Sunday 24 November 2013

Mylapore private company woman worker committed suicide

- 0 comments

மயிலாப்பூர் தனியார் நிறுவனத்தில் 8–வது மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை      Mylapore private company woman worker committed suicide

[Continue reading...]

Lehar storm passed Andra pradesh

- 0 comments

'லெஹர்' புயல் ஆந்திரா சென்றது: மேல் அடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை பெய்யும்      Lehar storm passed Andra pradesh

[Continue reading...]

Rajeevgandhi statue breach near Gobi

- 0 comments

கோபி அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு: போலீசார் குவிப்பு      Rajeevgandhi statue breach near Gobi

[Continue reading...]

Rajiv Gandhi murder case give reasonably to perarivalan Karunanidhi request

- 0 comments

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்      Rajiv Gandhi murder case give reasonably to perarivalan Karunanidhi request

[Continue reading...]

Acid rain led to mass extinction 250 million years ago

- 0 comments

Img
Acid rain led to mass extinction 250 million years ago
பூமியல் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெய்த அமில மழைக்கு 90% உயிர்கள் அழிந்தன: ஆராய்சியாளர்கள் கருத்து     

வாஷிங்டன், நவ. 24-

பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும், நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் இறந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய மிக கொடிய மிருகங்கள் என அறியப்பட்டனவும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.  

இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிர்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் கருதப்படுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
...

[Continue reading...]

தொழில் அதிபர் ஏமாற்றியதாக நடிகை ராதா போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் tamil Actress radha statement to police

- 0 comments

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா, அடாவடி , காத்தவராயன் , கேம் , மானஸ்தன் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்ற தொழில் அதிபரால் தான் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். பெரிய வைர வியாபாரி என்று கூறி பைசூல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.50 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் ராதாவின் இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்படி வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா விசாரணை நடத்தி வருகிறார். நேற்று நடிகை ராதாவிடம் ஒரு மணி நேரம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விரம் வருமாறு:– கடந்த 2008–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுந்தர் என்ற தயாரிப்பாளர் மூலம் பைசூல் எனக்கு அறிமுகமானார். திருவல்லிக்கேணியில் தைபூன் அலிகான் ரோட்டில் வசித்து வரும் அவரை கோடம்பாக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பைசூலை சந்தித்தேன். தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்து வருவதாகவும் பைசூல் கூறினார். இதன்பிறகு என்னை ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்காக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்த அவர், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நான் நம்பிவிட்டேன். இதன் பிறகு இருவரும் 2008–ம் ஆண்டு முதல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் போதெல்லாம் பைசூல் தட்டிக்கழித்து வந்தார். வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரியான பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அவசர தேவை என்று கூறி என்னிடம் பணம் கேட்டார். எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.12 லட்சம் கொடுத்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரது தேவைக்காக ரூ.50 லட்சம் வரை என்னிடம் வாங்கியுள்ளார். பைசூல் என்னிடம் பழகியபோது தனது பெயரை ஷியாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். கடந்த ஆண்டுதான் இது எனக்கு தெரிந்தது. இதன் பின்னர் எனது வீட்டுக்கு வருவதை பைசூல் குறைத்துக் கொண்டார். இதனால் மனமுடைந்த நான் திருவல்லிக்கேணியில் அவர் வசிக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றேன். அப்போது நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், ஏன் வீட்டுக்கு வரவில்லை என்றும் பைசூலிடம் கேட்டேன். உடனே அவர் நீ இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியதுடன், உடனடியாக கிளம்பாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது கொன்று விடுவதாக மிரட்டினார்.3 ஆண்டுக்கு மேல் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, பலமுறை வற்புறுத்தி என்னுடன் செக்ஸ் உறவுவைத்துக் கொண்ட பைசூல், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என்னிடம் இருந்து வாங்கி ஏமாற்றி விட்டார். அவரை நம்பி எனது சினிமா தொழிலையும் நான் விட்டு விட்டேன். என்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணத்தை மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ராதா வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை ராதாவை ஏமாற்றியதாக கூறப்படும் தொழில் அதிபரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. ராதா தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களையும், பைசூல் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். இதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கிடையே நடிகை ராதா படுக்கையில் இருந்தபோது அவரை வீடியோவில் ஆபாசமாக படம் எடுத்ததாக தொழில் அதிபர் பைசூல் மீது புகார் கூறியிருந்தார். இதுபற்றி உதவி கமிஷனர் விஜயசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, 'இதுபற்றியும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.... 

[Continue reading...]

virudhunagar near pond Drowning kills 5 girls in Madurai Parents Scream

- 0 comments

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் பலி: பெற்றோர் கதறல்      virudhunagar near pond Drowning kills 5 girls in Madurai Parents Scream

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger