Friday 17 February 2012

திவ்யாவின் திடீர் பாசம்!

- 0 comments
 
 
இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந்திருப்பதால் இருவர் பற்றியும் கிசுகிசு கிளம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாதவன்' உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. இவர் வெளிநாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டனர். இந்நிலையில் 'லக்கி' என்ற படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ் என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில் ரீதியான நடிகர். சாந்தமானவர்.
எளிமையானவர். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரைப்போல் அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு நடிகரை இதுவரை பார்க்கவில்லை. சில சமயம் உணவைக்கூட பொருட்படுத்தாமல் நடிப்பில் கவனமாக இருப்பார். கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே ஒத்திகை பார்த்துக்கொள்வார். நாங்கள் பேச வேண்டிய வசனங்களை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார். மற்றவர்களின் தொடர்ச்சி வசனங்கள் பற்றியும் அவருக்கு ஞாபகம் இருக்கும். சுயநலமற்ற நடிகர். அவரைப் பற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. யாஷ் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்னுடைய பெரிய அரவணைப்பு" என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார் திவ்யா. இதற்கு பதில் அளித்துள்ள யாஷ், 'திவ்யா திரையுலகில் அனுபவம் உள்ளவர். 2 மணி நேரம் செல் போனில் பேசிக்கொண்டிருந்தாலும் காட்சியை சொன்ன நிமிடத்தில் சரியாக நடித்து முடிக்கும் திறமை உள்ளவர்" என்று தன்பங்குக்கு ஐஸ் வைத்திருக்கிறார். இருவரும் ஒருவருக் கொருவர் ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு புகழ்ந்திருப்பதால் அவர்களை இணைத்து கிசுகிசு கிளம்பி இருக்கிறது.
[Continue reading...]

கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா?

- 0 comments
 

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாலிவுட்டில் நெடுங்காலமாக காதலர்களாக வலம் வந்த நடிகை கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் கரீனா கர்ப்பமாக இருப்பதால் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் கரீனா லூஸான பச்சை நிற டிசர்ட் அணிந்து லேசாக வீங்கியது போல் இருந்த வயிற்றை துப்பட்டாவால் மறைத்தபடி சென்றார். அதை ஒரு புகைப்படக்காரர் கிளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டார். கரீனா கர்ப்பம் என்பதை அவரது தரப்பினர் மறுத்தனர்.

இந்நிலையில் இம்ரான் கானுடன் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த கரீனா பயங்கர லூஸான டாப் அணிந்து வந்துள்ளார். பாலிவுட்டில் சைஸ் ஜீரோவில் உள்ள கரீனா கபூர் எதற்காக லூஸான உடை அணிய வேண்டும். வயிறு எதற்காக வீங்கியது போல் இருக்கிறது என்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

சைப்ரீனாவின் நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதியும், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாணமான பின்னர் கர்ப்பமாவது எல்லாம் இப்போது பழையை ஸ்டைலாகி விட்டது. பல பிரபலங்கள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து விடுகிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கல்யாணத்தை வைத்துக் கொள்கிறார்கள்.

[Continue reading...]

கையைப் பிடிச்சு இழுத்தியாடா..?

- 0 comments
 
 

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் "கையைப் பிடிச்சு இழுத்தியாடா?"
என்னும் நகைச்சுவையைப் பலரும் பார்த்திருப்பீர்கள்..

இந்த நகைச்சுவையைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் சங்ககால நகைச்சுவைக் காட்சி இதுதான்..


 


நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்


[Continue reading...]

என் மகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க... இயக்குனர்களிடம் ஈகோ பார்க்காத கேப்டன்!

- 0 comments
 
 
 
அரசியல் பரபரப்பிலும் தன் இரண்டாவது மகனை ஹீரோவாக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் விஜயகாந்த். அதற்கான கதையை முடிவு செய்வதில் தீவிர டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். ஆர்.கே.செல்வமணி உட்பட இதுவரை இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் கதை கேட்டிருக்கிறாராம் கேப்டன்.
 
 
தன் வாரிசு அறிமுகமாகும் முதல் படமே அமோக வெற்றிபெற வேண்டும் என்பது கேப்டனின் ஆசையாம். நல்ல கதைக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்பது தான் பையனுக்கு கேப்டன் தரும் அட்வைஸாம்.
 
இப்படி தான் கதை கேட்டு வரும் காலகட்டத்தில், சண்முக பாண்டியனை சும்மா இருக்க விடாமல் தினமும் நீச்சல், குதிரை ஏற்றம் மற்றும் பலவிதமான சண்டைப் பயிற்சிகளை தனக்கு மிகவும் நெருக்கமான மாஸ்டர்களை வைத்து கற்றுத்தர வைக்கிறாராம்.
 
கதை சொல்ல தேடி வருகிற டைரக்டர்கள் மட்டுமின்றி, சில முன்னணி டைரக்டர்களிடம், சற்றும் ஈகோ பார்க்காமல் என் பையனுக்கு ஒரு நல்ல கதை இருந்தா, படம் பண்ணி ஒரு அறிமுகத்தைக் குடுங்க சார் என்று கோரிக்கையும் வைக்கிறாராம் கேப்டன்.
 
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு தளபதி தயாராகி வருகிறார் போலிருக்கே!



[Continue reading...]

ஈழத் தமிழர்களுக்காக‌ சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல்

- 0 comments
 
 
 
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடந்து விடக்கூடாது என்பதுதான் இன்றுவரை எம்மினம் நினைப்பது. அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது.
 
ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம்.
 
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது.
 
புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவலைகளுடன் வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்களுக்கு இப் பாடல் வரிகள் கண்ணீரைப் பரிசளித்திருக்கும்.
 
அதிலும் இப் பாலகி தனது நாடு, ஊர், வீடு என்பதைக் கண்டிருக்க அவரின் வயது இடமளித்திருக்காது. இருந்தும் பெற்றோர்களின் தேசப்பற்றுதான் இச் சிறுமியின் மனத்திலும் ஆழப் பதிந்திருந்தாலும் அந்த உணர்வு யாரும் சொல்லிக் கொடுத்து வந்து விடுவதில்லை.
 
எமது இனத்தின் போராட்ட சுவடுகளை அழித்து விட நினைக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை ஒருபோதும் பலித்து விடாது என்ற நம்பிக்கையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது ஏனெனில் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் சிங்கள வெறியர்கள் சூறையாடிவரும் எமது தேசத்தின் வளங்களிலும் எமது பாரம்பரியத்திலும் மட்டுமல்லது ஒவ்வரு தமிழன் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.
 
எனவே இப் பற்றாளர்கள் இருக்கும் வரை நிச்சயம் நாம் நிம்மதி பெறுவோம். அதனைத்தான் இந் நிகழ்ச்சியின் நடுவர்களும் எடுத்துக் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வினை வேறு தொலைக்காட்சி நிறுவனங்களாக இருந்திருந்தால் கண்டிப்பக அனுமதித்து இருக்கமாட்டர்கள் அந்தவகையில் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கும் இடமளித்த விஜய் டிவி க்கும் நிகழ்ச்சி அனுசரனையாலர்களுக்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
[Continue reading...]

இதுவரை வெளிவராத வித்யாபாலனின் Hot Video

- 0 comments
 


இதுவரை வெளிவராத வித்யாபாலனின் Hot Video

15th February 2012 11.48PM
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள்
இவரை எவ்வாறு புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதனையே ஒரு வீடியோவாக எடுத்துவிட்டார்கள்.
இந்த வீடியோ இப்பொழுது You Tube இல் வெளியாகியுள்ளது.
 
 
 
You Tube இல் வெளியிட்டால் சொல்லவா வேண்டும்..? செக்கனில் இணையப்பரப்பில் இவர் வீடியோ பிரபல்யமாகிவிட்டது
 
[Continue reading...]

மேக்அப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை - த்ரிஷா

- 0 comments
 


எனது அழகை மேக்கப் மூலம் மிகைப்படுத்தி காட்ட எனக்கு விருப்பம் இல்லை, என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அம்மணிக்கு வயதாகி விட்டதால் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக வெளியான செய்தியை த்ரிஷா ஏற்கனவே மறுத்திருந்தார். த்ரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்டோருக்கு தெலுங்கு திரையுலகில் நிறைய வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதனால் தனது தோற்றத்தில் சிறு மாற்றங்களை செய்திருக்கும் த்ரிஷா, மேக்கப் போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், மேக்கப் போட்டு அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் எனக்கு ஆர்வம், விருப்பம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன். ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன், என்று கூறியுள்ளார்.
[Continue reading...]

தயாரிப்பாளரை தேடி அலையும் தனுஷ்

- 0 comments
 


ஆரோக்கிய டாக்டருக்கே அல்சர் வந்த மாதிரி ஆகிருச்சு தனுஷோட நிலைமை. கொலவெறி பாடல் உச்சத்திலிருந்தாலும், அவரோட மார்க்கெட் மட்டும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. அவருக்கு இருக்கிற பிசினசுக்குள் படம் எடுத்தாலும் அதுவும் ஓடாம போகுதேன்னு கவலைப்பட்டு கண்ணீர் சிந்துது தயாரிப்பாளர் வட்டாரம். இந்த நேரத்தில்தான் இன்னொரு அழுகாச்சி. சிம்பு தேவன் இயக்கவிருக்கும் மாரீசன் படத்தில் தனுஷ்தான் ஹீரோ. அவரு தயாரிக்கிறார், இவரு தயாரிக்கிறார்னு பேச்சு அடிபட்டு, கடைசியில் இந்த பேச்சுக்கே பிளாஸ்திரி போடுகிற அளவுக்கு போயிருக்கு நிலைமை.

சிம்புதேவன் பட்ஜெட்டுக்கும் தனுஷ் மார்க்கெட்டும் குறைந்த பட்சம் பத்து கோடி வித்தியாசம் வருதாம். கதை பிடித்திருப்பதால் தனுஷே தயாரிப்பாளர் தேடி அலைகிறார் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.

இதற்கிடையில் சச்சினுக்காக தனுஷ் மெனக்கட்டிருக்கும் கொலவெறி பாடலுக்கும் சச்சின் ரசிகர்கள் வட்டாரத்திலிருந்து அம்புகள் பாய ஆரம்பித்திருக்கிறது.

மூன்றெழுத்து தனுஷுக்கு முன்னூறு இடத்திலிருந்து பிரஷர் வந்தாலும், அண்ணன் எப்பவுமே ஸ்ட்ராங்குதான்!
[Continue reading...]

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான் பரபரப்பு தகவல்

- 0 comments
 
 
ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
 
ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.
 
காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
[Continue reading...]

இணையதளத்தில் நிர்வாண போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை அதிர்ச்சியூட்டும் தகவல்!!

- 0 comments
 
 
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.
பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா.
 
ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு டைம் பாஸ் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
 
அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger