Wednesday 8 February 2012

பிரதமர் விருந்தில் பங்கேற்க ஸ்ருதிக்கு அழைப்பு

- 0 comments
 
 
 
பிரதமர் மன்மோகன்சிங் ஜப்பானிய பிரதமருக்கு டெல்லியில் விருந்து அளித்தபோது அதில் பங்கேற்க நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தார். 'கொலைவெறிடி' பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானதால் தனுசுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
 
அதுபோல் கமல் மகள் ஸ்ருதியும் பிரதமர் விருந்தில் பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளார். மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி ஸ்ருதிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
 
இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பேரானந்தமாகவும் இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் என்றார்.



[Continue reading...]

நம்பர்-1 ஆக வரவேண்டும்: மதுரையில் விஜய் பேச்சு

- 0 comments
 
 
 
அண்மையில் நண்பன் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மதுரையில் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கும் தங்கரீகல் தியேட்டருக்கு நடிகர் விஜய் இன்று வருகை தந்தார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு நடிகர் விஜய் மன்ற மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தங்கரீகல் தியேட்டருக்கு வந்தார். அவருக்கு தாரை தப்பட்டை முழங்க தியேட்டர் நிர்வாகம் சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் வரவேற்பு அளித்தனர்.
 
இதையடுத்து நடிகர் விஜய் தியேட்டருக்குள் சென்று ரசிகர்கள் முன்னிலையில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டினார். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
 
கேள்வி:- பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
 
பதில்:- பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
 
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விஷயங்களை சொல்ல முடியாது. ஆனால் நண்பர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
 
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
 
கேள்வி:-நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
 
பதில்:- நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
 
கேள்வி:- இந்தியில் அமீர்கான் நடித்த கேரக்டரில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?
 
பதில்- படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.
 
கேள்வி:- 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்?
 
பதில்:- சிம்ரன்.
 
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது. அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



[Continue reading...]

மந்திரிகள் பார்த்த பலான படம் எது?

- 0 comments
 
 
 
 
கர்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் இருவரும் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததாகவும், அந்தப் படத்தை துறைமுகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கிருஷ்ணபாளேமர் இவர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
 
இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் உருவாக்கியுள்ளது. 3 பேரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதையடுத்து 3 பேரும் ராஜினாமா செய்தனர்.
 
 
ஆபாசப்பட விவகாரத்தை விசாரிக்க சட்டப் பேரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை வரும்வரை அவைக்கு வர 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் தடை விதித்து சட்டப் பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா உத்தரவிட்டார்.
 
 
கர்நாடக மந்திரிகள் 3 பேருடைய பதவியை பறித்த சர்ச்சைக்குரிய ஆபாச படம் எது? என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டில் பெண் கற்பழித்து கொலை செய்யப்படும் காட்சியை பார்த்ததாக மந்திரி லட்சுமண் சவதி கூறி இருந்தார்.
 
 
4 நிமிடம் 12 வினாடிகள் ஓடக்கூடிய, அபிக்' என்ற செல்போன் நிர்வாண படத்தை அவர்கள் பார்த்ததாக மற்றொரு தகவல் கூறுகிறது. அந்த செல்போன் மந்திரி கிருஷ்ணபாலேமருக்கு சொந்தமானது. உடுப்பி தீவுத்திருவிழா ஆபாச நடன காட்சிகளும் அந்த செல்போனில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

 


[Continue reading...]

பிப்.28 இல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்

- 0 comments
 

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள வைப்பகங்கள் (வங்கிகள்) தங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இருக்கின்றன. அந்த அறிவிப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ள அந்த அமைப்பு கண்டேல்வால் குழு பரிந்துரைகளைத் தாங்கள் எதிர்ப்பதாகவும், வழக்கமான வைப்பக (வங்கி) பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையைக் கொண்டுவருவது போன்ற மற்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

அன்று இந்தியா முழுவதும் அதில் இடம்பெற்றுள்ள 5 இலட்சம் உறுப்பினர்கள் அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
[Continue reading...]

முதல்ல சூர்யா, இப்ப விஜய், எப்பூடி...

- 0 comments
 
 
 
நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.
 
நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
 
ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.
 
ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.
 
பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது...!



[Continue reading...]

சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்

- 0 comments
 
 
 
கர்நாடக சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல்போனில், ஆபாச படம் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் உற்சாகமாகப் பார்த்தார்.
 
கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம்,எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார்.இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
 
முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில்,


"அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும். அமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்றார்.
 
கர்நாடக அமைச்சர் லட்சுமண் சவதி குறிப்பிடுகையில்,


"மொபைல் போனில் ஆபாச படம் எதுவும் பார்க்கவில்லை. அதை பார்த்ததில் தவறு எதுவுமில்லை. என்னிடம் இருந்தது என் மொபைல் போனல்ல. நான் பார்த்தது, டாக்குமெண்ட்ரி படம். இதை ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் என்று கூறுவது சரியல்ல. அமைச்சர் கிருஷ்ண பலேமர், இந்த மொபைல் போனை என்னிடம் கொடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதை பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கிருஷ்ண பலேமருக்கு யாரோ அவரது மொபைல் போனுக்கு "எம்.எம்.எஸ்.,' அனுப்பியுள்ளனர்' என்றார்.
 
இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.



[Continue reading...]

மகனுக்கு நயன்தாரா.... அப்பாவுக்கு தாரா!

- 0 comments
 
 
 
ஜீவனாம்சம் கேட்டு டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு எதிராக டான்ஸ் மாஸ்டர் தாரா தாக்கல் செய்த முறையீடு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தாராவுக்கு சமரச மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
 
நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா காதல் விவகாரம் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரைக்கும் வந்தது. இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பைனலாக 'செட்டில்' ஆகவில்லை.
 
இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், திருமணத்துக்கு முன்பு செய்த லீலைகள் வெளிவந்துள்ளன. தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி, பின்னர் திருமணமும் செய்து கொண்ட சுந்தரம், பின்னர் ஏமாற்றிவிட்டுப் போய் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக டான்ஸ் மாஸ்டர் தாரா முறையிட்டிருந்தார்.
 
2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் தாரா இந்தப் புகாரைக் கொடுத்தார். அது சில தினங்களுக்கு முன்புதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது.
 
தன்னையும் தனது மகனையும் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரம் பராமரித்து வந்தார் என்றும் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதில்லை என்றும் புகார் மனுவில் தாரா கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார்.
 
இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் அடிப்படையில் அவர் ஆஜராகவில்லை.
 
அதைத் தொடர்ந்து தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது. இந்த புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
 
கைவசம் எக்கச்சக்க ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் வழக்கு தொடரப் போகிறாராம் தாரா.



[Continue reading...]

பலான படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா

- 0 comments
 
 
 
கட்சி மேலிட உத்தரவின்படி, சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த அமைச்சர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். கர்நாடக சட்டசபையில், பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் ஆபாச படம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து, கட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் ராஜினாமா கடிதத்தை, முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். சட்டசபைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஆபாசபடம் பார்த்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர்.
 
சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார். இந்த விவாதத்தை கவனிக்காமல், அப்போது, மேலே புகார் கூறப்பட்ட அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்.
 
 
இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.



[Continue reading...]

புற்று நோய் தாக்கிய கிரிக்கெட் வீரர்கள்!

- 0 comments
 
 
 
கிரிக்கெட் உலகில் யுவராஜ்சிங் மட்டுமல்ல; மேலும் பல வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அதே நாட்டைச்சேர்ந்த கென் வேட்ஸ்வொர்த், தவே காலகான், டப்டி மான், சைமன் ஓ டனல் ஆகியோரும் ஏதாவது ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
 
இவர்களில் மைக்கேல் கிளார்க், காலகான், ஓ டனல் ஆகியோர் நோயிலிருந்து மீண்டு விட்டனர். மற்ற இருவரும் பலியாகிவிடார்கள். வேட்ஸ் வொர்த் கீப்பராக இருந்தவர். ஒரு தினப் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்த விக்கெட்க் கீப்பர். இவருக்கு தோல் புற்று நோய் தான் இருந்தது. 29 வயதிலேயே இறந்துவிட்டார்.
 
 
 
 
மைக்கேல் கிளார்க்கிற்கு மூக்கில் 2006ம் ஆண்டில் தோல் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு குணம் கிடைத்தது. பின்னர் அவரே தோல் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய பிரச்சார தூதராகவும் செயல்பட்டார்.
 
ஓ டன்ஸ், 1980 களில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். 1987ல் உலககோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல உறுதுணையாக இருந்தார்.
 
இது தவிர சர்பிராங் வொரல், மால்கம் மார்சல், இங்கிலாந்தை சேர்ந்த பிரட் ட்ரூமன், பிரையன் ஸ்டேதம்த்,ராய் பிரடரிக், புத்தி குந்தரன், கிரகாம் டில்லி, பிரையன் லுகுரஸ்ட் மற்றும் இன்சான் அலி ஆகிய வீரர்களும் புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டார்கள். இவர்களில் சிலர் இறந்துவிட்டனர்.
 
மேலும் டேவிட் செப்பேடு என்ற நடுவரும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 68 வயதில் இறந்தார். இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப் பாய்காட்டுக்கு 2002 ம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டது. ஆனால் அவர் குணமடைந்து விட்டார். கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் சில வீரர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்கள்.
 
 
 


[Continue reading...]

சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின்

- 0 comments
 
 
 
ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
 
அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு இருவரும் தயாராகிறார்கள் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
 
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
நான் கேரளாவைச் சேர்ந்த பெண். சம்பிரதாய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது திருமணம் நான் பிறந்த ஊரான கேரளாவில் தான் நடக்கும். என் குடும்ப சம்பிரதாயப்படியே அது நடக்கும். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதில், சல்மான்கானும் ஒருவர்.
 
அவருக்கும் எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சல்மான்கான் என்னை விட வயதில் பெரியவர். அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் கியூவில் வந்து நிற்பார்கள்.
 
சல்மான்கானுக்கும் எனக்கும் நீங்கள் கற்பனை செய்கிற மாதிரி எந்த உறவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் எனது திருமணத்தை பற்றி யோசிப்பேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அசின் கூறியுள்ளார்.



[Continue reading...]

12-மணி நேர மின்வெட்டு...வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

- 0 comments
 
 
 
தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.
 
கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
 
திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.
 
ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.
 
சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.
 
8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை...
 
கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.
 
பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.
 
முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டை' என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.
 
குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.
 
மின்வெட்டு நேரங்கள்:
 
காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.
 
சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம்.
(அரசு அறிவித்துள இந்த மின்வெட்டு நேரங்கள் மக்களை ஏமாற்றவே! எங்கள் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. எப்போது மின்சாரம் போகும் எப்போது வரும் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்களின் அன்றாட பணிகள் கூட முடங்கி போய் உள்ளது. இரவு நேரங்களில் கூட தூக்கத்தை கலைக்கும் 'பேய்' கனவு போன்று மின்வெட்டு உள்ளது.)
சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.
 
தொழில்துறை முடங்கும் நிலை
 
இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.
 
அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!
 
திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

 


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger