Saturday 17 September 2011

சுவிஸ் வங்கியில�� ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக��கில் கறுப்பு பணம்

- 0 comments


ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார்.

சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியது. ஆனால் அதை வாங்க காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. அப்படியானால் சுவிஸ் வங்கிகளில் உள்ள பெரும் பாலான கறுப்பு பணத்தை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு வைத்துள்ளார்களா! அந்த கறுப்பு பணத்தை எடுத்து வந்து ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.

இதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் ஒழிந்தால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை அரசு உயர்த்த வேண்டியதில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் ஊழலை ஒழிக்க மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    மேயர் பதவி, ஜெயலலிதா அதிரடி விஜய்���ாந்த் கடும் அதி��்ச்சி!

    - 0 comments


    தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

    இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

    அதே போல அதிமுகவுக்கே குளிர் ஜுரம் வரும் அளவுக்கு ஆட்சியைப் பாராட்டி குவித்து வரும் இடதுசாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.

    தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக.

    ஆனால், எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில் ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக.

    அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

    அதே போல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு மேயர் பதவி கூட கிடையாது என்றும் சொல்லப்பட்டுவிட்டது.

    இதனால் இந்தக் கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    20ந் தேதி பெங்களூ��ு நீதிமன்றத்தில��� ஆஜராவீர்களா? ஜெ���லலிதா பதில்

    - 0 comments


    முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் இன்று (17.09.2011) பேசினார்.

    கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க. ஏன் ஆதரவு அளிக்கிறது?

    பதில்: நரேந்திர மோடி சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் எங்கள் கொள்கை. அவரது நிலையும் இதை ஒட்டியே இருக்கிறது. நரேந்திரமோடி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்துக்கு சிலரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே எங்கள் கட்சியின் பாராளுமன்ற தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகிய 2 எம்.பி.க்களை அனுப்பி வைத்தேன்.

    கேள்வி: அரசியல் மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்று கருதலாமா?

    பதில்: அப்படியல்ல. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளேன். வேறு எதுவும் இல்லை.

    கேள்வி: 2014 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா?

    பதில்: இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. அப்படி அறிவிக்கப்பட்டால் அப்போது பதில் சொல்வேன்.

    கேள்வி: பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் தடைவிதித்து இருக்கிறதே இதை ஒரு பின்னடைவாகக் கருதுகிறீர்களா?

    பதில்: இல்லை. எனது வழக்குரைஞர்கள் இந்த வழக்கை நன்றாக கையாண்டு வருகிறார்கள்.

    கேள்வி: 20ந் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவீர்களா?

    பதில்: தேதி நிர்ணயித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளேன். இது ஒன்றும் எனக்குக் புதிதல்ல என்றார்.

    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    வன்னி போர்! 21 ம் ந��ற்றாண்டின் படுக���லைகள் நிறைந்த இ��கசியப்போர்!: சிட��னி தெ மோனிங் ஹெர��்ட்

    - 0 comments


    இலங்கையின் வன்னியில் இலங்கைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இறுதிப்போர், 21 ஆம் நூற்றாண்டின் படுகொலை நிறைந்த இரகசிய போராகும். இந்த கருத்தை சிட்னி தே மோனிங் ஹெரல்ட் செய்திதாளில் Antony Loewenstein என்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளால் கேடயங்களாக வைக்கப்பட்ட பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

    இந்தநிலையில் செய்தியாளர்கள்,மற்றும் மனிதாபிமான பணியாளர்கள்; மற்றும் சுதந்திரமான பார்வையாளர்கள் எவரும் பிரவேசிக்காத நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் பாரிய இரகசிய படுகொலை போராக வன்னிப்போரை செய்தியாளர் Antony Loewenstein குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது. எனினும் சீனாவின் ஆதரவைக்கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதன் மூலம் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கிறது.

    ஆனால் மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையை ஏனைய நாடுகளுக்கு பாடங்களாக காட்டமுடியாது என்று சிட்னி மோனிங் ஹெரல்ட் குறிப்பிட்டுள்ளது.

    ஐக்கியநாடுகள் சபையின் முன்னாள் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ், அண்மையில் கூறிய கருத்தில் இலங்கையில் தமிழர்கள் மொழி உரிமை ஒடுக்கப்பட்டு நிலம் பறிக்கப்பட்டமை காரணமாகவே, தனித்தமிழீழத்தை கோரிவருவதாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேவேளை வன்னியில் கோரமான போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் அதனை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தவறியிருந்தமை குறித்து விக்கிலீக்ஸ_ம் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்தநிலையில் இலங்கையில் இனவேற்றுமை பாரியளவில் அதிகரித்து வருகிறது.

    அத்துடன் அடக்குமுறை ஆட்சியும் அங்கு வேகமாக நடந்தேறி வருகிறது என்று கோடன் வைஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவுஸ்திரேலிய உட்பட்ட மேற்குலக நாடுகள் வெட்கக்கேடான நிலையில் இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை என்று கோர்டன் வைஸ் விமர்சனம் செய்துள்ளமையை சிட்னி மோனிங் ஹெரல்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    "பொங்குதமிழ்" கனடியத் தமிழர் தேசி��� அவை விடுக்கும் ���ேண்டுகோள்

    - 0 comments


    ஒக்டோபர் மாதம் ரொறன்ரோவில் நடைபெறவிருக்கும் 'பொங்குதமிழ்' உரிமைக்குரல் எழுச்சிப்பேரணி நிகழ்வு சம்பந்தமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும்.

    ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு மக்களின் விடிவுக்காக கனடியத் தமிழர் நாம் உரிமைக்குரல் எழுப்புவோம். நாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதன் மூலமே இலங்கை அரசிற்கு எதிராகச் சர்வதேசத்தின் பாரிய அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.

    எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரொறன்ரோவில் நடைபெறவிருக்கின்ற பொங்குதமிழ் உரிமைக்குரல் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் செப்ரம்பர் மாதம் 25ம் திகதி மதியம் 2.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை ஓர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவைப் பணிமனையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

    இக்கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் அனைத்துப் பொது அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஊர்ச்சங்கங்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கேட்டுக்கொள்கிறது.

    தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
    பணிமனை: 10 - 5310 Finch Avenue East, Scarborough, ON
    தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
    மின்னஞ்சல்: info@ncctcanada.ca
    இணையத்தளம்: www.ncctcanada.ca

    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    மரண தண்டனைக்கு எ���ிராக மாநிலம் தழ��விய பிரசாரம்: கொ��த்தூர் மணி

    - 0 comments


    மரண தண்டனைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலந் தழுவிய பிரசாரம் வருகிற 20ந் தேதி (செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது என்று அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

    அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

    உலகில் 3ல் 2 பங்கு நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், மரண தண்டனைக்கு எதிராக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மகாத்மாகாந்தி வாழ்ந்த இந்த நாட்டில் இன்னமும் மரணதண்டனை இருந்து வருகிறது. இந்தியாவில் மரண தண்டனையை நீக்கக் கோரியும், 3 தமிழர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க கோரியும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வருகிற 20ந் தேதி மாநிலந்தழுவிய பிரசாரம் சென்னையில் தொடங்குகிறது. இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்கிறார்.

    சென்னையில் தொடங்கி காஞ்சீபுரம், விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருது நகர், திண்டுக்கல், பழனி, கரூர், சேலம், திருப்பத்தூர் வழியாக ஒரு குழு வேலூர் சென்றடையும். மற்றொரு குழு உடுமலைப் பேட்டையில் புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக வேலூர் சென்றடைகிறது.

    வருகிற 20 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் பிரசாரம் அக்டோபர் 3ந் தேதி (திங்கட்கிழமை) வேலூரில் முடிவடை கிறது. இந்த பிரசாரப் பயணத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்கள். தப்பு இசை, பாடல் கள், விழிப் புணர்வு நாடகங்கள், உரை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெறும். இந்த பிரசாரப் பய ணத்தை என்னுடன், பொதுச் செயலர்கள் விடுதலை ராஜேந்திரன், கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்துவார்கள்.

    பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் கண்டனத்துக்குரியது. காவல் துறையின் திறமையற்ற கையாளும் தன்மையைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் இன்னமும் பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விரிவான ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிப்போம்.

    இந்த அறிக்கையைத் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வருகிற நவம்பர் மாதம் 26ந் தேதி (திங்கட்கிழமை) மிகப்பெரிய போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் என்றார்.

    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    யூதர்களுக்கு டய��்போறா தமிழர்களு���்கு பொங்குதமிழ்: கஜேந்திரன் (படங��கள், காணொளி)

    - 0 comments


    முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரும் முன்னாள் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், சிறீலங்கா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ தேசிய மக்கள் முன்னணியின் செயலருமான செ.கஜேந்திரன் ஈழமுரசுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இது.

    எதிர்வரும் 19ம் திகதி இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள் சுவிஸ்லாந்து நாட்டில் ஒன்று கூடி பொங்குதமிழ் நிகழ்வினை நடாத்தவுள்ளனர்.

    சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட யூத மக்கள் இழந்த தமது தேசத்தை மீட்டெடுத்து இஸ்ரேல் என்னும் தேசத்தை உருவாக்கும் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் டயஸ்போறா (Diaspora) என்ற சொல் பிரபல்யம் அடையத் தொடங்கியது. அந்தச் சொல் யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதென அவர்கள் கூறுகின்றனர். அதேபோல 'பொங்குதமிழ்' என்ற சொல் எதிர்காலத்தில் தமிழ் அகராதியில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழீழ தேசத்தின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் மீட்டெடுப்பதற்காக போராடும் தமிழர்கள் என்று வரைவிலக்கணப்படுத்தப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவருகின்றது.

    இலங்கைத் தீவில் அந்நிய ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்கள் தனித் தேசமாகவும், தமக்கெனத் தனி இராச்சியத்தினையும் கொண்டிருந்தனர். அதேபோல சிங்கள மக்களும் கொண்டிருந்தனர். அந்நிய ஆதிக்கம் இம் மண்ணில் ஏற்பட்டபோது தமிழ் தேசம் தனது இறைமையையும் ஆட்சியுரிமையையும் அவர்களிடம் இழந்தது. அதேபோல சிங்கள தேசமும் இழந்தது.

    1833ம் ஆண்டு வரை இலங்கைத் தீவை கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் தாம் கைப்பற்றிய தமிழ் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் தனித்தனியாகவே ஆட்சி புரிந்தனர். ஆனால் 1796 இல் இலங்கைத்தீவை ஒல்லாந்தர்களிடம் இருந்து கைப்பற்றி ஆங்கிலேயர் 37 வருடங்கள் தனித்தனியே ஆட்சி செய்தபோதிலும், 1833 ஆம் ஆண்டு இலங்கைத் தீவை நிர்வகிப்பதனை இலகுபடுத்துவதற்காக தமிழ் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் ஒன்றுபடுத்தி ஓரே நிர்வாக அலகாக்கினர்.

    அன்று தொடக்கம் இலங்கை முழுவதனையம் ஒரு நிர்வாக மையத்தினூடாக ஆட்சி செய்து வந்தனர். இதன் காரணமாக தமிழ் தேசம் சிங்கள தேசத்திற்கு சம அந்தஸ்த்துடன் வாழ்ந்த நிலை மாற்றப்பட்டு பெரும்பான்மை சிறுபான்மை என்ற நிலை உருவாகியது. சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மை ஆக்கப்பட தமிழர்கள் சிறுபான்மைகள் ஆக்கப்பட்டனர்.

    இந்நிலையில் 1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவை விட்டு ஆங்கிலேயர் வெளியேறும் போது எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அன்று தொடக்கம் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களவர்கள் இலங்கைத் தீவை தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகின்றனர். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிக் கொண்ட சிங்களவர்கள் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்காக மட்டும் புத்த பிரானால் அருளப்பட்ட தீவு என்று கூறும் மகாவம்சம் என்னும் புராண காவியத்தில் கூறப்பட்டுள்ள புனைகதையை உண்மை என நம்பி இந்தத் தீவை தனியான பௌத்த சிங்களத் தீவாக மாற்றும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

    இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமிழர்கள் மிகப் பெரும்பான்மை என்று கருதுகின்றனா. இதனால் இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்வது சிங்கள பௌத்தத்தின் இருப்புக்கு அச்சுறுத்தல் என்று அஞ்சுகின்றனர். அந்த அச்சுறுத்தலை நீக்க சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பி தமிழ் இலங்கைத்தீவில் உள்ள தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் வேலையை 1948 ஆம் ஆண்டு தொடக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடராக வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பு என்று எதிர்காலத்தில் வாதிட முடியாதளவுக்கு அங்குள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதிலும் அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதிலும் இராணுவக் குடியேற்றங்களை எற்படுத்துவதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் முனைப்புக்காட்டி வந்துள்ளனர்.

    அதேபோல பொருளாதார ஆதிக்கத்தினை தமிழர்களுடைய கைகளில் இருந்து சிங்களவர்களது கைகளுக்கு மாற்றும் கைங்கரியத்தினையும், மூன்றில் இரண்டு பங்கு கடல்வளத்தைக் கொண்டுள்ள தமிழரது மீன்பிடி ஆதிக்கத்தினை சிங்களவர்களது கைகளுக்கு மாற்றும் கைங்கரியத்தினையும் தமது அரச இயந்திரத்தினைப் பயன்படுத்தி கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பின்னர் இந்த நிலைமை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசு தீவிரப்படுத்திவருவதற்கு முக்கிய காரணம் தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அங்கீகாரம் சர்வதேச சமூகத்தினால் இன்னமும் வழங்கப்படாமையாகும். இந்நிலையில் மேற்கூறப்பட்ட சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் தமிழ் தேசத்தினை இல்லாது அழித்து விடலாம் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

    அரசு எமது தேசத்தில் மேற்கொண்டு வரும் மேற்படி செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமாயின் தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதும் அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதும் சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிப்படுவதே ஒரே வழியாகும். அவ்வாறான அங்கீகாரம் கிடைத்தால் சிங்கள அரச தமது இராணுவ அதிகாரத்தையும், ஆட்சி அதிகாரததையும் பயன்படுத்தி தமிழ் தேசத்தில் சிங்கள குடியேற்றங்களை செய்வதன் மூலமும், பௌத்த கோவில்களை அமைப்பதன் மூலமும் தமிழ் தேசத்தை சிங்கள தேசமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் வரவேண்டியிருக்கும்.

    அவ்வாறான அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தமிழ் தேசம் அழிக்கப்படுவதனை நிரந்தரமாகத் தடுக்க முடியும். இந்த யதார்த்த நிலையை தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு தமிழ் தேசம் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற யாதார்த்தினை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கயை முன்வைத்து தொடர்ச்சியான எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

    இதன் மூலம் எமது தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்றக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அது மட்டுமன்றி எமது தேசத்தின் அழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், தமிழ் தேசத்தின் இறைமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற உன்னதமான போராட்டத்தில் இலட்சக்கணக்கான எமது மக்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். பல்லாயிரம் போராளிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.

    கடந்த 60 ஆண்டுகளில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இன அழிப்பை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்தகாலத்தில் 75000திற்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    அத்துடன் சனல் 4 மற்றும் கெட்லைன் ருடே போன்ற ஊடகங்களும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. இவை வெளிவருவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் அளப்பரிய பங்காற்றியுள்ளனர். அதற்காக தாயகத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

    சர்வதேச சமூகம் இன்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் கொடுரத்தைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நீதி கொடுக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு கடுமையாக தொடர் போராட்டடங்களை ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் இடம் பெற்றது வெறும் போர்க்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை இப்படுகொலை தொடர்பகா சர்வதேச பக்கச் சார்ப்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

    தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு இது சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். இவை அங்கீகரிக்கப்படாத வேறு எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.

    சிறீலங்கா இராணுவ அடக்கு முறையை உடைத்துக் கொண்டு அடக்கு முறைக்குள் வாழ்ந்த தாயகத்து மக்களை கொதித்தெழ வைத்த வரலாற்று நிகழ்வுதான் பொங்குதமிழ். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 2001 ஆம் ஆண்டு இராணுவ அடக்குமுறையை உடைத்துக் கொண்டு பொங்கியெழுந்தனர். அந்த நிகழ்வு உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த தமிழ் மக்களை ஒரு தேசியத் தலைமையின் கீழ் ஓரணியில் திரள வைத்த வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

    அன்று யாழ்பல்கலைகவளவில் கருக்கொண்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலான பொங்கு தமிழ் பின்னர் தாயகம் எங்கும் பரவி பின்னர் புலம்பெயர் தேசம் எங்கும் பரவி தமிழ் மக்களின் ஒற்றுமையின் குரலாகவும் உரிமைக் குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

    தமிழ் தேசத்தின் இறைமைக் கோரிக்கையை வலியுறுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை தாங்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தொடாச்சியாக மேற்கொள்ள வேண்டும். தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரம் அடையும் வரை உங்கள் போராட்டங்கள் தொடர வேண்டும்...

    காணொளி - அழுத்தவும்.










    http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger