Sunday 28 August 2011

சினி மாலா......!!!

- 0 comments


குடும்ப உறவுகளையும் பாசத்தையும் தூக்கி நிறுத்தி வெற்றி கண்ட படம், , மாயாண்டி குடும்பத்தார், இந்த படத்தை தயாரித்த சாமு சிவராஜ் தனது நண்பர் கல்கியுடன் இணைந்து, கண்டுபிடி கண்டுபிடி என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

இதில் கதை நாயகனாக சீமான் நடிக்கிறார், இவருடன் கேரளா அழகி ஐஸ்வர்யா தேவன், டிவி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்நாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தைப்பற்றி டைரக்டர் ராம் சுபராமன் கூறியதாவது -
முழுக்க முழுக்க கிராமத்தில நடந்த நகைச்சுவை கலந்த திகில் படமாகும், கதை இப்படித்தான் நகரும் என்று யாரும் ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாதவாறு இருக்கும்.....


தமிழ் பட உலக பிரபலங்களில், மிகவும் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் மூன்றே மூன்று பேர், ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் வைத்திருக்கும் காரின் பெயர் "ஹம்மர்"!


கதாநாயர்களையும், டைரக்டர்களையும் கைக்குள் போட்டுக்கொள்கிற கதாநாயகிகள் பட்டியலில் இப்போது புதுசாக இணைந்திருப்பவர், அமலா பால் [[சிபி'யின் கவனத்திற்கு]] இவருடைய வலையில் ஒரு தெலுங்கு டைரக்டரும் சிக்கி இருக்கிறார்....




சுரேந்தர் என்ற அந்த தெலுங்கு டைரக்டர் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து, ஒரு புதிய தெலுங்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்க்காகவே, ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் "3" படத்தை தியாகம் செய்திருக்கிறார் அமலா பால்...!!!


சினேகா இது வரை ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார், முதன் முதலாக அவர் அழகு சாதன பொருட்களின் விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்...




இந்த விளம்பர படத்தை டைரக்ட் செய்தவர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண்..!!! இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், அந்த அனுபவத்தை வைத்து விளம்பர படத்தை இயக்கினாராம்...!!!


களவாணி படத்தை இயக்கிய சற்குணம், நல்ல குரல் வளம் கொண்டவர், பிடித்த பாடல்களை சத்தம் போட்டு பாடுவார், இப்போது இவர் டைரக்ட் செய்துள்ள "வாகை சூடவா" படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன, 




இந்த ஐந்து பாடல்களையும் மனப்பாடமாக வைத்து இருக்கிறார் சற்குணம், அவரை தேடி செல்பவர்களை உட்கார வைத்து ஐந்து பாடல்களையும் பாடி காட்டுகிறார் சற்குணம்...!!!







http://tamil-cininews.blogspot.com




  • http://tamil-cininews.blogspot.com


  • [Continue reading...]

    ரெண்டெழுத்து நட��கரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் ���ுடைச்சல்!

    - 0 comments



    ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… 'பசு' நடிகராலும் குடைச்சல்!

    நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் கமலிடம் அவரது பேரப்பிள்ளை கேட்குமே, அப்படிதான் கேட்க வேண்டியிருக்கிறது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை! ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ் சினிமா இப்போ நல்லாயிருக்கா, இல்லையா?

    ஆமாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க, பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதிலும் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் பாடு சர்வ பேதி!

    கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த கைதுகளால் பைனான்ஸ் கிடைப்பதில்லையாம் முன்பு போல. அதுவும் பிரதர்ஸ் இருவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் பணம் வரும் வழிகளில் எல்லாம் அடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். மதுரை ஏரியாவில் வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள்தான் வாங்கி வெளியிடுவார்கள். இந்த ஒரு பெரிய ஏரியாவின் வியாபாரமும் முடக்கம் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள் இப்போது.

    அரவத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்த இரண்டெழுத்து ஹீரோ திடீரென்று சம்பளத்தை எண்ணி வைச்சாதான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடிக்கிறார். இவரை பார்த்து பசுவான இன்னொரு ஹீரோவும் முரண்டு பிடிக்க, செய்வதறியாது தவிக்கிறதாம் படக்குழு.

    ஒருபுறம் பல பைனான்சியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நல்லவேளையாக யூடிவி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட முன் வந்திருப்பதால் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறது திரையுலகம்.

    ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…


    http://tamil-cininews.blogspot.com




  • http://tamil-cininews.blogspot.com


  • [Continue reading...]

    மாறிவிட்டது தமி��் புத்தாண்டு : மா���ுமா தமிழ் ஆண்டு��ள்?

    - 0 comments



    தமிழ் புத்தாண்டு, மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாறியுள்ளது. கடந்த தி.மு.., ஆட்சியில், "தை' முதல் நாளை, தமிழ் புத்தாண்டு என மாற்றி கொண்டு வரப்பட்ட சட்டம், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.., ஆட்சியின் போது, சட்டத்தின் மூலம், புத்தாண்டில் மாற்றம் கொண்டு வந்ததில், எந்த சட்ட விரோதமும் இல்லை என, ஏற்கனவே ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த தி.மு.., ஆட்சியில், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்து, 2008ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு, அப்போது ஒரு நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூரிலுள்ள சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில், சித்திரைத் திருநாளில், அதாவது ஏப்., 13 அன்று சிறப்பு வழிபாடு நடத்த, தமிழ்நாடு முருக பக்த பேரவை சார்பில் கோரப்பட்டது. இதற்கு, கோவில் நிர்வாக அதிகாரி மறுத்து விட்டார். சிறப்பு பூஜைக்கு அனுமதி மறுத்ததால், அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு முருக பக்த பேரவை சார்பில், வழக்கு தொடரப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில், சிறப்பு வழிபாடு நடத்த அனுமதி மறுத்தது, அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும், சித்திரை முதல் நாளில், சிறப்பு வழிபாடு நடத்துவது, இந்து சமய நடைமுறை என்றும், மனுவில் முகாந்திரங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கை, நீதிபதி சந்துரு விசாரித்தார். ஒரு ஆண்டில் எந்த நாளிலும் பூஜைகள் நடத்த, முருக பக்த பேரவைக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதி, ஆனால் இந்தப் பிரச்னைக்கு, சமய சாயம் கொண்டு வர முயற்சிப்பது, துரதிர்ஷ்டவசமானது என, சுட்டிக் காட்டினார்.

    மேலும், தமிழ் காலண்டரில் உள்ள குறைபாடுகளையும், தனது உத்தரவில் நீதிபதி சந்துரு சுட்டிக் காட்டியுள்ளார். அவரது உத்தரவில், "தமிழ் காலண்டரில் உள்ள, 60 ஆண்டுகளின் பெயர்களில் சமஸ்கிருத பெயர்கள் காணப்படுகிறது. இது எப்படி வந்தது என்பதை, இதுவரை அறிஞர்கள் யாரும் விளக்கவில்லை. இதுகுறித்த வாதம் முடிவில்லாமல் செல்கிறது.

    சலிவாகனா, ஹிஜிரி, கிறிஸ்தவ, சகா என, வெவ்வேறு காலமுறைகளை தமிழ்நாடு பின்பற்றியுள்ளது. எனவே, காலண்டரை மாற்றுவது என்பது அரசைப் பொறுத்தவரை புதிதல்ல. அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு, சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும் வரை, மத அடிப்படையில் அதை கேள்வி எழுப்ப முயற்சிப்பதை ஏற்க முடியாது' என கூறியுள்ளார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்க, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும் போது, தமிழ் காலண்டரை பின்பற்றலாம் என்றும், சட்டத்தின் மூலம் தமிழ் புத்தாண்டில் மாற்றம் கொண்டு வந்ததில், எந்த சட்டவிரோதமும், அரசியலமைப்புக்கு எதிரானதும் இல்லை என்றும் நீதிபதி சந்துரு தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில், அரசுக்கும் ஒரு பரிந்துரையை நீதிபதி அளித்துள்ளார். தமிழ் காலண்டரிலுள்ள, 60 ஆண்டுகள் குறித்த, சமஸ்கிருத பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றுவதற்கு, பரிந்துரைகளை செய்ய நிபுணர் குழுவை, அரசு நியமிக்கலாம் எனவும் உத்தரவில் கூறியுள்ளார். தற்போது, தமிழ் புத்தாண்டு, சித்திரை என தமிழக அரசு மாற்றியுள்ளது. கடந்த தி.மு.., ஆட்சியில் கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமானது, நடைமுறைக்கு மாறாக உள்ளது என, தொல்பொருள் அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும், பொது மக்களும் கூறுவதால், இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சட்டத்தை கொண்டு வந்த அரசுக்கு, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. ஐகோர்ட் பரிந்துரைப்படி, தமிழ் காலண்டரில் உள்ள சமஸ்கிருத பெயர்களை, தமிழ் மொழியில் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்குமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.





    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    முதலில் யாருக்க�� தூக்கு?

    - 0 comments



    வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்படும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


    தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


    கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.
    பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. .ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி..ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.


    28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.


    வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.
    ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.


    தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.


    தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர். 25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.





    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    அன்னா ஹசாரே மேற்���ொண்ட உண்ணாவிரத ��ோராட்டம் வெற்றி : உண்ணாவிரதம் வாபஸ் ஆகிறது?

    - 0 comments


     அன்னா ஹசாரே விதித்த நிபந்தனைப்படி லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    அன்னா ஹசாரே டெல்லியில் இன்று 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது நிபந்தனைப்படி லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்து வருகிறது.

    இந் நிலையில் லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை இன்று காலை விதித்தார் ஹசாரே.

    இல்லாவிட்டால், லோக்பால் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன். என்னால் இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட உண்ணாவிரதம் இருக்க முடியும்' என அன்னா ஹஸாரே கூறிவிட்டார்.

    இதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதில் சிக்கல் எழுந்தது.
    இதற்கிடையே அன்னா ஹசாரேயின் உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமானது. அவரது இதய துடிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதையடுத்து அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பபார்க்கப்பட்டது. ஆனால் அன்னா ஹசாரே தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். நேற்று எதுவும் பேசாமல் அமைதியாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இன்று காலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். 

    அவர் கூறுகையில், "ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை எனது போராட்டம் தொடரும். என்னால் இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கூட உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எதுவும் ஏற்பட்டு விடாது. எனது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவேன். 

    தனிப்பட்ட நலன் அல்ல...
    லோக்பால் நிறைவேறும் வரை எனது மூச்சு ஓயாது. எனது தனிப்பட்ட நலனுக்காக நான் இந்த போராட்டத்தை நடத்த வில்லை. அப்படி சுயநலத்தோடு செய்து இருந்தால் 5 நாட்களில் அது முடிந்திருக்கும்.

    எனவே லோக்பால் நிறைவேறும் வரை எனது போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறேன். 

    நாடு முழுவதும் மக்கள் கொடுக்கும் ஆதரவு எனக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது. எனவே எதற்கும் நான் அஞ்சுவதாக இல்லை. பின்வாங்கவும் மாட்டேன். 

    சாதாரண என்னை போன்ற ஒருவருக்கு நாடு முழுவதும் இத்தகைய ஆதரவு கிடைத்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கடவுள் என்னை கைகாட்டி இருப்பதால் இதை செய்கிறேன். கடவுள்தான் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்," என்றார்.

    இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்றும் தொடர்ந்து பேச்சு நடத்தினார். அன்னா தரப்பு மிகவும் பிடிவாதம் பிடித்ததால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என மத்திய அரசு திடீரென ஒப்புக் கொண்டது.

    இதை அன்னா ஹசாரே தரப்பும் வரவேற்றது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்குமாறு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தங்களது எம்பிக்களையும் கூட்டணிக் கட்சி எம்பிக்களையும் கேட்டுக் கொண்டுள்ளன.

    இதையடுத்து முதலில் ராஜ்யசபாவிலும் பின்னர் லோக் சபாவிலும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு நடத்தும் என்று தெரிகிறது.

    இந்த குரல் வாக்கெடுப்பு நிறைவேறியவுடன் அந்த தீர்மானத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு அதை அன்னா ஹசாரேவிடம் தர மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானம் செல்கிறார்.

    இதையடுத்து அன்னா ஹசாரே இன்றிரவே தனது உண்ணாவிரதத்தைக் கைவிடும் முடிவை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

    ஆனால், இதையும் மீறி ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் இன்று இரவில் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசுத் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெட���க்காதீங்க! : ஹசாரே ஆவேசம்

    - 0 comments



    "தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்த தேர்தலில் ஓட்டளிக்கும்போது, இது போன்ற உதவாக்கரை நபர்களை மீண்டும் எம்.பி.,க்களாக மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே பேசினார். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும், அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதிக்கு பின், அவர் மேடையில் பேசவில்லை. நேற்று, அவர் மேடையில் பேசுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும், நேற்று காலை 10 மணிக்கு, அன்னா ஹசாரே மேடைக்கு வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், "பாரத் மாதா கி ஜே' என, குரல் எழுப்பினர்.

    இதைத் தொடர்ந்து, அன்னா ஹசாரே பேசியதாவது: என்னுடைய சுயநலனுக்காக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, உண்ணாவிரதம் இருக்கிறேன். பலமான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறும் வரை, என் போராட்டம் தொடரும். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை, என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த போராட்டத்துக்கு மக்கள் தரும் ஆதரவு, எனக்கு பெரும் சக்தியை அளித்துள்ளது. கடைசி மூச்சு உள்ளவரை போராட்டம் நடத்துவேன். நான் சாதாரணமான நபர். எனக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, ஆச்சர்யம் அளிக்கிறது. மக்களுக்காக பணியாற்றும்படி, கடவுள் தான் என்னை தேர்வு செய்துள்ளார். தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன.

    இப்படிப்பட்ட உதவாக்கரை எம்.பி.,க்களை, அடுத்த தேர்தலில், மக்கள் தேர்வு செய்யக்கூடாது. எம்.பி.,க்களிடம் மக்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை. நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்வு செய்யாதீர்கள் என, மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். மக்கள் சக்தி, எம்.பி.,க்களின் சக்தியை விட அதிகம். மக்களுக்கு சேவை செய்பவர்கள், ஒழுங்காக சேவை செய்யாவிட்டால், மக்கள் அவர்களை தூக்கியெறிந்து விடுவர். இவ்வாறு ஹசாரே பேசினார்.




    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    மிஸ்டு கால் (வி)ந��யகரே!

    - 0 comments



    ஆகஸ்ட் 27, 2011 தினத்தந்தி பக்.17 சென்னை


    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    இந்தியன் ‘தாத்த��’வும், அன்னா ஹஸா��ேவும்!

    - 0 comments


    ஊழல் இல்லா இந்தியா என்ற 'இந்தியன் தாத்தா' சேனாபதியின் கனவு 15 ஆண்டுகள் கழித்து நனவாகியுள்ளது-இன்னொரு தாத்தா அன்னா ஹஸாரேவின் மூலம்.

    ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம் இந்தியனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் வரும் இந்தியன் தாத்தாவை நினைவுபடுத்துவதாக உள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டம்.

    அன்னா ஹஸாரே இந்தியன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார்? இதுதான் இந்தியன் படத்தைப் பார்த்துச் சிலாகித்த, ஏங்கிய பலருக்குள்ளும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கும். காரணம், இந்தியன் படத்தின் இந்தியன் தாத்தா கேரக்டருக்கும், அன்னா ஹஸாரேவுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள்.

    கிட்டத்தட்ட இந்தியன் தாத்தா சேனாபதியைப் போலவே அமைந்துள்ளது அன்னா ஹஸாரேவின் போராட்டமும்.

    இந்தியன் படத்தில் ஊழல் இல்லாத இந்தியா அமைய சேனாபதி தனி மனிதராகப் போராடினார். லஞ்சத்திற்கு அடிமையாகி விட்ட தனது மகனைக் கூட கொல்லத் துணிந்தவர் அந்த சேனாபதி என இந்தியன் படத்தின் கதை வரும்.

    இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் கழித்து நிஜத்தில் ஒரு இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து வந்திருக்கிறார் அன்னா ஹஸாரே. இதை ஷங்கரும், கமலும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த படத்தில் இந்தியன் தாத்தா வந்த பிறகு லஞ்சம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அதிகாரிகள் எல்லாம் உயிருக்கு பயந்து லஞ்சம் வாங்க பயப்படுவது போல காட்சி அமைந்தது.

    தற்போது நிஜத்தில் லஞ்சம், ஊழலில் ஊறிப்போயிருந்தவர்களை எல்லாம் நடுநடுங்க வைத்துள்ளார் அன்னா. யாராவது அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நான் அன்னா ஆதரவாளர் என்னிடமா லஞ்சம் கேட்கிறாய் என்று மக்கள் தைரியமாகச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

    இதன் மூலம் ஊழலில்லா இந்தியா என்ற கனவு நனவாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியன் கதைக்கும், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் இந்தியன் படத்தின் கதையைப் பார்த்து ஏங்கியவர்களுக்கெல்லாம் இன்று சரியான வடிகாலாக வந்து சேர்ந்துள்ளார் 'தாத்தா' ஹஸாரே.

    கமல்ஹாசனும் சரி, இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கரும் சரி, எதிர்காலத்தில் இப்படி ஒரு கேரக்டர் வரும், இந்தியாவை உலுக்கியெடுக்கும் என்று நிச்சயம் கணித்திருக்க மாட்டார்கள். அது ஒரு தற்செயலான நிகழ்வுதான். ஆனால் இன்று அன்னா வந்திருப்பதைப் பார்த்து அத்தனை பேர் மனதிலும் இந்தியன் தாத்தாதான் நிழலாடுகிறார்.

    உண்மையில், 1960களிலேயே லோக்பால் மசோதா குறித்து பேச்சுக்கள் இருந்தன. இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தியன் தாத்தா கேரக்டரை உருவாக்கினார் ஷங்கர். அந்தக் கேரக்டராக வாழ்ந்ததோடு, அத்தனை பேர் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு நிஜ கேரக்டர் வராதா என்ற ஏக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது கமல்ஹாசனின் நடிப்பு.

    இன்று நிஜமான இந்தியன் தாத்தாவாக உருவெடுத்து நிற்கிறார் அன்னா ஹஸாரே.

    தான் அன்று திரையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இன்று நிஜத்தில் நிகழ்த்தி வரும் அன்னாவைப் பார்த்து கமல்ஹாசன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

    இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து ஊழல்வாதிகளும், லஞ்சதாரிகளும் அரண்டு ஓடினர். இன்று அன்னாவைப் பார்த்து லஞ்ச, ஊழல் பேர்வழிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன ஒரு ஒற்றுமை!

    1996-ம் ஆண்டு ஷங்கர் படத்தில் இந்தியன் தாத்தாவைப் பார்த்து இப்படி ஒருவர் நிஜத்திலும் வரமாட்டாரா என்று ஏங்கிய மக்களுக்கு, 15 ஆண்டுகள் கழித்து நிஜ இந்தியன் தாத்தாவாக வந்துள்ளார் அன்னா ஹஸாரே என்பது பெரும் ஆச்சரியரகரமான ஒற்றுமைதான்.



    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    தடம் மாறிய தமிழ்���்படங்கள் 1

    - 0 comments


    திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள்.
    பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்தன.
    பாடல்களின் ஆதிக்கத்திலிருந்த தமிழ் சினிமாவை வசனம் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது. அவ்வப்போது ஊறுகாய் போன்று கவர்ச்சி நடனங்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற தொடங்கின. கவர்ச்சி நடனங்களை ரசிகர்கள் வரவேற்றதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு மவுசு கூடியது. இன்று கவர்ச்சி நடிகையின் இடத்தை கதாநாயகி கனகச்சிதமாக செய்து முடிக்கிறார்.
    வெண்ணிற ஆடை, அவள் போன்ற படங்கள் ஏ சான்றிதழுடன் வயதுக்கு வந்தவர்களுக்கு என்ற குறிப்புடன் வெளிவந்தன. இன்று வெளியாகும் அநேக படங்கள் ஏ சான்றிதழ் இல்லாது பாலியல் வக்கிரங்களுடன் வெளியாகின்றன. நகைச்சுவை என்ற போர்வையில் இரட்டை அர்த்தம் கொண்ட பாலியல் வசனங்கள் எதுவித கூச்சமும் இன்றி பேசப்படுகின்றன. அதைக் கைத்தட்டி ரசிப்பவர்களும் உள்ளனர்.
    படங்கள் மட்டுமல்ல பாடல்களும் தடம் மாறிப் போயுள்ளன. கீர்த்தனைகள், பக்தி பாடல்கள் மறைந்து பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் பாடல்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட மோசமான பாடல்களை வானொலிகளும், தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டு விளம்பரப்படுத்துகின்றன.
    மன்மதலீலையை வென்றவர் உண்டோ என்ற பாடலை அந்த காலத்தில் முணு முணுக்காதவர்கள் யாருமில்லை. அந்தக் கால இளைஞர்களின் தேசிய கீதமாக அப்பாடல் போற்றப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பாடலை கேட்கும் முதியவர்கள் அந்த நாள் ஞாபகத்தில் மூழ்கி வருகிறார்கள்.
    வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ, நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே போன்ற பாடல்களில் கொஞ்சம் புகுந்து ஆராய்ந்தால் செக்ஸ் பின்னப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் அந்தப் பாடல்களை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. வாராயென் தோழி வாராயோ என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளை ஆக்கிரமித்துள்ளது.
    நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே, சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா போன்ற அப்பட்டமான செக்ஸ் பாடல்கள் இன்று எதுவித தடையுமின்றி காற்றிலேயே மிதந்து வருகின்றன. பாலியல் வக்கிரங்கைளத் தூண்டும் காட்சிகளை வெட்டி எரியும் தணிக்கைக்குழு இப்படிப்பட்ட பாடல்களில் கைவைப்பதில்லை.
    விஜயலக்க்ஷ்மி, சி.ஐ.டி சகுந்தலா, ஆலம், சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் ஆடுவதற்காகவே ஒப்பந்தங்கள் செய்யப்படுவார்கள். கிளப்டான்ஸ் வில்லனின் பாசரையில் ஒரு கவர்ச்சி நடனம் மட்டும் அந்த காலப் படங்களில் இடம்பெறும். இன்றைய நாயகிகள் பாடங்களில் போட்டிப் போட்டு கவர்ச்சியை காட்டுகிறார்கள். அதேவேளை பொது வைபவங்களிலும் கவர்ச்சி உடையில் தோன்றி பரபரப்பூட்டுகிறார்கள். முன்னால் முதல்வர் கருணாநிதி கலந்துக் கொண்ட வைபவத்தில் கலந்துகொண்ட கதாநாயகி கவர்ச்சி உடையில் வலம் வந்தால் பெரிய சர்ச்சை எழுந்தது.
    தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் சிந்து பைரவி சிறந்த கதை, நல்ல நடிப்பு, மனதில் நிறைந்த பாடல்கள் முணு முணுக்க வைக்கும் இசை, தேசிய விருது என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட படம். பாலசந்தர், ஜேசுதாஸ், இளையராஜா, வைரமுத்து, சித்ரா, சிவகுமார், சிஹாசினி, சுலக்ஷனா இவர்களில் யார் சிறந்தவர் என்ற பட்டிமன்றம் வைத்தால் முடிவு சொல்வது மிக கடினம். பிரபல இசை மேதை ஜே.கே.பி யின் பாலியல் பலவீனம் என்ற ஒரு வரிக்கதையை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிபெற்ற சங்கராபரணத்தின் நிலையும் இதுதான்.
    கலை, கலாசாரம் என்ற வரம்பை உடைத்து வெளிவந்த ஒரு சில தமிழ்ப்படங்களைப் பற்றிய தகவல்களை மித்திரன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கம்.
    மித்திரன் 28/08/11


    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger