாகிறது...
    இது போல எத்தனையோ  ஏற்ற தாழ்வுகள் உலகில்  இருக்கின்றன.. இதற்கு முன் நீங்கள் சொன்ன , விவகாரம் மிக மிக சாதாரணமானது...

    எழுத்தாளனாக இருப்பது துன்பம் மிகுந்த வேலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருந்தும் சிலர் ஏன் எழுதுகிறார்கள்?

    பல் காரணங்கள்... எழுத்து மீதான தீராத காதல்...
    எழுத்தின் மீதான அடிக்‌ஷன்
    ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்த்திதாலும், மூச்சு விட மற்ப்பதில்லை... எழுத்து மூச்சு போன்ற விஷ்யம்..

    படிப்பவர்கள் சிலராக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு நிஜம்.. அந்த அன்புக்காக எவ்வளவு சிரமங்களையும் சந்தித்து எழுதலாம்


    ( சீரோ டிகிரியை எப்படி படிப்பது? எழுத்தாளன் ஆவது எப்படி? வாழ்க்கை என்றால் என்ன ? அடுத்த நாவல் எதைப்பற்றியது ? )  அடுத்த பாகத்தில்.... 

    இரண்டாம் பாகம் படிக்க இதை சொடுக்கவும்


    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -2

    - 0 comments


    அந்த சந்திப்பு நடந்த இடம் முழுதும் , உற்சாக மின்சாரம் செலுத்தப்பட்டது போல குதூகல மன நிலையில் இருந்தது. அதே நேரத்தில் அனைத்தும் சிறப்பாக , கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.. பழங்கள்,  நன்னாரி சர்பத் என அவ்வபோது ஏதாவது கிடைத்து கொண்டு இருந்தன.. இதற்கு உழைத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... இலக்கியம் மனிதனை எப்படி பண்படுத்துகிறது என்பதற்கு இந்த நிக்ழ்வே ஒரு சாட்சியாக இருந்தது..

      இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. மதிய உணவு முடிந்த பின், ஜாலியாக சற்று நேரம் சுற்றிக்கொண்டு இருந்தேன்...அப்போது, ஏதோ பேச்சு குரல் கேட்கவே, பார்த்தேன்,,, சாரு அங்கு இருந்த ஒரு நாய் குட்டியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. ஆம்... பேசினார்...

    வழக்கமாக நாயை கொஞ்சுவோமே, அப்படி இல்லாமல் ஒரு மனிதனிடம் பேசுவது போல , " எப்ப்டி இருக்கிறாய்? சாப்பிட்டு விட்டாயா? பசிக்குமே! " என அக்கறையுடன் கேட்பதை பார்த்து, வியந்து போனேன்... ( சற்று நேரத்திற்கெல்லாம் வயிறார சாப்பிட்டு விட்டு, சோஃபாவில் உறங்கியது அது...எனக்கு உட்கார இடம் இல்லை... அதற்கு தனி இருக்கை .. பொறாமையாக இருந்தது )

    அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, சாரு மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருந்தது...



    சிலருக்கு " தண்ணியில் " மிதப்பது பிடிக்கும், சிலருக்கு நீச்சல் குளத்தில் மிதப்பது பிடிக்கும், அதே போல நடனம் , இலக்கிய விவாதம் , வாசித்தல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை..  இந்த அனைத்தும் ஒரே இடத்தில் நடந்தது அற்புதமாக இருந்தது...  be yourself என்பதன் மகத்துவம்  
    வெளிப்பட்ட இடம் அது....

    அரசியல், சினிமா, மது, ஆன்மீகம், துரோகம் , காதல், காமம் என வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்து விஷயங்களும் சுவையாக விவாதிக்கப்பட்டன... ஆழமான கேள்விகள் முதல் அபத்தமான கேள்விகள் வரை எதுவாக இருந்தாலும், பளிச் பதில் அளித்தார் அல்ட்டிமேட் ரைட்டர்.

    புக் ஸ்டால்  வைக்கப்பட்டு இருந்தது பயனுள்ளதாக இருந்தது... அதே நேரத்தில் வாசக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததும் இனிமையான அனுப்வம்...  

    சரி... சாருவுடன் உரையாடலில் சில பகுதிகள்..

    **********************************************************************
     உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்தது ராசலீலா.. ஒரு வாசகனாக , உங்கள் பிடித்த உங்கள் நாவல் எது?

    முந்தா நாள் வரை எனக்கு பிடித்த நாவல் ராச லீலா.. ஆனால் நேற்று முதல் , எக்சைல் நாவல் மிகவும் பிடித்து விட்டது... என்னையே பிரமிக்க செய்யும் அளவுக்கு சிறப்பாக வந்து இருக்கிறது நாவல்... ஒரு வகையில், சீரோ டிகிரியின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம்... பல விஷ்யங்களை தொட்டு செல்கிறது நாவல்.. படித்தவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீள்வது கடினம்..

    வாழ்க்கை என்பது என்ன?

    வாழ்க்கை என்றால் என்ன..இலக்கியம் என்றால் என்ன..கவிதை என்றால் என்ன என்றெல்லாம் ரெடிமேட் கேள்விகள் கேட்பதால் பயனில்லை... வாழ்க்கை என்றால் என்பது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..

    எழுத்தாளன் ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

    நிறைய படிக்க வேண்டும்.. உலக சினிமா பார்க்க வேண்டும்.. எல்லாவற்றுகும் மேலாக மனதில் அன்பு இருக்க வேண்டும்.ஈகோ இருக்க கூடாது.... ஒருவரை துன்புறுத்துபவர் எழுத்தாள்ராக இருக்க முடியாது... எழுத்தாளன் என்பது ஒரு நிலை... டைரகடர் ஆவது எப்படி என சொல்லி தருவது போல , எழுத்தாளன் ஆவது எப்படி என சொல்லித்தர முடியாது..துறவி ஆவது எப்படி என சொல்லித்தர முடியுமா?

    இது வரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு தோன்றுவது என்ன?


    பல தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறேன்.. ஆனால் அதற்காக அழுவதில்லை.. எல்லாமே அனுபவம்தான்... செஸ் ஆட்டத்தில் , சரியான மூவ் தவறான் மூவ் இரண்டும் சேர்ந்துதான் ஆட்டத்தை உருவாக்குகின்றன...எனவே மூவ்தான் முக்கியம்... ஆட்டத்தில் இருப்பது முக்கியம்... 

    என் தந்தை ஒவ்வொரு வருடமும் சபரி மலை செல்வார்.. ஏன் என கேட்டால் , நீ சின்ன பையன் சொன்னால் புரியாது என்பார். நீங்கள் சொல்லுங்கள் .. சபரிமலை ஏன்?

    அய்யப்பன் என்பவன் என்னைபோன்றவன் என நண்பர் ஒருவர் சொன்னார்.. என் எழுத்துக்கள் பற்றி தெரியாதவன் பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை.. ஆனால் என் எழுத்தைப்படித்து விட்டு , புரிந்து கொள்ளாமல் தவ்றாக பேசினால் எனக்கு கோபம் வரும். அதே போல அய்யப்பன் என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பற்றி அய்யபனுக்கு கவலை இல்லை.. ஆனால் அய்யப்ப பக்தராக காட்டிகொண்டு, தவ்று செய்தால் அய்யப்பன் சும்மா விட மாட்டான் என சொல்லி சில உதாரணங்கள் சொன்னார் நண்பர்..

    என்னை பொறுத்தவரை , நான் ஒரு நான் வெஜ் அடிக்ட் ... பைபாஸ் சிகிச்சை நடந்து , அசைவம் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அசைவம் சாப்பிட்டவன் நான்.. என்னை எந்த கொம்ப்னாலும் மாற்ற முடியாது... அப்படிப்பட்ட என்னை , ஒழுங்கு தவறாமல் விரதம் இருக்க வைத்தது இந்த வழிபாட்டு முறைதான்.. மனதாலும் கூட விதிமுறை தவறாமல்  விரதம் இருந்தேன்... விரத காலத்தில் என்னை சாமியாக மதித்து காலில் விழுவார்கள்..  அதற்கு உரியவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியை , இது ஏற்படுத்தியது... இது வேறு எந்த வழிபாட்டு முரையிலும் இல்லை... 

    சில தீவிரவாதிகள் எதிரி சிறுவர்களை கொல்லும்போது, அவர்களுக்கு செக்ஸ் அனுபவம் இருக்கிறதா என கேட்பார்கள்.. பதில் என்னவாக இருந்தாலும் கொல்வார்கள்... ஆனால் அந்த அனுப்வம் இல்லாமல் ஒருவனை கொல்லும்போது, ஒரு சாடிஸ்டிக் மகிழ்ச்சி கிடைக்கும்.. ஒரு முக்கியாமன் அனுபவம் இல்லாமலேயே சாகிறான்..
    அதே போல , சபரிமலை பயணம் என்பது அற்புதமான அனுப்வம்... அது இல்லாமல் சாவது பரிதாபத்துக்கு உரியது..

    சீரோ டிகிரியை எப்படி படிப்பது?

    நியாயமாக ஓர் எழுத்தாளன் இதற்கு பதில் சொல்ல கூடாது.. எப்படி படிக்க வேண்டும் என அதிலேயெ குறிப்புகள்  ஆங்காங்கு இருக்கின்றன.. 
    உலகம் என்பது வன்முறைமயமானது.. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகம் ஏன் இவ்வள்வு கொடூரமாக இருக்கிறது... நான் ஏன் இவ்வளவு கொடுமைக்காரனாக இருக்கிறேன்... என் நாக்கு ருசிக்காக ஏன் ஒரு அப்பாவி விலங்கை கொல்கிறேன்..  இது போன்ற கேள்விகள் அதில் அலசப்பட்டு இருக்கும்..

    சீரோ என்பது மரணம்... சூன்யம்.. மரணத்தின் இன்னொரு துருவம் செக்ஸ்.. செக்ஸ் இல்லாவிட்டால் ஃபேஷன் டெக்னாலஜி உட்பட எதுவும் இல்லை. இது போன்று  சீரோ டிகிரியில் ஆங்காங்கு இருக்கும் குறிப்புகளை பிடித்து கொண்டு மேலே மேலே போய்க்கொண்டே இருக்கலாம்... எத்த்னை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.. 

    சீரோ டிகிரியின் கடைசி வாக்கியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை சொல்லும்... ஆனால் அது " சொல்" என்று முடியும்... அமைதியை சொல்லும் வாக்கியம் சொல் என முடியும்..

    சீரோ டிகிரியின் துவக்க வாக்கியம், உன்னோடு பேசி எத்தனை நாட்கள் ஆகின்றன என தொடங்கும்..

    ஆரமப்ம பேச்சு, முடிவு சொல்... ஆதியிலே வார்த்தை இருந்தது என்பார்கள்.. இதுபோல பல அதில் புதைந்துள்ளன..தேடி கண்டு பிடியுங்கள்

    ********************************************************

    நாஸ்திகனாக இருந்ததால் , சபரிமலையை இத்தனை நாள் தவற விட்டு விட்டேனே என வருந்தியதாக சாரு சொன்னார்... சாருவை பார்ப்பவர்கள், சில தவறான பிரச்சாரங்களால் , இத்தனை நாள் அவரை தவற விட்டு விட்டொமே என வருந்துவார்கள் என்பது உறுதி...






    சுவாசிப்பு போல வாசிப்பும் அவசியம்



    இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் இலக்கியம்

    சீரோ டிகிரி- ஒருவிவாதம்


    அன்பு இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியாது

    வானமே உங்கள் எல்லை

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்



    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    தூக்கு தண்டனை- மூன்று வித கருத்து���்கள்

    - 0 comments


    அண்ணா ஹசாரே பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், ஊடகங்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கும் போனால் போகிறது என சற்று இடம் ஒதுக்க ஆரம்பித்துள்ளன.  தூக்கு தண்டனை என்பது , மேலோட்டமாக அலச வேண்டிய பிரச்சினை அல்ல , பொழுது போக்கு பிரச்சினையும் அல்ல என்பதால், ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பதே  நல்லது.

    கொள்கை ரீதியாக சிலர் சில நிலைகளை எடுத்து இருந்தாலும்,  நடு நிலையாளர்கள் சிலருக்கு இதில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. ஆதரிப்பதா எதிர்ப்பதா என பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை..

    அவர்கள் நலன் கருதி, இந்த பிரச்சினையில் நிலவும் மூன்று தரப்பு நியாயங்களை தொகுத்து தர விரும்புகிறேன்..

    1 . தண்டனை கூடாது....

    தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர் , பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். போதுமான தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூக்கு வழங்குவது தவறு. மேலும் அவர்கள் நிரபராதிகள். ஒரு பேட்டரி வாங்கி கொடுத்ததற்கு தூக்கு என்பது அக்கிரமம்.

    2 விடுதலை கூடாது..

    கொலை செய்வது மட்டும் அல்ல.. உடைந்தையாக இருப்பதும் குற்றமே... கொலை செய்ய கத்தி வாங்கி கொடுத்தால் , அதுவும் குற்றம் என்ற அடிப்படையில்தான் தண்டனை வழங்க்கப்ப்ட்டுள்ளது. தண்டனை காலதாமதம் ஆனதற்கு அடுத்தடுத்த அப்பீல்களே காரணம். எனவே இதை காரணம் காட்டி விடுதலை செய்ய சொல்வது தவறு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தூக்கு தண்டனை உண்டு. இதை கொடூரம் என நினைத்தால், எல்லா தண்டனையுமே கொடூரம்தான். பேசாமல் எல்லா தண்டனைகளையும் ஒழித்து விட்டு, நீதி மன்றங்களை அறிவுரை மையங்களாக்க முடியுமா? எனவே அவர்களை விடுதலை செய்ய கூடாது..


    3. யாருக்குமே தூக்கு கூடாது..

    பேட்டரி வாங்கி கொடுத்தது குற்றமா இல்லையா என்பது தேவை இல்லாத வாதம். தூக்கு தண்டனை ஒட்டு மொத்தமாக ஒழிய வேண்டும். ஆட்டோ சங்கர் உட்பட பொதும்க்களை கொல்லும் தீவிரவாதிகள் உட்பட யாருக்குமே தூக்கு கூடாது.. வேறு கடுமையான தண்டனை தரலாம்.  அமெரிக்காவில் கூட தூக்கு தண்டனையில் சிக்குபவர்கள் ஏழைகள்தான். எனவே இந்த தண்டனை அப்பாவிகளையே பாதிக்கிறது..


    இப்படி மூன்று வித கருத்துக்கள் நிலவுகின்றன.. உங்கள் கருத்து என்ன? 


    http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • [Continue reading...]

    கே.பாலசந்தருக்க�� பால்கே விருது - ஜனாதிபதி வழங்கின��ர்

    - 0 comments


    இந்திய திரைத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது தமிழக திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தருக்கு (81) வழங்கப்பட்டது.

    58-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டில்லியில் உள்ள விஞ்ஞான மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    அமெரிக்காவில் த��க்குதல் திட்டம்; 3 பயங்கரவாதிகள் ��டுருவல்

    - 0 comments


    அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினமான செப்டம்பர் 11-ல் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 2001 செப் மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ���ூ.592 அதிகரிப்பு

    - 0 comments


    தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.592 அதிகரிப்புஒரே நாளில் பவுன் தங்கம் ரூ.592 அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344-க்கு விற்பனையானது.

    தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக மாற்றங்கள் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்து மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    மாணவியை கடத்தி க���்பழிப்பு - 3 வாலி��ர்கள் கைது

    - 0 comments


    மதுரை மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், அருகில் உள்ள மொட்டை மலையை மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    உள்ளாட்சி தேர்த��ில் ம.தி.மு.க., தனி���்து போட்டி

    - 0 comments


    உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டிஉள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும், என்று வைகோ கூறினார்.

    தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் ம.தி.மு.க., பிரமுகரின் புதுமனை புகுவிழாவிற்கு வந்த வைகோ, கும்பகோணத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.��. ஆகிய 2 மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    தினபலன் - 10-09-11

    - 0 comments



    மேஷம்:

    தேக ஆரோக்கிய குறைவுகளைச் சந்திக்கலாம். சந்தோஷம் தரும் அல்லது சங்கடம் தரும் செய்திகளை கேட்கலாம். மனைவி, குழந்தைகளுடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். பழைய பொருள் ஒன்றை மாற்றி புதிய பொருட்கள் வாங்கலாம். மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    ஜாகிங் சென்ற நடி���ை மீது கார் மோதி���து

    - 0 comments


    ஜாகிங் சென்ற நடிகை மீது கார் மோதியதுஆலிவுட்டில் பிரபலமாக விளங்குபவரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், தினமும் சாலையில் `ஜாகிங்' செல்வது வழக்கம். அவர் குடியிருக்கும் பகுதியிலேயே ஒவ்வொரு தெருக்களின் வழியாகவும் காலையில் `ஜாகிங்' செய்வார். இதுபோல, நேற்று மேலும்படிக்க

    http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    கண்ணீர் குடித்த�� தாகம் தீர்.....!

    - 0 comments


    கடல் தாண்டி வந்தியா
    ஆசாபாசங்களை
    பெட்டியில் வைத்துப் பூட்டு....
    பிரிவின் மனவலியை
    மறைத்து வைத்து
    இன்முகம் காட்டு...
    கண்ணில் சுரக்கும்
    கண்ணீரை அடிக்கடி
    பாத்ரூம் போயி கழுவு...
    கைபேசியில் ஒப்பாரி வைக்கும்
    மனைவிக்கும் குழந்தைக்கும்
    பயந்து ஒளியும் கைபேசி...
    நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
    இன்னும் கூடுதலாக
    மனம் அழுகிறது...
    காலம் கோலம்
    எது மாறினாலும்
    முதலாளிகள் மாறப்போவதில்லை...
    கண்ணீரை நெகிழ்ந்து
    கதறலை அமிழ்ந்து
    மனதை ஒளித்து வைத்துக்கொள்...
    இந்த கண்ணீருக்கு
    மட்டும் ஒரு
    சங்கம் இல்லை....
    இருந்தால் உலகம்
    தாங்காது எனவேதான்
    ஞானிகள் யாரும் யோசிக்கவில்லை...
    ஏ சமுத்திரமே
    எத்தனை முறைதான் உன்னை
    கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
    கண்ணீர் பழகிவிட்டது
    பிரிவுகள் வழக்கமாகி விட்டது
    எல்லாமே மாயையாகவே தெரிகிறது....


    பாஸ்போர்ட், விசா இல்லாத
    உலகம் வேண்டும்
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!


    டிஸ்கி : படங்கள் யாவும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மேலிருந்து எடுத்தது.




    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    புரியாத சில விஷய���்கள்...!!

    - 0 comments


    ௧ : பேப்பரில் ஸ்டேப்ளர் பின் அடிக்குமுன், நம் கை ஏன் முதலில் ஸ்டேப்ளர் இல்லாமலேயே ஆக்ஷன் செய்கிறது...?

    ௨ : சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???

    ௩ : நடிகைகளிடம்  உங்கள் கனவு கதாபாத்திரம் எது என கேட்கும் போது, விலைமாதுவாக நடிக்க ஆசை எனக் கூறும் விந்தை என்ன...!!??

    ௪ : சிறு பெண் குழந்தைகள், எது வாங்கினாலும் பிங்க் கலரை பார்த்து கேட்பது ஏன்...!!??

    ௫ : "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??

    ௬ : பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??

    ௭ : மூணாவது ரவுண்ட் மது அருந்திவிட்டு, பீரோ சாவியை ஒளித்து வைத்துவிட்டு, அடுத்தநாள் மறந்து போயி, தேடோ தேடுன்னு தேடிட்டு வெறுத்து போயி, அடுத்தநாள் மூணாவது ரவுண்டு மது குடித்ததும், ஆங்....
    இங்கேதான் சாவியை வைத்தோம் என சரியாக கண்டுபிடிப்பத்தின் மாயம் என்ன..!!!??

    ௮ : டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன...!!??

    ௯ : முதலாளி போன் செய்யும் போது, தொண்டையை செருமிட்டே, தலையை அப்பிடிக்கா இப்பிடிக்கா ஆட்டிகிட்டு போனை எடுத்து பேசுவது என்ன...!!!??

    ௧௦ : முக்கியமான பதிவு போடும் அன்றைக்கு நெட் பெப்பே காட்டும் மர்மம் [[வேதனை]] என்ன...!!??

    ௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??

    ௧௨ : கவிதை பிடிக்காத நண்பர்கள், ஏன்....!!!??

    ௧௩ : சாயங்காலம் மது அருந்த போறவன், சென்ட், பவுடர் பூசிட்டு போயி, குடிச்சிட்டு வரும்போது, வேஷ்டி இல்லாமல் வருவது ஏன்...!!??

    ௧௪ : சோனியா காந்தி [[ப்பூப்ப் காந்தி பரம்பரை]] இப்போவெல்லாம் பேசுவதே இல்லையே ஏன்....!!??

    ௧௫ : மூனா கானா, தமிழக மக்களை சாபம் போடுறாரே அது ஏன்...!!!??

    ௧௬ : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??

    ௧௭ : அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??

    ௧௮ : அண்ணா ஹசாரே'வுக்கு ஆதரவாக திரண்ட மக்களை பார்த்து, அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறாரே எப்பிடி...!!!??

    ௧௯ : ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??

    ௨௦ : கையில் புது மோதிரம் போட்டது, எல்லாரும் கையை உயர்த்தி உயர்த்தி பேசுவது ஏன்...!!??



    டிஸ்கி : எவம்லெய் அது மேலே உள்ளதை படிச்சிட்டு கல்லை தூக்குறது, ம்ஹும்....



    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    ஒரு கவிதையும், தாகூரும்... !!!

    - 0 comments


    நண்பனுக்கு ஒரு கவிதை.

    உதிரத்தை பாலாக்கி
    ஊனை உணவாக்கி
    தந்தவளே....

    எப்போதும் முந்தானை
    பிடித்து வரும் என்னை
    ஒற்றையாய் விட்டுப் போனதென்ன....

    யய்யா யய்யா என 
    அழைத்தவளே - இனி
    அந்த சத்தம் என்று கேட்பேன்...

    பொத்திப் பொத்தி
    வளர்த்து என்னை ஆகாயத்தில் பறக்க
    பழக்கி விட்டு ஓடி மறைந்து, விண்மீனாய் மாறினது என்ன....

    உனது அன்பின் நேசத்திற்கு
    நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
    ஒற்றை  "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!

    ---------------------------------------------------------------------------


    கவிஞர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது
    ஒரு முறை படகில் ஏறி, யமுனை
    நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர்.

    அது இரவு நேரம், படகிலே இருந்த சின்ன
    அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர்
    கவிதை எழுத முற்பட்டார்.

    ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை…
    பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி
    விளையாடியது.

    கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை
    அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்ததுதான்
    தாமதம்.. .

    நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக
    ஒளிர்வது தொடர்ந்தது. இதைப் பார்த்ததும் தாகூருக்கு
    கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

    இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்…?
    ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே
    தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ.

    அதே மாதிரிதான் ஈகோ என்ற  நிலா  சந்தோஷத்தை
    அது மறைத்து விடும்.

    நன்றி : கல்யாண்ஜி.







    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!

    - 0 comments


    என் மகனின் வகுப்பு தோழனும், நண்பனுமாகிய ஒரு உ பி மாநில பையனின் மரணம். பள்ளியில் பரீட்சை எழுதும் போதே லேசாக காய்ச்சல் அடித்திருக்கிறது, சாயங்காலம் ஆஸ்பத்திரி கொண்டு போக மலேரியா, அட்மிட் பண்ண சொன்னார்கள், அடுத்த நாள் பையன் இறந்து போனான்.

    பார்க்கப் போனேன் வீட்டுக்கு, உடம்பை கிடத்தி வச்சிருந்தார்கள் கடும் கூட்டம் அதில், என் மகனும் அவன் இன்னொரு நண்பனுமாக உடம்பை பார்க்க முடியாமல் சுற்றி சுற்றி வந்ததை பார்த்த போது, அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நினைக்கும் போது என் கை தானாகவே நெஞ்சை அழுத்திக்கொண்டது.

    காரணம் நேற்றுதான் கூட இருந்து பரீட்சை எழுதிவிட்டு விளையாடிவிட்டு வந்து இருக்கிறார்கள். இதுவும் தவறான சிகிச்சையின் மரணம் என சண்டை நடந்தது.....!!!  [[வரும் காலங்களில் என் மகனும் இதைப் பற்றி, நண்பனின் மரணம், பிரிவு  பற்றி பாரத்தோடு பதிவு எழுதக்கூடும்]]

    நண்பனின் அக்காவும், நண்பனின் தங்கச்சியுமாகிய லட்சுமியின் மரணம். மலேரியா காய்ச்சல் முத்தி போயி ஆஸ்பிட்டல் கொண்டு போக, தவறான சிகிட்சையால் மரணம், ஈமை காரியங்கள் முடியும் வரை கூட இருந்தேன் கண்ணீருடன்......

    அடுத்து எங்கள் "கிருபாசனம்" [[மும்பை, தாராவி]] சபையின் பாஸ்டரும், அப்போஸ்தலருமான  அய்யா குமாரதாஸ் அவர்களின் மரணம். இந்த தடவை நான் ஊர் [[இந்தியா]] வரக் காரணமே அவர்தான். காரணம் மும்பையில் எனக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்க அவர் உதவி செய்வதாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவரை போயி பார்த்தேன், சரி நீ ஊர் போயி பணம் கொண்டுவா ஏற்பாடு செய்யலாம் என்றார்.

    நான் ஊர்[[கன்னியாகுமரி]] வந்து பணம் ஏற்பாடு செய்யுமுன் அவர் சீரியஸாக ஆஸ்பத்திரியில், சரியாகிவிடும் என மும்பை வந்தேன் ஆனால், அவர் எனக்கு முந்தி  கொண்டார் ஆம் இறந்து போனார். எனக்காக பிரார்த்திக்கும் உயிர்களில் அவர் மிகவும் முக்கியமானவர், என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.


    என்னோடு பஹ்ரைனில் வேலை செய்து, எனக்கு சாப்பாடெல்லாம் பொங்கி தந்து பிரியமாக இருந்து[[என் ஊர்காரன்]], நல்ல நண்பனாக இருந்து விசா பிரச்சினையால் எட்டு வருஷம் ஊர் போகாமல், அவுட் பாசில் ஊர் போனான் கண்ணன். ஊரில் மனைவியுடன் சிறு பிரச்சினை வரவே, மனைவியின் ஊரிலேயே தங்கினான்.

    அப்படி இருக்கையில், எங்க [[சொந்த]] ஊருக்கு வருவதற்காக லெப்பை குடியிருப்பிலிருந்து பழவூர் [[நெல்லை]] பக்கம் பைபாஸ் சாலையில் பைக்கில் ஓவர் [[கடும் போதையாம்]] ஸ்பீடில் வந்து இன்னொரு பைக்கில் மோத, அதில் பின்னால் இருந்த பெண்ணுக்கு இடுப்பு முறிய, கண்ணன் அம்பதடி தூரம் தூக்கி வீசப்பட...

    ஆஸ்பத்திரியில் நான்கு நாள் கிடந்து உயிரை விட்டுருக்கிறான். இரண்டு பெண் பிள்ளை வேறு இருக்கிறது, சரி, அந்த இடுப்பு முறிஞ்ச பெண் என்ன பாவம் செய்தாள்...? [[வாகன ஓட்டிகள் தன் உயிர் மட்டும் முக்கியமில்லை, அடுத்தவர் உயிருக்கும் நாம்தான் உத்திரவாதம்னு நினச்சி வண்டி ஓட்டுங்க]]

    எத்தனையோ முறை நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை செய்வதுண்டு குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது இன்பமாகத்தான் இருக்கும், அதேவேளை நொடியில் இன்பம் மாறி துன்பம் சடுதியில் நேரும்னு, கேட்டாதானே....!!!


    அடுத்தது நம்ம "உணவு உலகம்" ஆபீசர் அருமை நண்பர் சங்கரலிங்கம் அவர்களின் தாயாரின் மரணம். ஏற்கனவே ஆஸ்பத்திரியில் வைத்து சரியாகி வீட்டுக்கு போயி, மறுபடியும் முடியாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி வச்சிருக்குறதா ஆபீசர் சொன்னார்.

    அவர் குரலில் இருந்த வருத்தம் எனக்கும் புரிஞ்சது, அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் பேசுவார் போனில், அப்புறமா ரெண்டுநாள் கழித்து இம்சை அரசன் பாபு சாட் பண்ணி சொன்னார், இப்பிடி ஆபீசர் அம்மா இறந்து போனாங்க மனோ, நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லிருங்கன்னு, மனம் நொய்ந்து போனேன் தளர்ந்து போனேன்.

    ஆபீசரோடு சந்தோசத்தில் பங்கு கொண்ட எனக்கு, துக்கத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என மனசுக்கு சங்கடமாக இருந்தது. நேற்றுதான் போன் பேசினேன் ஆபீசருக்கு, அவர் அவங்க அம்மா பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆச்சர்யமான விஷயம் சொன்னார் நம்பவே முடியவில்ல...!!!

    நாப்பது வருஷத்துக்கு முன் காசி போயிருந்த போது ஆபிசரின் அப்பா, அம்மாவுக்கு வாங்கி குடுத்த "கண்ணாடி வளையல்" [[நோட் பண்ணிக்குங்க கண்ணாடி வளையல், அதுவும் நாப்பது வருஷம் முன்பு]] ஒன்று, இது வரை உடையலையாம்....!!! உடலை சிதை மூட்டுமுன் அந்த வளையலை கழற்றி இருக்கிறார்கள்,  அப்பவும் உடையலையாம்....!!! எவ்வளவு அன்பு இருந்திருந்தால் கண்ணாடி
    வளையல்குள்ளும் பாசம் இருந்திருக்கும்  பாருங்க, அன்பு இருந்தா கண்ணாடிக்கு கூட உயிர் வந்துரும் இல்லையா.....?

    ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!

    நான் இந்தியா பலமுறை லீவில் வந்திருந்தாலும், இந்த தடவைதான் ரொம்ப சந்தோசமாவும் இருந்தேன், இந்த தடவைதான் ரொம்ப துக்கமாவும் கவலையாகவும் திரும்பியும்  இருக்கேன். மறுபடியும், ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா....?






    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ்நாட்டுக்கு வயது 50

    - 0 comments


    தமிழ்நாட்டுக்கு வயது 50. ஆமாம்... உலக வரைபடத்தில் இதுதான் தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.
    இன்றைய ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக 'சென்னை ராஜதானி' என்று இருந்ததை, 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாகப் பிரித்தபோது, 'சென்னை மாகாணம்' என்று பிரிந்த நமது தமிழகம், பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் 'தமிழ்நாடு' என்று பெயரிடப்பட்டது.

    சுதந்திரம் என்பது மாதிரியே, தமிழ்நாடும் நமக்குச் சும்மா ஒன்றும் கிடைத்துவிடவில்லை. பலர் போராடி, பலர் ரத்தம் சிந்தி, நமக்கென்று இருந்த சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களிடம் இழந்து, நமக்கென சிலவற்றைப் பெற்றிருக்கிறோம். முல்லைப்பெரியாறு, கண்ணகி கோயில் விவகாரங்களில் ஆரம்பித்து நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம் என நாம் இழந்த இடங்களில் எல்லாமே இன்று வரை பிரச்னைகள்! கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். காவிரியில் நம்முடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் இருக்கும் கோலார் தங்கவயல் பகுதிகளில் இன்றும் தமிழர்களுக்குச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

    நமது நிலப் பரப்பையும் உரிமைகளையும் எடுத்துச்சொல்லும் விதமாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு, கலைவாணர் அரங்கத்தில், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் 25வது ஆண்டு நிறைவுவிழாவை அரசு சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். அன்றைய விழாவில் ம.பொ.சி&யும் கலந்துகொண்டார். சென்னையில் விழா நடந்த அன்றே நாகர்கோவிலிலும் விழா நடந்தது. அங்கே பழ.நெடுமாறன், தியாகி பி.எஸ்.மணி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த 50வது ஆண்டு நிறைவு மிக முக்கியமானது!
    கர்நாடகத்தில், 50வது ஆண்டு நிறைவு விழாவை, 'ஸ்வர்ண கர்நாடகா விழா' என்று கொண்டாட இருக்கி றார்கள். ஆந்திராவும், கேரளாவும்கூடக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. நாம்தான் அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம்! இது எவ்வளவு வேதனையான விஷயம்!
    தெலுங்கு கங்கைத் திட்டத்துக்காக கோடிக்கணக்கில் தமிழகம் தனது பங்கை ஆந்திராவுக்குக் கொடுத்தும், சென்னைக்குத் தெலுங்கு கங்கை தண்ணீர்வரத்து இல்லை. இன்றைய ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்துவிட்டார்.

    தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வர லாற்றில் உள்ளன. தமிழக எல்லைப் பகுதி பிரச்னைக்காக காமராஜர் 'தமிழ்நாடு எல்லைக் குழு' என்ற பெயரில் ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, அதற்குத் தலைவராக சி.என்.முத்துரங்க முதலியாரை நியமித்தார். ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் சேர்ந்து, 'திருப்பதி மீது படையெடுப்பு' என்ற போராட் டத்தை நடத்தினார் ம.பொ.சி. மங்களம்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று, வட எல்லைப் பகுதிக்குப் புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்லப் பயணப்பட்டார் ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தார்கள். கீழ்த் திருப்பதியில் உள்ள குளக்கரைக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்போது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினார்கள். இருப்பினும் ம.பொ.சி. அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், 'வேங்கடத்தை விடமாட்டோம்' என்று துவங்கி ஒரு மணி நேரம் மேடையில் கர்ஜித்தார். ஆனாலும் சித்தூர், திருப்பதி இரண்டும் ஆந்திரத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் ம.பொ.சி. பெரும் கவலை கொண்டு, அவை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டியவை என்று தகுந்த ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

    1953&ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் தொடர்ந்து 15 நாள்கள் கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும், மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யைத் தீர்த்துக்கட்ட சதிகள் தீட்டப்பட்டன. நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றினார். 'நெல்லைத் தமிழன்' என்று அவரது பெயர் ம.பொ.சி.யின் போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, எல்லைத் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்றார் ம.பொ.சி.
    அவரது தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளை வாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும் மற்றும் செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினார் ம.பொ.சி.

    கன்னியாகுமரி, செங்கோட்டை இரண்டையும் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி.
    1954, ஜூன் மாதம் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்கள் நடத்தினார். சிறை சென்றார். நேசமணியின் கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். திரு விதாங்கூர் கல்குளத்தில் நேசமணியின் கைதைக் கண்டித்து, மக்களும் ஒரு பேரணி நடத்தினர்.

    1950&ல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இது குறித்து கேரள முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை நேசமணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரச திட் டத்துக்கும் தயார் இல்லை எனவும் தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் முன் பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர். குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீ ஸா£ரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர்.

    இறுதியாக காமராஜரும், திரு விதாங்கூர் கொச்சி உள்ளடக்கிய கேரள முதலமைச்சர் பனபள்ளி கோவிந்தமேனனும் சந்தித்துப் பேசிய பின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக் கொண்டது. இதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு! கன்னியா குமரியும் செங்கோட்டையும் தமிழ கத்தில் இணைந்தன.

    தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே உள்ள எல்லை கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை, கொல்லங்கோடு வரை நீண்டுள்ளது. இதில் 203 கி.மீ. அளவில்தான் எல்லை சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கிறது. காரணம், இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், கண்ணகி கோயில் தமிழகத்தில் இருந்தாலும், தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினால் அத்துமீறி தாக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள தாளவாடியை கர்நாடகத்தில் சேர்க்க வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கெனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
    ஆக, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், கேரளம் மூன்றும் தமிழகத்தோடு எதிலும் அனுசரித்துப் போக மறுக்கின்றன. தமிழ்நாடு என்னும் பெயரின் பின்னால் நமது முன்னோர் களின் தியாக வரலாறுகள் ஏராளம் இருக்க, நாம் இந்த 50 ஆண்டு நிறையும் தருணத்தில் மௌனமாக இருக்கலாமா? நம் சரித்திரத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் "தமிழ்நாடு 50" நிறைவைக் கொண்டாட வேண்டாமா? நமது உரிமை களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டாமா?

    இதற்காகவே, வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி, ஒரு பெரிய விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் வைகோ, பழ.நெடுமாறன், இரா.செழியன் எனப் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
    தமிழன் என்று சொல்லவும் தலை நிமிர்ந்து நிற்கவும் இது இன்னுமொரு தருணம்!

    - வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

    நன்றி : http://maposi.blogspot.com/2010/01/50.html


    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    அரசன் என்பவன் [[ள��]] புளியம்பழம் போ��� இருக்கவேண்டும்....!!!???

    - 0 comments


    மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
    முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

    மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

    பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

    மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

    தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
    அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
    அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

    அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
    ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

    ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
    அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

    ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

    தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

    அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்....!!!


    ஒரு ஜோக்...

    காலையில் நாயை கையில் பிடித்து வாக்கிங் வருபவரிடம் ஒரு குடிகாரன்...

    குடிகாரன் : என்ன காலையிலேயே ஒரு கழுதை கூட வர்ற...
    வாக்கிங் வந்தவர் : உனக்கு கண்ணு தெரியலையா அது நாய்'டா வெண்ணை...
    குடிகாரன் : நான் கேட்டது நாய்'கிட்டேடா டுபுக்கு....





    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    தனி ஈழமே நிரந்தர தீர்வாக அமையும்...

    - 0 comments


    இலங்கையைப் பிரித்து தனி ஈழம் அமைக்க வேண்டும். அது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத்,
    அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா. அமைப்பு இலங்கை பிரச்சினை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐ.நா. சபை தலைவர் பான்கிமூனிடம் 196 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த அறிக்கை இப்போது மெல்ல மெல்ல கசிந்து வெளி வருகிறது. அதன்படி இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த இடம், உணவு கூடங்கள், ஆஸ்பத்திரிகள், செஞ்சிலுவை சங்கத்தினர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அனுப்பிய மருந்து கப்பல் மீதும் குண்டு வீசியது அம்பலமாகி உள்ளது.

    ஐ.நா.சபை இந்த அறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.
    இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை ஒரு போதும் செயல்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, ராஜீவ்காந்தி போன்றோர் இலங்கை சென்ற போது கூட அந்நாட்டு அரசு அவர்களை பேச விடாமல் அவமதித்து அனுப்பி உள்ளது.

    ஸ்பெயின், சீனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்தியா மருந்து கப்பலை அனுப்பி உதவிகள் செய்தது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வரவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையை காரணம் காட்டி, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி, விடுதலைக்கு தடையாக இருந்து விட்டனர்.

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக்காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது.

    இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார் சம்பத்.

    டிஸ்கி : எனது பிளாக்குக்கு புத்தம் புது பொலிவூட்டுன அருமை நண்பன் நிரூபனுக்கு, நாஞ்சில் மனோ தளம் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது...நன்றி மக்கா....




    http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger