Sunday 15 June 2014

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்–வேலைக்காரி கைது

- 0 comments

 

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்வேலைக்காரி கைது chennai woman doctor murder car driver servant arrested

 

சென்னை, ஜூன்.16–

சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 63), டாக்டர். தனது இளைய மகள் ரோகிணி பிரியாவுடன் வசித்து வந்த இவர் திருப்போரூரில் உள்ள சொந்த நிலத்தை விற்பதற்காக கடந்த 12–ந் தேதி தனது காரில் சென்றார்.

சென்னை நொளம்பூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி காரை ஓட்டினார். மல்லிகா வீட்டு வேலைக்கார பெண்ணும், கார்த்தியின் கள்ளக்காதலியுமான சத்யாவும் உடன் சென்றார்.

நள்ளிரவு வரை மல்லிகா வீடு திரும்பவில்லை. உடன் சென்ற டிரைவர் கார்த்தி, வேலைக்காரி சத்யா ஆகியோரும் மாயமாகி இருந்தனர். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து டாக்டர் மல்லிகாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மல்லிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரிய வந்தது. டிரைவர் கார்த்தியும், அவரது கள்ளக்காதலி சத்யாவும் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்லிகா அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள், அவர் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் சென்னையில் அடகு வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்கு சிலர் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்தி, சத்யாவுடன் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கொலை செய்ய மேலும் பலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது அம்பலமானது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து அவரையும், கள்ளக்காதலி சத்யாவையும் பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். கொலையாளிகள் 2 பேரும் காரில் சுற்றிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

காரை எங்காவது நிறுத்தி வைத்து விட்டு கார்த்தியும், சத்யாவும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு பலன் கிடைத்தது.

திண்டிவனம் பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடியதில் டாக்டர் மல்லிகாவின் கார் அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டி ருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்

இதற்கிடையே கார்த்தியும், சத்யாவும் தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலத்துக்கு தப்பிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலம் மற்றும் நொளம்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்வதற்கு கூட்டாக இணைந்து செயல்பட்டனர்.

மேற்கு சென்னை இணை கமிஷனர் சண்முகவேல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர். கார்த்தியின் செல்போன் நம்பரை வைத்து கண்காணித்ததில் அவர் திருப்பதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரது கள்ளக்காதலி சத்யாவும் பிடிபட்டார்.

சென்னைக்கு இருவரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை கொண்டு வரப்பட்டனர். நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது 2 பேரும் அளித்த வாக்குமூலத்தில் திண்டிவனம் மயிலத்தில் டாக்டர் மல்லிகாவை கொலை செய்து நகைகளையும், நிலப் பத்திரத்தையும் கொள்ளை அடித்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் காணாமல் போன டாக்டர் மல்லிகா கொலை செய்யப்பட்டது மயிலத்தில் என்பதால் அங்குள்ள போலீசாரே கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையையும் அவர்களே மேற்கொள்வார்கள். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட கார்த்தியும், சத்யாவும் மயிலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இற்கிடையே இந்த வழக்கில் சத்யாவின் உறவுக்கார பெண்ணான ஆதிலட்சுமி என்பவரும், நில புரோக்கர் கணேசும் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் மல்லிகாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆதிலட்சுமிதான் சென்னையில் அடகு வைத்து பணம் வாங்கி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மல்லிகாவின் சொத்தை அபகரிப்பதற்காக நில புரோக்கர் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

இதனால் இவர்களும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான 4 பேரும் இரவோடு இரவாக மயிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.

இந்த வழக்கில் இவர்கள் 4 பேரை தவிர மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண் டாக்டர் ஒருவரை கொலை செய்வதற்கு 2 பெண்களே சதித்திட்டம் தீட்டி செயல்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

...

 

[Continue reading...]

பணியாளர்களுக்கு கூகுள் வழங்கும் அபார சலுகைகள் Coolest things to be employed with Google

- 0 comments

பணியாளர்களுக்கு கூகுள் வழங்கும் அபார சலுகைகள் Coolest things to be employed with Google

 

 

நியூயார்க், ஜூன் 16-

இணையத்தின் பிரபல தேடு இயந்திரங்களில் (சர்ச் என்ஜின்) உலகின் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மவுண்ட்டன் வியூ பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரின் உழைப்பின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஐந்தரை கோடி ரூபாய்) லாபமாக கூகுள் ஈட்டி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த லாபத்தில் ஒரு சிறு பகுதியாக தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களை பாசமழையில் கூகுள் குளிப்பாட்டி வருகின்றது.

சராசரியாக, இதர அலுவலகங்களில் பணி நேரங்களில் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், நாளெல்லாம் உழைத்த பின்னர் இங்கு ஓய்வு தேவைப்பட்டால், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குளுகுளு கூண்டுகளில் சிறிது நேரம் உறங்கி களைப்பாறலாம்.

பிங்பாங் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டுகள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றின் மூலம் புத்துணர்வு பெறலாம். வீட்டில் முடி வெட்டிக் கொள்ள நேரமில்லாதவர்களுக்கு இலவச கட்டிங், துணி துவைக்க முடியாதவர்களுக்கு இலவச வாஷிங், நவீன உடற்பயிற்சிக் கூடம், நீந்தி மகிழ அருமையான நீச்சல் குளம், மனம் சோர்ந்த நேரத்தில் பசுமையான புல்வெளியில் அமர்ந்தபடியே வேலை செய்யும் அனுமதி ஆகியவை இங்குள்ள பணியாளர்களுக்கு உண்டு.

மேலும், வேலை நேரத்தில் 20 சதவீதத்தை வாடிக்கையான அலுவலக பணிகள் நீங்கலாக, நீங்கள் விரும்பும் ஆய்வுப் பணிக்கென செலவிடலாம். இவ்வகையில், சம்பளத்துடன் வாரத்தில் ஒரு முழுநாளை உங்கள் சொந்த ஆய்வுப் பணிக்கென அலுவலகத்தின் உள்ளேயே செலவிடலாம்.

வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வர மட்டுமின்றி, உரிய அனுமதியுடன் சில மணி நேரம் வரை இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களை உங்கள் சொந்த வேலைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, சிறு காயம் ஏற்பட்டாலோ, நொடிப் பொழுதில் உங்கள் மேஜைக்கே வந்து கவனிக்கும் மருத்துவர் குழுவும் உண்டு.

ஏக்கர் கணக்கில் விரிந்து, பரந்து கிடக்கும் அலுவலக வளாகத்தினுள் நடந்து செல்வதற்கு பதிலாக பேட்டரிகளின் மூலம் இயங்கும் தனி மோட்டார் சைக்கிள்களையோ, குழு மோட்டார் சைக்கிள்களையோ பயன்படுத்தலாம். கழிப்பறைகள் கூட நவீன ஜப்பனிய தொழில்நுட்பத்துடன் முன்புறம், பின்புறம் என்று தனித்தனியே கழுவி விட, உலர வைக்க என்று அனைத்தும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, இந்த வளாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பிரபல உணவு வகைகள், திண்பண்டங்கள், நொறுக்குத் தீனி வகைகள், குளிர்பானங்கள் என எப்போதும் குறைவில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உங்களால் இயன்ற வரை ஒரு கை பார்க்கலாம். இவை அத்தனை சலுகைகளும், அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

உடல் சோர்ந்து, களைப்படைந்தால் ஒரு சிறு தொகையை கட்டணமாக செலுத்தி, தேர்ச்சி பெற்ற கலைஞர்களை வரவழைத்து மசாஜ் செய்து கொள்ளலாம். இதற்கென, தனி அறைகளும் உண்டு. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது, நமக்கும் கூகுள் நிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை கிடைக்காதா..? என்ற ஆசை யாருக்குதான் தோன்றாது..?

...

 

[Continue reading...]

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

- 0 comments

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.

 

வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது.

 

குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.

 

அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது. இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர். இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள்.

 

மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது. மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்

 

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Young girl molested in Madhya Pradesh

- 0 comments

மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Young girl molested in Madhya Pradesh

போபால், ஜூன். 15–

நினைத்தாலே நெஞ்சம் பதறும் இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

கந்த்வா மாவட்டவம் பிலைகெடா கிராமம். தலைநகர் போபாலில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் மலாயா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் வகுப்பை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

மலாயாவின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து அடித்து உதைப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையின் போது கூர்மையான ஆயுதத்தால் மலாயாவை தாக்கினார். பலத்த காயம் அடைந்த மலாயா பிப்லாடு போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மலாயாவின் கணவரை கைது செய்தனர்.

போலீஸ் நடவடிக்கைக்கு ஆளான மலாயாவின் கணவர் கடும் கோபம் அடைந்தார். போலீசில் சிக்க வைத்த மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டார். அவரது திட்டத்துக்கு நண்பர்களும் தூபம் போட்டனர்.

தனது திட்டத்தை நிறைவேற்ற மலாயாவின் கணவர் தருணம் பார்த்து காத்து இருந்தார். கடந்த 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தனது நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்த 10 பேரை விருந்துக்கு தயாராக இருங்கள் என்று வயல்வெளியில் காத்திருக்க சொன்னார்.

வீட்டுக்கு சென்று மலாயாவிடம் 'நீ என் மீது கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் உன்னை விசாரணைக்கு அழைத்து வரும்படி கூறினார்கள். உடனே போக வேண்டும் வா என்று அழைத்தார்.

கணவர் சொன்னதை நம்பி தனது மகனுடன் மலாயா கிளம்பினார். ஊருக்கு வெளியே வயல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த நண்பர்கள் கூட்டத்தை பார்த்ததும் மலாயா திடுக்கிட்டார். ஏதோ நடக்கப் போகிறது என்று பயந்த மலாயா கணவரிடம் 'இங்கிருந்து போய் விடுவோம்'' உன்று கூறினார்.

அதை கேட்டு சிரித்த கணவரும், நண்பர்களும் கொஞ்சம் பொறு என்ற படி எல்லோரும் மது அருந்தினார்கள்.

போதை தலைக்கேறியதும் வெறி கொண்ட மிருகங்களாய் ஒவ்வொருவரும் மலாயா மீது பாய்ந்தனர். ஒருவர் மாறி ஒருவர் என்று 10 பேரும் ஆசை தீரும் வரை அந்த அபலை பெண்ணை கற்பழித்தனர்.

காமுகர்களின் பிடியில் சிக்கி சிதைந்த வேதனையில் துடித்த மலாயா கணவரிடம் என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இறக்கமில்லாத அந்த அரக்க கணவன் தனது மனைவி மாற்றார்களால் கற்பழிக்கப்படுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

உயிர் வலியோடு தவித்த மலாயா சோர்ந்து கிடந்தாள். தாகத்தில் நாவு வறண்டது. தண்ணீர் தண்ணீர் என்று பரிதாபமாக கெஞ்சினார். அவளது பரிதாப கெஞ்சலை பார்த்து பரிகாசம் செய்து குடிப்பதற்கு சிறுநீரை கொடுத்தார்கள் அந்த மகா பாவிகள்.

நடக்கவும் சக்தியற்று வயல் காட்டில் வீழ்ந்து கிடந்த மலாயாவை அதோடு விடுவதற்கும் அவர்களுக்கு மனம் இல்லை.

அடித்து துவைத்து எழுப்பினார்கள். உடலில் ஒரு பொட்டு ஆடையில்லாமல் அவிழ்த்து வீசினார்கள். கதறி துடித்த மலாயாவை அங்கிருந்து நிர்வாணமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பெற்ற தாய் தன் கண் முன்னால் சீரழிக்கப்பட்டு பரிதாபமாக கதறியதை பார்த்து அவரது 10 வயது மகனும் பரிதாபமாக கதறினான். அப்பா, அம்மாவை விட்டு விடுங்கள் என்று அந்த சின்னஞ்சிறுவன் கெஞ்சியதையும் யாரும் காதில் வாங்கவில்லை.

காப்பாற்ற யாரும் இல்லாமல், உதவிக்கரம் நீட்ட ஒருவர் கூட வராத நிலையில் என்னை விட்டு விடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டாள். ஆனால் அந்த வெறி பிடித்த மனித மிருகங்கள் அப்பாவி மலாயாவை அடித்து, அடித்து ஊரை சுற்றி நிர்வாணமாக நடக்க வைத்து பழி தீர்த்து கொண்டனர்.

தகவல் அறிந்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மலாயாவின் கணவரையும், இதை கொடூர செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் 10 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger