Monday 31 October 2011

அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்; 2 பேர் கைது பெண் தப்பி ஓட்டம்

- 0 comments
 
 
 
சென்னையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரிலும், பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களிலும் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசார தொழில் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் ஆகியோர் விபசார தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
 
விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயுர்வேத மசாஜ் என்று கவர்ச்சிகரமாக பத்திரிகையில் விளம்பரப்படுத்தி இருந்த ஒரு சென்டரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து வாடிக்கையாளர் போல் பேசினர்.
 
எதிர் முனையில் பேசிய நபர் நவீன முறையில் மசாஜ் செய்கிறோம் விருப்பப்பட்டால் மசாஜ் செய்யும் பெண்களோடு உல்லாசமாக இருக்கலாம். அதற்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும் என்றார். மேலும் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஒரு பியூட்டிபார்லருக்கு பணத்துடன் வருமாறு அழைத்தார்.
 
இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு மாறு வேடத்தில் சென்றனர். அவர்களை ஒரு வாலிபர் பியூட்டிபார்லருக்குள் அழைத்து சென்றார். இதையடுத்து அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.
 
விசாரணையில் அவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஸ்பரதன், சுராஜ் என்பது தெரிந்தது. மேலும் விபசாரத்திற்கு ஈடுபடுத்த வைத்திருந்த ஆந்திரா மற்றும் மணிப்பூரை சேர்ந்த 3 இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவர்கள் மைலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
 
பியூட்டி பார்லரை நடத்தி வந்த சாருலதா என்ற மகாலட்சுமி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது கடந்த ஆண்டு சென்னை ஷெனாய்நகரில், மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

மதுரையில் 7-ஆம் அறிவு படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின்

- 0 comments
 
 
 
தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 7 ஆம் அறிவு படத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மதுரையில் உள்ள தமிழ் ஜெயா தியேட்டரி்ல் பார்த்து மகிழ்ந்தார்.
 
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 7 ஆம் அறிவு படத்தை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். தனது மகன் தயாரித்த படத்தை பார்க்க ஆசைப்பட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
 
இந்த நிலையில், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை வந்த ஸ்டாலின் திமுக பிரமுகருக்கு சொந்தமான தமிழ் ஜெயா தியேட்டரில் 7 ஆம் அறிவு படத்தைப் பார்த்து ரசித்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு படம் பார்த்தார்.
 
படத்தை பார்த்துவிட்ட வெளியே வந்த ஸ்டாலின் கதை பற்றி முன்னாள் சபாநாயர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் விவாதித்தார்.



[Continue reading...]

மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

- 0 comments
 
 
 
கன்னட நடிகர் தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து, நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது பிரச்சினையில் தேவையில்லாமல் நிகிதாவின் பெயரை இழுத்து விட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
 
கன்னடத்தில் நடித்து வந்த நிகிதாவை மையமாக வைத்து சமீபத்தில் பெரும் புயல் கிளம்பியது. நடிகர் தர்ஷன், தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடும் சண்டையி்ல் இறங்கினார். மனைவியைத் தாக்கிய அவர் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. தர்ஷன், விஜயலட்சுமி இடையிலான மோதலுக்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நிகிதா இதை மறுத்தார்.
 
இந்த விவகாரத்தில்தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார். மேலும் நிகிதாவுக்கு கன்னட திரையுலகில் தடையும் விதித்தனர். பின்னர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
 
பிறகு கோர்ட்டில் தர்ஷனுக்கும், விஜயலட்சுமிக்கும் நீதிபதி அறிவுரை கூறினார். அதையடுத்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷன். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் தர்ஷன்.
 
இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், தேவையில்லாமல் எங்களது பிரச்சினையில் நிகிதாவின் பெயர் இழுக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். இருப்பினும் நான் ஒருமுறை கூட நிகிதாதான் எனது பிரச்சினைக்குக் காரணம் என்று நான் கூறியதே இல்லை. போலீஸில் கொடுத்த புகாரிலும் கூட அதை கூறவில்லை. வேறு எந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
 
எங்களது பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம். இதற்காக யார் மீதும் பழி போட நாங்கள் விரும்பவில்லை. நிகிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக நான் வருந்துகிறேன். அவரது வாழ்க்கை பெரும் சிக்கலாகி விட்டதற்காக நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு நடிக்க தடை விதித்தது குறித்து எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது என்றார்.
 
அதேபோல தர்ஷனும் நிகிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.



[Continue reading...]

அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?

- 0 comments
 
 
 
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடைய சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது.
 
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மொழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, கட்டியணைப்பது, முத்தமிடுவது வழக்கமாகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதிக முத்தங்கள் பெற்ற சிலைகள் பெயர் வெளியிடப்படுகிறது.
 
அதன்படி இந்த ஆண்டு அதிக முத்தம் பெற்ற டாப் 10 சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
 
கடந்த ஆண்டு டாப் 10 முத்தப் பட்டியலில் ஷாருக் கான் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முத்தமிடுவதில் பெண்கள்தான் ஜாஸ்தி!
 
மெழுகுச் சிலைகளுக்கு முத்தம் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தானாம். அதாவது 80 சதவீதம் பேர். வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
 
மேடம் டுசாட்ஸில் ஷாருக் கான்( 45), சல்மான் கான் (45) மற்றும் அமிதாப் பச்சன்(69) ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இதில் ரித்திக் ரோஷனுக்கு (37) தான் இளம் வயதிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது.
 
பாலிவுட்டிலிருந்து சிலையாகியுள்ள ஒரு பிரபலங்களில் கரீனா கபூரும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.



[Continue reading...]

ஒஸ்தியின் விலை... ஓங்கி ஒலிக்கும் சிம்பு

- 0 comments
 
 
 
காக்கைக்கும் தன் குஞ்சு ஒஸ்திதான் என்பதை ஒவ்வொரு காக்கையுமே நிரூபிக்க துடிக்கும். காக்கைக்கே அப்படியிருக்கும் போது சிம்பு மட்டும் விட்டுக் கொடுப்பாரா? இந்த தீபாவளிக்கே ஒஸ்தி வந்திருந்தால் நாமதான் ஹிட்டடிச்சிருப்போம் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். அப்படி வராமல் ஒதுங்கிய தரணியிடமே தன் வருத்தத்தை காட்டினாராம்.
 
இவர்தான் இப்படி என்றால், டைரக்டர் தரணி, தயாரிப்பாளர் ரமேஷ் ஆகியோரும் அதீத நம்பிக்கையோடு இருக்கிறார்களாம். அது எப்படி என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை போட்டு உதிரத்தை உறைய வைக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
 
மயக்கம் என்ன, ஒஸ்தி இரண்டும்தான் வருகிற சில வாரங்களில் மோதிக் கொண்டு நிற்கும் போலிருக்கிறது. விநியோகஸ்தர்களின் சாய்சில் ரெண்டுக்குமே நல்ல மரியாதை. அதிலும் ஒஸ்தி படத்தை மொத்தமாக வாங்க முன் வந்திருக்கிறதாம் ரிலையன்ஸ் நிறுவனம். படத்திற்காக செய்யப்பட்ட செலவு, சிம்புவின் மார்க்கெட் ரேட், இதையெல்லாம் மனதில் வைத்து சுமார் பதினெட்டு கோடி வரைக்கும் ஏறி வந்தார்களாம் அவர்கள்.
 
ரெண்டு விரலையும் நாலு விரலையும் சேர்த்து நீட்டும் தரணி அண் கோ, அதற்கு கம்மி என்றால் ஸாரி... என்கிறார்களாம் ஒரேயடியாக. ஓவர் ஹைப்பு உடம்புக்கு ஆகாதுன்னு 7 ஆம் அறிவுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆறாம் அறிவுக்கு தெரிஞ்சா தப்பிச்சிக்கலாமே!



[Continue reading...]

அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்

- 0 comments
 
 
 
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி சொன்னவுடன் கண், காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலைமேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியிருக்கிறார் என்பதுதான் விஷயம்.
 
ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்சகர்கள் பொறிந்தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக்கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுக்க, ஏகபோக சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.
 
இப்படத்தில் முருகதாசிடம் 7 ஆம் அறிவு படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப்படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்.



[Continue reading...]

உடலுறவை விரும்ப பெண்கள் காமத்தை விட 200 காரணங்கள்!

- 0 comments
 
 

தாம்பத்திய உறவில் ஈடுபட பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஆண், பெண்ணுடனான உறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கடைசி இடம்தானாம்.

போரடித்தால் செக்ஸ்

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும் போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

.மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுப வங்களை கண்டறிந்து அதன்மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

மனதுக்குள் ஸ்கேன் செய்யும் பெண்கள்

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அவர்களை பற்றி ஆய்வு செய்து கொண்டே இருப்பார்களாம்.

ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடைசியில் திருப்திதான்

கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.
[Continue reading...]

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!

- 0 comments
 
 

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.

செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.

தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ...

செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.

ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.

அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.

அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.

விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம். தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.

இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.

எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.

இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.
[Continue reading...]

நடிகைகளின் 'தொடைகளுக்கு' நடிகர் சங்கம் தடை?

- 0 comments
 
 
 
பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
 
இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.
 
பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
 
கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் நடந்த பட விழாவின்போது படு கவர்ச்சிகரமாக நடிகை ஒருவர் உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.



[Continue reading...]

3 பேரை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலையா: சீமான் அறிக்கை

- 0 comments
 
 
 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
 
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.
 
 
3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.
 
 
அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
 
 
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்



[Continue reading...]

ஆக்ஷ்ன் கிங்குடன் ஜோடிசேர மறுத்த நடிகை!

- 0 comments
 
 
 
ஆக்ஷ்ன் கிங்காக கோடம்பாக்கத்தில் வலம் வரும் நடிகருடன் ஜோடி சேர, அகர்வாலின் வாழ்க்கையில் புகுந்து பிரச்னையை உருவாக்கிய ஆண்ட்ரிய நடிகை மறுத்து விட்டாராம். சூதாட்ட படத்தில் அம்மணியும், ஆக்ஷ்ன் கிங்கும் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். ஜோடி பொருத்தம் சூப்பர் என நினைத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இருவரையும் ஜோடி சேர்க்க ஆசைப்பட்டார்.
 
கிங்கிடம் கேட்டதும் க்ரீன் சிக்னல் கிடைத்தது. ஆனால் அம்மணி பெரிய ரெட் கார்டே போட்டு விட்டாராம். `அவருடன் அந்த ஒரு படமே போதும் என்று கூறி அலுத்துக் கொள்ளும் அவர், இனிமே இப்படியொரு வாய்ப்புடன் யாரும் என் வீட்டுப்பக்கம் வந்துடாதீங்க என்றும் கூறி விட்டாராம். சூதாட்ட சூட்டிங்குல என்ன நடந்துச்சோ?

 


[Continue reading...]

அஜித்துடன் ஜோடி சேர மறுத்த நடிகை!

- 0 comments
 
 
 
தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கையில், நடிகை ஒருவர் அஜித் படத்திற்கு நோ சொல்லியிருக்கிறார். அவர் பெயர் விமலா ராமன். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று, கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்களை கிறங்கடித்து வரும் விமலா ராமனிடம், அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். படத்தில் முதல் நாயகி மாடல் அழகி ஹூமா குரோஷி என்கிற போதிலும், அஜித் படம் என்பதால் விமலா நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மணியோ அதற்கு நேர் மாறாக நோ சொல்லி விட்டாராம்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "தெலுங்கு படவுலகில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை" என்று விளக்கம் கொடுத்தாலும் உண்மை அதுவல்லவாம். படத்தில் விமலாவின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லையாம். மற்றொரு நாயகியான மாடல் அழகியின் கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறதாம். இதனை தெரிந்து கொண்டதால்தான் அம்மணி அஜித் படத்துக்கே நோ சொல்லும் நிலைமைக்கு போய் விட்டார் என்கிறது, விவரமறிந்த கோடம்பாக்கத்து வட்டாரம்!



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger