Tuesday 15 May 2012

பாலைவனக்காற்று-கலகல-ஜட்டி..!!

- 0 comments



பாலைவனக்காற்றாய்
பார்வைகள் வீசிச்செல்கிறாய்
சுடும் மனலாய்
சுடுகிறது மனசு..!!

பாலைவனமெங்கிலும்
பசுமைதான் நீ
சிரிப்பொலிகளை
சிதறிச்� �ென்றால்..!!

பாலைவனப்பயனியாய் நான்
பயனத்தின் தூரமெங்கும்
இளைப்பாறிச்செல்கிறேன்
உன் வார்த்தைகளோடு..!!
கவிதை பிடிக்காதவங்க உள்ளே வந்திருந்தா.. அவங்களுக்காக சில கல கல ஜோக்ஸ்..

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி  : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி  : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள� ��ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

இரண்டுமே பிடிக்கலையா.. இந்த "ஜட்டி" குறும்படத்த பாருங்க, பேருதான் ஒருமாதிரியிருக்கு ஆனா குறும்படம் நன்றாக நகைச்சுவையாகவே இருக்கு.. பிண்ணனியிசை சேர்ப்பதற்கு பதிலாய் பிண்ணனியில் சில பிரபலம� ��ன பாடல்களை ஒலிக்கவிட்டிருப்பது அழகு.. ஒரு ஜட்டிக்காக வேண்டி என்னெல்லாம் பண்றாருன்னு நீங்களே பாருங்க.. சிரிங்க!!!
<>

































[Continue reading...]

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.2

- 0 comments


குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.

இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் நாம் எடுத்துக் க ொண்டதோ கலியுகத்தை மட்டுமே.
மேலும் விவரங்களுக்கு

அக்காலத்தில் பாமரனுக்கும் பாராளுபவனுக்கும் வானியல் விளக்கங்களைக் கூறி அன்றைய நாள் எப்படிப் பட்டது, என்ன வருடம், என்ன மாதம், என்ன தேதி, என்ன கிழமை, என்று கூறுவதற்கு ஒரு ஆள் தேவைப் பட்டான். அதற்காகவே ஒரு குழுவின� �் இருந்தனர். அவனும் தனது முன்னோர்களின் வாய்மொழியில் பின் பற்றப்பட்ட காலண்டரை தினசரி அப்டேட் செய்து கண்கானித்து அவனே ஒரு நாட்காட்டியாகவும், (Event Manager) ஈவண்ட் மேனேஜராகவும் செயல்பட்டான். 

உதாரணமாக, ஒருவர் கணபதி பூஜை செய்து இந்தப் பதிவை இடுகிறார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந ்த கணபதி பூஜையின் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது. அடுத்தமுறை விஷேசங்களில் கலந்து கொள்ளும் போது கவனியுங்கள்.

அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பிப்பார்கள் .

அடுத்து வருடம்,மாதம் ,கி� �மை, திதி, நட்சத்திரத்தையும் (மொத்தத்தில் காலத்தையும்) அடுத்து பூகோள ரீதியாக இடத்தையும் குறிப்பிடுவார்கள், உதாரணத்திற்கு இன்றைய நாளுக்கான மந்திரமும் விளக்கமும்.

"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே
இந்த இனிய நல்ல வேளை ,பிரம்மனின் இரண்டாவது பரார்த்தத்தில்
ஸ்� �ேத வராஹ கல்பே
முப்பத்தாறு கல்பங்களில் முதல் கல்பமாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில்
வைவஸ்வத மன்வந்த்ரே
பதினான்கு மன்வந்திரங்களில் ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் .
அஷ்டாசாவிகும்சதி தமே
71 சதுர்யுகங்களில் 28வது சதுர்யுகத்தில்
கலி யுகே 5113
நான்க� ��வது யுகமாகிய கலியுகத்தில் 5113வது வருடத்தில் . (2012)
ப்ரதமே பாதே
பிரபஞ்சத்தின் முக்கியமான பகுதியில்
ஜம்புத்வீபே
ஏழு தீபகற்பங்களில் முதல் தீபகற்பமாகிய ஜம்பூ த்வீபத்தில் (நீரால் சூழப்பட்டுள்ள,  நாம் வசிக்கும் இந்திய தீப கற்பத்தில்),
பாரத வருஷே
ஒன்பது வர்ஷத்தில் முதல் � �ர்ஷமாகிய பாரத வர்ஷம், (இதுவும் இடம் பற்றியதே)
பரத கண்டே
ஒன்பது கண்டங்களில் முதல் கண்டமாகிய.பரத கண்டத்தில்,
மேரோர்: தக்ஷ'ணே பார்ச்வே
மேரு எனும் இமயமலையின் தெற்கு புறத்தில்.
சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே
மேற்கண்ட பிர ம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்தில், பூஜை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலமாகிய
நந்தன.. நாம ஸம்வத்ஸரே
26 வது வருடமாகிய ..நந்தன.. எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்,
(உத்தர/தக்ஷ¢ண) உத்தராயனே
உத்த்ராயண காலத்தில்
(வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) வஸந்த ருதௌ
வஸந்த ருது எனப்படும் வஸந்தகால பருவத்தில்
சித்திரை மாஸே
சித்திரை மாதத்தில்
(சுக்ல/ கிருஷ்ண) கிருஷ்ணபட்க்ஷ திரயோதசி
தேய்பிறையில் திரயோதசி திதியில்
சுபதிதௌ வாஸர:
(பானு/ இந்து/பௌ� �/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) குரு வாஸர யுக்தாயாம்
சுபயோக சுபதினமான வியாழக்கிழமையில் (19-04-2012)
.உத்திரட்டாதி...... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
இந்தப் பதிவு இடப்பட்டது. என்று முடித்து, ய� ��ர் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
மேலும் விளக்கமறிய

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சில குடும்பத்தினர் அப்டேட் செய்து பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். மேலும் நீங்களே பஞ்சாங்கம் தயாரித்துக் கொள்வதற்கான அட்டவணைகளும் தற்பொழுது வந்துவிட்டன. 

திண்டுக்கல்லைச் சேர்ந்த இரா.அருள்வேல் என்பவர் கூட மூன்று புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார்.


காலத்தை இவ்வளவு தெளிவாக � �ணிதம் செய்து இருப்பவன், இவர்கள் கூறும் அயனாம்சத்தையும் தெளிவாக கண்டு அதற்கான கணக்கீடுகளையும் அப்டேட் செய்துள்ள விதமறிய பஞ்சாங்கம் வாங்கிப் படித்துப்பாருங்கள் . இவர்களது கணிதம் துல்லியமானது என்பதை அறிய கிரஹணங்கள் பற்றிய குறிப்புகள் ஒன்றே போதும், நிகழும் நேரம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் (Duration) ஆகியவற்றை வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு (பல) வருட� ��்திற்கு முன்பே கணித்துக் கூறும் திறமை ஒன்றே போதும் பஞ்சாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள. 

காலண்டரைப் பற்றி அறியாத மூடன்தான் தனது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் வருடப் பிறப்பை மாற்றுவான். இப்பொழுது "தை " மாதம் என்பார்கள். பின்பு சங்ககாலத்தில் "தயா "என்று இருந்ததை ஒரு குள்ள நரிக் கூட்டம் "தை" என்று மாற்றி விட்டது என்பார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளாக்கில் பூமியின் அச்சுக்கு ஏற்படும் பம்பர சுழற்சியைப் பற்றியும் அது 25783 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றும் அதனால் காலம் சிறிது சிறிதாக முன் செல்கிறது எனவும் கூறப் படுகிறது.

 
அதனால்தான் 2200 வருடங்களுக்கு முன்பு தையாக இருந்தது இன்று சித்திரையாகிவிட்டது என கூறப்படுகிறது. அப்படியானால் இன்னும் கொஞ்சம் முன்னால் போய் 25783 வருடங்களுக்கு முன் இதே மாதம் சித்திரையாகத் தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே குஜ்ஜாலின் objec tion if any,overruled.


எது எக்கேடு கெட்டாலும் பூமத்திய ரேகை இடம் மாறுவதற்கான வாய்ப்பு கிடையாது. ஆக� �ே காலக் கணிதத்தில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.
A 12th century text by Bhāskara II[9] says: "sampāt revolves negatively 30000 times in a Kalpa of 4320 million years according to Suryasiddhanta, while Munjāla and others say ayana moves forward 199669 in a Kalpa, and one should combine the two, before ascertaining declension, ascensional difference, etc."[10] Lancelot Wilkinson translated the last of these three verses in a too concise manner to convey the full meaning, and skipped the portion combine the two which the modern Hindi commentary has brought to the fore. According to the Hindi commentary, the final value of period of precess ion should be obtained by combining +199669 revolutions of ayana with −30000 revolutions of sampaat to get +169669 per Kalpa, i.e. one revolution in 25461 years, which is near the modern value of 25771 years.

துருவ நட்சத்திரம் என்று ஒன்று இருப்பதால் அதை வைத்து இந்த பம்பர சுழற்சியையும் ஜோதிடர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்கள் கணக்கீட்டில் வைத்துள்ளனர். அயாணாம்சம் என வைத்து அதற்கான திருத்தத்தையும் வைத்துள்ளனர். தங்கள் கணிதத்தில் இவர்கள் கூறும் பம்பர சுழற்சி� ��ினால் சுமார் 12,000 வருடங்களுக்கு ஒரு முறை தென் துருவத்தில் நிகழும் வெட்பதட்ப நிலை வட துருவத்திலும், வடதுருவத்தில் நிகழும் வெட்ப தட்ப நிலை தென்துருவத்திலும் மாறி மாறி நிகழும். சிலர் இதைத் தவறாக புரிந்து கொண்டு தென் துருவம் வடதுருவமாக மாறிவிடும் என்பார்கள். அப்படியெல்லாம் பூமி தலைகீழாக மாறுவதில்லை. ஆகவே பஞ்சாங்கம் தவறென்பதற்கும் வழி இல்லை.

ஆகவே வினோத்குமாரின் objection overruled.

இரா.சந்திரசேகர்,
பழனி.

























[Continue reading...]

இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை

- 0 comments



உலகில் மக்கள் புத்தாண்டை, ஜனவரியை ஒட்டித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழன் சித்திரையில் கொண்டாடுகிறான். ஜனவரியை ஒட்டி நிகழும் வானியல் நிகழ்வு என்று பார்க்கும் போது அதுவும் சூரியன் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கிறது.

அயணம் என்பதுதான் தமிழில் பயணம் என்று மாறிவிட்டது. இராம அயணம்=இராமாயணம் -இராமனின் பயணம்.

சூரியனி ன் உத்ராயணம்- வடக்கு நோக்கிய பயணம், தெட்சினாயணம் தெற்கு நோக்கிய பயணம்.

உத்ராயணம், தெட்சினாயணம், சித்திரைமாதம். மேஷராசி, 0 டிகிரி


சூரியன் தெட்சிணாயண பயணத்தை முடித்துவிட்டு தை மாதத்தில் உத்ராயணத்தை தொடங்கும் விழாவைத்தான் மகர சங்கராந்தி என்று கூறுகிறார்கள். அதாவது சூரியன் மகரராசியில் நுழைவதைத்தான் சங்கராந்தி எனக் கூறப்படுகிறது. தெட்சிணாயணத்தை முடிக்க ஆறு மாதங்களாகும். உத்ர, தெட்சிண என்றால் முறையே வடக்கு, தெற்கு என நமக்கு தெரியும்.சூரியன் கடகராசிக்கும் மகர ராசிக்கும் இடையே ஊசலாடினாலும் அதன் நில� �யான இடம் பூமத்திய ரேகைதானே?. அதனால்தால் பூமத்திய ரேகையில் மேஷராசியில் நுழைவதைத்தான்  வருடப் பிறப்பாக கருதலாமே?.

இங்கு சூரியனது பயணத்தை மேற்கூறியவாறு கூறினால் இதுவும் பார்ப்பண அசிங்கக் கதை என்று தமிழக பகுத்தறிவுவாதிகள் உளற ஆரம்பித்து விடுவார்கள்.

பூமி தன்னைத்தானே சுழலும் சுழற்சியின் அச்சும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்ற ு செங்கோணமாக இல்லாமல் சுற்றும் பாதையின் தளத்திற்கு 23.44 பாகை சாய்வாக உள்ளதால் பருவகாலம் ஏற்படுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை கடகரேகை என்றும் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை மகரரேகை என்றும் கூறுவார்கள்.

ஜாதகக் கட்டங்களில் கடக, மகர ராசி எனக் குறிப்பிடப்படுவதும் அதையொட்டித்தான். ஒரு வருட சுழற்சியின் போது பூமி, கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே உள்ள பகுதிகளை சூரியனுக்கு நேர்குத்தாக அமைத்து கொள்வதைத்தான் சூரியனது பயணம் என்கிறோம்.


படத்தை கிளிக் செய்த� � பார்க்கவும்.


படத்தில் Tropic of Cancer என்பது கடகரேகை, என்பது Tropic of Capricorn மகரரேகை. Equator  என்பது பூமத்திய ரேகை.

 ஒரு வருடத்தில் இந்த பயணத்தில் சூரியன் பூமத்திய ரேகையை இருமுறை (Equinox மார்ச� �� 20, செப்டம்பர் 22) ஆகிய சம பகலிரவு நாட்களில் கடக்கிறது.

மகர, கடக ரேகையை ஒருமுறையும் (Soltice டிசம்பர் 21, ஜூன் 21) கடக்கிறது.

ஆங்கிலேயர்கள் மகர Soltice ஒட்டி தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர்.
தமிழர்கள் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் (Sidereal vernal equinox April 14). ஐ ஒட்டி , அதாவது பூமத்திய ரேகையிலிருந்து, அதாவது 0 டிகிரியிலிருந்து சூரியன் பயணத்தை ஆரம்பிக்கும் போது தங்களது புத்தாண� ��டை வைத்துக் கொண்டனர். ஆகவே சித்திரை மாதத்தில் (Sidereal vernal equinox April 14). புத்தாண்டை வைத்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. (starting from 0 position).


 நட்சத்திரத்தை வைத்து கணக்கிடுதல் என்பது ஒரு ஹைடெக் சமாச்சாரம் அதாவது சூரிய மண்டலத்தை வெளியிலிருந்து பார்வையிட்டு கணக்கிடு வதற்கு ஒப்பானது.

http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology

நமது பகுத்தறிவுவாதிகளுக்கு இதையெல் லாம் எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை சொன்னாலும் புரியாது. கடகம் , மகரம் என்றால் அலர்ஜி. அதிலும் சங்கராந்தி என்றால் பேயே பிடித்துவிடும்.

அதிலும் ஆயிரமாயிரம் வருடங்கள் பின்பற்றும் ஒரு வழிமுறையை நமக்கு நன்மைகள் ஏற்படும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி மாற்றிவைப்பதால் குழப்பம்தான் மிஞ்சும் பைசா பிரயோசனமில்லாத வேலை. இமாலயத் தவறென்றால் கூட திருத்திக் கொள்ளலா� �். இதில் தவறென்று ஏதுமில்லை.

தவற்றை யெல்லாம் திருத்தலாம் என்றால் முதலில் 1,70,000 கோடியை அரசாங்க கஜானாவில் கட்டி விட்டு தவறுக்கு மண்ணிப்பு கேட்க வைப்போம். இப்பொழுது அதுதானே மிகவும் முக்கியம்.அப்புறம் தைக்கு மாற்றிவிடலாம்.என்ன தமிழர்களே தவறுகளை களை எடுக்கலாமா? அதுவரை (இப் போதைக்கு) (இப்போதைக்கு) இப்போ தைக்கு இருக்கட்டுமே சித்திரை.

இரா.சந்திரசேகர்,
பழனி.

















































[Continue reading...]

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 8

- 0 comments


பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அ லிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்த ில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கி� � பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக � ��ிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.

வினோத்குமாரின் கே� ��்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற் சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடிய� �ம். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந் திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கி� �் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்� �ிற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்த� �ு நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திரும� � பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் "வியாழ நோக்கம்" என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வே லை இல்லை. அதிலும் இவர் "ரொம்ப நல்லவர்" ஆதலால் இவர் "அதுக்கு சரிப்பட மாட்டார்" ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அ� �்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங் குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு ய ானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட ்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோ திடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். "உபகிரகம்" என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 ச� �்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்� �ின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம� �� நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இர ு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள க� ��ஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலு ம் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இர� �சி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.

























































































[Continue reading...]

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம். 1

- 0 comments


முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.

தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. 

அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்த ு, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக்கிட்டுள்ளதாம். என்னைக்கு அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பான்னு கூப்பிடறது.  

இது வரை 53,000 கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலைமையிலும் கூட தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மி ன்சாரத்திற்கு சமமாக, இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. (விளங்குமா தமிழ்நாடு)

தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, � �ிவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது.  அடப் பரதேசிகளா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டாமா?

மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது, இதனால் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுபட்டதை, அரசின் மனு வெளிப்படுத்தியு� ��்ளது. ( அடக்கண்றாவி! கழுதை பெறது கால்பணம் சுமைகூலி முக்காப் பணமா)

மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவழிப்பதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள� ��ளது. ஆனால், கடந்த ஆண்டில்,6,478 கோடி ரூபாய்க்கு 1,220 கோடி யூனிட் மின்சாரம் விவசாயத்திற்கு,  இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாய் செலவு.

 மேலும் தகவல்களுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355

குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடிய வில்லை. எண்ணிச் செய்கிறவன் கெட்டி எண்ணாம செய்கிறவன் மட்டின்ன கதையா இவ்வளவு இன்சீனியர்களும் மட்டியா?. எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்த� ��ன்.  விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, � ��ூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.என்னத்த சொல்லி என்ன பண்றது.உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? போடு வரியை. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணிக்குன்ன கதையா இருக்கவே இருக்கானுக கேணைத் தமிழகமக்கள்.

 தனியாரின் கொள்ளை:

இந்த 53,000 கோடியில், தனியார் கொள்ளை 15,000 கோடியாவது தேறும். 


6500  கோடி இலவச மின்சாரம் X 6வருடம்= 39000 கோடி + தனியார் கொள்ளை 15000 கோடி =54000 கோடி கடன்.
 

 எடுத்துக் காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள பிள்ளைப் பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத்திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற்பத்திக் குழுமம் என்ற பெயராலேயே பிரதாப் ரெட்டி குழுமத்தினர் அ ந்நிலையத்தை நிறுவினர். ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.

இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளையின் அளவ� � புரியும்.கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது. எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது. இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்க ளுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது. (எரியிற வீட்டில் பிடுங்கிறது ஆதாயமாம்).

 அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 4000 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளதாம். (இன்னைக்கு இலை அறுக்கிறவன் நாளைக்கு குலை அறுக்கத்தான் செய்வான். கிழி� �்தது தமிழகத்தின் பொருளாதாரம்).

 ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட� ��டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் , மின்சார தீர்ப்பாயமும் எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்க வைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். (அவன்தம்பி அங்கதனுக்கு பங்கில்லாமலா போ� ��ிரும்) . கள்ளனும், தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா.


 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு, வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ,அதை பிடுங்கித் திண்ணுச்சாம் அநுமாருன்ன� �� கதையா கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சலுகைகளால் கொழிக்கிறது.

இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. ஆற்றின் போக்கே அரசன் போக்கு என தானடித்த மூப்பாக தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு இக் கட்டணச் சலுகையை வாரி வழங்கியது ஆணையம். (தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்தான்) .

ஒழுங்குமு� �ை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது. அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பிபிஎன் குழுமம் கே ட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப்பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது. (ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.) குதிரை தள்ளி விட்டதுமில்லாமல் குழியும் பறிச்சுச்சாம்.

இது என்ன கொடுமை இதுக்கு மேல இருக்கு. வீடியோகான் நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஏதோ காரணத்தால் ரத்து செய்து விட்டது. நான் அடிக� �கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு.து கேஸ்ஸ போடுன்னு பேசிக்கிட்டாய்ங்க போல. அவனும் இங்கேயெல்லாம் கேஸ்ஸப் போடாம சிங்கப்பூரில் சர்வதேச நீதி மன்றத்தில் நம்ம சிதம்பரம் மூலம் கேஸ்ஸப் போட்டு 3000 கோடி நஷ்ட ஈடு கேட்டானுக. அதுதான் அவனுக செய்த தப்பு பேசாம நம்ம ரெட்டி மாதிரி தீர்ப்பாயத்தில் போட்டிருந்தா ஒரு 6000 கோடியாவது கிடைச்சிருக்கும் .அங்க வெறும் 125 கோடிதான் கொடு க்கச் சொன்னாங்களாம். அதனால ரெட்டிவழியைப் பின் பற்றி வீடியோகானும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்துட்டானுக. இவனுக தீர்ப்பாயத்திற்கு போனா 6000 கோடி கிடைக்கும் ஆனா ஏன் போகலைன்னு தெரியலை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ போங்க.

சிதம்பரம் ஒரு தமிழனாம். அன்னம் இட்ட வீட்டிலே கண்ணம் இடுறவனுக, உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுறவனுக வம்சம் விளங்குமா? இவனைத் தலையில் � �ைத்து ஆடுறானுக தமிழனுக.(இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா தானே சிரைக்கிறவன் செம்மையா சிரைப்பான்.)

இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையாவில்ல இருக்கு. 


 மேலும் தகவல்களுக்கு
 http://suransukumaran.blogspot.in/2012/03/blog-post_13.html

தொடரும்.....................

இரா. சந்திரசேகர்.
 பழனி.





























































[Continue reading...]

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 7

- 0 comments


Previous
ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. சீட்டுக்கட்டில் ஒவ்வொரு வகையிலும் 13 சிட்டுக்கள் உள்ளது. வருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்� �ளின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் இருப்பது போல், சீட்டின் வகைகள் நான்கு. மற்றபடி ராஜா-சூரியன், ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன், ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் ஜோதிடத்தையும், சதுரங்கத்தையும் பின்புலமாகக் கொண்டு உருவான விளையாட்டுதான் எனத் தெரியவரும்


வினோத்குமாரின� � கேள்வி:
சூரியன் ராசா
சந்திரன் மந்திரி
சுக்கிரன் தளபதி
 சனி சிப்பாய்
செவ்வாய் குதிரை
ராகு கேது இல்லை
புதன் இல்லை.
யானை .. யார் குருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்.. என் புரிதல் சரியா?.

இன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..? 2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன்? ..

 பதில்:உங்களின் வரிசையில� � சிறிய திருத்தம்.
 சூரியன்-ராசா
சந்திரன்-தளபதி
சுக்கிரன்-மந்திரி(மதகுரு)
செவ்வாய்-குதிரை
சனி-யானை

புதனுக்கும் குருவுக்கும் திருமணப் பொருத்தத்தில் இடமில்லை. புதனுக்கான விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.
 http://chandroosblog.blogspot.in/2012/04/6.html 

குருவுக்கான விளக்கம் பின்னர் தருகிறேன். ஜோதிடத்தில் ராசியை, வீடு என்றும் குறிப்பிடுவத� ��ண்டு. ஒவ்வொரு கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து உச்ச ,நீச, ஆட்சி வீடு எனக் கூறப்படும்.


கிரகங்கள் எல்லாமே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதை அறிவோம். அதிலும் பூமி வரிசைக் கிரமத்தில் மூன்றாவதாக உள்ளதாலும், மற்ற கிரகங்கள் எ ல்லாமே பூமியைப் பொறுத்து, ஒரு சமயம் மிக அருகிலும் (உச்சம்) அதற்கு நேர் எதிரான நிலையில் தூரத்தில் (நீசம்) அமைவதும் இயல்புதான்.

செவ்வாய் கிரகம் நமக்கு(பூமிக்கு) அருகில் இருக்கும் பொழுது சுமார் 4 கோடி மைல் தொலைவிலும் அதிக பட்ச தூரம் என்று வரும் பொழுது சுமார் 22 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. நீச (Aphelion) நிலையில் இருக்கும் பொழுது உச்ச (Perihelion) நிலையைப் போல் சுமார் 5 மடங்கு தூ� ��த்தில் இருக்கிறது.


ஆனால் சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும் ஏறத்தாழ (low eccentricity) வட்டப்பாதையில் சுற்றுவதால், இவைகளின் உச்ச, நீச தூரத்திற்கிடையே வித்தியாசம் மிகமிகக் குறைவாக இருக்கும். சுமார் 1/8 (அரைக்கால்) பங்குதான். அதாவது பூமிக்கும் -செவ்வாய்க்கும் இருக்கும் வித்தியாசத்தில் 40ல் ஒரு பங்குதான்.

ஜோதிடப் படி பூமியை மையமாக வைத்துப் பார்க்கும் போது சூரியன் அனேகமாக ஒரு வட்டப்பாதையில் சுற்றுவது போல்தான் தெரியும். ஆதலால் சூரியனையும் சந்திரனையும் தவிர்த்து மற்ற எல்லா கிரகங்களும் ஒரு நேரத்தில் பூமிக்கு மிக அருகிலும் மற்றொரு சமயத்தில் மிக தூரத்திலும் இருக்கும்.

சூரியனும் � �ந்திரனும் பூமியை ஒரு சுமாரான (low eccentricity) நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால்தான் ஆட்சியாக ஒரே ஒரு வீடு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மற்ற கிரகங்களை கணக்கிடும் போது அவைகளுக்கு அதி பயங்கர நீள்வட்டத் தன்மை உள்ளது.
கீழே உள்ள படத்தில் சந்திரன்,சூரியனின் பாதைகள் வட்டமாகத் தெரியும், ஆனால் பூமியை மையமாகக் கொண்டு எல்லாவற்றையும் சுழல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்,அப்பொழுதுதா ன் உச்சம், நீசம் பற்றி புரியும்.


அவ்வாறு ஆட்சிவீடு அளிக்கும் போது சூரியனுக்கு சிம்ம ராசியையும் சந்திரனுக்கு கடக ராசியையும் வீடாக கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்து புதனுக்கு இர� ��்டு வீடும் சுக்கிரனுக்கு இரண்டு வீடும் அது போல் செவ்வாய், வியாழன், சனி ஆகியோருக்கும் தலா இரண்டு வீடு கொடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி வீடு படம்
அதாவது 12 வீடுகளை, ஐந்து கிரகங்களு� ��்கு தலா 2 வீடும் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடும் ஆக கொடுக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிவது என்னவென்றால், சூரியனையும் (நட்சத்திரம்) சந்திரனையும் (உபகோள்) மற்ற கிரகங்களில் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடுத்தி வைத்துள்ளனர். இதனால் சந்திரனையும் "கிரக" லிஸ்ட்டில் இருந்து விலக்கி விடலாம் என்பதை பகுத்தறிவு வாதிகள் புரிந்து கொள்ளட்டும்.

செஸ்ஸில் ராஜா, மந்திரி � �கியோர் ஒவ்வொருவர்தான் உள்ளனர். ஆனால் மதகுரு,(சுக்கிரன்) குதிரை,(செவ்வாய்) யானை(சனி) ஆகியோர் இரண்டு பேர் உள்ளனர். இதில் பிரதானமாக சூரியன் ராஜாவாகவும் சந்திரன் மந்திரியாகவும் கற்பிக்கப் பட்டதில் யாருக்கும்மாற்று கருத்து இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருந்தால் கீழே உள்ள விளக்கத்தினால் மாற்றிக் கொள்ளவும்.

ஜாதகத்தில் லக்னத்துக்குத் தான் அதிக முக்கியத்துவ� ��் கொடுக்கப் படுகிறது. லக்னம் என்பது முற்றிலும் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியன், லக்னம், ஆகிய இரண்டும் பூமியில் ஜாதகரின் பிறந்த இடத்தைப் பொறுத்து சூரியனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது மறைமுகமாகவும், துல்லியமாகவும் குறிப்பிடுகின்றது. சூரியனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் ( அது ஒரு *ஹைடெக் சமாச்சாரம் ) லக்னம், ராகு, கேது ஆகிய மூன்றும் பயன்படுத ்தப் படுகிறது என்பது ஜோதிடத்தில் தெளிவுள்ளவர்களுக்குப் புரியும். வாழ்க்கையின் முழு பலனும் லக்னத்தை வைத்துத் தான் சொல்லப் படுகிறது. அதாவது உயிர், உடல் ஆகியற்றை லக்னம் குறிப்பிடுகிறது.

 *http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html.

இது போன்ற துல்லிய கணக்கீடுகள் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்களுக்கு கிடையாது. ஆகவே சூரியன்தான் ராஜா, ச� �்திரன்தான் மந்திரி. ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களுக்கு ஆட்சி வீடாக தலா ஒரு வீடுதான் (கடகம் ,சிம்மம்) கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவேதான் செஸ்ஸில் ராஜா, தனது சிம்மம் ஆகிய ஒற்றை வீட்டில் இருந்து ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். சூரியனின் சுழற்சி ஒருவருடம் என்பதால் அது ஒரு கட்டம்தான் நகர்த்த முடிகிறது.

சூரியனுக்கு அடுத்ததாக சந்திரனுக்குத்தான் ஜாதகத்தில் அ திக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அறிவையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடுவது இராசிதான். இராசி என்பது முற்றிலும் சந்திரனைச் சார்ந்துள்ளது. அதனால்தான் சந்திரனை "மதி" என்றும் கூறுகிறார்கள். சந்திரன், ராசி, ஆகிய இரண்டும் பூமியைப் பொறுத்து சந்திரனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது, மறை முகமாகவும் சந்திரனின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றது . சந்தி ரனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் இராசி, ராகு கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே சந்திரன்தான் மந்திரி. சந்திரன் தனது ஒற்றை வீடாகிய கடகத்தில் நின்று ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். ஒருவருடத்தில் 13 முறை சுற்றி விடுகிறார்.

தொடரும்............
இரா.சந்திரசேகர்,
பழனி.
































































[Continue reading...]

சந்துருவின் வலைப்பூ

- 0 comments


இது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.





[Continue reading...]

பரதம்...!ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments


மௌனத்தின் மொழிகள் 
மொழிபெயர்த்தால் 
பரதம்...!
=======================
கண்களும் கால்களும் 
உடலோடு எழுதிய கவிதை 
பாரத நாட்டியம்...!
=====================
வளைந்து நெளிந்து பொலிவோடு 
பழைய கதைகள் சொனனது 
பரதம்...!
======================






[Continue reading...]

கைத்தடி...ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments




முதுமையின் முகவரியில்
கைத்தடி துணைவுடன்
அப்பாக்கள்...

======================
பிள்ளைகள் கை கழுவியதால் 
கைத்தடி பிடித்தப்படி
தெரு ஓரத்தில்  அப்பா..!
======================
















[Continue reading...]

கரையான்...ஹைக்கூ கவிதைகள்,

- 0 comments



கரையான்கள் வீட்டில் 
நிலஆக்கிரமிப்பு 
பாம்பு..!
==================
அரித்து கட்டிய மண் கோட்டை
ஆக்கிரமிப ்பு செய்தன 
நல்லபாம்பு...!
===================







[Continue reading...]

வஜிர்அலியின் கவிதைகள்

- 0 comments


என் கவிதைகளின் தொகுப்பே இந்த தளம்..





[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger