Saturday 7 September 2013

சாமியாரின் மகன் நாராயண் சாய் மீதும் ஒரு பெண் செக்ஸ் புகார் Woman molested complaint on Asaram son

- 0 comments

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி:
அசாராம்பாபு மகன் மீதும் பெண் செக்ஸ்
புகார் Woman molested complaint on Asaram
son

இந்தூர், செப். 8–
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்
ஆசிரமத்தில் 15
வயது பெண்ணை கற்பழித்ததாக
சாமியார்
அசாராம்பாபு கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். இந்த நிலையில்
சாமியாரின் மகன் நாராயண் சாய் மீதும்
ஒரு பெண் செக்ஸ் புகார்
கூறியுள்ளார்.
நாராயண்சாய் இந்தூரில் உள்ள
ஆசிரமத்தில் தங்கியுள்ளார். தன்
தந்தை இல்லாத நேரங்களில் அங்குள்ள
சீடர்களுக்கு இவர் உபதேசம்
செய்வது உண்டு. இந்த நிலையில்
இந்தூரைச் சேர்ந்த பெண் நாராயண்சாய்
மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
நாராயண் சாய் என்னை பல வழிகளில்
ஏமாற்றி மோசடி செய்துள்ளார். 2004–ம்
ஆண்டு ஆசிரமத்துக்கு வந்திருந்த
நாராயண் சாய் அங்கு தங்கி இருந்த
என்னை தனது சீடர் ஒருவரை திருமணம்
செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
வேறு வழியின்றி அவரை திருமணம்
செய்தேன்.
ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்
என்பதும்
விவாகரத்து பெறவில்லை என்பதும்
தெரிய வந்தது. இதுபற்றி நாராயண்
சாயிடம் புகார் செய்தேன். அவர்
அதை கண்டு கொள்ளவில்லை.
என்னையும் பாலியல் பலாத்காரம்
செய்ய முயன்றார்.
நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லக்
கூடாது, சொன்னால்
கொலை செய்வேன் என்று மிரட்டல்
விடுத்தார்.
அவரது செல்வாக்கு காரணமாக
அப்போது நான் புகார் செய்யவில்லை.
இப்போது சாமியாருக்கு எதிராக
மாணவி புகார் செய்ததால் நானும்
தைரியமாக வந்து இந்த
புகாரை அளித்துள்ளேன்.
இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து அசாராம் மகனும்
கைது செய்யப்படலாம் என
கூறப்படுகிறது.

[Continue reading...]

ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற மிக்க சந்தோஷம்: பிரதமர் மன்மோகன் சிங் PM Singh Will be very happy to work under Rahul s leadership

- 0 comments

பிரதமர் மன்மோகன் சிங் (80), ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட அவர் விமானத்தில் பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க ராகுல் காந்தி எதிர்பார்க்கப்படுகிற நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு மன்மோகன் சிங் பதில் அளித்து பேசினார்.
>
> அப்போது ராகுல் குறித்து அவர் கூறியதாவது:-
>
> வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரசில் பணியாற்றுவதில் மிக்க மகிழ்சி அடைவேன்.
>
> அரசியலில் எந்த ஒரு கட்சியும் நிரந்தர எதிரியாகவும் நிரந்தர நண்பனாகவும் இருந்ததில்லை. அப்படியிருக்கையில் கூட்டணி குறித்து எந்த கட்சியையும் நான் புறந்தள்ளவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்த்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறோம்.
>
> ஒத்த சிந்தனையுடைய, மதசார்பற்ற மக்களின் நலனுக்காக  நாட்டில் மதசார்பற்ற கட்சியான காங்கிரஸ் மீண்டும் பணியாற்ற விரும்புகிறது.
>
> இவ்வாறு அவர் கூறினார்.

[Continue reading...]

பாகிஸ்தானில் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு: பொதுமக்கள் 9 பேர் பலி Gunmen kill nine people in northwest Pakistan

- 0 comments

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
>
> இந்நிலையில் பெஷாவர் அருகே மட்டானி என்னுமிடத்தில் சென்ற பேருந்து மற்றும் இரு வாகனங்களை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களில் சென்ற பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
>
> அப்போது துப்பாக்கி சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.
>
> கடந்த 10 வருடங்களில் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
>
> பெஷாவர் பகுதியிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் தான் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.  

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger