Sunday 20 October 2013

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)student rape by teacher

- 0 comments

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)

North Carolina வை சேர்ந்த 49 வயதாகும் David Ellis Edwards என்ற Douglas Byrd நடுத்தர பாடசாலையின் அதிபர், மாணவனை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். 

இவரது அலுவலக வாசலின் முன்னர் அம் மாணவனது பெற்றோர் காத்திருந்த வேளையில், தனது அலுவலகத்தினுள் இவ் வக்கிர செயலை புரிந்துள்ளமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர்மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல மாணவர்களை இவர் துஷ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்றம் இவருக்கு $140,000 பிணை விதித்துள்ளது.

இந் நிலையில்…

Grand Rapids பாடசாலை ஆசிரியை ஒருவர், தன்னிடம் கல்விபயின்ற 15 – 16 வயதுகளுக்கு இடைப்பட்ட நான்கு மாணவர்களை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைதாகியுள்ளார்.

தற்போது பாடசாலையில் இருந்து பதவி நீக்கப்பட்டிருக்கும் இவர், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு 8 – 15 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டணை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

shared via

[Continue reading...]

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

- 0 comments

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

மயிலாடுதுறை, அக்.21–

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வருகை தந்த கட்சியின் தலைவர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை கண்டித்து வருகிற 23ந் தேதி(புதன்கிழமை) குடவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் திரளான விவசாயிகள், கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் 8, 9ந் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தமிழ் தேசிய இயக்க அமைப்பாளர் பழ.நெடுமாறன், நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நரேந்திரமோடி பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் மயம், பொருளாதார கொள்கை மட்டுமே பேசுகிறார்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து இதுவரை பேசவில்லை. கச்சத்தீவில் சீனா முகாமிட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், சாகுல்அமீது, நடராசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

...

shared via

[Continue reading...]

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

- 0 comments

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

புதுடெல்லி, அக்.21-

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

பழைய டெல்லி பகுதியில் உள்ள வாக்காளர்களை நேற்று (ஞாயிறு) வீடுவீடாக சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட அப்பகுதி மக்கள் மின் கட்டணம், குடிநீர் மற்றும் வடிகால் கட்டணங்களை டெல்லி அரசு உயர்த்திவிட்டது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட கெஜ்ரிவால், எங்கள் கட்சியின் ஆட்சி அமைந்தால் உயர்த்தப்பட்ட கட்டணங்களை அனைத்தும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்று வாக்காளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பல பெண்கள் துடைப்பத்தை உயர்த்தி காட்டி வரவேற்றனர்.

அரசியலில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காகவே துடைப்பத்தை என் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தாலும், துடைப்பத்தை உயர்த்தி காட்டி அவரை பெண்கள் வரவேற்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

- 0 comments

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

ஜம்மு, அக்.21-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லையோரம் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 முறைக்கும் மேலாக இதுபோன்ற தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய அளவிலான துப்பாக்கி சூட்டில் மட்டுமே ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தற்போது ராக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லைக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாகிஸ்தானின் அசுர தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

எல்லை பகுதியை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நாளை (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள 5 ராணுவ நிலைகளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்ததாகவும் இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்ததாகவும் ஜம்முவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் 40 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் சுமார் 700 பேர், அடைமழை மற்றும் உறைபனி காலத்தை எதிர்நோக்கி இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக காத்திருப்பதாக நம்பத்தகுந்த உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் தொல்லை kanyakumari express train Ticket Examiner torture chennai woman

- 0 comments

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் தொல்லை kanyakumari express train Ticket Examiner torture chennai woman

திருச்சி, அக். 20–

திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் 22 வயது மகள் நேற்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் தட்கல் டிக்கெட்டில் திருச்சிக்கு பயணம் செய்தார்.

இந்த ரெயில் விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அந்த இளம்பெண் இருந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்களையும், அடையாள அட்டைகளையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது அந்த இளம் பெண்ணிடம் முறையான அடையாள அட்டை ஏதும் இல்லை என்பதால் ரூ.480 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை அருகில் இருந்த சக பயணிகள் தட்டி கேட்டும் அந்த டிக்கெட் பரிசோதகர் கண்டு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் கதறியபடி தனது தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உறவினர் 2 பேரை அழைத்துக்கொண்டு திருச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

இதற்கிடையே அந்த அந்த ரெயிலும் திருச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தது. டிக்கெட் பரிசோதகரின் தொந்தரவால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கதறியபடி ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் தனியாக ரெயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று ஆவேசமாக கூறி அந்த டிக்கெட் பரிசோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில் உள்ள அவரை அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்து போதையில் இருப்பதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். இல்லையென்றால் ரெயிலை இங்கிருந்து நகர விடமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையே ரெயில் மெதுவாக நகர்ந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த பெண் டாக்டர் எந்த சமரசத்துக்கும் நான் உடன்படமாட்டேன். டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி பரிசோதனை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தால் மட்டுமே ரெயிலை இங்கிருந்து நகர விடுவேன் என்று கூறினார்.

திடீர் திருப்பமாக அங்கு வேடிக்கை பார்த்த பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதை தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி ரெயில்வே போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் சுமார் 40 நிமிடம் தாமதமாக 12.10 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

பின்னர் அங்கு வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அந்த இளம்பெண்ணின் தாயாரான டாக்டரும் புகார் எழுதி கொடுத்தார். இந்த நிலையில் அந்த டிக்கெட் பரிசோதகருக்கு ஆதரவாக 50–க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகர் விடுவிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் அங்கிருந்து உறவினர்களுடன் புறப்பட்டார். சுமார் 3 மணி நேரம் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்த பரபரப்பு அதன் பின்னர் அடங்கியது.

இந்த நிலையில் இன்று மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள், நேற்று பிரச்சினையில் சிக்கிய அந்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரெயில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் டிக்கெட் பரிசோதகர்கள் பணிக்கு செல்ல வில்லை. அவர்கள் இல்லாமலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

...

shared via

[Continue reading...]

Gautham Menon teams up with Ajith? - அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

- 0 comments

Gautham Menon teams up with Ajith? - அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

ஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர்பெற்ற கௌதம் மேனனுக்கு, மறுபடியும் நல்ல நேரம் வந்திருக்கிறது.

அஜித், சூர்யா என்று ஒவ்வொருவராக கௌதம் படத்தில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்து, பின் கழன்று கொண்டனர். இப்போது மீண்டும் கௌதம் படத்தில் நடிக்க முன்வருகிறார்களாம்.

சூர்யா தான் வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தந்தார். ஆனால், இந்த உறவு பிரியாது. மீண்டும் கௌதமுடன் இணைவேன் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

'அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தக்கொருத்தர் மரியாதை இருக்கு ' என்று ஒரு இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

கௌதம் மேனனை மனதில் வைத்துதான் சூர்யா இதைப் பேசினார் என்பது விஷயம் அறிந்தவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

இப்போது அஜித் கௌதம் படத்தில் நடிக்க இருக்கிறார். 'வீரம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன்தான் இயக்கப் போகிறார்.

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger