Wednesday 22 February 2012

துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த பிரபல நடிகை கைது

 


துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடிகை சோபனாவிடம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். பின்னர் உல்லாசமாக இருக்க சோபனா கேட்ட தொகையுடன் சோபனா சொன்ன இடத்துக்கு மாறுவேடத்தில் போலீசார் சென்றனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து துணை நடிகைகள் இருவர் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை கைது செய்தனர். இதையடுத்து சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger